Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்   + நேசக்கரம்  =  35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி

 

 

அன்பார்ந்த உறவுகளே

 

35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரமாகத்தேவை  என

யாழ்களத்தில்  நேசக்கரத்தின்   பொறுப்பாளர் சாந்திக்கா அவர்களால் கோரப்பட்ட கோரிக்கையை

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் Saspanithi SUPPIAH

மற்றும்    பொருளாளர் Logeswaran KANDASAMY  

ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன்.

 

செயலாளர் சாந்தியக்காவினுடன் பேச்சுக்களை நடாத்தி

அதற்கான பத்திரங்களை  தயார் செய்தபடியிருக்க

பொருளாளர் தனது வீட்டில் இதைப்பார்த்தபடி இருந்தபோது

அதைக்கவனித்த அவரது மகன்  Logeswaran  சந்துரு (பட்டதாரி -  கணக்காளர்)

மக்களுக்கு தண்ணீர் தானே

நானே  செய்கின்றேன் என அதை தனியே  செய்ய  ஒத்துக்கொண்ட விடயம்

இன்று எமது செயலாளரால்

நிர்வாகக்கூட்டத்தில் இத்திட்டம்   அறிமுகப்படுத்தப்பட்டு

உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதும்

உடனடியாகவே அறிவிக்கப்பட்டு

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கு அறியத்தருவதில்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பெருமகிழ்வு அடைகிறது.

ஒரு குளாய்கிணறு அமைக்க – 20000ரூபாய். 
12 கிணறுகளுக்கும் – 240000.00ரூபாய் (அண்ணளவாக 1400€)

 

 

இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு 

உருவாக்கித்தந்த திரு.  Logeswaran  கந்தசாமி

                                திருமதி.  Logeswaran   சசிகலா

தம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..

 

செல்வன் Logeswaran  சந்துருவை

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  வாழ்த்தி நிற்கிறது

வாழ்க வளமுடன்.

 

 

சாந்தியக்காவுடன்  France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் தொடர்பு கொண்டு

பணத்தை அனுப்புவதற்கு தேவையான  ஒழுங்குகளை  கவனிப்பார்.

நன்றி.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142802

Edited by விசுகு

  • Replies 50
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு  உருவாக்கித்தந்த திரு. லோகேஸ்வரன் கந்தசாமி  திருமதி.  லோகேஸ்வரன்  சசிகலாதம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
 
செல்வன் லோகேஸ்வரன்  சந்துருவை யாழ்களத்தினூடாக  வாழ்த்துவதில் நிறைவடைகின்றோம்.
 
எல்லா நலமும் எல்லா வளமும் இனிதே பெற்று இiறையருள் சூடி வாழியவே!
  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும், அவரது பெற்றோருக்கும்.....
இந்த விடயத்தை France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு....

கொண்டு சென்ற... விசுகுவிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.
 

இளைய சமுதாயத்தை நினைக்க, பெருமையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு  உருவாக்கித்தந்த திரு. லோகேஸ்வரன் கந்தசாமி  திருமதி.  லோகேஸ்வரன்  சசிகலாதம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
 
செல்வன் லோகேஸ்வரன்  சந்துருவை யாழ்களத்தினூடாக  வாழ்த்துவதில் நிறைவடைகின்றோம்.
 
எல்லா நலமும் எல்லா வளமும் இனிதே பெற்று இiறையருள் சூடி வாழியவே!

 

 

 

நன்றி நொச்சி

 

நேற்று நேரம் இல்லாதபோதும்

உடனடியாக இந்த செய்தியை  இங்கு அறிவிக்கணும் என்பதற்காகவே ஓடிவந்து எழுதினேன்

அத்துடன் திட்டத்தை நிறைவேறிய  செய்தியை  சாந்தியக்காவுக்கும் உடனே  அறிவித்தேன்

 

உண்மையில் அடுத்ததலைமுறையிடம் நாம் எமது கவலைகளை

சுமைகளை  சரியாக கொண்டு சென்றோமா?

