Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவிலும் வாழ்வோம் - நெதர்லாந்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் முதலாம் நாள் நிகழ்வு.

சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு நேற்று நெதர்லாந்தில் அம்சர்டாம் நகரில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2மணிக்கு நெதர்லாந்து தமிழர் மனிதஉரிமைமையப் பொறுப்பாளர் திரு. இந்திரன் அவர்கள் பொதுச்சுடரேற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

hollen-savill1st-1.jpg

சிங்களஅரசினால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக சுடர், மலர்வணக்கம் அங்குவந்திருந்த மக்களால் செய்யப்பட்டு, இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்து மொழியில் பிரசுரங்களும் நெதர்லாந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வானது ஒக்ரோபர் 6ம் திகதி வரை நெதர்லாந்தின் பலநகரங்களில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நாளை புதன்கிழமை அல்மேரா நகரில் இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

hollen-savill1st-5.jpg

பதிவு.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்ணு, நெதர்லாந்தில் நடக்கும் நிகழ்வுகளினை அடிக்கடி எங்களுக்கும் சொல்லுங்கோ. வாசிக்கச் சந்தோசமாக இருக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
nederland.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாவது நாளாக நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் நிகழ்வு

நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு இன்று 3வது நாளாக மத்தியநெதர்லாந்தின் உத்ரெக் மாநகரிலும், வடநெதர்லாந்தின் டென்கெல்டர் நகரிலுமாக இரு இடங்களில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மக்களின் பார்வைக்காக தமிழ்மக்களிற்கெதிரான படுகொலைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றிக்கு சுடர்வணக்கம் மலர்வணக்கங்களும் அங்கு திரண்டிருந்த மக்களால் செய்யப்பட்டன.

உத்ரெக் மாநகரசபையின் முன்னால் நடந்த நிகழ்விற்கான பொதுச்சுடரினை மாநகரசபையின் சுகாதாரப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.கென்ங் நை கவுசன் அவர்கள் ஏற்றிவைத்து கருத்து தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் மிகக்கொடுரமான படுகொலைச் செய்திகள் வெளிநாடுகளில் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் மூலம் இங்குள்ளவர்கள் உண்மை நிலையினை புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் இதுபோன்ற நிகழ்வுகளை மேலும் பல நகரங்களிலும் பல நாடுகளிலும் தமிழ்மக்கள் செய்யவேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தினார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு தம்மால் கொடுக்கப்பட்ட நிதியானது இன்னும் அம்மக்களிற்காக சிறிலங்கா அரசு பயன்படுத்தாமல் இருப்பதை தங்களால் உணர்ந்துகொள்ளக்கூடியதாகவுள

விஷ்ணு இணைப்புக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் 4வது நாளாகத் தொடரும் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்புப் போராட்டம்.

2006092314.jpg

நெதர்லாந்தில் கடந்த 19ம்திகதியிலிருந்து சிறிலங்கா அரசின் தமிழ்மக்களிற்கெதிரான படுகொலைகளை வெளிப்படுத்தி நடாத்தப்படும் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு நேற்று 4வது நாளாக வடநெதர்லாந்தின் அன்னபவுலோனா நகரில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மக்களின் பார்வைக்காக தமிழ்மக்களிற்கெதிரான படுகொலைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றிக்கு சுடர்ஏற்றி மலர்வணக்கங்களும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இங்கு பொதுச்சுடரினை அன்னபவுலோனா நெதர்லாந்துப்பாடசாலை ஆசிரியையான திருமதி. அங்கிது பிறே அவர்கள் ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வை ஏராளமான நெதர்லாந்து மக்கள் சிறிலங்கா அரசின் தமிழ்மக்களிக்கெதிரான இப்படுகொலைச்செய்திகள் ஏன் நெதர்லாந்து ஊடகங்களில் வெளிவருவதில்லை என்ற தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ந்நிகழ்வின்பேர்து நெதர்லாந்து மொழியிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் இப்படுகொலைகளை கண்டிக்கும் மகஜரில் பல நெதர்லாந்தவர்களிடம் கையெழுத்து சேகரிப்பும் நடைபெற்றது. இம்மகஜரானது எதிர்வரும் 6ம் திகதி டென்காக் நகரில் நடைபெறும் எழுச்சிப்பேரணி நிகழ்வின்போது வெளிவிவகார அமைச்சிடமும் நேரடியாகவும் பல மனிதநேய அமைப்புக்களிற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

சனிக்க்கிழமை 5 வது நாளாக சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்டநிகழ்வு கெல்டர்லாந் மாநிலத்திலுள்ள டெவென்தர் நகரில் உள்ள குறோத்த மார்க் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஈழவேந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்.

