Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமணம் ஆன மகளும் பெற்றோர் குடும்பத்தில் ஒரு அங்கம்தான்: நீதிமன்றம் தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: திருமணம் ஆன மகளும் அவளது பெற்றோர் குடும்பத்தில் ஒரு அங்கம்தான் என்று மும்பை உயர் நீதிமன்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

மும்பையை சேர்ந்தவர் ரஞ்சனா அனேராவ். இவரது தாயாரின் பெயருக்கு மாநில அரசின் உரிமம் பெற்ற ரேஷன் கடை ஒன்று இருந்தது. இந்நிலையில் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த உரிமத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ரஞ்சனா அரசிடம் கோரிக்கை மனு அளித்தார்.

ஆனால் ரஞ்சனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால், திருமணமாகி சென்றுவிட்ட மகள் பெற்றோரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக கருதப்பட மாட்டார் என்ற அரசின் விதி இருப்பதாக கூறி அவருக்கு உரிமம் அளிக்க மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து ரஞ்சனா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து  இன்று தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம், அரசின் மேற்கூறிய விதிமுறை மற்றும் உத்தரவை செல்லாது என்று அறிவித்ததோடு, பாலின பாரபட்சம் அரசியல் சாசனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே இது அரசியல் சாசனத்திற்கு மாறானது என்றும் கூறி, ரஞ்சனாவுக்கு உரிமம் வழங்க உத்தரவிட்டது. 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=31538

  • கருத்துக்கள உறவுகள்

இது மற்றவர்களின் பொருட்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் விளையாட்டு. இதற்கு அமைச்சரும் அவருடைய கையாட்களும் தான் காரணம். சாட்டுக்களை  வைத்து ஏழை அப்பாவிகளின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள் இப்போது அவர்களின் வயிற்றிலும் கை வைத்து விட்டார்கள் . நல்ல காலம் இந்த நீதிபதி அவர்களுடன் சேரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை திருமணச் சட்டத்திலிருந்து, யாழ்ப்பாண திருமணச்  சட்டம் வேறுபட்டது.
குடும்பத்திலுள்ள பெண் பிள்ளைகளுக்கு சீதனம் கொடுத்து, திருமணம் செய்திருந்தால்....

பெற்றோர் இறந்த பின் மிகுதிச் சொத்துக்கள் ஆண் பிளைகளுக்கே சேரும். 

Edited by தமிழ் சிறி

இலங்கை திருமணச் சட்டத்திலிருந்து, யாழ்ப்பாண திருமணச்  சட்டம் வேறுபட்டது.

குடும்பத்திலுள்ள பெண் பிள்ளைகளுக்கு சீதனம் கொடுத்து, திருமணம் செய்திருந்தால்....

பெற்றோர் இறந்த பின் மிகுதிச் சொத்துக்கள் ஆண் பிளைகளுக்கே சேரும். 

 

இது தான் இந்தியாவிலும் நடப்பது....ஆனால் இது (மேலே நடப்பது) அப்பட்டமான பிழை....

பெற்றோர் உறுதி எழுதி வைக்காமல் இறந்தால் முழு சொத்தும் சமமாக பிரிக்கப்பட வேண்டும்....ஆனால் கூடுதலாக எங்கள் பகுதியில் பார்த்தது ஆண் பிள்ளைகள் சொத்துக்களை சுருட்டுவது இல்லை :)

(காரணம் மிக அதிகமான சொத்துகள் பெரும்பாலானோரிடம் இல்லை....)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.