Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை குடியுரிமை பெற்று தருவதாக கூறி, கனடாவில் தமிழர்களிடம் பண மோசடி செய்த இலங்கையர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

akkni.png

கனடாவின் டொரென்டோவில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகத்தில் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்று தருவதாக கூறி, கனடாவில் வாழும் சிங்களவர் ஒருவர் அங்குள்ள தமிழர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் தமிழர்களை ஏமாற்றி குறித்த நபர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுலவகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கனடாவில் வீடுகள் மற்றும் மனைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடாவில் வசித்து வரும் சிங்களவரான வசந்த அபேசிறி என்ற நபரே இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அபேசிறி என்ற இந்த நபர் தூதரக அலுலவலகத்தில் பணியாற்றும் அவரது நண்பரை இணைத்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கையில் சொத்துக்களை கொண்டுள்ள தமிழர்களே அதிகளவில் இந்த மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளனர்.

மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வசந்த அபேசிறி என்ற நபர் மொன்றியல் வங்கியில் பணியாற்றி வந்துள்ளதுடன் காசோலை மோசடி காரணமாக அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மோசடிக்கு ஆளான நபர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனடாவுக்கான இலங்கையின் தூதரக பிரிதிநிதியின் அலுவலகம் வசந்த அபேசிறி என்பவருக்கும் தமது அலுலவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமை வழங்குவதை இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் இரட்டை குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை அலுவலகம் நிறுத்தி வைத்துள்ளதாக கனடாவுக்கான இலங்கையின் தூதரக பிரதிநிதி கருணாரத்ன பரணவித்தான தெரிவித்துள்ளார்.
அதேவேளை தூதரக அலுவலகத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மோசடியாளர்களிடம் சிக்கியவர்கள் இருந்தால் தூதரக அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் பரணவித்தான கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9470:2013-10-04-09-32-44&catid=1:latest-news&Itemid=18

இவரிடம் சிக்கி ஏமாந்த தமிழர்களுக்கு என் வாழ்த்துகள். இலங்கையில் இருக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு பிரச்சனை என்று கூறி அசைலம் கேட்டவர்கள் பின் என்னத்துக்கு இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கின்றனராம்..?

 

வந்தது அகதி கோரிக்கையில், கேட்பது இரட்டைக் குடியுரிமை, வேண்டுவது தமிழ் ஈழம் சுற்றுலாவுக்கு இலங்கை ! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரிடம் சிக்கி ஏமாந்த தமிழர்களுக்கு என் வாழ்த்துகள். இலங்கையில் இருக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு பிரச்சனை என்று கூறி அசைலம் கேட்டவர்கள் பின் என்னத்துக்கு இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கின்றனராம்..?

 

வந்தது அகதி கோரிக்கையில், கேட்பது இரட்டைக் குடியுரிமை, வேண்டுவது தமிழ் ஈழம் சுற்றுலாவுக்கு இலங்கை ! 

 

 

சொத்துக்கள் வாங்குவதற்குத்தான்.  வெளிநாடுகளில் வாங்கினால் இங்கே வரி கட்ட வேண்டும்.  அங்கு தேவையில்லைத்தானே? அதற்குத்தான்.  திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்?  :)

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு ஏனோ இசை ஞாபகத்தில் வந்து போனார் :lol:  :D  :rolleyes:
 
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. :D

சகல விபரமும் எழுதி அந்த நபரின் கையில் கொடுத்திருப்பார்கள். அருமை.

 

பணம் தேவையான நேரம் இலங்கையில் போய் மிரட்டுவார்களாக்கும். 

 

கனடாவில் நடந்த இலஞ்ச குற்றம் என்பதால் கனேடிய அதிகாரிகள் தமிழர்களை விசாரிக்கும் சந்தர்ப்பம் இருக்கு. அப்போ இவர்களுக்கு இரட்டை குடியுரிமைக்கான தேவைக்கான காரணத்தும் வெளியிட வேண்டியிருக்குமோ தெரியாது. 

 

கனடா தூக்கி பிளேனில் போட்டுவிட்டால் நேராகவே இலங்கை குடியுரிமை கிடைத்துவிடும்.

சொத்துக்கள் வாங்குவதற்குத்தான்.  வெளிநாடுகளில் வாங்கினால் இங்கே வரி கட்ட வேண்டும்.  அங்கு தேவையில்லைத்தானே? அதற்குத்தான்.  திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்?   :)

அங்கு சில சமையம் சொத்து பத்துக்கு வரி மட்டுமல்ல உயிரே கொடுக்க வேண்டி வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.