Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்.கிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி ஆதிக்கம்

Featured Replies

பாக்.கிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி ஆதிக்கம்

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165  ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக குராம் மன்சூர் 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஏரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் வீழ்த்தினர்.
ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது. குமார் சங்கக்கார 12 ஓட்டங்களுடனும் குசல் சில்வா 12 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

 

http://www.virakesari.lk/?q=node/360524
 

  • தொடங்கியவர்

மஹேலவின் சதத்துடன் வலுவான நிலையில் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளதோடு 153 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் அரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டுபாயில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்த வகையில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 63.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

குராம் மன்சூர் அதிகூடுதலாக 73 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அஹமட் செயிட் 3, முஹமட் ஹாபிஸ்21, யுனிஸ்கான் 13, மிஸ்பா உல் ஹக் 1 என சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர்.

இலங்கை அணியில் நுவான் பிரதீப் மற்றும் ரங்கண ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஹேரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சிற்காக கருணாரத்ன மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதன் போது திமுது கருணாரத்ன 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நேற்றைய ஆட்டமுடிவின் போது இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை 57 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு களத்தில் கௌசல் சில்வா 12 ஓட்டங்களுடனும் சங்கக்கார 12 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியில் களத்திலிருந்த சங்கக்கார 26 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்த வந்த சந்திமாலும் 12 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

இந்நிலையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த கௌசல் சில்வாவுடன் மஹேல ஜயவர்தன கைகோர்த்தார். இருவரும் நிதானமாக அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது கௌசல் சில்வா 5 ஓட்டங்களால் டெஸ்ட் அரங்கில் தனது கன்னிச் சதத்தை தவறவிட்டார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கௌசல் சில்வா 221 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 95 ஓட்டங்களை பெற்றிருந்த போது முஹமட் ஹாபிசின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து மஹேலவுடன் மெத்தியூஸ் கைகோர்க்க சொற்ப நேரத்தில் மஹேல சதத்தை கடந்தார். 215 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சதத்தை பூர்த்தி செய்த அவர் டெஸ்ட் அரங்கில் தனது 32 ஆவது சதத்தை கடந்தார்.  இச் சதத்தை, பிறந்துள்ள தனது குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக ஆடுகளத்திலிருந்து மகிழ்ச்சியுடன் சைகை மூலம் வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து இன்றைய ஆட்டம் நிறைவுக்கு வர மெத்தியூஸ் 42 ஓட்டங்களுடனும் மஹேல 106 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

http://www.virakesari.lk/?q=node/360560

 

 

 

 

  • தொடங்கியவர்

கௌஷால் சில்வாவைப் புகழ்கிறார் மஹேல ஜெயவர்தன

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வாவை புகழ்ந்துள்ள இலங்கையின் மஹேல ஜெயவர்தன, அவர் நீண்டகாலம் இலங்கைக்காக விளையாடுவார் எனவும் எதிர்வுகூறியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிவரும் இலங்கை அணி சார்பாக கௌஷால் சில்வா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகச் செயற்பட்டு வருகிறார்.

இதற்கு முன்னர் இலங்கைக்காக சில வருடங்களுக்கு முன்னர் 3 போட்டிகளில் பங்குபற்றியிருந்த கௌஷால் சில்வா, இந்தத் தொடருக்காக மீண்டும் அழைக்கப்பட்டதோடு, முதற்போட்டியில் 20, 81 என ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்திருந்தார்.

இந்த நிலையில் கருத்துத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, கௌஷால் சில்வா சதமொன்றைப் பெற முடியாது போனது துரதிஷ்டமானது எனத் தெரிவித்தார். அவர் மிகச்சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வருவதாகக் குறிப்பிட்ட மஹேல, இலங்கையின் உள்ளூர்க் கழகத்தில் அவர் தனது சக வீரர் எனவும், அவர் எவ்வாறு கடினமாக உழைத்து வருகிறார் எனத் தனக்குத் தெரியும் எனவும் தெரிவித்தார்.

இந்தத் தொடரில் கௌஷால் சில்வா இரண்டு மிகச்சிறப்பாக இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளபோதிலும், இரண்டிலும் சதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட மஹேல, ஆனால், இரண்டாவது போட்டியில் அவரது 95 ஓட்டங்கள் சதத்திற்கு ஒப்பானவை எனக் குறிப்பிட்டார்.

