Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பணம் அனுப்புவதின் திருட்டு அம்பலம்! அச்சத்தில் மக்கள்…

Featured Replies

பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில் பாரிய தொல்லைகளும் ஏற்படுகிறது. இதனை எவரும் மறுக்க முடியாது. சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரை அதிரவைத்துள்ளது. ஈஸ்ட்ஹாம் பகுதியில் உள்ள தமிழர் ஒருவர், தனது உறவினர் ஒருவருக்கு குறிப்பிட்ட பணமாற்று நிறுவனம் ஒன்றினூடாக பணத்தை அனுப்பியுள்ளார்.

அந்த தமிழர் நிறுவனம் , காசு அனுப்ப வந்தவரின் பாஸ்போட் மற்றும் சாரதிப் பத்திரத்தை போட்டோ காப்பி எடுத்து வைத்துவிட்டு , பின்னர் பணத்தை வாங்கி அதனை ஊருக்கும் காசை அனுப்பிவிட்டார்கள். ஊரில் உள்ள நபர்களும் காசைப் பெற்றுவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து காசு அனுப்பிய நபரிடம் விசாரணை என்றுவந்த பொலிசார், 1 வருடத்தினுள் 30,000 பவுன்சுகளை நீங்கள் ஏன் பணமாற்று சேவை ஊடாக இலங்கைக்கும் , இந்தியாவுக்கும் அனுப்பினீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

திகைத்துப்போன அன் நபர், தான் வெறும் 500 பவுண்டுகளை மட்டுமே சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பியதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரை கைதுசெய்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட நபர், 18,000 பவுன்சுகளையே வருடம் ஒன்றுக்கு உழைப்பதாக அறிந்த பொலிசார் அவரிடம் 30,000 ஆயிரம் பவுண்ஸ் பிளக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் பின்னர் பணம் அனுப்ப இவர் அணுகிய பணமாற்று சேவையை அணுகி விசாரணைகளை நடத்திவருகிறார்கள் என்று அறியக் கிடைக்கிறது.

தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டுவரும் இந்த பணமாற்று சேவை, குறித்த நபர் ஒருவரின் பேரில் லண்டனில் இருந்து பணத்தை வேறு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசா இல்லாத மற்றும் அடையாள அட்டை இல்லாத நபர்களின் பணப் பரிமாற்றத்தை அவர், இன் நபரின் பேரில் மேற்கொண்டு வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் இவ்விடையத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

 

http://www.jvpnews.com/srilanka/61443.html

 

  • கருத்துக்கள உறவுகள்
தலைப்பில்  'திருட்டு' என்பதற்கு பதிலாக 'மோசடி' என்று கூறப்பட வேண்டும்.
 
பணம் இருந்தும், முழு பிரித்தானிய, அல்லது ஐரோப்பிய அளவிலான வேறு வியாபார திட்டங்கள் இல்லாத  வரட்சி காரணமாக, தமிழர்களையே இலக்கு வைத்து திறக்கும் தமிழ் கடைகள் பெரும் போட்டிகள் காரணமாக இவ்வாறான பெரும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
 
சீனாவில் இருந்து வரி செலுத்த வேண்டிய உள்ளியை  இறக்குமதி செய்த தமிழ் வர்த்தகர், அதை, வரி செலுத்த தேவை இல்லாத இஞ்சி என்று கூறி பல காலம் செய்து, சிக்கி, 2.5 மில்லியன் பவுண்ட் கட்டணமும், சிறையும் எதிர் நோக்கி உள்ளார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நாம் ஒரு நம்பிக்கையில் கொடுப்பது. அவர்கள் மோசடி செய்வது எப்படி எவ்மக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

jvp news காரன் சொல்லிட்டான் எல்லாரும் சிறிலங்கா வங்கியூடாகவே பணம் அனுப்புங்கள் அதுவே பாதுகாப்பானது இவ்வளவுகாலமும் பணம் no2 மூலம் போகும் போது இல்லாத பிரச்சினை இப்ப வருது அதுவும் பிழை செய்தவர்களின் பெயர் இல்லாமல் மொட்டையாய்.

பவுனின் பெறுமதி ஏறியதுமுதல் இலங்ஙை இந்திய பனம் அனுப்புதல்  no2 (வட்டம்) வியாபாரம் சூடுபிடித்துள்ளது அதிக வருமான இழப்பு இலங்ஙை வங்கி போன்றவற்றிற்க்கே அதான் jvp ஓநாய் அழுவுது.


பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில் பாரிய தொல்லைகளும் ஏற்படுகிறது. இதனை எவரும் மறுக்க முடியாது. சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரை அதிரவைத்துள்ளது. ஈஸ்ட்ஹாம் பகுதியில் உள்ள தமிழர் ஒருவர், தனது உறவினர் ஒருவருக்கு குறிப்பிட்ட பணமாற்று நிறுவனம் ஒன்றினூடாக பணத்தை அனுப்பியுள்ளார்.

அந்த தமிழர் நிறுவனம் , காசு அனுப்ப வந்தவரின் பாஸ்போட் மற்றும் சாரதிப் பத்திரத்தை போட்டோ காப்பி எடுத்து வைத்துவிட்டு , பின்னர் பணத்தை வாங்கி அதனை ஊருக்கும் காசை அனுப்பிவிட்டார்கள். ஊரில் உள்ள நபர்களும் காசைப் பெற்றுவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து காசு அனுப்பிய நபரிடம் விசாரணை என்றுவந்த பொலிசார், 1 வருடத்தினுள் 30,000 பவுன்சுகளை நீங்கள் ஏன் பணமாற்று சேவை ஊடாக இலங்கைக்கும் , இந்தியாவுக்கும் அனுப்பினீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

திகைத்துப்போன அன் நபர், தான் வெறும் 500 பவுண்டுகளை மட்டுமே சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பியதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரை கைதுசெய்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட நபர், 18,000 பவுன்சுகளையே வருடம் ஒன்றுக்கு உழைப்பதாக அறிந்த பொலிசார் அவரிடம் 30,000 ஆயிரம் பவுண்ஸ் பிளக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் பின்னர் பணம் அனுப்ப இவர் அணுகிய பணமாற்று சேவையை அணுகி விசாரணைகளை நடத்திவருகிறார்கள் என்று அறியக் கிடைக்கிறது.

தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டுவரும் இந்த பணமாற்று சேவை, குறித்த நபர் ஒருவரின் பேரில் லண்டனில் இருந்து பணத்தை வேறு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசா இல்லாத மற்றும் அடையாள அட்டை இல்லாத நபர்களின் பணப் பரிமாற்றத்தை அவர், இன் நபரின் பேரில் மேற்கொண்டு வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் இவ்விடையத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

 

http://www.jvpnews.com/srilanka/61443.html

  • கருத்துக்கள உறவுகள்

 

தலைப்பில்  'திருட்டு' என்பதற்கு பதிலாக 'மோசடி' என்று கூறப்பட வேண்டும்.
 
பணம் இருந்தும், முழு பிரித்தானிய, அல்லது ஐரோப்பிய அளவிலான வேறு வியாபார திட்டங்கள் இல்லாத  வரட்சி காரணமாக, தமிழர்களையே இலக்கு வைத்து திறக்கும் தமிழ் கடைகள் பெரும் போட்டிகள் காரணமாக இவ்வாறான பெரும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
 
சீனாவில் இருந்து வரி செலுத்த வேண்டிய உள்ளியை  இறக்குமதி செய்த தமிழ் வர்த்தகர், அதை, வரி செலுத்த தேவை இல்லாத இஞ்சி என்று கூறி பல காலம் செய்து, சிக்கி, 2.5 மில்லியன் பவுண்ட் கட்டணமும், சிறையும் எதிர் நோக்கி உள்ளார்.

 

 இவர் ஒரு சென்னையை சேர்ந்த பார்ப்பன தமிழர் ஆள் செய்யிறதெல்லாம் செய்து விட்டு எஸ்கேப் பிடிபட்டமாதிரி தெரியவில்லை ஆளின் கதையை ஒரு சினிமா படமே எடுக்கலாம் இவரை பற்றி தமிழ் நாட்டு ஊடகங்கள்  மறந்தும் கதைக்கமாட்டினம் ஏனெனில் பல ஊடகங்களின் கட்டுபாடு பார்பனின் கையில்.

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்துக்கு பெயர் போனவர்கள் தான் இலண்டண் தமிழ்கடை/ஊண்டியல் முதலாளிகள், கடைக்கு வரும் காப்பிரியை திருடன் என முத்திரை குத்துவார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.