Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்தவாரம் புதுடெல்லி செல்கிறார் கோத்தா – கண்டிக்கக் காத்திருக்கிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya5.jpg

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியப் பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
புதுடெல்லி வரும், கோத்தாபய ராஜபக்சவிடம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியாவே தனிமைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரிய வசம் தெரிவித்த கருத்துக்கும் இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கவுள்ளது. 

இந்தத் தகவலை பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

எனினும் கோத்தாபய ராஜபக்ச எதற்காக புதுடெல்லிக்கு வருகிறார் என்று அவர் கூறவில்லை.

 

http://www.puthinappalakai.com/view.php?20131027109324

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தா பயலுக்கு இந்தியாவில், செங்கம்பளம் விரித்து வரவேற்று, தாம்பாளத்தில் கண்டணத்தை வைத்துக் கொடுப்பான் இந்தியன். அட.....போங்கப்பா.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தாவுக்கு இப்பவே நித்திரை போயே போச்சு.. ஆசாமி வெடவெட.. திருதிரு..

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தா பயலுக்கு இந்தியாவில், செங்கம்பளம் விரித்து வரவேற்று, தாம்பாளத்தில் கண்டணத்தை வைத்துக் கொடுப்பான் இந்தியன். அட.....போங்கப்பா.   

ஆனால் இது போன தடவை மகிந்தாவுக்கு நடக்கவில்லை. டெல்கியில் அவருக்கு வரவேற்பு கிடைக்வில்லை. கோபத்தபயாவுக்கு என்ன கிடைக்கும் என்றதை பொறுத்திருந்து பார்க்கலாம். இலங்கையால் இரகசியமாக வைக்கப்படு இந்தியாவால் மட்டும் வெளிவிடப்பட்ட பயணம் பொதுநலவாய நேரம் இவர் போவது மத்தியை தாஜா செய்ய என்று எடுத்துகொள்ளலாம். அப்படியாயின் அது செங்கம்பளம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இது போன தடவை மகிந்தாவுக்கு நடக்கவில்லை. டெல்கியில் அவருக்கு வரவேற்பு கிடைக்வில்லை. கோபத்தபயாவுக்கு என்ன கிடைக்கும் என்றதை பொறுத்திருந்து பார்க்கலாம். இலங்கையால் இரகசியமாக வைக்கப்படு இந்தியாவால் மட்டும் வெளிவிடப்பட்ட பயணம் பொதுநலவாய நேரம் இவர் போவது மத்தியை தாஜா செய்ய என்று எடுத்துகொள்ளலாம். அப்படியாயின் அது செங்கம்பளம் அல்ல.

 

ஒருவேளை பிரபாகரனை வீட்டுச்சிறை வைத்ததுபோல் கோத்தாவையும் வைத்து மிரட்ட முயல்வார்களோ?

ஒருவேளை பிரபாகரனை வீட்டுச்சிறை வைத்ததுபோல் கோத்தாவையும் வைத்து மிரட்ட முயல்வார்களோ?

அதைதான் செங்கம்பளம் என்று தடுமாறிநீர்களா. செங்கம்பளம் வேறு. அது வேறு. 

 

கிருஸ்ணா இலங்கை கொடுப்பதை தமிழர் வேண்ட வேண்ட வேண்டியதுதான் என்றது வேறு. 13ம் திருத்ததை நீக்க வைதத தெரிவுக்கு குழுவை முடக்கி வடமாகாண சபை தேர்தலை வைத்தது வேறு.  <_<

 

யாழுடன் இணைந்திருங்கள் சிலவ்ற்றை தெரிந்து கொள்ள.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லையூரான். மல்லையின் சொல்லில் முல்லை மணம் கொண்டேன். :rolleyes:  

நன்றி மல்லையூரான். மல்லையின் சொல்லில் முல்லை மணம் கொண்டேன். :rolleyes:  

தங்கள் நன்றியை பெரிய ம்னதுடன் வரவேற்கிறோம்.