உள்ளூர்ப் போட்டிகளில் கௌஷால் சில்வா மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறுவதில் வழக்கமுடையவர் எனத் தெரிவித்த மஹேல, இங்கும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்தைப் பெற்றால் அதன் பின்னர் அவர் தொடர்ந்தும் அதிகளவிலான சதங்களைப் பெறுவார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/96284-2014-01-10-04-55-41.html

  • தொடங்கியவர்

இலங்கை முதல் இனிங்ஸில் 388 ஓட்­டங்­க­ள்: நெருக்கடியில் பாகிஸ்தான்
 

மஹேல ஜெய­வர்­த­னவின் நிதான சதத்­துடன் இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 388 ஓட்­டங்­க­ளைக்­கு­விக்க 223 ஓட்­டங்­களால் பின்­னிலை வகித்த பாகிஸ்தான் தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்­பி த்­துள்­ளது.

19 ஓட்­டங்­க­ளுக்குள் 3 விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்து ஆரம்­பமே தடு­மா­றிய அவ்­வணி நேற்­றைய 3 ஆம் நாள் ஆட்­ட­நேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 132 ஓட்­டங்­களை பெற்­றி­ருந்­தது.

இலங்கை-– பாகிஸ்­தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டி டுபாயில் நடை­பெற்று வரு­கின்­றது. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணியின் விக்­கெட்­டுக்கள் அனைத்­தையும் முதல் நாளி­லேயே பறித்த இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸில் 165 ஓட்­டங்­க­ளுக்குள் முடி­வுக்கு கொண்­டு­வந்­தது.

பின்னர் பதி­லுக்கு தனது முதல் இனிங்ஸை ஆரம்­பித்த இலங்கை அணி நேற்று முன்­தினம் 2 ஆவது நாள் ஆட்­ட­நேர முடிவில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 318 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் போட்­டியின் 3 ஆவது நாளான நேற்று மீண்டும் தனது முதல் இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 70 ஓட்­டங்­களைப் பெறு­வ­தற்குள் மீதி விக்­கெட்­டுக்கள் அனைத்­தையும் இழந்து முதல் இனிங்­ஸுக்­காக 388 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றது.

இதில் 46 ஓட்­டங்­க­ளுடன் நேற்று ஆட்­டத்தை தொடர்ந்த அணித்­த­லைவர் மத்­தியூஸ் மேல­திய ஓட்­ட­மெ­த­னையும் பெறாது ஆட்­ட­மி­ழக்க மறு­மு­னையில் 106 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­டத்தை தொடர்ந்த மஹேல ஜெய­வர்த்­தன மேலும் 23 ஓட்­டங்­க­ ளைப்­பெற்ற வேளையில் அரங்கு திரும்­பினார்.

தொடர்ந்து ஏனைய விக்­கெட்­டுக்கள் அடுத்­த­டுத்து பறி­போக இலங்கை அணியின் முதல் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து நேற்றைய நாளிலேயே தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ் தான் ஆட் ட நேர முடிவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 132 ஓட்­டங்­களை பெற்­றிருந்­தது.

குரான் மன்சூர் (6), அஹ ட்செஷாட் (9) முகமட் ஹபீஸ் (1) ஆகி யோர் அணி 19 ஓட்டங்களைப் பெறுவதற்குள் அடுத்த டுத்து அரங்கு திரும்ப ஜோடி சேர்ந்த யூனிஸ்கான் (62)-–மிஸ்பா உல் ஹக் (53) ஆகியோர் 113 ஓட்டங்களை பகிர்ந்து அணியை சரிவிலிருந்து நிமிர்த்த நேற்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததது.