சென்றால் நிச்சயம் தாயகம் செழிக்கும் என்பதற்கு இந்த இளைஞன் ஒரு எடுத்துக்காட்டு.......

 

நன்றி  உங்களது வாழ்த்துக்கும்

பாராட்டுக்கும்  நேரத்துக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும், அவரது பெற்றோருக்கும்.....

இந்த விடயத்தை France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு....

கொண்டு சென்ற... விசுகுவிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.

 

இளைய சமுதாயத்தை நினைக்க, பெருமையாக உள்ளது.

 

 

நன்றி  சிறி

 

அண்மையில்  யெனீவா வந்திருந்த  தாயக அரசியல் பிரமுகரை  சந்தித்த

எமது உறுப்பினர் என்ன  எதிர்பார்க்கின்றீர்கள்  எம்மிடமிருந்து எனக்கேட்டதற்கு

அவர் சொன்னது

என்ன என்று இல்லை

எவ்வளவு என்று இல்லை

எதுவாகிலும் செய்யுங்கோ

எவ்வளவாகினும் செய்யுங்கோ

தயவு செய்து சும்மா  மட்டும்  இருந்துவிடாதீர்கள்

தாயக  மக்களது நிலை அந்தளவுக்கு பரிதாபகரமானது

ஆபத்தானது

அழிவுப்பாதையிலுள்ளது என்றாராம்.......

 

அந்தவகையில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தன்னால்  முடிந்ததை நிச்சயம் செய்து

ஒரு முன்னுதாரணமாக நிற்கும்.......

 

நன்றி  நண்பரே

வாழ்த்துக்கும்  பாராட்டுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 

 சாந்தியக்காவுக்கு   France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள

இணையக்கடிதம்

 

 

வணக்கம்,

தங்கள் தகவல்களுக்க நன்றி. நேற்றய எமது ஒன்றிய ஒன்றுகூடலில் மேற்படி 35குடும்பங்களுக்கான நீாத்தேவைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு எமது இளையதலைமுறையினைச்சேர்ந்த அன்பர் எங்கள் ஒன்றியத்தினூடு செய்வதற்கு முன்வந்தள்ளாா் என்பதினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்கான முதற்கட்ட கொடுப்பனவை 1000€வினையும் மீதியினை தங்களின் திட்டமுன்னேற்ரத்தினை அடிப்படையாகக் கொண்டு அதாவது தங்களால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்படும் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நாங்கள் இவ்வுதவியினை அனுப்புவதற்கான குறிப்புக்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.


 nesakkaram <nesakkaram@googlemail.com>:
  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினருக்கு வணக்கம், எம்மால் தங்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட செய்திக்கு தாங்கள் வழங்கிய ஆதரவுக்கு முதலில் எமது நன்றிகள். ஏற்கனவே தேசத்திற்கான தங்களது பணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழவு போன்ற நடவடிககைகளில் தாங்கள் ஆற்றிவரும் பணிகளின் வரிசையில் நேசக்கரம் முன்னெடுக்கும் பணிகளுக்கு உதவ முன்வந்தமையையிட்டு நாம் மகிழ்கிறோம்.

 

எம்மால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முழுமையான நிதியுதவியும் ஆதவும் தர முன்வந்து தங்கள் அமைப்பின் பொருளாளா திரு லோகேஸ்ரன் அவர்களின் புதல்வர் சந்துரு அவர்வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது நன்றிகள்.

