Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கத்தில் பாடாத கவிதை....

Featured Replies

அனிச்சத்தின் மென்மை இவள்
அன்னத்தின் தன்மை இவள்
செங்காந்தளை மேவிய சிவப்பு இவள்
மரபுகளை மீறிய வார்ப்பு இவள்
வம்புக்குள் அடங்கா வனப்பு இவள்
வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள்

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து ஆகா! அற்புதம்!! என்று உற்சாகம் கொள்ளும் வேளையில், தழைகளை தழுவிய தென்றலொன்று முன்னிரவுப் பொழுதில் என் காதோரமாய் தந்த இந்தப் பாடல் என் கர்வம் கொன்று நித்திரை தின்று ஆசை எனும் ஆண்ட வெளியில் ஆர்ப்பரித்து அடங்கச் செய்கிறது.

இசையா! இன்பத் தமிழா!

தெரியவில்லை. கேட்டவுடன் கிறங்கடிக்கும் இதன் இனிமையை என்னவென்று சொல்வது !! ஆசைகளிலும் நிராசைகளிலும் தொலைந்துவிட்ட வாழ்க்கையின் கணங்களை இந்தச் சின்னஞ் சிறிய பாடல் மீட்டு பூமிப்பந்தை என் கண்ணின் கருவிழிக்குள் சுழலச் செய்கிறது. கற்பனையெனும் எல்லைகளற்ற கானக வீதிகளில் நான் காணமல் போகிறேன்....

பெண்களின் அழகை கம்பன் பாடியிருக்கான், இளங்கோ வர்ணித்திருக்கிறான்... முச்சங்கங்களில் அமர்ந்த எத்தனையோ புலவர்கள் பெண்களின் அங்கங்களை கவிதையாய் புனைந்திருக்கிறார்கள் பாடியிருக்கிறார்கள் போற்றியிருக்கிறார்கள். அழகிகளையும் பேரழகிகளையும் கண்டிருப்பார்கள் களித்திருப்பார்கள் கண்களால் பருகியதை கவிதையாய் வடித்திருப்பார்கள்.  ஆனால்

எச்சொல்லுக்குள்ளும் அடக்க முடியாத அத்துமீறல் இவள் அங்க அழகு !!
ஒரே வரி.... ஓராயிரம் சிந்தனைச் சிற்றலைகளை ஓயாது உள்ளத்தில் உரசச் செய்கிறது...

சங்கத்தில் பாடாத கவிதை  உன் அங்கத்தில் யார் தந்தது !!

பாடலில் என்னைக் கவர்ந்த வரிகள் ...
girl%252520w%252520pigion1.jpg

சங்கத்தில் பாடாத கவிதை
   உன் அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
   என் முன்னே யார் வந்தது

கையென்றெ செங்காந்தழ் மலரை
    நீ சொன்னால் நான் நம்பவோ....
கால் என்றே செவ்வாழை இலைகளை
    நீ சொன்னால் நான் நம்பி விடவோ....

 

Tamilnadu+Girls+Painting+14.jpg

 

 

ஆடை ஏன் உன் மேனி அழகை
   ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
   காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...
மெய் தொட்டு..
சாமத்திலே தூங்காத விழிகளில்
    சந்தித்தேன் என்னென்ன மயக்கம்

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி பூத்தாற்போல் வந்தாலும் யாழின் ஆஸ்தான கவிஞரின் கவிதை அருமை  . கற்பனைக் கடலில் நன்றாகவே நீந்துகிறீர்கள். தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்தில் பாடாத கவிதை என் நெஞ்சத்தில் பதிந்தது...!

  • கருத்துக்கள உறவுகள்

அனிச்சத்தின் மென்மை இவள்

அன்னத்தின் தன்மை இவள்

செங்காந்தளை மேவிய சிவப்பு இவள்

மரபுகளை மீறிய வார்ப்பு இவள்

வரம்புக்குள் அடங்கா வனப்பு இவள்

வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள்

 

அருமை, ஆதித்தா !

 

மூன்றே மூன்று வரிகளுக்குள், அவளது 'வனப்பு' முழுவதையுமே அடக்கி விட்டது தான் உங்கள்,'திறமை' !

 

மரபுகளை மீறிய வார்ப்பு ......... சாமுத்திரிகா இலட்சணங்களுக்குள்ளும் அடங்கிடாத வார்ப்பு...அதாவது தெய்வச் சிலைகளிலும் மேலானது இவளது அழகு!

 

வரம்புக்குள் அடங்காத வனப்பு....எல்லைகள் கடந்து நிற்கின்றது அவளது அழகு..!

 

வளி மண்டலத்தை மீறிய 'ஈர்ப்பு'... இங்கே தான் 'கவிஞன்'  நிற்கிறான்!..... வளிமண்டலம் தாண்டிய 'ஈர்ப்பு' மிகவும் அரிதானது. அவ்வளது தூரத்துக்கும், அவளது 'ஈர்ப்பு' இருக்கின்றது!

 

தொடருங்கள்....! :D

  • தொடங்கியவர்
என் வரிகளை வாசித்து நேசித்த சுமேரியர், வல்வை, நிலாமதி, சுவி மற்றும் புங்கைக்கு நன்றிகள்.
 
"வம்புக்குள் அடங்கா வனப்பு இவள்"

 

 

வம்பு - மார்பு கச்சை; என்ற அர்த்தத்தில் தான் நான் எழுதினேன். ஆனால் புங்கை "வரம்பு" என்று புரிந்து கொண்டு உள்ளீர்கள். இங்கு "வம்பு" என்ற வார்த்தையை விட புங்கை கூறிய "வரம்பு" தான் சரியானதாக  இருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி புங்கை.
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையை, மாற்ற எண்ணவில்லை, ஆதி! :D

 

'வம்பு' என்பது 'மார்புக்கச்சை' என்று நீங்கள் கூறித்தான் தெரியும்.... :lol: 

எவ்வளவு பொருத்தமாக, அந்தக்காலத்தில் அழைத்திருக்கிறார்கள்! :icon_mrgreen:  

 

அனிச்சத்தின் மென்மை இவள்
அன்னத்தின் தன்மை இவள்
செங்காந்தளை மேவிய சிவப்பு இவள்
மரபுகளை மீறிய வார்ப்பு இவள்
வரம்புக்குள் அடங்கா வனப்பு இவள்

வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள்

 

 

நான் உங்களது, 'மரபுகளை மீறிய வார்ப்பு' என்ற வரிகளைப் படித்த பின்னர், 'வம்புக்குள் அடங்கா வனப்பு இவள்' என்பதை வாசித்த போது, மரபும், வரம்பும் கவிதைக்குப் பொருந்துவது போல இருந்ததால், நீங்கள் தான் 'எழுத்துப் பிழை' விட்டு விட்டீர்களோ என நினைத்து,  உங்களுக்கு மட்டுமே புரியக்கூடியவாறு 'நாசூக்காகச்' சுட்டிக்காட்ட நினைத்தேன். :o 

 

பிடித்து விட்டீர்கள்.....  :D 

 

தமிழின் இனிமையைத் தொடர்ந்து பகிருங்கள்! :icon_idea: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.