Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ லங்காவுடன் பேச தலைவர் இணக்கம்?

Featured Replies

தலைவர் எப்பவோ இணக்கம் தெரிவிச்சுட்டார். இன்னும் ஒருக்கா சொல்ல வேணுமோ..????

இப்ப இலங்கை பேசுமா மாட்டாதா அதுதான் கேள்வியே...! JVP யின் கூத்துக்களை தாண்டி இலங்கை அரச மட்டத்தில் பேசுவதற்க்கு ஆட்க்கள் வந்தால்தானே....! அதிகாரிகள் மட்டத்தில் அனுப்பி வைத்தால், பழய கூத்துதான் அரங்கேறும்...!

தலைவர் எப்பவோ இணக்கம் தெரிவிச்சுட்டார். இன்னும் ஒருக்கா சொல்ல வேணுமோ..????

ஒவ்வொரு அரசுக்கும் இணக்கம் தெரிவிக்கையில் 5 வருடம் போய்விடும் இப்படி காலத்தை இழுத்தடிக்க இழுத்தடிக்க தமிழினம் இல்லாமல் போய்விடும் இதுதான் சிங்களத்தின் திட்டம்................ :?

எங்கடை தம்பியும் அடுத்த பேச்சுவார்த்தேலை கலந்துகொண்டு நேரடியாப் பேசப்போறதாய் ஊடகங்கள் இண்டைக்கு தகவல் சொல்லுது. இதிலை என்ன உண்மை பொய்யெண்டு எனக்குத் தெரியேல்லை. ஆனாச் சொல்லுறதைக் கேளுங்க. அவனுகள் வேறை வேறை நோக்கங்கள் வைச்சிருப்பாங்கள் கண்டியளே.

இதிலை சரியான தந்திரங்கள் இருக்குமெண்டு நினைக்கிறன்.

ஏன் நான் சும்மாதான் கேக்கிறன் உவன் மகிந்தன் வந்து பேச்சுவார்த்தேலை நேரடியாக் கலந்துகொண்டு கதைப்பானாமே.

எங்கடை தேசியத்தலைவரை இந்தச்சாட்டிலையாவது வன்னியைவிட்டு வெளியைகொண்டுவரலாம் எண்ட ஒரு முயற்சிபோலைத்தான் எனக்குப் படுகுது. எப்பிடி எப்பிடியெல்லாமோ உவை முந்தி கனகாலமா தலைகீழா நிண்டுதானே பாத்தவை. இந்த விஷத்தை எங்கடை தலைவர் நல்லா யோசிச்சுத்தான் செய்வாரெண்டு நினைக்கிறன்.

தலைவர் பேச்சுவாத்தைக்குப் போய் பேசி எல்லாரும் ஒத்துக்கொண்டுட்டா அதை உடனடியா நடைமுறைக்குக்கொண்டு வந்தினமெண்டே நினைக்கிறியள். பழைய குருடி கதவைத்திறவடியெண்டு அதுக்கும் அந்த இந்த சாட்டுப்போக்கைச் சொல்லி தட்டிக்கழிக்கிறது முந்தி முந்தி நடந்த விஷயம் தெரியும் தானே. "எவனொருவன் வரலாறு சொல்லும் பாடத்தை மறக்கிறானோ அதை அவன் மீண்டும் அனுபவித்தே தீரவேண்டும்" இது நான் சொல்லேல்லை, உந்த வாசகம் கிட்லரின்ரை வதைமுகாம் ஒண்டிலை சுவர்லை எழுதிக்கிடக்கு.

ஒத்துக்கொண்ட விசையங்களைச் செயல்படுத்துவோமெண்ட உத்தரவாதத்தையொல்லோ முதல்லை பொடியள் மகிந்தனிட்டையிருந்து கேட்டிட்டு பேச்சுவார்த்தைக்குப் போகவேணும். முடிவெடுத்த விஷயங்களை நடைமுறைப்படுத்திறதுக்கு எங்கடை தலைவருக்கு 100 வீதம் முடியும் அது மகிந்தனுக்கு முடியுமாமே. அல்லது சர்வகட்சி அங்கீகாரம், பங்காளிகளோடை எதிர்ப்பு, நிறைவேற்றும் பெரும்பான்மை எண்ட கதைகளைச் சொல்லி தமிழனுக்கு இந்தமுiறுயும் கயிறுவிடுவிட நினைக்கினமே.