 

http://www.virakesari.lk/?q=node/360585

 

 

  • தொடங்கியவர்

வெற்றி பெறுமா இலங்கை

 

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், இலங்கை அணிகள், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 165, இலங்கை அணி 388 ரன்கள் எடுத்திருந்தன. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, 91 ரன்கள் பின்தங்கி இருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. லக்மல் பந்தில் யூனிஸ்கான் (77)வெளியேறினார். ஆசாத் சபிக் 23 ரன்களில் நடையைக் கட்டினார். ஹெராத் ‘சுழலில்’ சிக்கிய மிஸ்பா (97), சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின் இணைந்த சர்பராஸ், பிலாவால் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பிலாவால், 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்பராஸ் அரை சதம் கடந்தார். மழை குறுக்கிட்டதால், ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்து, 107 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இன்று மீதமுள்ள விக்கெட்டை விரைவில் கைப்பற்றும்பட்சத்தில், இலங்கை அணி எளிய இலக்கை துரத்தி வெற்றி பெறலாம்.

 

http://sports.dinamalar.com/2014/01/1389461236/RanganaHerathcricket.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு 75 அல்லது 100 ஓட்டங்களை பாக்கிஸ்தான் அணி பெறுமாயின் கடைசி நாள் ஆடுகளம் பாக்கிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும். அதைவிட கிட்டத்தட்ட 105 ஓவர்கள் நாளை வீசப்பட இருக்கின்றன. 35 - 45 ஓவர்கள் பாக் அணி தாக்குப்பிடிக்குமாயின் ஆட்டத்தின் போக்கை மாற்றலாம். நாளை முதல் ஒரு மணிநேரம் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கும்.

  • தொடங்கியவர்

பொறுத்து இருந்து பார்ப்போம் வாலி, இன்று டுபாயில் மழை காரணமாக போட்டி முன்னதாகவே இடைநிறுத்தப்பட்டது.

இன்று வீசப்பட்டிருக்க வேண்டிய 15 ஓவர்களும் நாளை வீசப்படும் என்றும், ஆதலால் போட்டி முன்னதாகவே ஆரம்பிக்கும்.

இறுதிநாள் போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும், சமநிலையில் முடிவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு. மதிய நேரம் வரை பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை கொண்டு இழுப்பார்கள்.

இலங்கைக்கு சராசரி ஓட்ட விகிதம் நான்கில் ஓட்டங்கள் எடுக்க வேண்டி ஏற்படும். இறுதிநாளில் அதற்கான சாத்தியங்கள் குறைவு.

நிச்சயம் எமது அணி வெல்லும் .

  • தொடங்கியவர்

 
இரண்டாவது டெஸ்டில் இலங்கை இலகுவாக வெற்றி

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் அரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்த வகையில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 63.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
குராம் மன்சூர் அதிகூடுதலாக 73 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அஹமட் செயிட் 3, முஹமட் ஹாபிஸ்21, யுனிஸ்கான் 13, மிஸ்பா உல் ஹக் 1 என சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர்.

இலங்கை அணியில் நுவான் பிரதீப் மற்றும் ரங்கண ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஹேரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சிற்காக கருணாரத்ன மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதன் போது திமுது கருணாரத்ன 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் நாள் ஆட்டமுடிவின் போது இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை 57 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு களத்தில் கௌசல் சில்வா 12 ஓட்டங்களுடனும் சங்கக்கார 12 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை 9 ஆம் திகதியன்று தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியில் களத்திலிருந்த சங்கக்கார 26 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்த வந்த சந்திமாலும் 12 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.
இந்நிலையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த கௌசல் சில்வாவுடன் மஹேல ஜயவர்தன கைகோர்த்தார். இருவரும் நிதானமாக அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது கௌசல் சில்வா 5 ஓட்டங்களால் டெஸ்ட் அரங்கில் தனது கன்னிச் சதத்தை தவறவிட்டார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கௌசல் சில்வா 221 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 95 ஓட்டங்களை பெற்றிருந்த போது முஹமட் ஹாபிசின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.
இதனையடுத்து மஹேலவுடன் மெத்தியூஸ் கைகோர்க்க சொற்ப நேரத்தில் மஹேல சதத்தை கடந்தார். 215 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சதத்தை பூர்த்தி செய்த அவர் டெஸ்ட் அரங்கில் தனது 32 ஆவது சதத்தை கடந்தார்.  இச் சதத்தை, பிறந்துள்ள தனது குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக ஆடுகளத்திலிருந்து மகிழ்ச்சியுடன் சைகை மூலம் வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து இரண்டாம் ஆட்டம் நிறைவுக்கு வர மெத்தியூஸ் 42 ஓட்டங்களுடனும் மஹேல 106 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்போது இலங்கை அணி  4 விக்­கெட்­டுக்­களை இழந்து 318 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் போட்­டியின் 3 ஆவது நாளான வெள்ளிக்கிழமை(10) மீண்டும் தனது முதல் இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 70 ஓட்­டங்­களைப் பெறு­வ­தற்குள் மீதி விக்­கெட்­டுக்கள் அனைத்­தையும் இழந்து முதல் இனிங்­ஸ{க்­காக 388 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றது.
இதில் 46 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­டத்தை தொடர்ந்த அணித்­த­லைவர் மெத்­தியூஸ் மேல­திய ஓட்­ட­மெ­த­னையும் பெறாது ஆட்­ட­மி­ழக்க மறு­மு­னையில் 106 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­டத்தை தொடர்ந்த மஹேல ஜெய­வர்த்­தன மேலும் 23 ஓட்­டங்­க­ ளைப்­பெற்ற வேளையில் அரங்கு திரும்­பினார்.

