Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளுக்கு தொழில்நுட்ப உதவி செய்த கனடிய தமிழருக்கு 2 ஆண்டுகள் சிறை. அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு.

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடிய வாழ் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.

 

சுரேஷ் ஸ்ரீகாந்தராஜா என்ற கனடிய தமிழர், 32 வயது நிரம்பியவர். இவர் அமெரிக்காவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு போர்க்கப்பல்கள் டிசைன் செய்யும் சாப்ட்வேர், இருட்டிலும் பார்க்கும்படியான உபகரணங்கள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும், ஆயுதங்கள் முதலியவற்றை பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து பிரதீபன் நடராஜா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

 

இவர் மீது வழக்குப்பதிவு செய்து புரூக்ளீன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என புரூக்ளீன் அரசு வக்கீல் வாதாடினார். இந்த பரபரப்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் ஸ்ரீகந்தராஜாவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார்.

 

 

 

http://www.thedipaar.com/listings/canada-tamil-jail/

பெரிய நிம்மதி. சில சமயம் நேராக வெளியே விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்குச் சிறை தண்டனை கிடைத்தால்" இத்தனை வருடங்களில் இன்னென்ன விடயங்களைப் படிக்கலாம் என்ற தயார்படுத்தல் அவரிடம் இருந்தது. நிச்சயம் எதிர்காலத்தில் தமிழ் சமூகம் போற்றும் கல்விமான்களில் அவரும் ஒருவராக இருப்பார். இச் செய்தியால் அவரது வாழ்க்கைத் துணைவி நிச்சயம் மகிழ்வடைந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தமிழருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை
29 அக்டோபர் 2013


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்துள்ளது.

33 வயதான சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற தமிழருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாட்டர்லூ பல்கலைக்கழகத்தி;ன் பொறியியல் பீடத்தில் கல்வி பயின்று வந்த குறித்த நபர் 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சுரேஸ் ஒப்புக் கொண்டிருந்தார்.

நீர்மூழ்கிக்கப்பல் மென்பொருள் மற்றும் ஆயுதங்களை புலிகளுக்காக சுரேஸ் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சுரேஸ் ஏற்கனவே கனடாவில் இரண்டு மாதங்களும் அமெரிக்காவில் பத்து மாதங்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரது தண்டனைக் காலம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சுரேஸிற்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98249/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கற்றோருக்கு சென்ற இடம் எங்கும் சிறப்பு.

 

அவரது கல்வி முயற்சி கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது, என தெளிவாகிறது.  மேலும் இலங்கை அரசின் யுத்தத்தின் பின்னான நடவடிக்கைகள், வழக்குத் தொடர்ந்த, 15 வருடங்கள் கோரிய, அமெரிக்க அரச தரப்பினை, சிறிது பலவீனமாக்கி இருக்கலாம்.

 

அமெரிக்க அரசுக்கு ஆபத்தில்லா கல்வியாளர் ஒருவரை, மனித உரிமை மீறல் அதிகம் கொண்ட, சர்வதேச நாடுகளை எதிர்க்கும் ஒரு நாட்டுக்காக, நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க நீதித்துறை விரும்பவில்லை என தெரிகிறது.

Edited by Nathamuni

நல்ல செய்தி அவருக்கு இரண்டு ஆண்டுக்கு மேல் சிறையுள் இருந்து உள்ளார் அதனால் உடனம் வெளியில் வர வாய்ப்பு அதிகம் இருக்கு உண்மையான உணர்வாளன் விடுதலை பொறுவதில் மகிழ்ச்சி .

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே சிறையில் இருந்த காலங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு அவர் விரைவில் வெளியில் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

 

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக தடை செய்யும் திறன்கொண்டவனாக தமிழினத்தில் இருந்துவந்த ஒரு தமிழனே செயற்பட்டுள்ளான். ஆகவே பயங்கரவாதிகள் என்ற தடையை நீக்கும் திறன்கொண்ட ஒருவன் தமிழினத்தில் இருந்தே வெளிப்படுவான் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.