 

கோத்தாவுக்கு கிடைக்கப் போகிற செங்கம்பத்தின் ஒரு சாம்பிள். இப்படி ஒருநல்ல மணம் கம கம என்று அடிக்கும் சந்தர்ப்பம் டெல்கியிலும் இருக்கிறது என்றதைத்தான் முதலில் சொல்ல வந்தேன். :D  மகிந்தாவுக்கு திருப்பதியில் நடு நிசியில் தமிழ் நாட்டில் இருந்து சென்றவர்கள் எடுத்துச்சென்ற துளசியின் வாசம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

போறவருக்கும் தெரியும்

முன்பு போல் மனக்குளிர்ந்து வரவேற்பிருக்காது என்று.

 

வரவேற்பவர்களுக்கும் தெரியும்

வந்திருப்பவரை

இனி முன்பு போல் வரவேற்பது ஆபத்தானது என்று...... :(

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவ கண்டிக்க என்று தமிழர்கள் நினைச்சு சந்தோஷப்பட வேண்டியது தான் ஆனால் அங்க கோத்தாவுக்கு நல்ல புரியாணி விருந்தும் தந்தூரி சிக்கன் ன்னும் எண்டு தடல்புடலா விருந்து நடக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவ கண்டிக்க என்று தமிழர்கள் நினைச்சு சந்தோஷப்பட வேண்டியது தான் ஆனால் அங்க கோத்தாவுக்கு நல்ல புரியாணி விருந்தும் தந்தூரி சிக்கன் ன்னும் எண்டு தடல்புடலா விருந்து நடக்கும்

நிச்சயமாக அதுதான் நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவோ, தாத்தாவோ மத்தியில இருக்கும் அரசை பகைச்சால் ஒரு ஆணியும் இலங்கையில் புடுங்க முடியாது.

இந்த கனடா, தென் சூடான் எல்லாம் டம்மி பீசு. ஆனா இந்தியா அப்படியில்லை. இன்றில்லாவிட்டால் என்றாவது ஒருநாள் சுருகுதளம் கழுத்தை இறுக்கும்.

இதச்சொன்னவுடன் நான் கொங்கிரஸ் அனுதாபி என்று காவடி எடுக்கவேண்டாம்.

இது யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தை புரியாதபடியால் தமிழர் தரப்பு பட்ட அவதியை அரசு நன்கு அறியும். அதே நிலை தனக்கும் வரக்கூடாது என்பதற்க்கே இந்த டெல்கி காவடி.

விக்கியருக்கும், சம்பந்த்ஹருக்கும் கூட இந்த யதார்தம் புரியும். ஆகவே அவர்களும் காவடி எடுக்கிறனெர்.

இது மஹாபாரத சீசன்.

பரமாத்மா ( இந்தியா ) வின் பார்வை தம்மேல் படாதா என்று, கால்மாட்டில் ஒரு கூட்டமும் ( அரசு) தலைமாட்டில் இன்னொரு கூட்டமும் (கூட்டமைப்பு) காத்துக்கிடக்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொருத்தவரை இப்பொழுது மிகப்பெரிய அபிவிருத்தி நடை பெற்றுக்கொண்டு இருகின்றது

நெடுஞ்சாலைகள்

துறைமுகங்கள்

கடல் நகரங்கள்

மாதிரி நகரங்கள்

பூங்காக்கள்

என்று சும்மா Singapore அளவுக்கு போயிட்டு இருக்கு இந்த அபிவிருத்திகளில் கூடுதல் பொறுப்பை எடுத்திருப்பது சீனா அதற்க்கு தான் அவசர அவசரமா கோத்தா அழைக்கப்பட்டு விளக்கம் கேட்பதற்காக இருக்கலாம்

நகர அபிவிருத்தி தலைவராக இருப்பது நினைவிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. அபிவிரித்தி புலுடாவுக்கெல்லாம் இந்தியா மினக்கெடாது.

இது 13+ பர்ரியதாய் இருக்கலாம் என்பதே என் அனுமானம். அரசின் அதிகார மையங்களில் 13+ ஐ வலுவாக எதிர்ப்பவர் இவர்.

