Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள்
உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள்
 
எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா
எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும்
எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும்
ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது
எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது
இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா?
குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என
சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள்.
 
எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள்
உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள்
எத்துணை இடர்களுக்குள் 
எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள்
 
வாழ இடம், வசிக்க வீடு 
உழைப்புக்கு வழி 
உண்பதற்கு உணவு 
உடுக்க உடை 
இப்படி எதற்குமே வழியின்றி
தனித்து விடப்பட்டு
மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம்
 
பசித்து அழும் குழந்தையை
ஆற்றிட வழி தெரியாமல்,
பள்ளிக்கு குழந்தைகளை
அனுப்பி வைக்கும் வசதியில்லாமல்,
எங்கள் அவலவாழ்வு தொடர்கின்றது
 
படையினரின் கழுகுப்பார்வையிலிருந்து
பெண்பிள்ளைகளை காப்பாற்ற வழியின்றி
நித்தமும் மனவதைப்படுகின்றோம்.
ஆண்பிள்ளைகளின் உயிருக்கு
எந்தவேளையிலும் ஆபத்துவரலாமென
தினம்தினம் அஞ்சிஅஞ்சி 
செத்துக்கொண்டிக்கின்றோம் 
 
இப்படி நாளும் நாளும் 
சாகடிக்கப்படும் எங்களை
எவருக்கும் தெரியாது
ஆனால் மாநாடுகளில்
எங்கள் எண்ணிக்கைகளை
அடிக்கடி கூறிக்கூறி பேசுவதற்கும்,
அலசி ஆராய்வதற்கும்
ஆயிரம் ஆயிரமாய் ஆட்கள் தயார்
ஆனால் எம்மைப்; பற்றி சிந்திக்கவோ,
எம் வாழ்நிலையை மேம்படுத்தவோ
ஆருக்கும் நேரமில்லை
 
மாதினி
 
  • கருத்துக்கள உறவுகள்

எம்மைப்; பற்றி சிந்திக்கவோ,
எம் வாழ்நிலையை மேம்படுத்தவோ
ஆருக்கும் நேரமில்லை..............................

 

 

 

.......பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், மந்தாகினி!

 

எமது இனமானது வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டுமென, ஒரு கூட்டமே 'கங்கணம்' கட்டிக்கொண்டிருக்கின்றது! :o

 

அந்த முடிவின் அடிப்படையில், அதற்கேற்பக் காரணங்கள் தேடப்படுகின்றதேயன்றி, எமது துயரைக்  'காது கொடுத்துக்' கேட்பதற்கு யாருமே இல்லாத 'அனாதைகள்' நாங்கள் என்பது நிஜமாகிக் கொண்டு வருகின்றது! :icon_mrgreen:

 

ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் மனதுக்குக் கடினமாக இருக்கிறது அல்லவா, மந்தாகினி?  

 

இல்லாவிட்டால், உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்த பெருமானின் பெயரால், நாம் அழிக்கப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

 

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்த இனம், வந்தவரை எல்லாம் 'சிம்மாசனங்களில்' அமர்த்திவிட்டு, அவர்கள் முன்பு 'சப்பாணி' கட்டிக்கொண்டு இருந்த இனம், அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றது என்பதைத் தவிர வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை!

 

உங்கள் 'கவிதையின்' தாக்கம் ... இவ்வளவையும் எழுத வைத்துவிட்டது.....!

 

உங்கள் 'ஆதங்கங்கள்' நியாயமானவை என்பதைத் தவிர வேறு எதை, எம்மால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை!

 

அந்த அளவுக்கு 'எமது இனம்', மீண்டும், மீண்டும் தண்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது!

 

ஒரே இடத்தில், குந்தியிருந்து, அழுது ஆற்றிக் கொள்வதற்காகவாவது, அடிக்கடி வாருங்கள்!

 

கவிதைக்கு நன்றிகள்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், மந்தாகினி!

 

எமது இனமானது வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டுமென, ஒரு கூட்டமே 'கங்கணம்' கட்டிக்கொண்டிருக்கின்றது! :o

 

அந்த முடிவின் அடிப்படையில், அதற்கேற்பக் காரணங்கள் தேடப்படுகின்றதேயன்றி, எமது துயரைக்  'காது கொடுத்துக்' கேட்பதற்கு யாருமே இல்லாத 'அனாதைகள்' நாங்கள் என்பது நிஜமாகிக் கொண்டு வருகின்றது! :icon_mrgreen:

 

ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் மனதுக்குக் கடினமாக இருக்கிறது அல்லவா, மந்தாகினி?  