தொடர்ந்து ஏனைய விக்­கெட்­டுக்கள் அடுத்­த­டுத்து பறி­போக இலங்கை அணியின் முதல் இனிங்ஸ் முடிவுக்கு வர
இலங்கை 388 ஓட்டங்களை பெற்று 223 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து அன்றைய தினமே தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் ஆட் ட நேர முடிவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 132 ஓட்­டங்­களை பெற்­றிருந்­தது.

குரான் மன்சூர் (6), அஹ ட்செஷாட் (9) முகமட் ஹபீஸ் (1) ஆகி யோர் அணி 19 ஓட்டங்களைப் பெறுவதற்குள் அடுத்த டுத்து அரங்கு திரும்ப ஜோடி சேர்ந்த யூனிஸ்கான் (62)-–மிஸ்பா உல் ஹக் (53) ஆகியோர் 113 ஓட்டங்களை பகிர்ந்து அணியை சரிவிலிருந்து நிமிர்த்த மூன்றாவது நாள் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததது. இதன்போது பாகிஸ்தான் அணியிடம் 7 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 91 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது. யுனிஸ்கான் 62 ஓட்டங்களுடனும், மிஸ்பா உல்ஹக் 53 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து நான்காவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்;தது. களத்திலிருந்த யூனிஸ்கான் 77 ஓட்டங்களுடன் சுரங்க லக்மால் பந்து வீச்சில் வெளியேறினார். ஆசாத் சபிக் 23 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். ஹேரத் ‘சுழலில்’ சிக்கிய மிஸ்பா (97), சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின் இணைந்த சர்பராஸ், பிலாவால் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பிலாவால், 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சர்பராஸ் அரை சதம் கடந்தார். மழை குறுக்கிட்டதால், ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 330 ஓட்டங்களை எடுத்து, 107 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில் மீதமிருந்த விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இலங்கை அணி களமிறங்கியதோடு ஆட்டத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் களமிறங்கியிருந்தது.
இந்நிலையில் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் மதிய போசன இடைவேளைக்கு முன்பாக பாகிஸ்தான் தனது சகல விக்கெட்டுகளையும் இழந்து  359 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 137 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

137 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திமுது கருணாரத்ன மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடி இருவரும் அரைச்சதங்களை கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

கௌசல் சில்வா 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கருணாரத்ன 62 ஓட்டங்களுடனும் குமார் சங்கக்கார 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர்.

 

 

http://www.virakesari.lk/?q=node/360603000_Del6280447_zps12a66c08.jpg

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கையிடம் வீழ்ந்தது பாக்

 

 

.,துபாய்: பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடந்த இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.     

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 165, இலங்கை 388 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்திருந்தது.            

இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமது (74) ஆறுதல் தந்தார். சயீத் அஜ்மல் (21) நிலைக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 359 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

பின், 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு கருணாரத்னே (62*), குஷால் சில்வா (58) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது இலங்கையின் மகிளா ஜெயவர்தனாவுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது டெஸ்ட், சார்ஜாவில் வரும் ஜன., 16ல் துவங்குகிறது.

 

http://sports.dinamalar.com/2014/01/1389461236/RanganaHerathcricket.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.