மற்றய இருவரும் 13+ ற்க்கு ஓமெண்ட பிறகும் இவர்தான் இழுத்தடிக்கிறார் என இந்தியா நினைத்ததால் கூப்பிட்டு சில விடயங்களை தெளிவு படுத்த நினைக்கலாம்.

அதற்கும் மசியாவிடால் கதை அடுத்த கட்டத்துக்கு நகரும்.

பாஞ் சொன்னது போல் வீட்டுச்சிறையில் வைக்காவிட்டாலும், கிட்டத்தட்ட அப்படி ஒரு கிடுக்கிப்பிடி போடப்படும்.

கோத்தாவின் டெல்லிப் பயணம் – இந்தியத் தூதரகம் கைவிரிப்பு [ செவ்வாய்க்கிழமை, 29 ஒக்ரோபர் 2013, 01:08 GMT ] [ தா.அருணாசலம் ]

Gota%20-sad.jpgசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம் தொடர்பாக, தமக்கு எதுவும் தெரியாது என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் கைவிரித்துள்ளது. 

இந்தவாரம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி வரவுள்ளதாகவும் அவரிடம், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், இந்தியா தொடர்பாக சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் செயலகத்துக்கான இணை அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார். 

இந்தநிலையிலேயே, இதுதொடர்பாக கொழும்பலுள்ள இந்தியத் தூதரகத்திடம் கேள்வி எழுப்பிய போது, அதுபற்றிய தகவல் ஏதும் தமக்குத தெரியாது என்று தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, கொமன்வெல்த் மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு மட்டும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வருவார் என்று, சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் மூலம் தெரியவந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

எனினும், இதுகுறித்து புதுடெல்லியில் இருந்து தமக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறியுள்ள, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்த வாரத்துக்குள் இதுபற்றிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20131029109332

 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் டெல்லிப் பயணம் – இந்தியத் தூதரகம் கைவிரிப்பு [ செவ்வாய்க்கிழமை, 29 ஒக்ரோபர் 2013, 01:08 GMT ] [ தா.அருணாசலம் ]

Gota%20-sad.jpgசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம் தொடர்பாக, தமக்கு எதுவும் தெரியாது என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் கைவிரித்துள்ளது. 

இந்தவாரம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி வரவுள்ளதாகவும் அவரிடம், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், இந்தியா தொடர்பாக சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் செயலகத்துக்கான இணை அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார். 

இந்தநிலையிலேயே, இதுதொடர்பாக கொழும்பலுள்ள இந்தியத் தூதரகத்திடம் கேள்வி எழுப்பிய போது, அதுபற்றிய தகவல் ஏதும் தமக்குத தெரியாது என்று தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, கொமன்வெல்த் மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு மட்டும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வருவார் என்று, சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் மூலம் தெரியவந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

எனினும், இதுகுறித்து புதுடெல்லியில் இருந்து தமக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறியுள்ள, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்த வாரத்துக்குள் இதுபற்றிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னரான மருத்துவக் கண்டுபிடிப்புகளால் மனித இனம் பல்கிப் பெருகி, உணவுத்தேவையும் அதிகரித்ததினால், வெந்ததும் வேகாததுமான விரைவு உணவு வகைகளின் வளர்ச்சியுடன், ஐக்கிய நாடுகள் சபையும் பூச்சி புழுக்களையும் உணவாக்க வழிவகைகளைத் தேடுகிறது. அதுபோலவே கணனி உபயோகத்தின் பின்னர் ஊடகத் துறைகளும் பல்கிப் பெருகிவிட்டது. அவற்றிற்கு அறிந்ததும் அறியாததும், புரிந்ததும் புரியாததுமாக, விரைவுச் செய்திகள் அதிவிரைவாகத் தேவைப்படுகிறது. அதுவே மக்களை அவதிக்குள்ளாக்கி அலையவிட்டுள்ளதை, மல்லையின் பதிவிலுள்ள செய்திகள் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது..

கோத்தாவிற்கு நல்ல உறைப்பு கூடிய கனடா மிளகாய்த்தூள் கண்ணுக்க போட போகின்றார்களாம் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.