Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வளித்திருக்காவிட்டால் 12 ஆயிரம் தோட்டக்களே செலவாகியிருக்கும்!- மகிந்த அமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் 12 ஆயிரம் உறுப்பினர்களை கொலை செய்யாது அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் துரைமாருக்கு இது மறந்து போய்விட்டது. போரில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக எம்மில் சிலரே கூறுகின்றனர்.

மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் ஒன்றில் எப்படி ஈடுபடுவது. போரில் மக்கள் கொல்லப்பட்டாலும் முடிந்தளவில் அப்பாவி மக்களை காப்பாற்றினோம்.

12 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நேரத்திலேயே கொன்றிருக்க முடியும். 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும்.

அப்படி செய்திருந்தால் புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கும் தேவையிருந்திருக்காது. ஏனைய நாடுகளில் அப்படிதான் செய்தனர். வரிசையாய் நிற்க வைத்து சுட்டுக்கொலை செய்தார்கள். அத்தோடு அந்த கதை முடிந்து விடும்.

அப்படி செய்திருந்தால் அதனை பற்றி மட்டுதான் பேசியிருப்பார்கள். நாம் சரணடைந்தவர்களை அழைத்து வந்து அவர்களும் உண்ணவும் குடிக்கவும் கொடுத்து, புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி, தொழில் தொடங்க பணத்தை வழங்கினோம்.

இந்த நிலையில், வெளிநாட்டு துரைமார் நீங்கள் மனித உரிமைகளை மீறினீர்கள் என்று குற்றம் சுமத்துகின்றனர். இது எவ்வளவு அநீதியான செயல்.

நாட்டு மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கும் வரையில் அவர்களால் எமது நாட்டுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது. சிரியா, லிபியா போன்ற நாடுகளில் நடந்தது போல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி நாட்டின் தலைவரை வீதிக்கு இழுந்து வந்து கொலை செய்ய வெளிநாடுகள் முயற்சிக்கின்றன.

லிபியா போன்ற நாடுகளில் நடைபெற்ற போது இலங்கையில் மக்களை திரட்டி ஜனாதிபதிக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. இலங்கை மக்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • " ஏனைய நாடுகளில் அப்படிதான் செய்தனர். வரிசையாய் நிற்க வைத்து சுட்டுக்கொலை செய்தார்கள். அத்தோடு அந்த கதை முடிந்து விடும்."
  •   இந்த ஏனைய நாடுகளின் பட்டியல் தான் என்ன?

      சரி இந்த பயன்படுத்தாத 12 ஆயிரம் தோட்டாக்களுக்கு கணக்கை காட்டுவார்களா?

     இவன் எல்லாம் ஒரு அமைச்சன்... இவனுக்கு ஒரு மேடை, இவனுக்கு ஒரு கூட்டம்..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

 

 

12 000 தோட்டாக்களை மிச்சம் பிடிப்பதாக  வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக செய்தீர்கள்.150000 தோட்டக்களை வீணாக்கியதை காட்டாமல் விட 120000ஐ மிச்சம் பிடித்திர்கள். அது எல்லாம் வெளியில் தெரியவரும் என நீங்கள் நினைக்கவில்லை.ஜே.வி.பியினரை சுட்டு தள்ளியது போல் முடியும் என கணக்கு போட்டீர்கள். ஹி ஹி கணக்கு பிழைத்து விட்டது.

 

மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் 12 ஆயிரம் உறுப்பினர்களை கொலை செய்யாது அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் துரைமாருக்கு இது மறந்து போய்விட்டது. போரில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக எம்மில் சிலரே கூறுகின்றனர்.

 

வெள்ளை கொடியுடன் சரனடைந்த போராளிகள் எங்கே? யோகியின் மனைவி தனது கணவர் உட்பட பல போராளிகள் சரணடைந்ததாக கூறுகிறார். நீங்கள் தோட்டாக்களை வீணாக்கா விட்டால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என காட்டலாமே ஒரு உண்மையான புத்தனாக.

 

மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் ஒன்றில் எப்படி ஈடுபடுவது. போரில் மக்கள் கொல்லப்பட்டாலும் முடிந்தளவில் அப்பாவி மக்களை காப்பாற்றினோம்.

 

முடிந்த அளவில் கொன்றீர்கள் என்பதே சரியானது.

 

12 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நேரத்திலேயே கொன்றிருக்க முடியும். 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும்.

அப்படி செய்திருந்தால் புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கும் தேவையிருந்திருக்காது. ஏனைய நாடுகளில் அப்படிதான் செய்தனர். வரிசையாய் நிற்க வைத்து சுட்டுக்கொலை செய்தார்கள். அத்தோடு அந்த கதை முடிந்து விடும்.

 

வரிசையில் வைத்து சுடுவதை நீங்கள் 83 இல் மானிப்பாயிலேயே தொடங்கி விட்டீர்களே. அதற்கு பிறகு  எப்போ நல்லவர்கள் ஆனீர்கள்??

