Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழைச் சேர்ந்த நபர் தமிழகத்தில் தற்கொலை - இரு மனைவிகளினதும் பிரிவே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த பெண்களை குற்றவாளியாக நினைத்ததால் அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். அதற்காக அந்த ஆணில் தான் பிழை என்று நான் கூறவில்லை. அத்துடன் இரண்டாவது மனைவி பற்றி அதில் நான் எழுதியும் இருக்கவில்லை. விவாகரத்து தொடர்பான உங்கள் கருத்துக்கு முதல் மனைவியை வைத்தே பதில் எழுதக்கூடியதாக இருந்தது.

அந்த பெண்கள் ஏமாற்றியதாக ஏன் எண்ன வேணும்? அந்த ஆணில் தான் பிழை என ஏன் எண்ன கூடாது? எனவும் கேட்கலாம். அவ்வாறு நாங்கள் மாறிமாறி கேட்பதற்காக எதுவும் உண்மை ஆகிவிடாது.

 

நான் பெண்கள் அனைவரும் நல்லவர்கள் என வாதிடவில்லை. ஆனால் ஒரு பிரச்சினை என்றவுடன் பெண்ணை குற்றம் சாட்டுவதையே நான் எதிர்க்கிறேன். ஆண்களிலும் பெண்களிலும் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளார்கள்.

முதல் மனைவியை இவர் துரத்தி விட்டும் இருக்கலாம். அல்லது இவரது செய்கைகள் பிடிக்காமல் அவர் பிரிந்து இருக்கலாம். போன்ற சந்தர்ப்பங்களும் உள்ளது. அதுதொடர்பான விபரமறிய இச் செய்தி போதாது. ஆனால் இரண்டாவது மனைவி விடயத்தில் இவர் பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால் தற்கொலை செய்திருக்கலாம். அல்லது இவர் விட்ட தவறு ஏதும் தெரியவந்து மனைவி பிரிந்த பின்னர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை பண்ணியும் இருக்கலாம். அருகில் இருப்பவர்களுக்கு தான் உண்மை தெரியும். எமக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி?

 

நல்ல சுவாரசியமாக இருக்குது இந்தக் கருத்து. ஆண்களும் நல்லம். பெண்களும் நல்லம். ஆண்களிலும் கெட்டவங்க இருக்காங்க.. பெண்களிலும் இருக்காங்க. இதைச் சொல்லிக் கொண்டு.. ஊடகம் செய்தி காணாதுன்னும் சொல்லிக் கொண்டு.. ஆராய்ச்சி ஏன் என்றும் கேட்டுக் கொண்டு.. மீண்டும் மீண்டும் ஒரு பக்கம் மட்டும் கேள்விகளை தொடுப்பது மட்டும் நியாயமாகாது..??!

 

நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளை மாற்றி அந்தப் பெண்கள் மீதும் போடலாம். போட முடியும். அதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால்.. அதற்கு வெறும் அவமானம் மட்டும் காரணமாக இருக்க முடியாது. மேலும்.. இது தற்கொலையா அல்லது அந்தப் பொண்ணுங்க செய்விச்ச கொலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட வேண்டும்..??! அது மட்டுமன்றி இந்தத் தற்கொலைக்கு பிறர் குறிப்பாக அந்தப் பொண்ணுங்க தூண்டுதலாக இருப்பின் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் அவசியம். நீங்கள் அப்படி எதனையும் சொல்லேல்ல. மாறாக மீண்டும் மீண்டும்... அந்த செத்துப் போன மனிசன் மீதே.. குற்றம் சாட்டிற கேள்விகளை வைக்கிறீங்க. அப்புறம் எதுக்கு ஆராய்ச்சின்னும் கேட்டிட்டு முடிக்கிறீங்க. அது தான் சுவாரசியம் இங்கு.

 

நாங்க நேரிடையா.. குறித்த பெண்கள் மீது அதுவும் குற்றத்தை விசாரித்து அறியக் கூடிய உயிர் வாழும் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்டங்க மீதே சந்தேகத்தை வைக்கிறம். அவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த மரணத்திற்கான உண்மைக்காரணம் தெரியும். மேலும்.. பிள்ளைகளையும் பெத்துக்கிட்டு ஓடி இருக்கினமின்னா.. உந்தப் பெண்கள் சந்தேகத்திற்கு இடமான ஆக்களே. அந்த வகையில் இந்த மரணம் தற்கொலையா... தூண்டிய மரணமா... அல்லது கொலையா என்பதே நிச்சயமில்லை..! ஊடகம் காவி வந்த செய்தியை அடிப்படையாக வைச்சு நீதியை தேடனுமே தவிர அந்த ஆண் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. அது பக்கச் சார்ப்பான வாதம் ஆகும். குறித்த பெண்கள் மீது குற்றம் சுமத்த முடியும். காரணம்.. அவங்க தான் இப்ப தப்பி உள்ள இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய மறு தரப்பு. :icon_idea::)

 

Edited by nedukkalapoovan

இந்த செய்தியிலுள்ள தகவல்கள் போதாது. இதை வைத்து ஊகத்தின் அடிப்படையில் நாம் கருத்து தெரிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது அந்த பெண்களில் தான் பிழை என எவ்வாறு சொல்வீர்கள் என தான் நானும் கேட்டேன். <_<

 

யார் மீது தவறு உள்ளது என்பது தெரியாமல் ஊகத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் கருத்து வைப்பதால் உண்மை தெரியப்போவது இல்லை.

