Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகளவில் புண்ணியங்களை சேர்த்து மோட்சத்துக்குப் பாத்திரர்களாக உறுதி பூணுவோம்! - ஜனாதிபதியின் வெசாக் செய்தி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அதிகளவில் புண்ணியங்களை சேர்த்து மோட்சத்துக்குப் பாத்திரர்களாக உறுதி பூணுவோம்! - ஜனாதிபதியின் வெசாக் செய்தி. 
[Wednesday, 2014-05-14 09:32:20]
 
புத்த பெருமானின் போதனைகள் முழு உலகிற்கும் சாந்தியைப் பெற்றுக்கொடுப்பவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது வெசாக் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரி நிர்வாணமடைதல் போன்ற மூன்று நிலைகளையும் நினைவு கூரும் வெசாக் பண்டிகை இவ்வருடம் பூரண அரச அனுசரணையுடன் நாடு முழுவதும் பக்திபூர்வமாக கொண்டாடப்படுகிறது.இந்த வெசாக் உற்சவம் பெளத்த மக்களாகிய எமக்கு மட்டுமன்றி உலகத்தில் வாழும் அனைத்து பெளத்த மக்களாலும் போற்றப்படுகின்ற புண்ணிய மகோற்சவமாக கருதப்படுகிறது.
 
நிச்சலத்துடன் புத்த பெருமானின் போதனைகளுடன் உயிரினும் மேலாக நாம் போற்றி வந்த எமது உள்ளங்கள் இந்த வெசாக் மாதத்தில் அவர் எம்முடன் உயிருடன் இருக்கின்றார் என்பதை எண்ணி எமது மனம் பூரிப்படைகிறது. குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.
 
புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.புத்த பெருமானின் போதனைகளின் படி எங்களை தயார் படுத்திக் கொண்ட நாம் எமது வாழ்க்கை அனுபவத்தின்படி நூறு வருடங்கள் வாழ்வதை விட மிக ஊக்கத்துடன் ஒரு நாள் வாழ்வதே மேலாகும். எனவே இந்த வெசாக் மாதத்தில் சற்றும் தாமதிக்காமல் புண்ணியங்களை அதிகளவில் சேர்த்து மோட்சத்துக்குப் பாத்திரர்களாக உறுதி பூணுவோம் எனவும் ஜனாதிபதி தமது வெசாக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

வாலில்லாத நாய்க்கு மனதிற்குள் ஒரு கொண்டாட்டம். :icon_mrgreen:

இதைத்தான் சொல்வது சாத்தான் வேதம் ஓதுகிறது என்று. பாதுகாப்பான இடங்கள் என்று அறிவித்து அந்த இடத்தில் இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து இனவெறியை தீர்த்து இப்போது புண்ணியத்தைப்பற்றி ஓதும் சாத்தான்.. கேட்பவர்கள் கொண்ணையராக இருக்குமட்டும்.. இதைவிட முண்டு கொடுக்கும் வெட்கம், மானம் இல்லாத தமிழர்களை துணையாக சாட்சிகள் வேறு.. கிடைக்கும் நிச்சயமாக புண்ணியம்...

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணியத்தைப் பற்றி ஒரு புச்சர் கதைக்கக் கூடாது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோட்சத்தைப்பற்றி ஆர் கதைக்கிறதெண்ட விவஷ்தையே இல்லாமல் போச்சப்பா... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுடைலை ஞாணம் என்பது இதுதானாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மனசுக்குள்ள அசோகச்சக்கரவர்த்தி என்று நினைச்சுக் கிட்டு இருக்கிறார். ஆனா ஐயா சாதாரண ஒரு புச்சர். பதவி இறங்கேக்க அது விளங்கும். :icon_idea::lol:

மகிந்தவுக்கு ஞானத்தை கொடுங்கள் புத்தபெருமானே! - யாழ்ப்பாணத் தம்பி

 

LLRC-Cartoon_CI.jpg



இப்ப எல்லாம் எதுக்கு எடுத்தாலும் ஒரே நாடு ஒரே தேசம் எண்டு மகிந்த சொல்லிக் கொண்டிருந்தவர் பாருங்கோ. வெசாக் காலத்தில ஒரே நாடு ஒரே புத்தர் எண்டுற கதையாய்தான் இருக்குது. வெசாக்கை முன்னிட்டு தெற்கைவிடவும் வடக்கு கிழக்கிலதான் கணவேலைப்பாடுகள செய்திருக்கினம். 

காரணம் என்ன சொல்லுங்கோ பாப்பம். அங்கதானே ஆமிய குவிச்சிருக்கினம். அவையள் வெசாக்கை கொண்டாட வேணும். அவையளுக்கு பொழுதுபோக்குத் தேவை. அதால வடக்கு கிழக்கு முழுக்க ஒரே வெசாக் கொண்hட்டம்தான் பாருங்கோ. சிங்கள அரசின்டஉண்மையான கொடி என்ன சொல்லுங்;கோ பாப்பம்? 