 

 

அப்படி செய்திருந்தால் அதனை பற்றி மட்டுதான் பேசியிருப்பார்கள். நாம் சரணடைந்தவர்களை அழைத்து வந்து அவர்களும் உண்ணவும் குடிக்கவும் கொடுத்து, புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி, தொழில் தொடங்க பணத்தை வழங்கினோம்.

இந்த நிலையில், வெளிநாட்டு துரைமார் நீங்கள் மனித உரிமைகளை மீறினீர்கள் என்று குற்றம் சுமத்துகின்றனர். இது எவ்வளவு அநீதியான செயல்.

நாட்டு மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கும் வரையில் அவர்களால் எமது நாட்டுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது. சிரியா, லிபியா போன்ற நாடுகளில் நடந்தது போல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி நாட்டின் தலைவரை வீதிக்கு இழுந்து வந்து கொலை செய்ய வெளிநாடுகள் முயற்சிக்கின்றன.

 

அட இவ்வளவு பயத்துடன் தானா ஆட்சி செய்கிறீகள்?

நீங்கள் எல்லாம் ஜெனிவாவுக்கு இனவாதியாக தான் வந்தீர்கள் என தமிழ் மக்கள் அறிவார்கள்.ஏன் உலகமும் அறியும்.

 

லிபியா போன்ற நாடுகளில் நடைபெற்ற போது இலங்கையில் மக்களை திரட்டி ஜனாதிபதிக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. இலங்கை மக்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார்.

 

இராணுவத்துக்கான பண ஒதுக்கீடு புலிகளினுடன் சண்டை பிடித்த போது உள்ளது போல் ஏன் இப்போதும் இருக்க வேண்டும்? இராணுவத்தின் மூலம் மக்களின் போராட்டத்தை நசுக்கத்தானே. அண்மையில் சிங்கள மக்களின் போராட்டத்தை இராணுவம் சுட்டு அடக்கியதையும் முழு உலகமும் அறியும்.இதனை வளத்த கடா மார்பில் பாயும் என்பதை சில சிங்கள மக்களாவது அறிவார்கள். அவர்களால் ஏதும் செய்ய முடியாமல் இருப்பது துரதிஸ்டம் தான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒன்றும் செய்யாத மாதிரி கதைக்கிறாங்க. 140,000 பேரைக் கொன்று போட்டு 12,000 பேருக்கு புனர்வாழ்வளிச்சது அந்தக் கொன்றதை மறைக்கத் தானே.

 

சிறீலங்கா சிங்களத் தலைவர்கள்.. தாங்கள் ஒரு சர்வதேச சட்டங்களை அங்கீகரித்த அரசாங்கத்தை பிரதிநிதிப்படுத்திறம் என்ற ஒரு அடிப்படை அறிவின்றி.. இனவாத ரீதியில் தான் நாட்டை ஆண்டு வருகிறார்கள். அதனால் தான் சிறீலங்கா இத்தனை சீரழிவுகளையும் சந்தித்து நிற்கிறது. :icon_idea:

 

 


லிபியாவில் கடாபி செய்தது போல போட்டுத் தள்ளினது தானே உண்மை. கடாபிக்கு என்ன நடந்ததோ.. அது சிங்களவர்களுக்கும் நடக்கும் போது தான்..  தமிழர்களுக்கு எதிராக பாவிக்கப்பட்ட ஒவ்வொரு தோட்டாக்களின் வலியும் பெறுமதியும் தெரியும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையை தேடிச் சென்ற கணவனை இராணுவத்தினர் அடித்துக் கொன்றனர் - பெண்மணி ஒருவர் சாட்சியம்:
 

இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தமது பிள்ளையை தேடிச் சென்ற தனது கணவனை இராணுவத்தினர் அடித்துக் கொன்றதாக யாழ். அரச செயலகத்தில் பெண்மணி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது. அதில் சாட்சியமளித்த ஐயம்பிள்ளை புரணம் என்ற பெண் தனது சாட்சியத்தில்,

மானிப்பாய் பகுதியில் மிதிவண்டி திருத்தும் கடை வைத்திருந்த தன்னுடைய மகன் ஐயம்பிள்ளை நிரூபன் (வயது 20) என்பவரும் அவருடன் நின்றிருந்த இளைஞர்கள் இருவரும் 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி மானிப்பாய் கஜபா முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். தமது பிள்ளை பிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கேட்பதற்காக மானிப்பாயில் உள்ள கஜபா முகாமிற்கு சென்ற தன்னுடைய கணவன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இருதய நோயாளியான தனது கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்தப் பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தனது மகனை இராணுவத்தினர் உடுவில் இராணுவமுகாமிற்கு கொண்டு சென்றிருப்பதாக தான் தெரிவித்தாக வேறு எவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்றும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சாட்சியமளித்ததாகவும் தனது மகனுடன் பிடிக்கப்பட்ட மற்றைய இளைஞர்கள் இருவரும் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103154/language/ta-IN/article.aspx

 

சிறி லங்கனுகள் வாயால் ஏரோபிளேன் ஓட்டுபவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.