Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போரின் பின்னர் காணாமல் போன ஒவ்வொருவரும் பற்றி தனித்தனியான விசாரணையினை தேவை, அது மிககடினமாக இருந்தாலும் அவ்வாறான விசாரணைகள் அவசியம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரின் பின்னர் காணாமல் போன ஒவ்வொருவரும் பற்றி தனித்தனியான விசாரணையினை தேவை, அது மிககடினமாக இருந்தாலும் அவ்வாறான விசாரணைகள் அவசியம் !

போரின் இறுதிக் கட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் சுதந்திரபுரம், புதுமாத்தளன் உள்ளிட்ட சில இடங்களில் சூட்டுத் தவிர்ப்பு வலயங்களை அறிவித் திருந்தது. இவற்றில் பெருமளவான மக்கள் மிக நம்பிக்கையுடன் தஞ்சமடைந்திருந்தார்கள். ஆனா ல் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதற்காக அவர்கள் கூறும் காரணம் புலிகள் அந்தப் பகுதியில் நின்றார்கள் என்பதே. அத்தகைய காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கமே சூட்டுத்தவிர்ப்பு வலயங்களை அறிவித்திருந்தது. எனவே மக்கள் அதற்குள் தஞ்சமடைகையில் புலிகள் அதற்குள் இருந்தார்கள் என்பதற்காக ஒரு சில புலிகளைக் கொல்வதற்காக பல ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல முடியாது. உன்மையில் சுதந்திரபுரம் பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த 1வது சூட்டுத்தவிர்ப்பு வலயத்திற்குள் புலிகள் வரவில்லை. அவர்கள் அதனைத் தவிர்த்தே இருந்தார்கள். இவற்றை விடவும் பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மாத்தளன் உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆலயங்கள் மீது இறுதி யுத்தத்தின்போது மட்டுமல்லாமல் முன்னரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இதற்கு நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் சிறந்த உதாரணம். இதேபோன்று சர்வதேச அளவில் போர்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கும் கொத்துக்குண்டுகளையும், இரசாயன ஆயுதங்களையும், காற்றில் வெடிக்கும் குண்டுகளையும் படையினர் போரில் பயன்படுத்தினார்கள். முதலவது இரசாயன ஆயுத தாக்குதல் அக்கராயன் பிரதேசத்தில் இடம்பெற்றது.

மேலும் உணவு மற்றும் மருந்து போன்றவற்றை போருக்கான ஆயுதங்களாக சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்தியிருக்கின்றது. போரின் நிறைவில் சில வைத்தியர்கள் அவ்வாறு இல்லை எனக்கூ றினாலும் நடந்த உன்மை இதுவேயாகும். இவற்றோடு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்கள்.

தற்போதும் அவர்கள் இங்கே வருவதற்கான தடை தொடர்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெறுவதற்கு பல இடர்பாடுகளைச் சந்திக்கின்றார்கள்.

மேலும் போரின் பின்னர் பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். அவர்களுடைய உறவினர்கள் அதற்குச் சாட்சியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியான விசாரணையினை நாம் கேட்டு நிற்கின்றோம். அது மிககடினமாக இருந்தாலும் அவ்வாறான விசாரணைகள் தேவை.

செம்மணி தொடக்கம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் வரையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடைய எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையின நாங்கள் கோருகின்றோம். அவர்கள் எதற்காக எந்தக்காலத்தில் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பிலான விசாரணையும் நடத்தப்படவேண்டும்.

எனவே இறுதிப்போரில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களினால் 2008ம் ஆண்டு ஜப்பசி மா தத்திற்கும் 2009ம் ஆண்டு மே மாதத்திற்கும் இடைப்பட்ட 8மாதங்களில் 1லட்சத்து 46ஆயிரத்து 679 தமிழ் மக்கள் எங்கே என்றே தெரியவில்லை. இதற்கு இலங்கை அரசாங்கமும் பதில் தரவில்லை.

மாறாக இதனைப் பேசியதற்காக 4மணிநேரம் புலனாய்வாளர்கள் என்னை விசாரித்தார்கள். எனவே இதுவே உன்மையான நிலை. இது போதாதென்று போரின் பின்னர் நாங்கள் இயல்பு வாழ்வை அனுபவிக்கலாம் என நினைத்திருக்கையில், திட்டமிட்டு எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. எங்கள் நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பௌத்தர்களே இல்லாத இடங்களில் விகாரைகள் கட்டப்படுகின்றன. எனவே இன அழிப்பை அரசாங்கம் இன்னமும் நிறுத்தவில்லை. இந்த நாட்டில் இரு இனங்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. போர்காலத்தைப் போன்று பெருமளவு படையினர் எங்களை அச்சுறுத்தும் வகையில் இங்கே இருக்கின்றார்கள்.

இறந்துபோன எங்கள் உறவுகளை நினைப்பதற்கும் அவர்களை நினைவுகூரவும் எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. எனவே இந்நிலையில் உன்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான என்ற தென்னாபிரிக்காவின் முறைமையினை இங்கே நடைமுறைப்படுத்த நினைக்கின்றார்கள். அந்த முறமை பொருத்தமற்றது.

அதிமேதகு.இராயப்பு ஜோசெப் 

மன்னார் மறைமாவட்ட ஆயர் 

(அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்ரீபன் ரெப் மற்றும் மன்னார் ஆயர் சந்திப்பு தொடர்பாக..)

1545813_252876634875354_1179241391_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா

கவனமாக இருங்கள்

புலம் பெயர்மண்ணில் பயம் இல்லாமல், சுதந்திரமாக இருப்பவர்களே தொடை நடிங்கிகளாக எமக்கு என்ன என்று இருக்கும் போது தாங்கள் எப்போதும் உயிர் ஆபத்தான இடத்திலிருந்து கொண்டு மனசாட்சிப்படி சொல்லவேண்டிய உண்மைகளை சொல்லவேண்டிய இடத்தில் துணிவாக சொல்கிறீர்கள்.. உங்களுக்கு என்றும் தமிழ்மக்கள் நன்றியுடையவராக இருக்க வேண்டும்.. நீங்கள் நீடூழிகாலம் வாழவேண்டும்.. உண்மையே வெல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
நன்றிகள் ஐயா! கைவிடப்பட்ட இனமொன்றின் குரலாக ஒலிக்கும் உங்களோடு இறைவன் துணையிருக்க வேண்டுகிறோம். 
 
உறவுகளே! இவர்களின் போன்றோரின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்க இப்போதே விடுமுறையெடுத்து மார்ச் பத்திலே ஐநா முன்றலிலே அணிதிரள்வோம்.

எப்போதுமே மதத்துக்கு அப்பாற்பட்டு மனிதத்துக்கும் நீதிக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை செய்தால் அந்த இறைவனே வந்து உங்களுக்கு சேவை செய்வான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.