Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலை விசாரணைகள் கண்காணிப்பு குழு அதிருப்தி.

Featured Replies

[செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 15:41 ஈழம்] [ச.விமலராஜா]

சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை.

சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல.

ஏனெனில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்தினது நம்பிக்கையும் பொறுமையும் இழந்து வருகிறது. மூதூர் படுகொலைகள் போன்றவை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது சர்வதேச சமூகத்தின் கடும் அதிருப்திக்கு முகம் கொடுக்க நேரிடும்.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுக்கின்றனர். எந்தத் தரப்பும் வன்முறையை நிறுத்துவதாக தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தினது நிலைமை மிக மோசமாக உள்ளது என்றார் ஷோல்வ்பெர்க்.

புதினம்

இதை தானே சொல்லி சொல்லி ஒஅவரு கண்கானிப்பு குழுவும் பதவியை விட்டு போகிறிங்கள் :roll:

இதனால் யாருக்கு என்ன பயன்? :roll:

எல்லாம் பம்மாத்துங்கோ!!! :twisted:

இதனால் யாருக்கு என்ன பயன்? :roll:

எல்லாம் பம்மாத்துங்கோ!!! :twisted:

ஒம் ஒம் நீங்கள் சொன்னா சரி நான் சுயமாக தடை போடவா முடியும் அரசுக்கு :P :P

  • தொடங்கியவர்

ஒம் ஒம் நீங்கள் சொன்னா சரி நான் சுயமாக தடை போடவா முடியும் அரசுக்கு :P :P

தடை எல்லாம் போடலாம் கொஞ்சநாள் பொறுங்கோ... :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக்குழு தலைவரின் எச்சரிக்கை

அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடரும் வன்முறைகள் பற்றி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜொஹான் சோல்வ்பேர்க் தெரிவித்துள்ள தகவல்கள் இலங்கையில் உருவாகிவரும் ஆபத்தான நிலைமையைத் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றது. இந்த ஆபத்தான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பதும் அவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிப்பதாக இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.கண்காணிப்ப

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை விசாரணைகள் கண்காணிப்பு குழு அதிருப்தி.

அதோட கண்காணிப்புக்குழுவின் பணி முடிஞ்சு போச்சு! :?:

இலங்கையில் இரு தரப்பு யுத்த நிறுத்த மீறல்கள்...

போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள்:

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் சுமார் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், இந்த சம்பவங்களுக்கு இரு தரப்புமே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 22 திகதி விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனைத் தொடர்ந்து அரச படைகளிற்கும், விடுதலைப்புலிகளிற்கும் இடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக இடம்பெற்ற மோதல்களின் போது மாத்திரம் சுமார் 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு இன்று தெரிவித்துள்ளது.

மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனாலும், அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களினாலும் விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியிருக்கிறார்கள் என்றும் சம்பூர் பகுதிகளில் அரச படை நடவடிக்கை மேற்கொண்டதால் அவர்களும் அதனை பெரிய அளவில் மீறியிருக்கிறார்கள் என்றும் கண்கானிப்புக்குழுத் தலைவர் கூறியிருக்கிறார்.

கண்காணிப்புக்குழுவின் ஏனைய தீர்ப்புக்கள்....

மூதூர் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்

திருகோணமலையில் அரச கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பகுதிகள் மீது வலிந்த தாக்குதலை நடத்தியது புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

சம்பூர் பகுதிகளில் புலிகளின் கட்டுபாட்டிலிருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல் நடத்தியது அரசபடைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

அரச படைகளின் மீது யாழ்ப்பாணத்தில் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்கள் புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

யாழ் மோதல்களும் பெரும் அவலங்களுக்கு வழி செய்தன

விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அரச படைகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களும், முகமாலையின் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல்களை நடாத்தியதும் அப்பகுதிக்குள் உள்புகுந்ததும் அரச படைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்காது, சுயாதீன விசாரணைகளிற்கு இடமளியாதது அரச படைகளும், புலிகளும் அதாவது இரு தரப்பும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிற்கு உட்செல்லவும், வெளியேறவும் சிவிலியன்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது அரச படைகளும், புலிகளும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

நன்றி பிபிசி தமிழோசை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.