Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்...!
 
-எஸ். ஹமீத்-
 
 
*செந்தாமரைகள்
சிலிர்த்துப் பூக்க வேண்டிய அந்த
சேற்று நிலத்தில்,
பெண் தாமரையே உன்னைப்
பிடித்துத் தள்ளியது யார்...?
 
*மானமும் கானமும்
வாழ்வெனக் கொண்ட மாதரசியே,
உன் துகிலைக் கிழித்துத் துப்பிய அந்தத்
துச்சாதனர்கள் யார்...?

 

*வெறி பிடித்த நாய்களின் நடுவே-
தாயே நீ,

தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியாய்...
விஷம் கொண்ட பாம்புகள் நடுவே-
அம்மா நீ

ஆதரவற்ற அணிற் குஞ்சாய்...!

 
*நீ அசைத்து வந்த வெள்ளைக் கொடியா அது...?
அது, உன்னுடையதாகத்தானிருக்கும்! இல்லாவிட்டால்,
அந்த நேரத்தில் அவர்களுக்கேது அந்தத் துணி...???
 
*சரணடையச் சென்ற வேளையுந்தன்
சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம்
பாவக் கரங்களால்-கோர நகங்களால்
அவர்கள் உனது ஆடை கிழித்த பொழுதில்-
 
*உயிரிழந்தேனும் மானம் காக்கும் 
உத்வேகத்தில் ஓடிப் போனாயோ,மகளே...?
சேற்றுக்குள் புதைந்தேனும்
செத்துவிடத் துணிந்தாயோ செல்வமே...?
 
*அது, ஆறாக இருந்திருக்கக் கூடாதா..?
உன்னை அடித்துச் சென்றிருக்குமே...!
சேறாகப் போனதனால் செயலிழந்து நின்றாயே...!!

 

*துரத்தி வந்த துஷ்டர் கரங்களில் சிக்கி -செம்
பருத்திப் பூவேநீ

பாழ்பட்டுச் சிதைந்தனையோ...?
வருத்தி யுன்னையவர்

வதைத்துக் குதறுகையில் -அதை 
நிறுத்தும் வழியற்று நிலமதிரக் கதறினையோ...?

 

*ஐயோ..ஐயோ...!

 

*வன்னியின் மரங்களெல்லாம்

கண்ணீரைப் பொழிந்தனவோ..?
வானமது முழங்கியதோ...?

வண்ண மயில் முடங்கியதோ...?

 

*வாசப் பூக்களெல்லாம்

வாழ்விழந்து மாண்டனவோ...?
வற்றாத குருதிமுள்ளி

வாய்க்காலில் பாய்ந்ததுவோ..??

 
*எமதிளைய மகளே...நீ இறந்து விட்டாய்...
ஆயினுமுன் மரணத்தில்
இன்றுலகின் மனசாட்சி விழித்திருக்கிறது...!
 
*போரில் இறந்த புலிகள் மீதும் படையினர் மீதும்
அனுதாபம் கொள்கிறோம்,
அவர்களும் மனிதர்கள் என்பதால்...!
 
*கொல்லப்பட்ட மக்கள் மீது
இன்னுமின்னும் இரக்கம் வருகிறது,
அவர்கள் அப்பாவிகள் என்பதால்...!

 

*ஆனால், எம்மினிய சோதரியே இசைப்பிரியா...!

 
*உன் மீதும் உன்னைப் போன்று மாண்ட ஏராளம் பெண்கள் மீதும்
எமது இதயங்களைப் பிளந்து
இரத்த வணக்கங்களைச் செலுத்துகிறோம்,
நீங்கள் காதகர்களாலும் காமுகர்களாலும் சிதைத்தழிக்கப்பட்ட 
கார்த்திகைப் பூக்கள் என்பதால்...!! 
  • கருத்துக்கள உறவுகள்

கலங்கச்செய்த கவிதை..! நன்றாகவே கவி வடிக்கிறீர்கள்..! வாழ்த்துக்கள் ஹமீத்..!!

  • கருத்துக்கள உறவுகள்

*உயிரிழந்தேனும் மானம் காக்கும் 
உத்வேகத்தில் ஓடிப் போனாயோ,மகளே...?

சேற்றுக்குள் புதைந்தேனும்

செத்துவிடத் துணிந்தாயோ செல்வமே...?
 
*அது, ஆறாக இருந்திருக்கக் கூடாதா..?
உன்னை அடித்துச் சென்றிருக்குமே...!
சேறாகப் போனதனால் செயலிழந்து நின்றாயே...!!

 

 

சேற்று நிலங்களுக்குள் புதைந்திருக்கும்,

சோகங்கள் ஏராளம்!

