Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி ஒரு யுத்தம் வேண்டாம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக முடி கூடி, தலையில் ஒரு இடத்தில் நிற்குதில்லை. வெட்டவேண்டும் வெட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேனே ஒழிய நேரம் கிடைக்கவில்லை. 

 

நேற்று(வியாழக்கிழமை) வீட்டில் நின்றிருந்தேன். மனுசி வேலைக்குப் போய்விட்டது, பிள்ளைகள் பள்ளிக்கூடம். சரி, இண்டைக்கு எப்படியாவது முடிவெட்டுவதென்று தீர்மானித்துக்கொண்டு மனுசிக்கு ரிங்க் பண்ணி, "ஒரு பத்து ரூபா வேணும், வீட்டில காசு எங்கேயாச்சும் வைச்சிருக்கிறீங்களோ?" என்று கேட்டேன். "அலுமாரியைத் திறந்து ரெண்டாவது லாச்சிக்குள்ள கமெரா பெட்டிக்குள்ள 100 டொலர் இருக்கு, எடுங்கோ" என்று கட்டளை வந்தது. பெருத்த சந்தோசம், 100 டொலரா, கண்ணில கண்டு எவ்வளவு காலம் என்று எண்ணிக்கொண்டு லாச்சியைத்திறந்து பணமும் எடுத்துக்கொண்டு தூங்காபீயில இருக்கிற "சிலோன் கட்" கடைக்கு வெட்டச் சென்றேன்.

 

ஒருக்கா சிலோன் கட் பற்றியும் உங்களுக்குச் சொல்ல வேணும், சுமன் எங்கட யாழ்ப்பாணத்துப் பொடியன். பெண்டில் கில்லில் ஒரு கடை தொடங்கி இப்ப மூண்டு நாலு கடையெண்டு பெரும் பிஸி. அவரின்ர கடையில் வேலை செய்யிற ஆக்களளில எங்கட சனம், சிங்களப் பெட்டையள், வட இந்தியப் பெட்டையள் எண்டு பல மாதிரியும் இருக்குதுகள். வன்னியில் யுத்தத்துக்குப்பிறகு இங்கு வந்துசேர்ந்த கஷ்ட்டப்பட்ட பொடியளுக்கு வேலை கொடுத்து உதவி செய்துவருகிறார் சுமன். 

 

சரி, இனி நான் சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். 

 

நான் கடைக்குப் போய் அமர்ந்திருந்து ஒரு சில நிமிடங்களில் எனக்கு வழமையாக முடிவெட்டும் அன்பர் வந்து, "அண்ணை வாங்கோ, வெட்டுவம்" எண்டு சொல்லவும் நான் போய் முடிவெட்டும் கதிரையில் அமர்ந்துகொண்டேன். "பின்னாலையும், சயிட்டிலயும் நல்லா ஷோட்டா வெட்டுங்கோ, மேலை அவ்வளவு குறைக்க வேண்டாம்" எண்டு நான் சொல்லவும், அவரும், "ஓமண்ணை" என்று வெட்டத் தொடங்கினார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டத் தொடங்கி சில நிமிடங்கள் சென்றிருக்கும், வெட்டுபவரின் நண்பர் (எனக்கும் ஓரளவிற்குத் தெரிந்தவர்தான்) எங்கேயோ இருந்து வந்தார். "அண்ணை எப்படி இருக்கிறியள்?" என்று கேட்டுக்கொண்டே முடிவெட்டுபவருடன் பேசத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவர்களின் சம்பாஷணை அகதி அந்தஸ்த்து விசா விண்ணப்பம் பற்றியே இருந்தது. ஏனென்றால் இருவரும் அகதி அந்தஸ்த்துக் கோரி விண்ணப்பித்துவிட்டு கேஸுக்காக காவலிருப்பவர்கள். அதைவிட இருவரும் ஊரிலேயே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள். வன்னி இறுதி யுத்தத்தில் ஒருவர் அகப்பட மற்றையவர் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணத்துக்குச் சென்றதால் தப்பிக்கொண்டவர். ஆகவே அவர்கள் இருவரும் தமது விசா பற்றி பேசிக்கொண்டிருந்தனர். முடிவெட்டுபவரின் நண்பர் எதேச்சையாக, "அண்ணை, கடைசியில் ஜெனீவாவிலையும் எங்களைக் கை விட்டுட்டாங்கள் பாத்தியளோ ?" என்று என்னை நோக்கிக் கேட்டார். "எங்களுக்கு உதவ வேண்டும் என்று எவருக்கும் உண்மையான நோக்கமில்லை, எல்லாம் தங்கட தங்கட நண்மைக்காகத்தான் எங்கட பிரச்சினைக்க தலையைப் போடுறாங்கள், எல்லாரும் 2009 இல சேர்ந்து அழிச்சுப்போட்டு, இப்ப மட்டும் நல்ல பிள்ளைக்கு நடிக்கிறாங்கள்; என்று நான் சொன்னேன். அதுக்கு முடி வெட்டும் அன்பர், "உவங்களுக்கு இரணமடுக் குளத்தில ஒரு கண், அதுக்குத்தான் சிறிலங்காவிட்ட பேரம் பேசுறதுக்கு உந்த எடுப்பெல்லாம் எடுக்கிறாங்கள்" என்று சொன்னார். நான் பேசாமல் சிரித்துவிட்டு இருந்துவிட்டேன். 

