Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் தமிழீழத் தேசியக் கொடி மேதகு தலைவர் பிரபாகரனால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்ட ஆண்டு எது?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131297&page=9

 

21.11.1990

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

 

 

மிகச் சரியான பதில்

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

சிவகுமாரன் தனது ஆயுதப் போராட்டத்தின் முதற்படியாகக் கண்ணிவெடியை  ஒரு  துணையமைச்சர் மீது

 

பயன்படுத்தியதாக ஞாபகம். அந்தத் துணை அமைச்சரின் பெயர் என்ன?

Edited by Puyal

1970ம் ஆண்டுயூலை மாதம் உரும்பராய்சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர்.

Edited by சிறி

சிறி எழுதிய பதில் சரி,

அந்த சம்பவம் இன்னமும் நினைவில் இருக்கு .

1970ம் ஆண்டுயூலை மாதம் உரும்பராய்சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர்.

 

மிக மிகச் சரியான பதில்

சிறிக்கு விசேசமான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளில் ஈகைச் சுடரேற்றும் நேரம் என்ன..??! முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட நேரம் பின்னர் மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன..??!

 

maaveerar-day-prabakaran.jpg

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

Edited by சிறி

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் எப்பொழுது? எங்கு? யாரின் தலைமையில் நடைபெற்றது?

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில்...

 

தலைமைதாங்கியவர் செல்லக்கிளி அம்மான் .

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில்...

 

தலைமைதாங்கியவர் செல்லக்கிளி அம்மான் .

 

அஞ்சரன் மீண்டும் முயற்சிக்கவும்.

முதல் முதலில் இராணுவ பிரிவு ஒண்றின் மீது  1982 ம் ஆண்டு  புரட்டாதி  29ம் திகதி பொன்னாலை பாலத்தில் வைத்து இலங்கை கடற்படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படது ...   லெப் சீலன் ( சாள்ஸ் அன்ரனி ) தலைமையில் தாக்குதல் நடத்தபட்டது.... 

 

அதற்கு முன்னர் 1982 ஆடி மாதம்  நெல்லியடியில்  வைத்து இலங்கை காவல் துறைமீது  முதல் முதலில் தாக்குதல் தொடுக்கப்பட்டது... 

இரவு சுடரேற்றும் போது சிறுவர்கள் பார்க்க முடியாமல் போய்விடும்.அவர்கள் நித்திரையாகிவிடுவார்கள் என்பதால் அந்த நேரம் மாற்றப்பட்டது.  

முதல் முதலில் இராணுவ பிரிவு ஒண்றின் மீது 1982 ம் ஆண்டு புரட்டாதி 29ம் திகதி பொன்னாலை பாலத்தில் வைத்து இலங்கை கடற்படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படது ... லெப் சீலன் ( சாள்ஸ் அன்ரனி ) தலைமையில் தாக்குதல் நடத்தபட்டது....

அதற்கு முன்னர் 1982 ஆடி மாதம் நெல்லியடியில் வைத்து இலங்கை காவல் துறைமீது முதல் முதலில் தாக்குதல் தொடுக்கப்பட்டது...

தயா மீண்டும் முயற்சிக்கவும்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் எப்பொழுது? எங்கு? யாரின் தலைமையில் நடைபெற்றது?

 

15.10.1981

 

தலைமை தாங்கியவர் லெப் கேணல் புலேந்திரன்

 

யாழ். காங்கேசன்துறை வீதியில் தாக்குதல் நடைபெற்றது.

Edited by Puyal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

 

சரியான பதில். நன்றி சிறி. பாராட்டுக்களும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவு சுடரேற்றும் போது சிறுவர்கள் பார்க்க முடியாமல் போய்விடும்.அவர்கள் நித்திரையாகிவிடுவார்கள் என்பதால் அந்த நேரம் மாற்றப்பட்டது.  

 

மாவீரர் தின அனுஷ்டிக்க ஆரம்பிக்கும் போது நாங்களும் சிறுவர்கள் தான். இரவு 12 மணி வரை காத்திருந்து சுடர் ஏற்றி.. தேசியக் கொடிக்கு பூத்தூவி.. அப்போது யாழில் மின்சாரம் இல்லை.. சைக்கிள் டைனமோவை சுத்தி தேசிய தலைவரின் பேச்சுக் கேட்டிட்டு.. அண்மையில் இருந்த முகாமில்.. போராளி அண்ணாக்கள் அக்காக்கள் வைத்த மாவீரர் நினைவுப் பந்தலுக்குப் போய் சாமி குடும்பிடுவது போல மலர் போட்டு கைதொழுது குடும்பிட்டித்தான் உறங்கப் போவோம். முதல் போராளியின் வீரச்சாவு நேரமே ஈகைச் சுடரேற்றும் நேரமானது என்று அப்போதே அறிந்திருந்தோம். அதனை உறுதிச் செய்யக் கூடிய வகையில் சில இணையப் பதிவுகளும் உள்ளன. நன்றி தங்கள் கருத்திற்கு கரன். நீங்கள் குறிப்பிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். மறுக்க முடியாது.