"உண்டு உண்டு என்று நம்பிக் காலையெடு

இங்கு உன்னைவிட்டால் புூமியேது கவலைவிடு

இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து

அதில் நீதி வரவில்லையெனில் வாளை நிமிர்த்து"

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் நேரே வந்து பேச வேண்டும் என்ற தேவை இல்லை. முதலில் செய்த ஒப்பந்தங்களை சிங்கள அரசு ஒழுங்காகக் கடைப் பிடித்தாலே போதும்.

விடுதலை புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க விரும்புவதாக இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவித்ததாக இலங்கையின் அமைச்சர் இறம்புகெல அவர்களை ஆதாரம் காட்டி நோர்வேயில் இருந்து வெளிவரும் VG நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.vg.no/pub/vgart.hbs?artid=131905

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் எப்பவோ இணக்கம் தெரிவிச்சுட்டார். இன்னும் ஒருக்கா சொல்ல வேணுமோ..????

ஒவ்வொரு அரசுக்கும் இணக்கம் தெரிவிக்கையில் 5 வருடம் போய்விடும் இப்படி காலத்தை இழுத்தடிக்க இழுத்தடிக்க தமிழினம் இல்லாமல் போய்விடும் இதுதான் சிங்களத்தின் திட்டம்................ :?

சரியாக சொன்னிங்க.......

  • தொடங்கியவர்

அமரிக்க ஜனாதிபதி திரு மகிந்தரிட்டை என்ன குசுகுசுத்தவர் எண்டு இப்பதான் பிடிச்சன்.

சரி சரி நான் என்றை பிளேனை (எயார்போஸ்1) அனுப்பிறன் அதிலை பிரபாகரனையும் உம்மையும் கதைக்க வைக்கிறன். இரண்டு பேரும் நடு வானில் தங்கடை தங்கடை விமானத்திலையிருந்து விமானத்திற்கு மாற்றப்பட்டடு அங்கை பேச்சுவார்த்தை நடந்து பிறகு இரண்டு பேரையும் அவன் பிடிச்சு தள்ளிவிடுவான். பரிசூட்டிலை வந்திறங்க வேண்டியதுதான்.

சா நல்ல கனவு என்றை மனிசி குளப்பிப்போட்டா...

பேச்சுவார்த்தைக்கான உறுதிப்பாட்டை தமிழீழத் தேசியத் தலைவர் தந்துள்ளார்: கெஹலிய ரம்புக்வெல

ஒக்ரோபர் மாதத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து, சிறீலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ஷவுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கிறது என்று சட்டஅமுலாக்கல் அமைச்சரும் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நோர்வே பிரதிநிதியுடன் சுப.தமிழ்ச்செல்வன் சந்தித்த பின்னர், கொழும்பில் தன்னைச் சந்தித்த நோர்வே பிரதிநிதி, விடுதலைப் புலிகள் தலைமையின் நேரடி உறுதிமொழி குறித்து விளக்கியதாகவும், ஜனாதிபதியுடன் இதுகுறித்து கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பான இறுதி அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எழுத்தில் வழங்கப்பட்டதா அல்லது வாய்உறுதிமொழியா என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர் அதற்குப் பதில் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவரிடமிருந்து நேரடி உறுதிமொழி தரப்படவேண்டுமென ஜனாதிபதி கூறியிருந்ததை மேற்கோள்காட்டிய ரம்புக்வெல, அதற்கமைய அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படலாம் என்றும் கருத்து வெளியிட்டார்.

மேலே தரப்பட்ட செய்தி புதினம் இணையத்தளத்தில் இருந்து தரப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானப் பேச்சுத் தொடர்பாக புதிய நம்பிக்கை துளிர்ப்பு!

