Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு விரும்பி இணைவதை அரசு நிறைவேற்ற வேண்டும்: விக்கினேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு விரும்பி இணைவதை அரசு நிறைவேற்ற வேண்டும்: விக்கினேஸ்வரன்

16 அக்டோபர் 2013

"அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதில்லை முரண்டுபிடிக்கப் போவதும் இல்லை"


வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அதற்கு அரசாங்கம் அதை கட்டாயமாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இதை பிரிவினைவாதம் தூண்டுவதாகவோ போராட்டம் செய்வதாகவோ நினைத்து வட கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களை துன்பத்தில் விழுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்த அவர் சட்டத்தின் அடிப்படையில் தமது நடவடிக்கைகள் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை வெறுமனே அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்டுபிடித்துக்கொண்டு பகைக்கத்துக்கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை எனவும் அதனால் அரசாஙக்கத்தை எதிர்க்கப்போவதுமில்லை என்று குறிப்பிட்டதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை செய்ய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வட மாகாணத்தில் மக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97729/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கையும் கிழக்கையும் இணைக்க கூட்டமைப்பு முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்! - எச்சரிக்கை விடுக்கிறது பொதுபலசேனா!!



வடமாகாணணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியைக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தால், தகுந்த பதிலடி கொடுப்போம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

 

அத்துடன், இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை வைத்து பிரிவினைவாதம் பேசுவது தவறு எனவும் இவ்வமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

 

'வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியினைப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த வெற்றியினை தவறாக பயன்படுத்துகின்றமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

 வடக்கில் ஆட்சியமைத்து மக்களுக்காக சேவை செய்யாது, அவர்களின் சுயநலத்திற்காக மக்களை கொல்ல நினைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் சதித்திட்டமாகும். இதைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால் தற்போது வடக்கில் வாழும் மக்களும் இறக்க நேரிடும்.

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயவிருப்பிற்காக மத்திய அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டமே செயற்படுகின்றது.

 

இதில் வடமாகாணத்திற்கு ஒரு மாதிரியும் ஏனைய மாகாணங்களுக்கு வேறு மாதிரியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது இறுதியில் சட்டச் சிக்கலினையும் பிரிவினையினையுமே ஏற்படுத்தும்' எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை, இவ்விடயம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில், 'வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தனிநாட்டுக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அதற்கான தகுந்த பதிலடியினை நாம் கொடுப்போம்.

 

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத சக்திகளும் வடக்கில் புலித்தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை கொன்று குவிக்கவே திட்டம் தீட்டுகின்றனர். இதை நடைமுறைப்படுத்த விடக்கூடாது' எனத் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=8987fffd-e4d9-48b4-a495-ed157f188c53

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தோ தெரியாமலோ வடக்கும் கிழக்கும் ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூலம் இணைக்கப்படலாமென்ற ஒப்புதலை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இலங்கை கொடுத்துவிட்டது.  இது எல்லா மாகாணங்களுக்கும் ஒரே சட்டம் என்ற ஒற்றையாட்சித் தத்துவத்தை மீறிச் செல்கிறது.

 

இந்தியா அதற்கு வழியமைத்துக் கொடுத்துவிட்டது.  காலவோட்டத்தில் எப்படியோ வடகிழக்கு இணைப்பிற்கான வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டேயாக வேண்டும். பொதுபலசேனா எதைச்செய்து இதைமுறியடிக்குமென்று தெரியவில்லை. வேண்டுமென்றால் மீண்டுமொரு இனக்கலவரத்தைத் தூண்டித் தமிழர்களைக் கொல்ல முயற்சிக்கலாம். இன்றைய நிலையில் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கைக்கு மேலும் மேலும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு பிரிவினையை நோக்கிய பாதையை மேலும் விரிவு படுத்தவே செய்யும்.

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

01%28886%29.jpg

02%28709%29.jpg
03%28516%29.jpg
04%28354%29.jpg
05%28259%29.jpg
06%28182%29.jpg


தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக வட மாகாண முதலமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

01%28885%29.jpg
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையிலேயே தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக வட மாகாண முதலமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாண முதலமைச்சரின் கீழ் வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல்  மற்றும் விநியோகம் ஆகிய அமைச்சுகள் உள்ளடங்கும். 

இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஏழு பேரும் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புதுடெல்கிக்கு அழைக்கப்பட்டார்.

அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரும் இந்த பிரச்சினையை குர்ஷித்திடம் பேசியுள்ளர். ஏதோ ஒன்று நடைபெறமென நான் நினைக்கின்றேன் என சம்பந்தன் கூறினார்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு எப்போது செல்வாரென அறிவதற்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

 

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புதுடெல்கிக்கு அழைக்கப்பட்டார்.

அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரும் இந்த பிரச்சினையை குர்ஷித்திடம் பேசியுள்ளர். ஏதோ ஒன்று நடைபெறமென நான் நினைக்கின்றேன் என சம்பந்தன் கூறினார்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு எப்போது செல்வாரென அறிவதற்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

tamilmirror

இதைத்தான் சொல்வது இந்திய (ஹிந்திய) தலையீடு என்று.. :unsure: சிங்களவனின் காதுக்கு உள்ளால் இப்ப புகை போகும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேசுவரன்  ஐயா  ஏன்   இப்படி எல்லாம் அவசரப்பட்டு பேசுகின்றார் என்று புரியாத புதிராக உள்ளது.

இவரிடமிருந்து இது போன்ற  சொற்களை

அல்லது இது   போன்ற  அரசியலை  எவரும் எதிர்பார்க்கவில்லை.

முதலில் வடக்கு மாகாணசபையால் என்ன செய்யமுடியும்??

வாக்களித்த மக்களுக்கும் 

துன்பப்பட்டு நொந்து நூலாகிக்கிடக்கும்  அகதிகளுக்கும்

இத்தனை  வருடமாகவும் சிறையில் வாடும் தமிழர்களுக்கும்  இந்த நீதிவானால் எதையாவது பெற முடியுமா???

முடியாது விட்டால் அதை சர்வதேசப்படுத்துவதையாவது செய்யணும்.

 

அதைவிடுத்து

சிங்களவனால் மட்டுமல்ல

சர்வதேசத்தாலும் ஆபத்தான விடயங்களாகப்பார்க்கப்படுவதை

இவ்வளவு அவசரமாக பேச  முனைவது........??? :(

புரியாத புதிராக உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைத் தேர்தலில் வென்று முதலமைச்சரானதும்
தமிழீழத்தின் தலைவர் என்ற கனவில் அயல் நாட்டுச்

சிங்களவர்களுடன்  நல்லுறவைப் பேண நினைக்கும்
முதலமைச்சரின் கருத்துக்கள் கவனிக்கப்படவேண்டியவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.