Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்த்தீபன் கனவு - தியாகி திலீபன் நினைவுக்கவிதை ( இசைவடிவத்துடன்)

Featured Replies

 

நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ
கருகிப்போனதோர்...  உன்னத தியாகம்!
பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு...
அன்று,  பாரதம் செய்ததோர்   மகா பாதகம்!!

ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும்  வேலவன் கூட
அவன்  கண்மூடும்வரை...   கண்திறக்கவில்லை !
நல்லூர்க் கந்தனும்    கருணையற்றவனானான் !!
இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி
தியாக தீபமொன்றை  அணைத்தது  விதி
சிந்திய கண்ணீரில்  மூழ்கியதே நல்லூரான் வீதி

அகிம்சையே அறமென்ற இந்திய தேசம்...
ஈழத்தில் செய்த முதல் நாசம் !
பார்த்தீபனின் பட்டினிப்போரால்...
வெளுத்துப்போனது... பாரதத்தின்   அகிம்சை வேஷம்!

'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி...
பார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும்,
கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று !
வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதவன் தியாகம் !!

தியாக சீலன்  திலீபன்
ஈழத்தாய் எல்லோருக்கும் பிள்ளையானவன் ;
இளையவர் அனைவருக்கும்  அண்ணனானவன் ;
மகா யாகத்தின் புனிதம் வென்றவன் ;
தியாகத்தின்  சிகரம் தொட்டவன் ;
ஈழமண்ணுக்கு இலட்சியத் திலகமிட்டவன்!

அவன்  வயிற்றில் பற்றிய தீதான்,
இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...!
அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,
இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!!
இது  அன்று  அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்...!!!

திலீபனின் தியாகம் ஜெயிக்கட்டும்...!
பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்... !!
இதுதான்.... நம் மனதில் என்றும்,
அழியாமல் விதைக்க வேண்டிய இலட்சிய வார்த்தைகள்...!!!

தியாகச் செம்மல் திலீபனின்
பசியையும் தாகத்தையும் எமதாக்குவோம்!
பேருலகே எதிர்த்தாலும் ....
பார்த்திபன் கனவு  ஒருநாள் பலிக்கும்! - அவனது
உன்னத தியாகம் நிச்சயம் ஜெயிக்கும்!!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

"அவன்  வயிற்றில் பற்றிய தீதான்,
இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...!
அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,
இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!!
இது  அன்று  அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்...!!!
"

தியாகச் செம்மல் திலீபனின்

பசியையும் தாகத்தையும் எமதாக்குவோம்!

பேருலகே எதிர்த்தாலும் ....

பார்த்திபன் கனவு ஒருநாள் பலிக்கும்! - அவனது

உன்னத தியாகம் நிச்சயம் ஜெயிக்கும்!!

அதுவே தியாக தீபத்திற்கு நாம் செய்து முடிக்க வேண்டிய வரலாற்றுக் கடன்...

  • தொடங்கியவர்

கருத்துரைத்து தங்கள் விருப்பங்களையும் தெரிவித்த உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். :)

 

ஒரு     (காதல்+ஊர்வம்பு+ இன்னோரன்ன...)   'சாதாரண' கவிதைக்கு கிடைக்கும் வரவேற்பு கூட  திலீபனின் நினைவு சுமந்துவரும் இந்த  கவிதைக்கு கிடைக்காது எனத் தெரிந்திருந்தும் இதை எழுதவேண்டும் என்று தூண்டியதே... என் ஐந்து வயதில் எனக்கு 'தியாகம்' என்றால் என்னவென்று உணர்த்திய தியாகி திலீபனின் நினைவுகளே..! எதையும் எதிர்பார்க்காத அந்த தியாகத்துக்கு முன்னால்... நாமெல்லாம் வெறும் கேள்விக் குறிகளாகிறோம்!!!

தியாகங்கள் எல்லாம் வெறும் வேடிக்கையாகிப் போய்விட்டது....! நடந்து முடிந்தவை.... முடிந்தவையாகவே மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.... ! அதை வேறுயாரும் செய்யவில்லை........ நாமே நமக்குள் செய்துகொண்டிருக்கிறோம்! சுயமாகவே எம் அடையாளங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்!

அடுத்த தலைமுறைக்கு 'திலீபன்' என்றால் யாரென்று தெரியாமல்கூட போகலாம்! :(

வாழ்க வளர்க..... நம் ஈழ(ன)த் தமிழினம்!

 

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பெண்களின் கைகளிலே வளர்ந்த மகன் பார்த்திருக்க இங்கொரு பார்த்திபன் வளர்த்தான் யாகம் அதைப் பார்த்திருந்தோர் கண்ணில் நீர்த்திவலை பொங்கிப் பாய்ந்தது அன்று நல்லூதில் நேத்திரங்கள் இரண்டும் பூத்திருக்க பசி மாத்திரம்தான் மறந்தான் தியாக தீபம் பாத்திரத்தில் உணவிருந்தும் நீர்ப் பாத்திரத்தை மறந்தான் தமிழ் மைந்தன் நாத்து மேடையிலே நட்ட விதை கருக கூத்துப் பார்த்து நின்றார் கொடும் கோலர் பூத்த விழிகளிலே விடியலின் கனவுடன் மனம் வேர்த்து விதையானான் விடியலின் சிற்பி அத்திவாரமாய் அடிவாரத்தில் உன்னை வைத்து பல அத்தியாயங்கள் எழுதி விட்டாய் வரலாற்றில்; சித்திரமாய் நீ சிரித்திடும் வேளையிலும் வீர முத்திரை பதித்து விட்டாய் வரலாற்றில் வித்தாக நீர் விழுந்திடினும் பெரு விருட்சமாய் எழுந்திடுவீர் ஈழ மண்ணில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.