Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

67 வயதான காங்கிரஸ் கட்சி திக்விஜய் சிங்கின் ரகசிய உறவு அம்பலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உள்ள உறவை கூறுவதில் தயக்கம் இல்லை: திக்விஜய் சிங்

 

di.jpg

 

DikVijaySingh91.jpgபெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் தனக்கு உள்ள உறவை ஒப்புக்கொண்டுள்ள 67 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், விரைவில் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமிர்தா ராய் என்ற அந்தப் பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு தானும், திக் விஜய் சிங்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து திக் விஜய் சிங் தனது காதலை ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து திக்விஜய் சிங் தனது டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமிர்தா ராயுடன் தனக்கு உள்ள உறவை கூறுவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை. அமிர்தா ராய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். தங்களின் தனிப்பட்ட விஷயங்களில் வேறு யாரும் தலையிடுவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

 

இதுகுறித்து அமிர்தா ராய் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, எனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறேன். நாங்கள் இருவரும் கருத்தொருமித்து விவாகரத்து கோரி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். விவாகாரத்து கிடைத்தபின் திக் விஜய் சிங்கை திருமணம் செய்து கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

திக்விஜய் சிங்கின் மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=121020

மனைவியை திக்விஜய் சிங்கிடம் பறிகொடுத்தவரின் தாராள மயமாக்கல் கொள்கை......... :lol:

 

டெல்லி: தனது மனைவியை திக்விஜய் சிங் திருமணம் செய்துகொள்ளுவதில் அதிருப்தியில்லை என்று கூறியுள்ள அம்ரித்தா ராயின் கணவன் ஆனந்த்பிரதான், ஒருபடி மேலேயே போய் தன்னைப்போல எல்லோரும் பரந்தமனதுடன் இருந்தால்தான் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் சாத்தியம் என்று கூறியுள்ளார்.
 
என்னைப்போல பரந்த மனதுடன் இருந்தால் இந்தியாவில் பெண்கள் முன்னேற முடியும்- அம்ரிதா ராய் கணவன் 'அட்வைஸ் தனது வயதில் பாதிதான் உள்ள பத்திரிகையாளர் அம்ரிதா ராயை திருமணம் செய்துகொள்ளப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அறிவித்துள்ளார்.
 
அம்ரிதாராயும் அவரது கணவனும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு முடிவுக்கு வந்ததும் தங்களது திருமணம் நடக்கும் என்றும் திக்விஜய்சிங் கூறியிருந்தார். இதனிடையே திக்விஜய்சிங்கும், அம்ரித்தாவும் மிகவும் நெருக்கமாக உள்ள புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் இருக்கும்போதே அந்த பெண் இவ்வாறு முதியவருடன் நெருக்கமாக இருந்துள்ளாரே என்ற ஆதங்கம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த கணவன் இதுபோன்ற அவமானத்தால் மனமுடைந்துபோயிருப்பாரே என்று பலரும் பரிதாபப்பட்டனர்.
 
ஆனால் அம்ரித்தாவின் கணவன் ஆனந்த் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பெண்ணுக்கும், ஆணுக்குமான உறவை புரிந்துகொள்ள மக்களுக்கு தெரிவதில்லை. ஒரு பெண் சுதந்திரமாக இருப்பதையும், சுதந்திரமாக வாழ்வதையும் இந்த சமுதாயம் அங்கீகரிக்க மறுக்கிறது. பெண் என்பவள் பிள்ளை பெற்கும் மிஷினோ அல்லது ஒருவருடைய தனி உரிமையோ கிடையாது. நாம் பெண்களின் மாண்புக்கு மரியாதை கொடுப்பதில்லை. பெண்களை மதிக்க தெரியாதவர்களுக்கெல்லாம், விளையாடவும், பிறர் மீது சேற்றை வாரி இறைக்கவும் இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னைப்போன்ற பரந்த மனதுடைய, ஆதரவான ஆண்கள் இருந்தால்தான் இந்தியாவில் பெண்களுக்கு மேலும் சிறப்பான அந்தஸ்து கிடைக்கும். இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்தத்தில் தெரிவித்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இவ முதல்வரா வர திட்டம் போடுறா.. தாத்தாவால ஆபத்து எதுவும் இல்லைதானே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ முதல்வரா வர திட்டம் போடுறா.. தாத்தாவால ஆபத்து எதுவும் இல்லைதானே.. :D

 

ஆப்பை நேரம் பார்த்து அடித்து இருக்கிறாள்.
 
சில நேரங்களில் நெடுக்கரின் கதைகளுக்கு காது கொடுத்தே ஆக வேண்டி  இருக்கிறது.
இவாகள் இடம் கொடுத்தா மடம் கட்டுவாகள்.

இவ முதல்வரா வர திட்டம் போடுறா.. தாத்தாவால ஆபத்து எதுவும் இல்லைதானே.. :D

நித்தியானந்தாவின் மகளிர் கட்சி தலைவி போலவா?

வெளியால வந்த கதை இது, இன்னும் வெளில வராமல் எத்தினை கதைகள் இருக்கோமோ என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்

 

மனைவியை திக்விஜய் சிங்கிடம் பறிகொடுத்தவரின் தாராள மயமாக்கல் கொள்கை......... :lol:

 

டெல்லி: தனது மனைவியை திக்விஜய் சிங் திருமணம் செய்துகொள்ளுவதில் அதிருப்தியில்லை என்று கூறியுள்ள அம்ரித்தா ராயின் கணவன் ஆனந்த்பிரதான், ஒருபடி மேலேயே போய் தன்னைப்போல எல்லோரும் பரந்தமனதுடன் இருந்தால்தான் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் சாத்தியம் என்று கூறியுள்ளார்.
-----

 

சொந்த மனைவியை... அந்நியனிடம் ஓடிப் போக விட்ட இளிச்சவாயன்,

மற்றவர்களுக்கு... அறிவுரை சொல்லுகிறாராம்.

இவங்க‌ எல்லாம்.... என்ன இழவுக்கு கலியாணம் கட்டுறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.