Sankathi

இணைப்புக்கு நன்றி அண்ணா

இந்த நிகழ்ச்சிகள் பற்றி விடியோவில் எந்த காட்சிகளும் இதுவரை தமிழ் ஒளி இணையத்தால் வெளியிடப்படவில்லை.

புகைப்படங்களாகத்தான் காட்டுகிறார்கள்.

ஓ...அது தானே ரி.ரி.ன்...என்னட்டயும் போன வருசம் பேட்டி ஒன்று எடுத்தவை நானும் கலைச்சு விழுந்த கொடுத்தன்...அம்பிட்டும் தான்...

என்னோட பலர் ...

சும்ம வேலை இல்லாம கமறாவை தூக்கி கொண்டு வெளிக்கிட்டிரிவினம்...உதுகளை என் போடப் போயினம்...

இன்னும் சில நகரங்களில இது நடக்கும் அதுக்க நானும் போவன் போய் வந்து மிச்சம் சொல்;லறன்...

இது தான் சுதந்திர உடகம்...மக்கள கர்க மக்களின் சேவை...

எனக்கம் இனி போட வந்தாலும் வரும்...

சரி நான் போறன்

வன்னி மைந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கடி விடியோக்களை தமிழ் ஒளிக்கு உடனுக்கு உடன் அனுப்பும் வசதிகளை ஏனோ அவர்கள் செய்வதில்லை. அவர்களையும் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

வேறு நாடுகளில் இவ் நிகழ்வுகள் நடைபெற்றபோதும் புகைப்படங்கள் மட்டும் தான் காட்டினார்கள். ஆனால் இறுதிநாள் நிகழ்வுகள் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். நெதர்லாந்து இறுதி நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்வார்கள் என்பது சந்தேகம் தான். இருப்பினும் ஒரு அரைமணித்தியாலங்கள் தொகுத்து வழங்ககூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் சில நகரங்களில இது நடக்கும் அதுக்க நானும் போவன் போய் வந்து மிச்சம் சொல்;லறன்...

கட்டாயம் சொல்லுங்கோ... படங்கள் எடுத்து வந்து இணையுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
nederlandlf5.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் 8வது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

நெதர்லாந்தில் கடந்த 19ம்திகதியிலிருந்து சிறிலங்கா அரசின் தமிழ்மக்களிற்கெதிரான படுகொலைகளை வெளிப்படுத்தி நடாத்தப்படும் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு இன்று 8வது நாளாக கிழக்கு நெதர்லாந்திலுள்ள சுவோலே (ணுறழடடந) நகரில் மதியம் 2.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு ஏற்றி மலர் வணக்கங்களும் சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

2006092619.jpg

2006092621.jpg

இங்கு மாவீரரின் சகோதரர் திரு. சுூரியகுமார் பொதுச்சுடரினை ஏற்றிவைத்து இன்றைய நிகழ்வை ஆரம்பித்துவைத்தார் இந்நிகழ்வில் தமிழினப்படுகொலைப்படங்களின் நிழற்படங்கள் பல மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததுடன் இப்படுகொலைகளை கண்டித்து நெதர்லாந்து வெளிநாட்டமைச்ச்pக்கும் மனிதநேய அமைப்புகளிற்கும் எதிர்வரும் 6ம் திகதி கையளிக்கப்படவிருக்கின்ற மகஜரிலும் நெதர்லாந்தவர்களிடம் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது.

Sankathi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilnaatham.com/photos/2006/SE...LAND/index.html

நெதர்லாந்து வாழ்விலும் சாவோம் படத்தொகுப்பு. நன்றி தமிழ்நாதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் 10வது நாளாகத் தொடரும் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்புப் போராட்டம்.

நெதர்லாந்தில் கடந்த 19ம்திகதியிலிருந்து சிறீலங்கா அரசின் தமிழ்மக்களிற்கெதிரான படுகொலைகளை வெளிப்படுத்தி நடாத்தப்படும் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு இன்று 10வது நாளாக தென்கிழக்கு நெதர்லாந்திலுள்ள லிம்பேர்க் மாநிலத்தில் சிற்றாட் நகரில் (Sittard) நெதர்லாந்தவர்கள் அதிகளவில்கூடும் மத்தியபகுதியல் காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறுகின்றது. இதில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு தங்கள் சுடர்வணக்கம் மலர் வணக்கங்களை சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக செலுத்தினர்.

