Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா பாராளமன்றத்தின் முன்ன பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

கனடா பாராளமன்றத்தின் முன்ன பாரிய கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கியது

IBC வானொலியில் நேர்முகம் நடைபெறுகிறது.

பல் தரப்பட்ட வெளிநாட்டு ஊடகங்கள் பதிவுகளை செய்கிறார்களாம்.

மக்களின் தொகை 16...18 ஆயிரத்திற்கு மேலா இருக்கும் என்றும் மேலும் தொடர்ந்து 4ஆ பக்கங்களிலிருந்தும் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

கனடா உறவுகளுக்கு வழ்த்துக்கள்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது நிருபர்

Friday, 18 August 2006

சிறிலங்காவில் தற்போது சிங்கள இராணுவ காடையர்களினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடபப்பட்டுள்ள கோரப்படுகொலைகளை நிறுத்த கோரி கனடிய தமிழ் சமூகத்தால் இன்று காலை 11 மணி முதல் ஒட்டாவாவில் கனடிய பாராளுமன்றத்துக்கு முன்னே மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

இன்று காலை 11 மணிக்கு கனடாவில் பல்வேறு திசைகளிலிருந்து பேரூந்துகள் மகிழூந்துகள், இதர வாகனங்களின் கனடிய தலைநகர் ஒட்டாவா வந்;திறங்கிய பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள காடையர்களினால் கொல்லப்படுவதை கண்டித்தும், சிறீலங்கா அரசுக்கு கனடிய அரசு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே இக் கண்டன பேரணி இடம் பெற்றது.

எழுச்சி கொண்ட 18000 ம் மக்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் கறுப்பு கொடிகளை தாங்கிவாறும், தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்தும் விதமான, சிவப்பு மஞ்சல் கொடிகளையும் சிலர் தமிழீழ தேசிய கொடிகளையும் தாங்கியிருந்தனர்.

வயது வேறு பாடின்றி மக்கள் கனடாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்தனர். ஏற்பாட்டுக்குழுவினரின் கருத்துப்படி 500 பேருக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஆனால் பல் மடங்கு மக்கள் அங்கு பிரசன்னமாகியிருப்பது, கனடிய அரசுக்கு வியப்பளிக்கலாம் என்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் கோபாவேசத்துடனும் சோகத்துடனும் காணப்பட்டனர். தங்கள் கோபத்தை, எழுச்சியை சிறீலங்கா அரசுக்கு எதிரான, கோசங்களாக முழக்கமிட்டனர்.

-எங்கள் தலைவர் பிரபாகரன்

-தமிழீழம் வேண்டும்

-சிங்கள அரசே தமிழர்களை கொல்வதை நிறுத்து!

-வேண்டாம் வேண்டாம் போர் வேண்டாம்!

-சிங்கள அரசே போரை தொடராதே!

-கனடிய அரசே வாயை திற!

எனப்பல கோசங்களை எழப்பினார்கள். ஆவேசம் கொண்ட தமிழ் இளைஞர்கள், தமிழ் சிறார்கள் மீதான விமானக்குண்டு தாக்குதலை நியாயப்படுத்தும் கேகலிய ரம்புக்வெல கொல்லப்பட வேண்டியவர் என்றும் கோசமெழுப்பினர்.

ஆர்பாட்டத்தின் இறுதியில் தமிழ் பிரமுகர்களின் உரையும், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்கரியினாஸ் அவர்களும் உரை நிகழ்த்தினர்.

http://www.worldtamilpress.com//index.php?...d=620&Itemid=28

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்கள் மற்றும் படங்களுக்கு...

http://sankathi.org/news/index.php?option=...&id=65&Itemid=1

இரண்டுநாட்களில் இரவு பகல் பாராமல் பசி தூக்கம் பாராமல் அதிகாலை நான்கு மணிக்குக்கூட இந்தப்பேரணிக்கு ரொறன்டோ மக்களை ஆயத்தம் செய்த கனடியத்தமிழ் வானொலி நிர்வாகத்தினர் இளையோரமைப்பினர் முக்கியமாக வர்த்தகப்பெருமக்கள் ஒட்டாவா பல்கழைக்கழக மாணவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்கான தங்கள் கடமையை சரிவரச் செய்து மீண்டுமொருமுறை தங்கள் தாயக நேசிப்பையும் ஆவேசத்தையும் காட்டியிருக்கிறார்கள்.

