Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளும் கட்சியின் சார்பில் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
murali-seithy-3-150.jpg

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நட்சத்திரம் வேறு யாருமல்ல. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய பிரதமருக்கு துஷ்ரா பந்தை வீசி வீழ்த்த முயற்சித்து தனது பந்தில் தன்னையே வீழ்த்திக் கொண்ட முத்தையா முரளிதரனே அந்த நட்சத்திரமாகும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதோடு அரசியல் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜயசூரிய வரிசையில் முத்தையா முரளிதரனும் அரசியல் மைதானத்திற்கு வருவதாக ஜனாதிபதிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

முரளிதரனின் விருப்பம் கிடைத்துள்ள நிலையில் மகிழ்ச்சியடைந்துள்ள ஜனாதிபதி, நாட்டின் இரண்டாவது தமிழ் முதலமைச்சராக முத்தையா முரளிதரனுக்கு பட்டாபிஷேகம் செய்ய திட்டங்களை வகுத்து வருகிறார். தாம் தமிழ் மக்களையும் சரிநிகர் சமமாக நடத்துவதாக உலகத்திற்கு காட்ட ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. முத்தையா முரளிதரன் தென்னிந்திய பெண்ணொருவரையே மணந்திருப்பதால், தென்னிந்தியாவுடன் அவருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளை ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை தடுக்க முடியாது.

எனினும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முத்தையா முரளிதரனுக்கு எதிரான எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்த நிலையில் முரளியின் அரசியல் வருகையின் பின்னணியில் வேறு ஒரு கதை இருப்பதாக பேசப்படுகிறது. வானொலி அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படுவதை தடுக்க துமிந்த சில்வா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது போல் முரளிதரனின் பின்னணியிலும் அப்படியான கதை இருப்பதாக தெரியவருகிறது.

அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு பெருந் தொகையான எத்தனேல் மதுசாரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முரளியின் சகோதரர் ஒருவர் பெருந்தொகை பணத்தை அபராதமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தை அவர் நீண்டகாலமாக செய்து வந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரிப் பணம் கிடைக்காமல் போயிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளை மூடிமறைக்க இருக்கும் ஒரே வழி அரசாங்கத்துடன் இணைவதுதான் என்று அறிந்திருக்கும் முரளிதரன், அரசியலில் இறங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97651&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த எலும்புத் துண்டைப் பொறுக்கத்தான் இந்தக் குரை குரைச்சதோ..???!

 

dog-barking-cartoon.gif

  • கருத்துக்கள உறவுகள்

முரளீதரன்?? பெயர் கொண்ட ரெண்டாவது அரசியலில். தெருவாலை போற தேவாங்கை வேட்டியிக்கை பிடிச்சு கட்ட போறன் என்று அடம் பிடிச்சா நாம் தான் என்ன செய்வது, விடுவம். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுக்குள் வைத்த மாதிரித்தான்...... நக்காமலா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தனக்குத்தானே  குழி பறிக்கின்றார்

இருப்பவர்கள்

சேருபவர்கள்  எல்லோரும் 

நன்றி  மறந்தவர்கள்

தன் இனத்தையே  காட்டிக்கொடுத்தவர்கள்

பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்........... :(  :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.