Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை.

அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்தனர். முடிவில், மியான்மரிலிருந்து இந்தோனேசியா வரையிலுள்ள இந்திய பெருங்கடல் எல்லை தட்டுக்களிலேயே அதிக அளவிலான சுனாமி பேரலைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் இடைவெளிகள் வரை இந்திய பெருங்கடல் பகுதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தட்டுக்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அழுத்தம் ஏற்பட்டு வருவதால், சுமத்ராவில் ஏற்பட்டதை போல 9.2 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், 2004ல் ஏற்பட்ட சுனாமி பேரலைகளும் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறினர்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=32310

மியன்மார் கடல் பகுதியில் 2004 இல் ஏற்பட்டதுபோன்ற நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி ஒன்று உருவாகுமானால் அது யாழ் குடாநாட்டின்  பெரும் பகுதிகளை மூழ்கடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே.... தமிழர் வாழ்ந்த பெரும் நிலப்பகுதியான, குமரிகண்டம், பூம்புகார் போன்றவை கடலில் மூழ்கியது.
2006´ல் ஏற்பட்ட சுனாமியிலும்.... தமிழகமும், ஈழமும் தான் பெரிதும் பதிக்கப் பட்டது.
இப்போ... இவர்கள் எச்சரிக்கும், இலங்கையின் தென்கிழக்கு பகுதியும்... தமிழர் பிரதேசம்.
உலகிலேயே.... கடவுளாலும்,  இயற்கையாலும் சபிக்கப் பட்டவன் தமிழன் போலுள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் மதுரை என்கிற ஊரை தெற்கில் இருந்து வடக்காக பலமுறை நகர்த்தி இப்போதுள்ள இடத்தில் வைத்திருக்கிறான். இடையில் வந்த சிங்களவன் இலங்கைக்கு சொந்தம் கொண்டாடுறான். விதி யாரை விட்டது.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.