Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி- பெங்களூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.

குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/verdict-expected-today-on-jayalalithaa-s-assets-case-211768.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி- முதல்வர் பதவியை இழக்கிறார்

தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் உடனடியாக இழக்கிறார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். -

ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல் -உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்

விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்

 

சசிகலா, இளவரசி, சுதாகரனும் குற்றவாளிகள் என்று அறிவிப்பு -ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தது பெங்களூர் போலீஸ் -ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு -தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் நவநீத கிருஷ்ணன், ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபடுகிறது -ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ.பதவியும் பறிபோகிறது -தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்? விசாலாட்சி நெடுஞ்செழியன்? செந்தில் பாலாஜி?

Edited by Nathamuni

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991--ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.  
இந்த வழக்கு விசாரணை பெங்களூரில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடமாற்றம் செய்யுமாறு

கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழக்கு ஆவணங்களை மாற்றம் செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் வசதியாக காலஅவகாசம் தேவைப்பட்டதால் வழக்கின் தீர்ப்பை 27ந் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதன் படி இந்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். காலை 11 மணி அளவில் தீர்ப்பை நீதிபதி டி குன்ஹா வாசித்தார். தீர்ப்பு பிற்பகல் வெளியானது: அதில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.http://www.pathivu.com/news/34152/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாசு பொருத்தும் கொண்டாட வேண்டாம்-கருணாநிதி

்பட்டாசைக் கொழுத்தி நான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்காதேங்கடா!!!முகநூல் பதிவு!!!! இது எப்படி இருக்கு?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய தமிழ் நாட்டை தொலைக்காட்சிகள் வழியே பாா்க்கும் போது...

ஆக இன்னும் திருந்தவில்லையா இவங்க...

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரில் ஜெயாவை கிண்டலடித்த சுவாமி?? ஜெயாவுக்கு JJ

 
 
 
வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 
 
இந் நிலையில் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் Jail for Jeyalaitha - JJ என பதிவினை மேற்கொண்டிருந்தார். மேலும் டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலஜதா தொடர்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தமையால் இது தொடர்பான பதிவுகள் டுவிட்டர் பக்கத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

tweet.jpg
 

http://www.dailyjaffna.com/2014/09/jj.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.