Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பாதுகாப்புச் சுவர் இடித்தது அழிக்கப்பட்டதற்கு கண்டனம்:சென்னையில் மாணவர்கள் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடித்ததழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பு பகுதியை தமிழக அரசு அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் உலத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட 82 மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறக்கோரியும், சேலம் சிறையில் தேசியப்பாதுகாப்பு சட்டதத்pன் கீழ் தடுத்துவைக்கப்ட்டுள்ள தமிழின உணர்வாளர் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும் இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

mulli%20chennai2.jpg

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். அண்ணா மேம்பாலத்தை சுற்றி வளைத்து சுமார் இருபத நிமிடங்கள் வரை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் கௌதமன் மற்றும் hணவர் கூட்டமைப்பை சேர்ந்த பிரிட்டோ உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99352/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முற்றத்தோடு முடிந்தது அதிமுக'

 

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை தமிழக அரசு கட்டித்தரக் கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை மறித்து மாணவர்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர்.
 

student%20protest%20chennai%201.jpg

'முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முற்றத்தோடு முடிந்தது அதிமுக'

தஞ்சாவூரில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் "முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிந்தது அதிமுக" என எழுதப்பட்டிருந்தது.
 

student%20protest%20chennai%20%203.jpg

காலை 8 மணி முதலே செம்மொழிப் பூங்காவுக்கு அருகில் திரண்டிருந்த மாணவர்கள் திடீரென ஜெமினி மேம்பாலத்தை மறித்து பூட்டுப் போடும் போராட்டத்தினை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தேனாம்பேட்டையில் உள்ள மங்களம் மஹால் திருமண மண்டபத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

 

student%20protest%20chennai%20%204.jpg

300க்கும் மேற்பட்ட காவல்துறையினர், உளவுத் துறையினர் அப்பகுதியில் காலை முதலே குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21552

  • கருத்துக்கள உறவுகள்
student%20protest%20chennai-20131122-150

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை தமிழக அரசு கட்டித்தரக் கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை மறித்து மாணவர்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. இந்த நினைவு முற்ற திறப்புவிழா கடந்த சிலவாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் விழாக்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி முற்றத்தின் சுற்றுச் சுவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது. இது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  

இந்த நிலையில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். செம்மொழிப் பூங்காவுக்கு அருகில் காலை 8 மணி முதலே திரண்டிருந்த மாணவர்கள் திடீரென ஜெமினி மேம்பாலத்தை மறித்து பூட்டுப் போடும் போராட்டத்தினை நடத்தினர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தேனாம்பேட்டையில் உள்ள மங்களம் மஹால் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

 

student%20protest%20chennai4-seithy-2013

 

 

student%20protest%20chennai3-seithy-2013

 

 

student%20protest%20chennai2-seithy-2013

 

 

student%20protest%20chennai333-seithy-20

 

 

student%20protest%20chennai-seithy-20131

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97413&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்தவர்கள். அதனைத் கட்டித் தர வேண்டும்.
இல்லையேல்.... அடுத்த ஐந்து வருடம், வீட்டில் இருந்து.. பேன் பார்க்க வேண்டும்.
மாணவர் போராட்டத்துக்கு நன்றிகள்.

தமிழகமக்கள் இதை ஒரு அவமான வேலையாக கருதும் வரை    அங்க ஒன்றும் எடுபடாது. எருமை மாட்டில்   மழை பெய்த கதை தான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமக்கள் இதை ஒரு அவமான வேலையாக கருதும் வரை    அங்க ஒன்றும் எடுபடாது. எருமை மாட்டில்   மழை பெய்த கதை தான்

 

தமிழகத்தில்.... தொலைக்காட்சி நடத்தும்....

இரண்டு முக்கிய நிறுவனங்களும்... மாறி,மாறி.. ஆட்சிக்கு வரும் கட்சியினர்.

இவர்களுக்கு... சொத்துக்கள் பல்லாயிரம் கோடி.

ஆனால்... இன உணர்வு, மேடைப் பேச்சில்...

இப்படியும்... மனிதன், வாழக் கூடாது என்பதற்கு...

இவர்கள் நல்ல, உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.