பௌத்தக் கொடிதான். பௌத்த கொடி சிங்கள நாட்டிலயும் ஈழத்திலயும் பறக்குது. இந்தக் கொடி ஒரே நாடு ஒரே தேசம் எண்டு காட்ட கட்டின மாதிரி கிடக்குது. இல்லாத ஒண்ட உப்பிடியாச்சும் செய்து காட்டப் பாக்கினம் போல கிடக்குது. அதுக்குத்தானே புத்தரின்ட சிலையளையும் ஓடி ஓடி வைக்கினம்.

பௌத்த சிங்கள அரசு எண்டுறதுலதானே எல்லாரும் கடுமையாய் இருக்கினம். எங்கட சனத்தை அழிக்கிறதுக்கும் புத்தரின்ட ஆசியப் பெற்றுத்தானே தொடங்கினவையள். பாவம் புத்தர். அவர் ஒண்டும் வேண்டாம் எண்டிட்டு போன மனுசன். அந்த மனுசன் சிங்களவரின்ட கையில சிக்கிட்டுது. 

அந்த மனுசன் எல்லாத்தையும் துறந்து ஞானம் அடைஞ்ச நாள்தான் இது. இவையள் தாங்களும் இந்த நாளில ஞானம் அடையிறினமாம். ஓம் ஓம் மகிந்த இப்ப கொஞ்ச வருசமாய் ஞானம் அடையிறார். அவரின்ட ஞானத்தின்ட வெளிப்பாட 2009 இதே மே மாத காலத்தில பாத்திருப்பமே. வெசாக் ஞானத்தோடதானே எங்கட சனத்தை கொண்டு குவிச்சவையள்.

இப்ப மகிந்த அன்பு ஞானம், கருணை, குரோம் இப்பிடி கொஞ்ச சொல்லுகளோட மகிந்த அறிக்கை விட்டிட்டார். எங்கட ஆனையிறவுக் கடலிலயும் ஆரிய குளத்திலயும் புத்தருக்கு விளக்கு வைச்சிருக்கினம். எங்கட தெருவில எங்கட டவுனில எங்கட நிலம் எல்லாம் புத்தருக்கு விளக்கு வைச்சிருக்கினம். எங்களுக்கு புத்தரோட எந்த கோபமும் இல்ல. அவர எங்கட சனமும் ஒரு காலத்தில கும்பிட்டது. 

ஆனால் உந்த தீபங்கள நாங்கள் ஏத்தேல்ல. எங்கட நிலத்த பிடிச்சு புத்தருக்கு விளக்கு வைச்சால் எங்களுக்கு கோவம் வரும் தானே. நாங்கள் மனம் நோவம்தானே. எல்லாத்தையும்விட ஒரு கொடுமை என்ன தெரியுமே? முள்ளிவாய்க்காலில எங்கட சனத்த கொத்துக் கொத்தாய் கொண்டு போட்டிச்சினம். 

அந்தச் சனத்திற்கு எங்கட மண்ணில நாங்கள் ஒரு விளக்கு ஏத்த விடமாட்டினமாம். ஆனால் புத்தருக்கு எங்கட மண்ணில விளக்கு வைக்கினம். இதென்ன அநியாயம்? இதென்ன ஓர வஞ்சனை? புத்தரே மகிந்தவுக்கும் அவரின்ட தம்பியாக்களுக்கும் எண்டைக்காவது ஞானம் பிறக்குமே? 

செத்ததுகளுக்கு விளக்கு வைக்கிற அளவுக்கு விட்டுக் குடுப்பாரே? அடுத்தவரின்ட நிலத்த பிடிக்காம விடுவாரே? அடுத்தவின்ட உரிமையை குடுப்பாரே? ஒரு இனத்தை அழிச்சு ஒழிக்காம விடுவாரோ? புத்த பெருமானே மகிந்தவுக்கு ஞானத்தை கொடுங்கள். 

குறைந்தது அநியாயமாய் கொல்லப்பட்ட எங்கட மக்களுக்;கு அஞ்சலி செய்ய விடும் பக்குவத்தை மகிந்தவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் கொடுங்கள் புத்த பெருமானே!

யாழ்ப்பாணத் தம்பி 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106898/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

"குறைந்தது அநியாயமாய் கொல்லப்பட்ட எங்கட மக்களுக்;கு அஞ்சலி செய்ய விடும் பக்குவத்தை மகிந்தவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் கொடுங்கள் புத்த பெருமானே!"

புத்தருக்கே இவங்களை கண்டால் பயம்.

வேலி பிரிச்சு வேறு தெருவில் பிச்சையெடுக்க போய்விடுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.