 

தங்கள் வேண்டுதலுக்கு அமைய எம்மால் சேகரிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் நீங்கள் உதவி செய்ய வேண்டிய வங்கி விபரங்கள் யாவும் முதலாவது உரையாடலின் பின்னர் என்னால் எழுதப்பட்ட முதலாவது மடலிலும் இரண்டாவது மடலிலும் குறிப்பிட்டிருந்தேன். என்னால் வழங்கப்பட்ட வங்கிவிபரத்துக்கு தங்கள் உதவியை அனுப்பி வையுங்கள். தங்கள் உதவி கிடைத்ததும் முதல்கட்ட வேலைகளை ஆரம்பிப்போம். உடனுக்குடன் ஏற்கனவே எம்மால் கூறப்பட்டபடி வேலைகள் பற்றிய விபரங்கள் தகவல்கள் தங்களுக்கு அறியத்தரப்படும். அத்தோடு தங்கள் எதிர்பார்ப்புகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

(விசுகு அவர்கள் கவனத்துக்கு:- ஏற்கனவே திண்ணை உரையாடலில் போது நான் குறிப்பிட்டபடி 30திகதிதான் யேர்மனி திரும்புவேன். அதன் பின்னர் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். நீங்கள் போடும் மின்னஞ்சல் மற்றும் இங்கு பகிரப்படும் தகவல்களை பார்ப்பேன். ஆனால் பதில் தான் கொஞ்சம் தாமதமாகும் குறைவிளங்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள்.கடந்த இரண்டு நாட்களும் பதில் எழுதக்கூடிய நிலமை இல்லாதிருந்தது. இணையப்பக்கம் வரமுடியாது போனால் உங்கள் தகவலை தொலைபேசியில் அறியத்தருமாறு பகலவனுக்கு தெரிவித்திருந்தேன். உங்கள் செய்தியை பார்த்ததும் தொலைபேசியில் தம்பி பகலவன் அறியத்தருந்திருந்தர். உங்கள் ஆதரவுக்கும் பணிகளுக்கும் எங்கள் சிறப்பான நன்றிகள்.இரவுக்கு உங்கள் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்)

 

நன்றி அன்புடன் சாந்தி

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும் அவரது பெற்றோருக்கும்
 நன்றிகளும் பாராட்டுக்களும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(விசுகு அவர்கள் கவனத்துக்கு:- ஏற்கனவே திண்ணை உரையாடலில் போது நான் குறிப்பிட்டபடி 30திகதிதான் யேர்மனி திரும்புவேன். அதன் பின்னர் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். நீங்கள் போடும் மின்னஞ்சல் மற்றும் இங்கு பகிரப்படும் தகவல்களை பார்ப்பேன். ஆனால் பதில் தான் கொஞ்சம் தாமதமாகும் குறைவிளங்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள்.கடந்த இரண்டு நாட்களும் பதில் எழுதக்கூடிய நிலமை இல்லாதிருந்தது. இணையப்பக்கம் வரமுடியாது போனால் உங்கள் தகவலை தொலைபேசியில் அறியத்தருமாறு பகலவனுக்கு தெரிவித்திருந்தேன். உங்கள் செய்தியை பார்த்ததும் தொலைபேசியில் தம்பி பகலவன் அறியத்தருந்திருந்தர். உங்கள் ஆதரவுக்கும் பணிகளுக்கும் எங்கள் சிறப்பான நன்றிகள்.இரவுக்கு உங்கள் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்) நன்றி அன்புடன் சாந்தி

 

 

வணக்கம்  சாந்தியக்கா

 

செயலாளருக்கு சொல்லியுள்ளேன் நீங்கள் மாதம் முடியத்தான் வருவீர்கள் என்று.

அதனால்தான் ஈமெயில் அவரும்

நானும் தங்களுக்கு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறியத்தந்தோம்

மேலும்

யாழ்  இணையத்தில் தொடக்கப்பட்ட இத்திரியையும் தங்களுக்கு அறியத்தந்திருந்தேன்

 

அத்துடன் இந்த திரி சம்பந்தமாகவும்

இதைப்பார்வையிடுமாறும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றிய  நிர்வாகிகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்

இதன் மூலம் மேலும் இரு பகுதிக்குமான

தொடர்புகளும் பரிச்சயமும் நம்பிக்கைகளும் விரிவாகி

தாயக மக்களின் வாழ்வுயர

ஏதாவது செய்யவேண்டும் என விளையும் இருசாராரும் 

தொடர் உதவிகளுக்கு வித்திடவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்...