இது விசாரித்து உண்மை அறியப்பட வேண்டிய ஒரு விடயம். ஆனால் தமிழக காவல்துறை இதில் மினக்கடாது என்றே நினைக்கிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத் தங்கை பற்றி ????? :D

 

 

உங்களின் கோள்விக்கு என்னால் விடைதர முடியவில்லை சுமேரியர் மன்னித்துக்கொள்ளுங்கள். :( 

 

நெடுக்கர் வந்துவிட்டார்தான் ஆனால் அவர் அர்த்தநாரீஸ்வரராக வந்துள்ளார்!. ஆணையோ, பெண்ணையோ குறை சொல்லமுடியாத நிலமை. இராமராக வந்திருந்தாலாவது சீதையைத் தீக்குளிக்க வைத்திருப்பார். இருந்தபோதும் அவர் இப்போ துளசியிடம் மாட்டிவிட்டார். :o  நெடுக்கரோ பிரமச்சாரி என்றறிந்தேன். மனைவி என்று ஒருத்தி இருந்தாலாவது அவவைக்கொண்டு சுற்றி வணங்கவைத்து துளசியைச் சாந்தப்படுத்தி விடலாம்.

 

தங்கை பற்றிக் கவலைப்படாதீர்கள்! தமிழ்நாட்டுப் பொலிசார் லேசுப்பட்டவர்களல்ல!. ராஜீவ்காந்தியின் கொலையைக் கண்டுபிடித்தமாதிரி, சேலைக்குச் சொந்தமான தங்கை யாரென்று விரைவிலேயே கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்கள். :icon_idea: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இரண்டு மனைவிகளுமே கொடியவர்களாக இருந்து இந்த மனிதர் இழகிய மனம் படைத்தரவாக இருந்திருக்கலாம். அந்தச் சோகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் தற்கொலை முழு முட்டாள் தனமானதே... எந்தச் சோகமும் மனதால் வெல்லப்படக் கூடியதே. அந்தத் தருணத்தை தாண்டுவது தான் முக்கியம் மனிதனுக்கு.

 

உலகிற்கு அணு அறிவியலைத் தந்த.. அயன்ஸ்ரைனின் கூட விவாகரத்துப் பெற்றவர் தான். அதேபோல்.. தத்துவஞானி சாக்கிரட்டிஸ் கூட தனது கெட்ட மனைவியை வெறுத்தவர் தான். அவர்கள் எல்லாம்.. கெட்டவர்களோ...இயலாதவர்களோ...??!

 

ஏனோ தெரியல்ல சில ஆண்களுக்கு பெண்களை எப்பவுமே நல்லவங்களாவே காட்டிப் பழகிட்டு. அதனால் அவங்க குனிந்து வளைந்து நெழிந்து..... பல நன்மைகளைப் பெறுறாங்க போல. ஆனால் சமூகத்தில்.. யதார்த்தம் என்பது வேறாக உள்ளது. :)

 

 

 

 

இங்கு தனிநபரின் வாழ்க்கையைப்பற்றிய பட்டிமன்றம் நடக்கவில்லை, 'தற்கொலை கூடாது" என்பதே பொதுப்படையான கருத்து.

 

 

தன் பிள்ளைகளைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் அவர்களுக்காக வாழவேண்டும் என்ற பொறுப்பில்லாத ஒரு அப்பனுக்கு!....' எந்தவகையில் அனுதாபப் பட முடியும்?!.

 

அதுக்குப் பிறகும் இன்னொரு மனுஷி கேட்குதா இவருக்கு?!.

 

 

நெடுக்ஸ் அண்ணை, 'வெறும் சுகத்துக்காகத்தான் பெண்கள் அலைகின்றார்கள் என்றால், அவர்கள் பிள்ளையைச்சுமந்து கஷ்டப்பட வேண்டிய தேவை இல்லை!

 

அவரின் தற்கொலை கண்டிக்கத்தக்கதே அன்றி எந்த விதத்திலும் அவருக்காகப் பரிதாபப் படத்தோன்றவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா அந்தப் பச்சைக்குழந்தையை இங்கை கூப்பிடுறியள். பாவம் பிள்ளையை கொஞ்சம் படிக்க விடுங்கோவன். :lol:

 

 

என்ன  செய்வது சகோதரி

ஆண் சிங்கங்கள் :lol:  எல்லோரும்

வண்டியில் பூட்டிய  மாடுகள் ஒரே அளவில் ஓடணும் என்ற உயர்ந்த லட்சியத்துக்காக :o

வாழ்க்கை எனும் சிறையில் மாட்டி வாயில்லாப்பூச்சிகளாக :D

மௌனமாக  வண்டியை  இழுக்க

இவர் ஒருவர் தானே

தனியே  நின்ற எமக்காக நொங்கு நொங்கு என்று  வாங்கிக்கட்டினாலும் :D

வாதிடுகின்றார்... :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.