இங்கு பொதுச்சுடரினை பிரபல தொழிலதிபரும் நெதர்லாந்தவருமான திரு. பிரான்சிஸ் வில்லியம்ஸ் அவர்கள் ஏற்றிவைத்து இன்றைய நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வை ஏராளமான நெதர்லாந்து மக்கள் பார்வையிட்டனர். இப்படுகொலைகளை கண்டித்து நெதர்லாந்து வெளிநாட்டமைச்சுக்கும் மனிதநேய அமைப்புகளிற்கும் எதிர்வரும் 6ம் திகதி கையளிக்கப்படவிருக்கின்ற மகஜரிலும் கையெழுத்திட்டனர்.

hollen10day2.jpg

hollen10day3.jpg

Pathivu.com

உரிமைக்குரல் நிகழ்வுகளின் பதிவுக்கு நன்றி விஸ்ணு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் 13வது நாளாகத் தொடரும் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்புப் போராட்டம்.

hollen13days3.jpg

நெதர்லாந்தில் கடந்த 19ம்திகதியிலிருந்து சிறீலங்கா அரசின் தமிழ்மக்களிற்கெதிரான படுகொலைகளை வெளிப்படுத்தி நடாத்தப்படும் சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு இன்று 13வது நாளாக நெதர்லாந்திலுள்ள டென்பொஸ் (Denbosch) நகரில் மதியம் 02 மணிக்கு நகரின் மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.

இங்கு பொதுச்சுடரினை இளையோர் அமைப்பு டென்பொஸ் செயற்பாட்டாளர் ஜெயராஜ் கண்ணா அவர்கள் ஏற்றிவைத்து இன்றைய நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக சுடர்வணக்கத்தினை 2ம் லெப். வீரப்பனுடைய சகோதரி திருமதி அப்பையா ஏற்றிவைத்தார்

இதில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு தங்கள் மலர் வணக்கத்தினை சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக செலுத்தினர். இந்நிகழ்வை ஏராளமான நெதர்லாந்து மக்கள் பார்வையிட்டு இப்படுகொலைகளை கண்டித்து நெதர்லாந்து வெளிநாட்டமைச்சிற்கும் மனிதநேய அமைப்புகளிற்கும் எதிர்வரும் 6ம் திகதி கையளிக்கப்படவிருக்கின்ற மகஜரில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வின்பேர்து நெதர்லாந்து மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.நாளை திங்கட்க்கிழமை 14 வது நாளாக சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்டநிகழ்வு பிறாபன்ற் மாநிலத்திலுள்ள பிறேடா (Breda) நகரில் உள்ள மத்திய பகுதியில் நடைபெறவுள்ளது.

Pathivu.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் இறுதி நாள் எழுச்சிப் பேரணி.

hollendlast1.jpg

hollendlast8.jpg

நெதர்லாந்தில் கடந்த 19ம் திகதியிலிருந்து சிறீலங்கா அரசின் தமிழினப்படுகொலைகளை கண்டித்து நடாத்தப்பட்ட சாவிலும் வாழ்வோம் நிகழ்வின் இறுதிநிகழ்வாக இன்று டென்காக்கில் நெதர்லாந்துப் நாடாளுமன்ற முன்றலில் நண்பகல் 2மணிக்கு எழுச்சிப்பேரணி நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தன்ர். நாடாளுமன்ற முன்றலில் பல பிரேதப்பெட்டிகளும் அதன்மேல் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வின் முதலில் பொதுச்சுடரினை உத்ரெக் மாநகரசபையின் சுகாதார தலைமை அதிகாரி திரு. கெங் நை கவுசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்டவர்களிற்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக, பிரான்ஸ், சுவிஸ், நெதர்லாந்து, என்று தொடருகின்ற எம் மக்களின் அகிம்சைப் போராட்டம் தொடர்ந்து உலகமெங்கும் வியாபிக்க வேண்டும். முக்கியமாக இளைய, சமுதாயத்தின் தொடர்ச்சியான போராட்டங்கள் பாராட்டப்பட வேண்டியது தான். தொடர்ந்து இவ்வாறன பணிகளைச் செய்ய வாழ்த்துவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.