 

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  உறவுகளே

நேற்று சாந்தியக்காவால்  நேரக்கரத்தின்  இலங்கை  வங்கிக்கணக்கு எமது செயலாளருக்கு ஈமெயில் மூலம் தரப்பட்டது

சாந்தியக்காவின் ஈமெயில் கடிதம்..

 

I am not at home at the Moment. Send your help to this account number. I will call you on sunday. Thanks for your help. God bless you.

Shanthy, Nesakkaram organizer...

 

நேற்றே  எமது செயலாளரால்

பணத்தை அனுப்புமாறு 

அதனை வழங்க முன் வந்த சந்துருவுக்கு

நேரக்கரத்தின்  இலங்கை  வங்கிக்கணக்கு எமது செயலாளரால் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு

முதலில் 1000 ஈரோக்களை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் வேலைகளின் முன் மாதிரிகள் கிடைத்ததும்

திட்டம் நிறைவேற மிகுதி  400 ஈரோக்களும் அனுப்பப்படும்.

அதற்காக எமது செயலாளரால் அனுப்பப்பட்ட  ஈமெயில் கடிதம்.

 

வணக்கம் யோகேஸ்,

இத்துடன் வரும் bank of ceylon accountக்கு தண்ணீத்தேவைக்கான நிதியினை அனுப்பலாம்.

முதலில் 1000€ பின்னர் கேட்கும் போது 400€.

நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களுடன் சற்று முன்னர் தொலைபேசியில் உரையாடினேன். அவரால் கேட்கப்பட்ட விபரங்களை மின்னஞ்சல் மூலம் தருமாறு வேண்டியிருந்தார். அவர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய விபரம் அனுப்பியுள்ளேன். பண உதவி அடுத்தவரும் சிலநாட்களில் விசுகு அவர்களால் அனுப்பப்படும். உதவி கிடைத்ததும் அறியத்தருவேன். பணிகள் நடைபெறத் தொடங்க அனைத்து விவரங்களும் இங்கே பகிரப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் 
31.08.2014
 
அன்புடையீர் ,
 
தங்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பானது எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படும் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ஆதரவு தர முன்வந்தமைக்கு நன்றிகள். 
மரண நிகழ்வொன்றுக்கு லண்டன் போயிருந்தமையால் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது போய்விட்டது.
இன்று குகனண்ணாவுடன் கதைத்த போது பணம் அனுப்புவதற்கான தனிநபர் விபரம் கேட்டிருந்தார். எங்களுடைய பணியாளர் ஆனந்தபுரம் திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ...................... அவர்களது விபரத்தை அனுப்புகிறேன்.
 
name :-.........................................
          .........................................
 
 
மேலதிகமாக ஏதேனும் விபரங்கள் தேவைப்படின் அறியத்தாருங்கள்.
 
நன்றி
 
சாந்தி நேசக்கரம் அமைப்பாளர்.
 
 
(தற்பொழுது  சாந்தியக்காவிடமிருந்து கிடைத்த கடிதம்)
 
நன்றி  சாந்தியக்கா
நாளை  பணம்(1000) ஈரோக்கள் அனுப்பி வைக்கப்படும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா...

 

ஒரு  ஈரோ  170 ரூபா 35 சதம் போகின்றது....

என்ன  செய்ய???..

 

அறியத்தரவும்...

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்,
இதில் என்ன சொல்வதென புரியவில்லை. உங்கள் முடிவுதான் எனது முடிவும். நாணயமாற்று வீதம் நாளுக்கு நாள் மாறுபடும். சிலவேளை இன்றைய பெறுமதியைவிடவும் குறையும் கூடும் சற்று பொறுத்து அனுப்ப நீங்கள் விரும்பின் அதன்படி செய்யுங்கள். கால தாமதம் அவசர தேவையை நிறைவேற்றுவதில் சிரமங்களைத் தந்துவிடுமென்ற அச்சம். 
 