70 பேருந்துகுள் பல தமிழர் வர்த்தக நிலையச்சந்திகளிலிருந்து நேற்று அதிகாலை 5.45 இலிருந்து 6.30 இடையில் ஒட்டாவா பாராளுமன்றத்தை நோக்கிப் பயணமாயின.ஒவ்வொரு பேருந்துக்கும் இளையோரமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் உதவியாளராக இருந்தார்கள். கிட்டத்தட்ட 5 மணித்தியால ஒட்டாவாப் பயணத்தை இலவசமாக்கிய வர்த்தகர்களுக்கும் பேருந்துக்களை வாடகைக்கமர்த்திய நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.இலவசப்பயணம் என்று சொல்லியிருந்தும் அநேகமானோர் தங்களாலான பண உதிவியை வளங்கினார்கள்.

இப்படி பேருந்துகளிலும் நூற்றுக்கணக்கான கார்களிலும் சென்ற ரொறன்ரோ வாழ் தமிழர்கள் 11 மணியளவில் ஒட்டாவாப் பாரளுமன்றத்தில் ஒட்டாவா மொன்றியல் நகரங்களிலிருந்து வந்த மக்களுடன் சேர்ந்து பேரணியை தொடங்கினார்கள்.

கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்கள் ஆவேசத்துடன் கோசமிடுவதைப்பார்த்த சுற்றுலாப்பயணிகள் சிலர் விபரம் கேட்டுத் தங்கள் கவலையைத் தெரிவித்தார்கள்.

நியாயமற்ற சிறீலங்கா அரசின் பொய்களை நம்ப வேண்டாம்!

.

சிறார்களைக் கொல்லும் சிங்கள அரசை கண்டனம் செய்!

சிறீலங்கா அரசு நம் சிறார்களைக் கொல்கிறது.!

கனடாவின் மௌனம் எம்முறவுகளைக் கொல்கிறது.!

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!

எங்கள் தலைவர் பிரபாகரன்!

எங்களுக்கு என்ன வேண்டும் ? சமாதானம்

எப்ப வேண்டும் ? இப்பவே

இப்படியான கோசங்கள் பாராளுமன்றத்தை அதிர வைத்தன.இந்த முழக்கம் பாரளுமன்றச்சுவர்களைத் தாண்டி உள்ளிருந்த அரசாங்க அலுவலர்களின் செவிப்பறைகளையும் நிச்சயமாக அதிர வைத்திருக்கும்.

பாராளுமன்றப்பிரதிநிதிகளிடம

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையான பயணம் தொடர்ந்து தமிழனின் இருப்பை அடையாளப்படுத்தும். வேலை நாளில் தீடிர் அறிவிப்பிலும் இத்தனை மக்கள் கலந்துகொண்டது உணர்வைத் தருகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு எதிராக கனடா செயற்பட வேண்டிய நேரம் இது: கனேடிய நா.உ. அல்பினா கௌர்னியேரி

[வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 15:08 ஈழம்] [ச.விமலராஜா]

தமிழ் மக்கள் மீது இராணுவ வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் சிறிலங்காவுக்கு எதிராக கனடா செயற்பட வேண்டிய நேரம் இது என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் அல்பினா கௌர்னியேரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சர்வதேச சமூகம் தொடர்ந்து அமைதியாக இருப்பதால் தமிழ் பொதுமக்களும் குழந்தைகளும் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான செய்தியை கனேடிய அரசாங்கம் அனுப்ப வேண்டிய தேவை உள்ளது.

சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் முக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்று. சிறிலங்காவுடன் தொழில் வர்த்தக உறவுகளை கனடா ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறிலங்காவின் இராணுவ வன்முறைகளுக்கு எதிரான பரப்புரைகளை கனேடிய அரசாங்கம் மேற்கொள்வதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=28278

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.