 

இப்படியே விரக்தியான நிலையில் போய்க்கொண்டிருந்த சம்பாஷணையில், முடிவெட்டுபவரின் நண்பர் திடீரென்று, "இதுகெல்லாம் ஒரே பதில்தான் இருக்கு, பிரபாகரன் திருப்பி வரவேணும், அவரால்தான் எங்களுக்கு விடிவு பிறக்கும்" என்று காட்டமாகச் சொன்னார். முடிவெட்டிக்கொண்டிருந்தவருக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது, " உந்த விசர்க் கதையெல்லாம் கதைக்காத" என்று தொடங்க எனக்கு வேர்த்துவிட்டது. ஏனென்றால் அவற்ற கைய்யில சவரக் கத்தி, கன்னத்தில சேவ் செய்துகொண்டிருந்தபோதே இந்தச் சம்பாஷணை தொடங்கியது. அடக் கடவுளே இவங்கள் ஆளாளுக்குப் புடுங்குப்பட்டு என்ற கழுத்தில கத்தியால் கீறப்போறாங்களே என்று பயந்துவிட்டேன்.

 

சரி, எதுக்கும் நான் வாயைக் குடுக்காமல் என்ன பேசுறாங்கள் எண்டு பாப்பம் என்று சம்பாஷணையைக் கேட்கத் தொடங்கினேன்.  

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உனக்கு கடைசிச் சண்டையில் என்ன நடந்ததெண்டு தெரியாது, நீ யாழ்ப்பாணத்துக்கு ஓடீட்டாய். நான் அங்கேயே கிடந்து முழு அழிவையும் பார்த்தனான். எனக்குத்தான் தெரியும் சனம் பட்ட கஷ்ட்டம்" என்று முடிவெட்டும் அன்பர் பேசத் தொடங்கினார்.  நண்பர் இதைக் கேட்டுக் கொதிப்படைந்து, "நான் எங்க ஓடின்னான்? நானும் ஊரிலதான் இருந்தனான். எனக்கும் தெரியும்" என்று பதிலுக்குச் சொன்னார். 

 