மழைகாலம் ஆரம்பிக்கு முதல் வேலைகள் முடிக்கப்பட வேண்டும். காரணம்  மழைகாலம் வந்தால் அந்த மக்களது தண்ணீர் தேவைக்கு சிரமமாக இருக்கும். இதுதவிர அவர்களுக்கான அடுத்த கட்டம் மலசலகூடம் அமைக்கும் பணிக்கான வேலைகளையும் மேற்கொள்கிறோம். 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம்,
இதில் என்ன சொல்வதென புரியவில்லை. உங்கள் முடிவுதான் எனது முடிவும். நாணயமாற்று வீதம் நாளுக்கு நாள் மாறுபடும். சிலவேளை இன்றைய பெறுமதியைவிடவும் குறையும் கூடும் சற்று பொறுத்து அனுப்ப நீங்கள் விரும்பின் அதன்படி செய்யுங்கள். கால தாமதம் அவசர தேவையை நிறைவேற்றுவதில் சிரமங்களைத் தந்துவிடுமென்ற அச்சம். 
 
மழைகாலம் ஆரம்பிக்கு முதல் வேலைகள் முடிக்கப்பட வேண்டும். காரணம்  மழைகாலம் வந்தால் அந்த மக்களது தண்ணீர் தேவைக்கு சிரமமாக இருக்கும். இதுதவிர அவர்களுக்கான அடுத்த கட்டம் மலசலகூடம் அமைக்கும் பணிக்கான வேலைகளையும் மேற்கொள்கிறோம். 

 

 

 

நாளை  இரவு வரை பார்க்கின்றேன்

இதற்கு  மேல் தாமதப்படுத்துவது சரியல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்.
04.09.2014
 
எம்மால் ஒழுங்குபடுத்தப்பட்ட பணியாளர்கள் இன்று குளாய்கிணறு அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார்கள். 
 
மழை பெருத்தால் சகதியில் பணியை தொடர முடியாதென இத்திட்டத்தின் நிர்வாக குழுவினர்  தந்த அறிக்கையின் பிரகாரம் நேற்றைய எமது கலந்துரையாடலின் படி இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினரின் ஆதரவில் கிணறுகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 
 
அடுத்த ஒருவாரத்தில் தேவையான பொருட்களுக்கான பணம் செலுத்தப்படும் என திட்ட இணைப்பாளரின் சிபாரிசின் பெயரில் பொருட்களின் பாதி கடன் அடிப்படையில் பெறப்பட்டு ஆரம்பமாகியுள்ளது.
 
நன்றி
 
சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
 
(புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தலைவர் , செயலாளர் இருவருக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்தியின் பிரதி)

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா...

ஈ மெயில் கிடைத்தது

 

இன்று

ஒரு  ஈரோ  168 ரூபா 00 போகின்றது....

நீங்கள் வேலையை  தொடருங்கள்

 

 

அவசரமாயின் தரவும்...

சனி  ஞாயிறு  பொறுத்துப்பார்ப்போம்

அல்லது திங்கள் கடைசி  நாள்..

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

4ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் இருவருக்கும் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,

தங்கள் அமைப்பின் இலச்சினை மற்றும் கிணறுகளில் பொருத்தப்பட வேண்டிய தங்கள் ஒன்றிய விவரத்தை அனுப்பி வையுங்கள். இலச்சினை பொருத்துவதற்கான செலவு அச்சடித்த பின்னர் அறியத்தருகிறேன்.

நன்றி

சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
-------------------------------------------------------
 

 

7ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் அனுப்பி வைத்த கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,
நாங்கள் வரும் வாரத்தில் எமது உதவியினை அனுப்பி வைக்கின்றோம். அத்துடன் எங்கள் ஒன்றியத்தின் இலட்சனையும் இத்துடன் இனைத்துள்ளேன்.