 

இல்லாவிட்டால், உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்த பெருமானின் பெயரால், நாம் அழிக்கப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

 

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்த இனம், வந்தவரை எல்லாம் 'சிம்மாசனங்களில்' அமர்த்திவிட்டு, அவர்கள் முன்பு 'சப்பாணி' கட்டிக்கொண்டு இருந்த இனம், அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றது என்பதைத் தவிர வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை!

 

உங்கள் 'கவிதையின்' தாக்கம் ... இவ்வளவையும் எழுத வைத்துவிட்டது.....!

 

உங்கள் 'ஆதங்கங்கள்' நியாயமானவை என்பதைத் தவிர வேறு எதை, எம்மால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை!

 

அந்த அளவுக்கு 'எமது இனம்', மீண்டும், மீண்டும் தண்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது!

 

ஒரே இடத்தில், குந்தியிருந்து, அழுது ஆற்றிக் கொள்வதற்காகவாவது, அடிக்கடி வாருங்கள்!

 

கவிதைக்கு நன்றிகள்! 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், மந்தாகினி!

 

எமது இனமானது வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டுமென, ஒரு கூட்டமே 'கங்கணம்' கட்டிக்கொண்டிருக்கின்றது! :o

 

அந்த முடிவின் அடிப்படையில், அதற்கேற்பக் காரணங்கள் தேடப்படுகின்றதேயன்றி, எமது துயரைக்  'காது கொடுத்துக்' கேட்பதற்கு யாருமே இல்லாத 'அனாதைகள்' நாங்கள் என்பது நிஜமாகிக் கொண்டு வருகின்றது! :icon_mrgreen:

 

ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் மனதுக்குக் கடினமாக இருக்கிறது அல்லவா, மந்தாகினி?  

 

இல்லாவிட்டால், உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்த பெருமானின் பெயரால், நாம் அழிக்கப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

 

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்த இனம், வந்தவரை எல்லாம் 'சிம்மாசனங்களில்' அமர்த்திவிட்டு, அவர்கள் முன்பு 'சப்பாணி' கட்டிக்கொண்டு இருந்த இனம், அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றது என்பதைத் தவிர வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை!

 

உங்கள் 'கவிதையின்' தாக்கம் ... இவ்வளவையும் எழுத வைத்துவிட்டது.....!

 

உங்கள் 'ஆதங்கங்கள்' நியாயமானவை என்பதைத் தவிர வேறு எதை, எம்மால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை!

 

அந்த அளவுக்கு 'எமது இனம்', மீண்டும், மீண்டும் தண்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது!

 

ஒரே இடத்தில், குந்தியிருந்து, அழுது ஆற்றிக் கொள்வதற்காகவாவது, அடிக்கடி வாருங்கள்!

 

கவிதைக்கு நன்றிகள்! 

 

 

அவலப்படும் மக்களின் நிலையையோ,மக்களின் உணர்வுகளையோ புரிந்து கொள்வதற்கு எவருமே இல்லை என்ற வேதனைதான் இதனை எழுதவைத்தது. எங்கள் மக்களின் வாழ்வில் எப்படி விடிவு கிட்டப்போகின்றது.
இப்படியே பொய்யான தீர்மானங்கள்,மாநாடுகள் என்று காலம் உருண்டோட
மக்கள் வாழ்க்கை துன்பத்துள் கரைய வேண்டியதுதானா என்ற வேதனைதான் இதனை எழுத வைத்தது.
தங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

எம்மைப்; பற்றி சிந்திக்கவோ,

எம் வாழ்நிலையை மேம்படுத்தவோ

ஆருக்கும் நேரமில்லை..............................

 

 

 

.......பகிர்வுக்கு நன்றி

அவலப்படும் மக்களின் நிலையையோ,மக்களின் உணர்வுகளையோ புரிந்து கொள்வதற்கு எவருமே இல்லை என்ற  வேதனைதான் இதனை எழுதவைத்தது.  எங்கள் மக்களின் வாழ்வில் எப்படி விடிவு கிட்டப்போகின்றது.
இப்படியே பொய்யான தீர்மானங்கள்,மாநாடுகள் என்று காலம் உருண்டோட
மக்கள் வாழ்க்கை துன்பத்துள் கரைய வேண்டியதுதானா என்ற வேதனைதான் இதனை எழுத வைத்தது.
தங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.