தலைவர் பிரபாகரனிடமிருந்து சாதகமான

சமிக்ஞை வந்திருப்பதாக அரசு அறிவிப்பு

சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைத்திருக்கின்றன என்று பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான பேச்சாள ரும், அமைச்சருமாகிய ஹெகலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்திருக்கிறார். எனினும், அந்தச் சமிக்ஞைகள் என்ன, அவை எந்த வடிவத்தில் புலிகளிட மிருந்து கிடைத்திருக்கின்றன என்பன போன்ற விவரங்களை அவர் வெளி யிடவில்லை.

நீண்டகாலமாகத் தடைப்பட்டுப் போயிருக்கும் சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நோர்வே முயற்சி எடுத்து வருவது தெரிந்ததே.

இந்தப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடமிருந்து உறுதிமொழி தரப்படவேண்டும் என்று அரசுத்தரப்பு நோர்வேயிடம் கேட்டிருந்தது.

தற்போது இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது பற்றி அவர் கூறியதாவது:

எங்களால் முன்வைக்கப்பட்ட விடயங் களுக்குப் பதில் அளிக்கும் முகமாக கடந்த வாரம் கிளிநொச்சிக்குச் சென்ற நோர்வே அனுசரணையாளர்கள், சில சாதகமான பரிந்துரைகளுடன் திரும்பியிருக்கின்றார்கள். இது தொடர்பாக எமக்கு இன்னமும் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அடுத்த சில தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இதுதொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப் பார்.

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் இனியும் அரசு விளையாட விரும்பவில்லை. இதனால்தான் விடுதலைப் புலிகளின் தலைவரிடமிருந்து சாதகமான உறுதியான அர்ப் பணிப்பு தேவைப்படுகிறது.

சமாதானம் என்ற பெயரில் புலிகள் இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு அரசு இனி யும் இடந் தராது.

கேள்வி: பேச்சுக்கான உறுதி மொழி பிர பாகரனிடமிருந்து எந்த வடிவத்தில் கிடைத் துள்ளது?

ரம்புக்வெல: அவர் இதனை ஒரு வித்தி யாசமான வடிவத்தில் கொடுத்து அனுப்பி யிருக்கிறார். அதன் விவரங்கள் பற்றி ஜனாதி பதியுடன் கலந்துபேசிய பிறகே உங்களுக் குத் தெரிவிப்பேன். என்றார் ரம்புக்வெல.

-உதயன்

அமரிக்க ஜனாதிபதி திரு மகிந்தரிட்டை என்ன குசுகுசுத்தவர் எண்டு இப்பதான் பிடிச்சன்.

சரி சரி நான் என்றை பிளேனை (எயார்போஸ்1) அனுப்பிறன் அதிலை பிரபாகரனையும் உம்மையும் கதைக்க வைக்கிறன். இரண்டு பேரும் நடு வானில் தங்கடை தங்கடை விமானத்திலையிருந்து விமானத்திற்கு மாற்றப்பட்டடு அங்கை பேச்சுவார்த்தை நடந்து பிறகு இரண்டு பேரையும் அவன் பிடிச்சு தள்ளிவிடுவான். பரிசூட்டிலை வந்திறங்க வேண்டியதுதான்.

சா நல்ல கனவு என்றை மனிசி குளப்பிப்போட்டா...

:lol:

சரியாக சொன்னிங்க.......

அப்ப இரண்டு பெரும் என்ன செய்யலாம் எண்டுறீங்க... சாறத்தை மடிச்சு கட்டிக்கொண்டு சண்டைக்கு போக வேணுமே.... இப்பிடித்தான் பலதடவை செய்தாச்சுதே...! அப்பிடி இடத்தை பிடிச்சால் எல்லாம் சரியாகீடுமா...???

இடம் பிடிப்பதுக்கும் தனிநாடு அமைப்பதுக்கும் விரம் இருந்தால் போதும்தான்... ஆனால் அங்கை எல்லாம் முன்னேற்றம் கொண்டுவரவும். அதை தக்க வைக்கவும் விவேகம் வேண்டும்...! சரியான பாதையில் போகவும் வேணும்...!

உள்ளூர் வளங்களை எல்லாம் வைத்து மக்களை வாழ வைக்க முடியும். இல்லை எண்று சொல்ல வரவில்லை... ஆனால் சர்வதேச தரத்துக்க்கு முன்னேற முடியாது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.