"இல்லை, உனக்குத் தெரிய நியாயமில்லை" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார் அவர். "கடைசிச் சண்டையில், நாங்கள் ட்ன்ற் அடிச்சிருந்த இடத்தில எங்களை சுத்தி எங்கலைப் போலவே ஆயிரக் கணக்கான சனம். சின்ன சின்ன டென்றுகளுக்க குடும்பம் குடும்பமாசனம் அந்தரப்பட்டுக்கொண்டிருக்க, ஆமி திடீர் திடீரென்று செல்லடிப்பான். பக்கத்தில எல்லாம் குண்டு விழ ஆரை ஆர் தேடுவதெண்டு தெரியாமல் ஓடித்திரிவோம். என்ர கண்ணுக்கு முன்னாலேயே பக்கத்து டென்றில இருந்த ஒரு குடும்பம் எரிஞ்சு அழிஞ்சதை என்ர கண்ணால கண்டனான். எனகளுக்குப் பின்னால இருந்த டென்றில விளையாடிக்கொண்ட்ருந்த ரெண்டு சின்னப் பிள்ளைகளின்ர மிச்சத்தை வெளவால் எச்சம்ப் போட்டமாதிரி கறுப்புக் கறுப்பாத்தான் கூட்டி அள்ளின்னாங்கள். எட்டு மதவுக்கு அருகில நாங்கள் ஒடிக்கொண்டிருந்தபோது ஒரு அக்காவின்ர வாய்க்குள்ள ரவுண்ட்ஸ் போய்விட்டது. அவ தண்ணி தண்ணி என்௶உ அழுதும்கூட ஒருத்தராலையும் உதவி செய்யேலாம் போட்டுது. ஏனென்றால், புலியிருந்த இடத்தை நோக்கி ஆமி சுட, பிறகு புலி சுட, சனத்துக்கு மேலால் எல்லாம் ரவுண்ட்ஸ் பறதுகொண்டிருந்தது. செத்தவை விழ, மிச்ச ஆக்கள், உயிரைப் பிடிச்சுக்கொண்டு ஓடினோம். உயிரோடு இருந்த வயசுபோன சனமெல்லாம் ரோட்டிலையும், வாய்க்காலுக்குள்ளேயும் விடப்பட்டு செத்ததுதான் மிச்சம். எங்கட குடும்பத்திலையும் வயசுபோன சனத்தை தெரிஞ்சே சாக விட்டுப்போடு வந்தம். என்ர அக்காவின்ர புருஷன் எங்களோடதான் கடைசி மட்டும் இருந்தவர், ஆனால், ஓடிவந்து நிண்ட இடத்தில தேடிப் பாத்தால் அவரில்லை, இண்டைக்கு மட்டும் அவருக்கு என்ன நடந்தது எண்டு தெரியாமல்த்தான் என்ர அக்கா இருக்கிறா " என்று ஆத்திரத்துடன் பேசினார். 

 

பதிலுக்கு நண்பரும், "உங்கட வீட்டில மட்டுதான் இழப்போ? என்ர வீட்டிலையும் ரெண்டுபேர் இயக்கத்தில போய்ச் செத்திருக்கிறாங்கள். நங்களும் மாவீரர் குடும்பம்தான். எங்களுக்கும் இழப்பெல்லாம் இருக்கு, நானும் அழிவுகளைப் பார்த்தவநன் தான். அதனால்தான் சொல்லுறன், எங்களுக்கு ஒரு விடுதலை வேணுமெண்டால் பிரபாகரன் மாதிரி ஒருத்தர் திரும்பி வரவேணும்" என்று மீண்டு சொன்னார். 

 

இது அவருக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்பசுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அதுவரை முடிவெட்டிக்கொண்டே பேசியவர், முடி வெட்டுவதை நிறுத்திவிட்டு, "அப்பு, உந்தக் கதையெல்லாம் இனி ஊரில எடுபடாது கண்டியோ. சனத்தால இன்னொரு யுத்தத்துக்கு முகம் குடுக்கிற உடல் பலமோ உளப் பலமோ இல்லை. சனத்துக்கு நிம்மதியாக இருக்க விட்டால் போதும். எங்கள இப்ப இருக்கிற மாதிரியே இருக்க விட்டால் காணும் எண்டுதான் சனம் சொல்லுது.ஊரில லயிட்டும், ரோட்டும் போட்டு வசதியாக்கிப் போட்டாங்கள், இப்போதைக்கு சனத்துக்கு இதைவிட வேற என்ன வேண்டும் " என்று கேட்டார். 