 

Edited by nedukkalapoovan

இராணுவ ஆய்வாளர்களால் உலகச் சமர்களில் ஒன்றான நோமண்டி தரை இறக்கத்திற்கு ஒப்பீடாக ஒப்பிடப்பட்ட தமிழீழச் சமர் எது?

15.10.1981

 

தலைமை தாங்கியவர் லெப் கேணல் புலேந்திரன்

 

யாழ். காங்கேசன்துறை வீதியில் தாக்குதல் நடைபெற்றது.

 

பாராட்டுக்கள் புயல். இரண்டு பதில்கள் சரி,

 

1981ம் ஆண்டு ஐப்பசி மாதாம் பிரிகேடியர் வீரதுங்கா மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி ஏற்றார், பிரிகேடியர் வீரதுங்கா வடக்கிலே இராணுவ ஒடுக்குமுறையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆற்றிய “சேவைகளை” கெளரவிக்குமுகமாகவே இவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிகேடியர் வீரதுங்கா இராணுவத்தளபதியாகப் பதவியேற்ற தினத்தன்று, 15.10.1981 அன்று லெப்டினன்ட் சார்ள்ஸ் அன்ரனி(சீலன்) தலைமையில் விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையினர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இராணுவ ஜீப் ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் கொப்ரல் ஹேவவாசம், மற்றும் சிப்பாய் திஸ்ஸர என்ற இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்ட மற்றுமொருவர் காயங்களுடன் தப்பினார். அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

Edited by சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆய்வாளர்களால் உலகச் சமர்களில் ஒன்றான நோமண்டி தரை இறக்கத்திற்கு ஒப்பீடாக ஒப்பிடப்பட்ட தமிழீழச் சமர் எது?

 

ஓயாத அலைகள் 3 இன் தொடர்சியாக ஆனையிறவு சிறீலங்கா படைத்தளத்தை (தாக்கவே முடியாது என்று அமெரிக்காவால் சான்றிதழ் அளிக்கப்பட்ட படைத்தளம். அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் நேரடிக் கண்காணிப்பில் வலுப்படுத்தப்பட்ட தளம்.) மீட்கும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு தரையிறக்கம்.

குடாரப்பு தரையிறக்கம், இத்தாவில் சமர் 26.03.2000

மிகவும் சரியான பதில்

 

சிறிக்கும் நெடுக்ஸ்ஸிற்கும் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆய்வாளர்களால் உலகச் சமர்களில் ஒன்றான நோமண்டி தரை இறக்கத்திற்கு ஒப்பீடாக ஒப்பிடப்பட்ட தமிழீழச் சமர் எது?

 

 நோமண்டி தரை இறக்கத்துடன் ஒப்பிடப்படும் தரை இறக்கம்

ஆனையிறவைக்கைப்பற்ற

பால்ராஐ; அண்ணையின் தலைமையில் நடத்தப்பட்ட குடாரப்பு தரை இறக்கமாகும்

இது உலக தரத்துடன் பேசப்படும் தரை இறக்கமாகும்

தமிழனால்

உலகத்தால் அசைக்கமுடியாது என்பதையும்

தன் வீரத்தால் விரட்டமுடியும் என பறை  சாற்றிய  இறக்கம்.

 

Edited by விசுகு

 நோமண்டி தரை இறக்கத்துடன் ஒப்பிடப்படும் தரை இறக்கம்

ஆனையிறவைக்கைப்பற்ற

பால்ராஐ; அண்ணையின் தலைமையில் நடத்தப்பட்ட குடாரப்பு தரை இறக்கமாகும்

இது உலக தரத்துடன் பேசப்படும் தரை இறக்கமாகும்

தமிழனால்

உலகத்தால் அசைக்கமுடியாது என்பதையும்

தன் வீரத்தால் விரட்டமுடியும் என பறை  சாற்றிய  இறக்கம்.

 

மிகச் சரியான பதில்

விசுகுவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையின் பெயர் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையின் பெயர் என்ன?

 

தேசிய தலைவர் சிதம்பராக் கல்லூரியில் கல்வி கற்றதாக அவருக்கு கல்வி கற்பித்தவரும் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியருமாக இருந்த ஜெகானந்த குரு அவர்கள் அடிக்கடி சொல்லுவார் என்று அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் குறிப்பிட அறிந்திருக்கிறோம். அவரிடம் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். ஆனால் தேசிய தலைவர் மட்டக்களப்பு.. மற்றும் கொழும்பிலும் கல்வி கற்றதாக குறிப்புகள் உள்ளன. அதனால்  அவரின் ஆரம்பக் கல்வி பற்றி ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த வினா அதற்கான தெளிவைக் கொண்டு வரும் என்று நம்புகிறோம். நன்றி புயல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.