"கரம் கொடுத்தவர்கள்" 
      இலட்சனை

பதில் அளிப்பது தாமதமாகியதற்கு மன்னிக்கவும்.
நன்றி.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

9ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் இருவருக்கும் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,

 
நீங்கள் அனுப்பிய தங்கள் அமைப்பின் இலச்சினை கிடைத்தது. நன்றிகள். கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது. அவற்றின் சில படங்களை இணைக்கிறேன். கிணற்றுக்கான சுற்று இன்னும் கட்டப்படவில்லை. அனைத்து கிணறுகளும் அமைத்த பின்னரேயே சுற்று அமைக்கப்படும். 
 
கிணறு அமைக்கும் ஒப்பதந்ததாரர்கள் முற்பணம் கட்டுமாறு வேண்டிக் கொண்டார்கள். உடனடியாக செலுத்துவதற்கு எம்மிடம் பணமிருக்கவில்லை. மற்றும் தேவையான பொருட்களில் அரைவாசி கடன் அடிப்படையில் பெற்றுக் கொண்டோம். 
 
எமது இக்கட்டு நிலமையை புரிந்து கொண்ட எமது திட்டங்களில் ஆதரவு வழங்கும் கனடிய நண்பர்கள் றவி , சுரேஷ் ஆகியோர் ஊனமுற்றோருக்கான தொழில் முயற்சிக்கு உதவிய பணத்திலிருந்து அவசர தேவைக்கு பயன்படுத்துமாறு கூறியிருந்தார்கள். 
 
உங்கள் உதவி கிடைத்த பின்னர் நண்பர்கள் றவி  ,சுரேஷ் இருவரினாலும் வழங்கப்பட்ட உதவியானது ஊனமுற்றோர் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தப்படும். 
 
இலச்சினையோடு வேறு ஏதாவது சுலோக வாக்கியம் பதிக்க வேண்டுமா ? அல்லது இலச்சினை மட்டும் போதுமா என்பதனையும் அறியத்தாருங்கள்.
 
நன்றி
 
சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
 
tubewell1_zps643ab227.jpg

 

tubewell2_zps2db53136.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்மாற்றம் மிகவும்  குறைவடைந்துள்ளது

 

ஆனாலும் இனியும் பொறுக்கமுடியாது..

பணம் அனுப்பிவிட்டு

அறியத்தருகின்றேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பண்மாற்றம் மிகவும்  குறைவடைந்துள்ளது

 

ஆனாலும் இனியும் பொறுக்கமுடியாது..

பணம் அனுப்பிவிட்டு

அறியத்தருகின்றேன்

நன்றி

மேலும் சில படங்கள் இன்று வந்துள்ளது அவற்றையும் மின்னஞ்சல் செய்கிறேன் பாருங்கள். நாணயப்பெறுமதி வரவர குறைகிறது.உங்கள் வாய்ப்பை பார்த்து செய்யுங்கள். பிரச்சனையில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள் இன்று வந்துள்ளது அவற்றையும் மின்னஞ்சல் செய்கிறேன் பாருங்கள். நாணயப்பெறுமதி வரவர குறைகிறது.உங்கள் வாய்ப்பை பார்த்து செய்யுங்கள். பிரச்சனையில்லை.

 

நேற்று மேலும் குறைவடைந்து 167,50 போனது

இன்று 168,30  போகிறது

 

உங்களது  ஈமெயிலை  ஒருமுறை  பாருங்கள்

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மேலும் குறைவடைந்து 167,50 போனது

இன்று 168,30  போகிறது

 

உங்களது  ஈமெயிலை  ஒருமுறை  பாருங்கள்

நன்றி.

மடல் கிடைத்தது. உரியவர் ஊரில் இல்லை வேறொரு இடத்தில் நிற்பதால் பதில் கிடைத்ததும் அறியத்தருகிறேன். நாளை பெரும்பாலும் பதில் வருமென நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.