 

அதுக்கு நண்பரோ, "நாங்கள் இன்னும் அடிமைகளாத்தானே இருக்கிறம், எங்களுக்குச் சுதந்திரம் இல்லையே? நாளுக்கு நாலள் குடியேற்றமும், ஆக்கிரமிப்பும் செய்யுறாங்கள், ஒருத்தாராலும் ஒண்டும் செய்ய முடியாமல்த்தானே கிடக்கு ?" என்று கேட்கவும், முடிவெட்டும் அன்பர் மீண்டும் "அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் இன்னொரு யுத்தம் மட்டும் எங்களுக்கு வேண்டாம்" என்று மீண்டும் சொன்னர். 

 

அதுவரை அமைதியாக இருந்த நான், முடிவெட்டும் நண்பரை நோக்கி, "உந்த லயிட்டும், ரோட்டும் நாங்கள் போராடத் தொடங்கமுதலேயே இருந்ததுதானே? "என்று கேட்டேன். அதற்கு அவர், "அண்ணை, இவ்வளவு காலமும் போராடியும் என்னத்தைக் கண்டனாங்கள்? கிடைச்சதெல்லாம் அழிவுமட்டும்தானே?? இன்னொருக்காப் போராடி இருக்கிற சனத்தையும் அழிக்கவோ ?" என்று கேட்டார். என்னிடம் பதில் இருக்கவில்லை. அமைதியாக கதிரையில் அமர்ந்துகொண்டேன்.

 

அவர்களின் சம்பாஷணை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சம்பாஷணை சூடாவதை உணர்ந்துகொண்ட நான், "நீங்கள் உங்களுக்கை சண்டை பிடிக்க வேண்டாம். பின்னாலிருக்கிற பெட்டை விசிறி, கவனம் " என்றவுடன் இருவரும் அமைதியானார்கள். பின்னர் வேறு விடயங்கள் பற்றிப் பேசிவிட்டு நண்பர் சென்றுவிட்டார். 

 

முடிவெட்டும் அன்பர் என்னிடன், "அண்ணை, ஊரில இருந்து சனம் பட்ட கஷ்ட்டத்டைப் பாத்தாப்பிறகு, இனி நாலு அஞ்சு சந்ததி சென்றாலும் யுத்தம் என்கிற பேச்சே இருக்கக் கூடாது என்று சொன்னார். நானும், சரிதான் என்று சொல்லிவிட்டு வந்தேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சில காலமாய் இப்படியான செய்திகள் / கதைகள் வாசிக்கும் போது வருகிற உணர்வு..

 

நாங்கள் இருக்கிற இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு போக வேண்டும் என்று நினைத்தால் ஆதற்கு கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும் ..அது தனியே facebook இலும் ஏனைய இலத்திரணியால் ஊடகங்களில் விவாதிப்பது , கதைப்பதை விட மிக அதிகமாக இருக்கும் . சரி மீண்டும் போர்தான் என்றாலும் அதனுடைய பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் ..ஒன்றையே செய்து கொண்டு வேறு விதமான பதில்வரும் என்று எவ்வாறு எதிர்பார்க்கலாம் ???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு தமிழீழம் தேவை என்றால் தமிழீழம் கிடைக்காது.

 

ஆனால் இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தழிழீழம் தேவை என்றால் எப்படியும் பிறந்தே தீரும்.அது எப்போ என்பது தான் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன்கூட இப்ப யுத்தத்தை விரும்பமாட்டார்.  முள்ளிவாய்க்காலோடு அவரும் நல்லதொரு பாடம் படிச்சிருப்பார்.  எங்களுக்கு தமிழீழம் வேண்டுமென்றால் நாங்கள்தான் அதுக்குப் பாடுபடவேணும்.  அதை விட்டிட்டு இன்னொருத்தன் தருவான் என்று நினைச்சால் குரங்கு அப்பம் பிரிச்ச கதையாத்தான் முடியும்.  எல்லாம் கதையோடையும், பேஸ்புக்கிலும் இஇன்ரநெட்டிலும் எழுதுவதோடை சரி.  இதோடை எங்கட கடமை முடிஞ்சுது எண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.