செத்து மடிந்த சொந்தங்களின்,

சிதைந்த எச்சங்கள் மட்டுமல்ல!

செருக்கோடு அவர்கள் சுமந்து திரிந்த,

வருங்காலக் கனவுகளும் தான்!

 

இசைப்பிரியாவின் அவலம்,

ஆயிரங்களின் ஒன்றாக இருக்கலாம்!

அது மட்டும் தான்,

அந்தக் காதகர்களின் 'கமராவில்' சிக்கியது!

 

 

உணர்ச்சிப் பிரவாகத்தில் நீந்த வைக்கின்றன, உங்கள் கவிதைகள்!

 

அந்த நேரத்தை, அந்தக் கணத்தை, மீளவும் வாழ்ந்து விடுகின்ற அளவுக்கு வலிமை மிக்கன !

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கலைஞன், புங்கையூரான் மற்றும் ammaa ...உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

*வன்னியின் மரங்களெல்லாம்

கண்ணீரைப் பொழிந்தனவோ..?

வானமது முழங்கியதோ...?

வண்ண மயில் முடங்கியதோ...?

 

மறக்கமுடியா வடுவினைத் தந்த  துயரத்தினை சாற்றி நிற்க இந்த வரிகள் மட்டுமே போதும்.!!

 

ஹமீது எங்கள் உணர்வுகளின் அலைவரிசையும் உங்கள் உணர்வுகளின் அலைவரிசையும் ஒன்றாகக் கலந்துவிடுவதாகவே உணர்கின்றேன். துயரத்தினை உள்வாங்கியே கவிதையை யாத்திருக்கின்றீர்கள்.

 

நட்புடனும் உரிமையுடனும் சேர்ந்து பயணிக்க அழைக்கின்றேன்.!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி யாழ்வாலி...விடுதலைக்கான பயணத்தில் இணைந்து கொள்ள என்னை நான் எப்போதோ தயார்படுத்திக் கொண்டேன்.

 

''நம்மைப் பிரித்தாண்டவர்கள் முகமும் அகமும் நாண
நாமிணைவோம் நன்றே..அதுவும் இன்றே...!''

Edited by எஸ். ஹமீத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேற்று நிலங்களுக்குள் புதைந்திருக்கும்,

சோகங்கள் ஏராளம்!

செத்து மடிந்த சொந்தங்களின்,

சிதைந்த எச்சங்கள் மட்டுமல்ல!

செருக்கோடு அவர்கள் சுமந்து திரிந்த,

வருங்காலக் கனவுகளும் தான்!

 

இசைப்பிரியாவின் அவலம்,

ஆயிரங்களின் ஒன்றாக இருக்கலாம்!

அது மட்டும் தான்,

அந்தக் காதகர்களின் 'கமராவில்' சிக்கியது!

 

 

உணர்ச்சிப் பிரவாகத்தில் நீந்த வைக்கின்றன, உங்கள் கவிதைகள்!

 

அந்த நேரத்தை, அந்தக் கணத்தை, மீளவும் வாழ்ந்து விடுகின்ற அளவுக்கு வலிமை மிக்கன !//

 

 

 

 

சேற்று நிலங்களுக்குள் புதைந்திருக்கும்,

சோகங்கள் ஏராளம்!

செத்து மடிந்த சொந்தங்களின்,

சிதைந்த எச்சங்கள் மட்டுமல்ல!

செருக்கோடு அவர்கள் சுமந்து திரிந்த,

வருங்காலக் கனவுகளும் தான்!

 

இசைப்பிரியாவின் அவலம்,

ஆயிரங்களின் ஒன்றாக இருக்கலாம்!

அது மட்டும் தான்,

அந்தக் காதகர்களின் 'கமராவில்' சிக்கியது!

 

 

உணர்ச்சிப் பிரவாகத்தில் நீந்த வைக்கின்றன, உங்கள் கவிதைகள்!

 

அந்த நேரத்தை, அந்தக் கணத்தை, மீளவும் வாழ்ந்து விடுகின்ற அளவுக்கு வலிமை மிக்கன !

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

புங்கையூரன்...மிகவும் அழகான மொழி நடை உங்களது...எனது ஆக்கங்கள் பலவுக்கும் அருமையான கருத்துக்களை எழுதி வருகிறீர்கள். நான் ஒன்றும் பெரிய மேதாவி இல்லை; குறைகள் இருந்தால், தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்...நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.

 

 

 

.

Edited by எஸ். ஹமீத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா மனித உரிமைகள் மகா நாட்டில் சமர்ப்பிக்கப்படப்போகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிநீதம் பிள்ளையின் அறிக்கையில் 'இசைப்பிரியா' விடயமும் உள்ளடக்கப் பட்டிருப்பதாகத் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.