Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்கவும்: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்கவும்: ஜனாதிபதி
வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014 09:11
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

இனி... தமிழக மீனவர் ஒருவரையும்... கைது பண்ணக்கூடாது என்றும், ஜனாதிபதி தனது படைகளுக்கு அறிவிப்பாரா?
 

ஒவ்வொரு முறை தமிழக மீனவரை கைது செய்யும் போதும்... அவர்களின் வலைகலையும், வள்ளங்களையும் சேதப்படுத்துவதும், அவர்களை தாக்கியும், அவர்கள் பிடித்த மீன்களை கடற்படையினர் பறித்துக் கொண்டு போவதும் நிறுத்தப்பட வேண்டும். அவர்களின்... பொருளாதார நட்டத்துக்கும், உயிர் இழப்புக்கும் யார் பொறுப்பு ஏற்பது.
 

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்கவும்: ஜனாதிபதி
வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014 09:11
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

இதெல்லாம் இந்திய நேற்று மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தராமல் விலகி நின்றமைக்காகவும், பாக்கிஸ்த்தானுடன் சேர்ந்து இலங்கைக்கி ஆதரவாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்ததற்காகவும் நன்றிக்கடனாகச் செய்யப்பட்டதாக்கும்.

111%2861%29.jpg

 

 

 

 

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104754-2014-03-28-03-41-29.html

 

ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

 

 

By dn, ராமேசுவரம்   

தினமணி  - ‎7 மணிநேரம் முன்பு‎

First Published : 28 March 2014 04:26 AM IST

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, மற்றவர்களை குழாய், கற்களால் தாக்கியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் விரட்டியடித்தனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலை 536 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத் தீவு, தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு படகில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் படகில் மோதி அதை கடலில் மூழ்கடித்துள்ளனர். பின்னர், அந்தப் படகிலிருந்த அந்தோனி உள்ளிட்ட 5 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

மேலும், அப் பகுதியின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரவீண், பால்பாண்டி, தேவசகாயம், நம்புரெத்தினம் ஆகியோரின் படகுகளில் சென்ற பிரபா உள்பட 19 மீனவர்களை சிறைபிடித்தனர். மொத்தம் 24 மீனவர்களை கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, ராஜேந்திரனின் படகில் கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதிகள் 5 மீனவர்களையும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், சிறை பிடிக்கப்பட்ட 19 மீனவர்களை மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துப்பாக்கிச் சூடு: இதற்கிடையே, அதே பகுதியில் இலங்கை கடற்படையின் மற்றொரு பிரிவினர் ராமேசுவரம் மீனவர்களின் 200-க்கும் மேற்பட்ட படகுகளைச் சுற்றி வளைத்துள்ளனர். அங்கிருந்து தப்பியோடும்படி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டு எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்தனர். பயந்த மீனவர்கள் அவசரத்தில் படகுகளைத் திருப்பியபோது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த ராபர்ட் மகன் ரெனிக்கு (30) இடது காலில் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டன.

காயமடைந்த மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை வெட்டிவிட்டு வியாழக்கிழமை அதிகாலை குறைந்த மீன்களோடு ராமேசுவரம் வந்து சேர்ந்தனர். விரல் துண்டிக்கப்பட்ட மீனவர் ரெனி மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

 

http://www.dinamani.com/tamilnadu/2014/03/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/article2135447.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.