Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சுப்ரமணிய சாமி பரபரப்பு பேட்டி

Featured Replies

பிரதமர் நரேந்திர மோடி பதவி யேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே பங்கேற்பதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதா உட்பட, பல தலைவர்கள், பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த எதிர்ப்புக்கு இடையில், இந்தியா வருவதற்கு முன், நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் இருந்த, தமிழக மீனவர்களை, ராஜபக் ஷே விடுதலை செய்தார்.

 

 

பேச்சுவார்த்தை:அதன் தொடர்ச்சியாக, மோடி பதவியேற்ற அடுத்த நாளே, இரு நாட்டு தலைவர்களும் டில்லியில் சந்தித்தனர். இருதரப்பு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான உரிமைகள், தமிழர் பகுதியை உள்ளடக்கிய வடக்கு மாகாண அரசுக்கு, போலீஸ் அதிகாரம் உள்ளிட்டவை குறித்து, இந்தியா தரப்பில் ஆழமாக வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கெல்லாம் தலையாட்டிய ராஜபக் ஷே, இலங்கை திரும்பியதும், இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், நேற்று முன்தினம், இலங்கை பார்லிமென்டில், அந்நாட்டு அரசு சமர்ப்பித்த அறிக்கையில், மோடியுடன் நடந்த பேச்சு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'இலங்கையில் உள்ள மாகாண அரசுகளுக்கு, போலீசை நியமிக்கும் அதிகாரம் அளிக்கப்பட மாட்டாது; அதை வலியுறுத்தும், 13வது சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வராது' என, கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் போக்கில், இப்படியொரு மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இது, பிரதமர் மோடியின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவா; மோடியால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இதற்கு பதிலளித்து, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி அளித்த பரபரப்பு பேட்டி வருமாறு: இலங்கை தமிழர் விவகாரத்தில், இந்தியா கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக தான், தமிழர் பகுதியில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்துவதற்கு, ராஜபக் ஷே ஒப்புக் கொண்டதற்கு காரணமே இந்தியா தான். இப்போது, தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட்டுள்ளதால் தான், தமிழர்கள் அதிகளவில் வெற்றி பெற முடிந்தது. ஒரு மாகாணத்திற்கு தமிழர்களால் ஆட்சிக்கு வர முடிந்துள்ளது. இது, ராஜபக் ஷே எடுத்துள்ள முதல் முயற்சி. எதையுமே செய்ய முடியாது என, அவர் கூறவில்லை. நமது வலியுறுத்தல் மூலமாக, ஒவ்வொன்றாக பெறும் நிலை வந்துள்ளது.

 

 

பயங்கரவாதிகள்:அதேநேரத்தில், போலீஸ் அதிகாரத்தை பொறுத்தவரையில், அவர் இதுவரை, எந்த உத்தரவாதத்தையும் இந்தியாவுக்கு அளிக்கவில்லை. இலங்கையில், மூன்று மாகாணங்கள் உள்ளன. ஒன்றுக்காக நாம் வாதாடும் போது, இன்னொரு பிரச்னையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்குள்ள, இன்னொரு மாகாணத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து, ஆட்சியாளர்கள் வந்துள்ளனர். அந்த மாகாணத்தில் தான், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதிகளவில் அடைக்கலம் புகுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இது மாறி வருகிறது. அங்கு இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டம் நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த மாகாணத்திற்கும் போலீஸ் அதிகாரத்தை கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். இதனால், நமது நாட்டுக்கு ஏற்படும் ஆபத்தை, தமிழ் உணர்வாளர்கள் உணர வேண்டும். 

மேலும், ராஜபக் ஷேவின் இந்த அறிவிப்பும், அறிக்கையும் மறு ஆய்வுக்கு உட்பட்டது தான். இந்தியாவின் தொடர் வலியுறுத்தலால், அது மாறும் என, நம்பலாம். ராஜபக் ஷேவுக்கும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் உள்ளன. அங்கும் சட்டம், 

 

நீதிமன்றம், பார்லிமென்ட் என, எல்லாம் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும், அவரும் பதில் சொல்ல வேண்டும். மிக முக்கியமாக, பெரும்பான்மை மக்களின் கருத்தையும், அவர் கவனத்தில் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, இதை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது; படிப்படியாக தான் செய்ய முடியும். இந்தியாவின் வலியுறுத்தல்களுக்கு நிச்சயம் ராஜபக் ஷே நடவடிக்கை எடுப்பார் என்பது உறுதி. இவ்வாறு, சுப்ரமணியசாமி பேட்டி அளித்தார்.

 

 

மோடியை சந்திக்க தமிழ் தலைவர்கள் வருகை:தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, இந்தியா வருகின்றனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு, இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனும் வருவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், அவர்கள் வரவில்லை. ராஜபக் ஷேவுடன், யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி மட்டும் வந்திருந்தார். இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த, ஐவர் குழுவினர், விரைவில் இந்தியா வர உள்ளனர். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து, பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன், அவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=991921

இந்தாள் நானும் ரவுடி தான் கணக்குக்கு ஸ்டேட்மென்ட் விடுது...இந்த முறை...ஒருத்தருமே இந்தாளை சீண்ட காணோம்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், மூன்று மாகாணங்கள் உள்ளன :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், மூன்று மாகாணங்கள் உள்ளன :D

தமிழ், முசுலிம், சிங்களம் என்ற மூன்று மாகாணத்தை சொல்லியிருப்பார். :icon_idea:

சுப்பு வாங்கின காசுக்கு கூவுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.