Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: டெல்லியில் கருப்புக்கொடி போராட்டம் நடத்திய வைகோ கைது

Featured Replies

  • 513xNxnewPic_6392_jpg_1914982g.jpg.pages
    டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ.| படம்: மீட்டா அஹல்வத்.
  • 470xNxnewPic_9734_jpg_1914830g.jpg.pages
    டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக வைகோவையும், மதிமுக தொண்டர்களையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக போராட்டத்தின் போது பேசிய வைகோ: "மோடி பதவியேற்பு விழாவில், ராஜபக்சே கலந்து கொள்வதால் அந்த நிகழ்ச்சியின் புனிதத் தன்மை கெட்டுவிடும்" என்றார். மேலும், ராஜபக்சேவை மட்டுமே எதிர்ப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கவில்லை என்றும் கூறினார். நரேந்திர மோடிக்கு நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

நரேந்திர மோடி, பதவியேற்பு விழாவுக்கு சார்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களுக்கு காரணமான ராஜபக்சே இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கூடாது என மதிமுக, அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக ராஜபக்சே வருகையை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தது.

ஆனால் எதிர்ப்பையும் மீறி, ராஜபக்சே வருவது உறுதியானதால் டெல்லியில் தனது தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்தார்.

அதன்படி இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு காரணங்களை முன்வைத்து நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ உருக்கமாக கடிதம் எழுதியிருந்தார்.

அதில், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை, குழந்தைகள், பெண்கள், மூத்தோர் உள்ளிட்ட தமிழ் மக்களைக் கொன்று குவித்த மன்னிக்க முடியாத இனப்படுகொலையை நடத்திய மகிந்த ராஜபக்சே பதவியேற்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article6048746.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்த வைகோ உட்பட்ட 500பேர் கைதுசெய்யப்படனர்!
[Monday, 2014-05-26 15:17:40]
vaiko-arresded-260514-delhi-150.jpg
டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட ம.தி.மு.க,. தொண்டர்கள் 400பேர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி பதவி எற்பு விழாவில் பங்கேற்க சார்க் நாட்டு தலைவர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டார். இதற்கு பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த ம.தி.மு.க. தலைவர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைக்க கூடாது என்று பா.ஜனதா தலைவர் ராஜநாத்சிங்கை சந்தித்து வைகோ கோரிக்கை விடுத்தார்.
 
  
அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை இந்த நிலையில் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் தனது தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்து இருந்தார். இதற்காக அவர் தொண்டர்களுடன் டெல்லி சென்றார்.
 
இன்று காலை 11 மணி அளவில் ஜந்தர் மந்திரில் வைகோ தனது ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார். இதில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினர் வக்கீல் தேவதாஸ், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், ம.தி.மு.க. இணைய தள ஒருங்கிணைப்பானர் மின்னல் முகமது அலி உள்பட ம.தி.மு.க. தொண்டர்கள், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் பலர் கருப்பு கொடியுடன் கலந்து கொண்டனர்.
 
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி, மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை அழைத்ததை கண்டிக்கிறோம். எரிகிறது எரிகிறது தமிழர் நெஞ்சம் எரிகிறது போன்ற 30 கோஷங்களை அவர்கள் முழங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார். இறுதியில் வைகோவை போலீசார் கைது செய்தனர். அவருடன் ம.தி.மு.க,. தொண்டர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சூரிய, சந்திர சக்கரைவத்தி பீரிசோட பதுங்கி திரியவேண்டியது தான்.

பக்கத்து நாட்டுக்கு போக முடியாதளவிற்கு மோடைய அரசியல் செய்கிறார்கள் சிறி லண்கன்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி சென்றடைந்த ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி எதிர்ப்பு போராட்டம் – வைகோ கைது

[ திங்கட்கிழமை, 26 மே 2014, 09:52 GMT ] [ அ.எழிலரசன் ]

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை புதுடெல்லியை வந்தடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லி ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து. தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக வைகோவையும், மதிமுக தொண்டர்களையும் புதுடெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக போராட்டத்தின் போது பேசிய வைகோ மோடி பதவியேற்பு விழாவில், ராஜபக்ச கலந்து கொள்வதால் அந்த நிகழ்ச்சியின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று குறிப்பிட்டார்.

மேலும், ராஜபக்சவை மட்டுமே எதிர்ப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இறுதிக்கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களுக்கு காரணமான ராஜபக்ச இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கூடாது என மதிமுக, அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மகிந்த ராஜபக்ச பங்கேற்பதால், இன்று மாலை நடக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் புறக்கணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mahinda-delhi.jpg

anti-mahinda-protest-delhi.jpg

anti-mahinda-protest-delhi-2.jpg

anti-mahinda-protest-delhi-3.jpg

anti-mahinda-protest-delhi-4.jpg

http://www.puthinappalakai.com/view.php?20140526110594

  • கருத்துக்கள உறவுகள்

 

வேட்டி என்றால் உருவிவிடுவார்கள் என்று பயந்துவிட்டாரா சிங்கராஜா? :D

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டி என்றால் உருவிவிடுவார்கள் என்று பயந்துவிட்டாரா சிங்கராஜா? :D

 

 

நானும் அதைத்தான் கவனித்தேன்.....

அந்தப்பயம் இருக்கட்டும்..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களை வடக்கன் கண்டுக்கிறதே இல்ல, ஆனா அடம்பிடிக்கிறாங்களே! :D

  • கருத்துக்கள உறவுகள்


இவங்களை வடக்கன் கண்டுக்கிறதே இல்ல, ஆனா அடம்பிடிக்கிறாங்களே! :D

உண்மை தான் தோழரே...எத்தனை பேர் கூடி அடித்தாலும் வலிக்காது போல் நடிக்கும் திரன் கொண்டவன் தான் தமிழ் நாட்டு தமிழன்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  :D

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

:D

வைகோ வோடு ஏன் சீமான் போகவில்லை?? ஏதேனும் கொள்கை பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ வோடு ஏன் சீமான் போகவில்லை?? ஏதேனும் கொள்கை பிரச்சனை?

 

வைகோ இன்னும் பாஜக கூட்டணியில்தான் உள்ளார். நாம் தமிழர் கட்சி அந்தப்பக்கமே போகவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.