Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீறுகிறார் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குநர் சீமான்

பாடுபட்டு, பள்ளம் பறித்து, சாரம் கட்டி, கோபுரம் அமைத்து, கோவிலைக் கட்டிவிட்டு, உள்ளே சிலையையும் செய்து வைத்து, அதைத் தொடமுடியாம இன்னொருத்தனை உள்ளே வைத்து விட்டு, அவன் ஒன்றுமே புரியாத மொழியிலே ஏதோ மந்திரத்தைச் சொல்லிவிட்டு, நீங்களெல்லாம் உள்ளே வந்தால் தீட்டுடா வெளியே போங்கடா என்று விரட்டிவிட்ட போதே கோபப்படாத தமிழன், செஞ்சோலையில் பலியான பிஞ்சுகளுக்கா கோபப்படப்போகிறான்?

அகதிகளாக வந்தவர்களுக்கு, இங்குள்ள பிச்சைக்காரர்களும் நடைபாதை வாசிகளும் பொறாமைப்படும் அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று எழுதுகிற தினமலரை வாங்கிப் படிக்கிற தமிழன், எப்படி ஒன்று திரளப் போகிறான்? அவனை எப்படி ஒன்று திரட்டுவது?

காலம் காலமாக நம்மை இழிவு படுத்துபவர்கள் மீது, கொச்சைப் படுத்துகிறவர்கள் மீது அவனுக்கு ரோஷமும் வரமாட்டேங்குதே! கோபம் வரமாட்டேங்குதே! உள்ளே விடமாட்டேன் என்கிற கோவிலுக்குத்தான் காவடியும் தீச்சட்டியும் தூக்கிக் கொண்டு செல்கிறான். மானம், ரோஷம் மறந்தவன் எப்படி இந்தக் கூட்டத்துக்கு வருவான்? எல்லாம் அச்ச உணர்வு. திருடிவிட்டு, கொலை பண்ணி விட்டு, கற்பழித்துவிட்டுச் சிறைக்குப் போகிறவனை விட இனவிடுதலைக்காகப் போராடுகிறவன் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டான்?

ஒருவன் நம் கண்முன்னே ரத்தம் சிந்தி, கீழே விழுவதைப் பார்த்துவிட்டு எப்படி நிம்மதியாக உறங்க முடியும்? என் படம் வந்து 6 மாதமாகிறது. அடுத்த படத்துக்குச் சம்பளம் வாங்கிவிட்டு வேலை பார்க்காமல் இந்த மாதிரி கூட்டத்துக்கு ஏன் போறேன்னு பல பேர் கேட்கிறான். எனக்கு என் வருமானத்தைவிட இனமானம் பெரிது. சீமானுக்குச் சினிமா என்பது தொழில். நிஜத்தில் அவன் யார்? பெரியாரின் பேரன்.

என் மூதாதையர்கள் வாதாபி வென்றான், கடாரம் கொண்டான், என் பாட்டி கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கல் எடுத்து வந்து கோயில் கட்டினான். கோட்டை கட்டி வாழ்ந்தான் என் பாட்டன், முப்பாட்டன். அந்த இனம் இன்று கோடித் துணியைக் கட்டிக் கொண்டு சுருண்டு படுத்துக் கிடக்கிறதே. என் இனம் ராமேஸ்வரத்துக்கே அகதியாய் வருகிறதே? இது என் இனத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிற கொடுமை. எங்கள் அண்ணன் காசி ஆனந்தன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

வண்டி இழுத்து

கொம்புகளை மறந்தன

மாடுகள்.

இன்றைய தமிழனுக்கு என்ன தெரியும்? ஒரு திரைப்படம் வெளியானால் அங்கே கட்அவுட் வைத்து, குடம் குடமா பாலை ஊற்றத் தெரியும். சில்லறையாகக் காசை மாற்றி வைத்துக் கொண்டு திரைக்கு முன்னால் வீசி விசிலடிக்கத் தெரியும். தண்ணியைப் போட்டுவிட்டு ஆடத் தெரியும். சண்டை போட்டுக் கொண்டு கத்தியை எடுத்து குத்திக் கொண்டு சாகத் தெரியும்.

திரைப்படத்தில், தாயைக் கெடுத்துக் கொன்றவனை, தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவனை, தன் அண்ணன் தம்பியை வெட்டிக் கொன்றவனை உச்சகட்ட காட்சியில் பழி வாங்கி முடிக்கிற கதாநாயகனை ஹீரோ, அவதார புருஷன் என்று கொண்டாடுகிற என் தமிழினம், இதை நிஜத்தில் இலங்கையில் செய்யும் போது அதைத் தீவிரவாதம் என்கிறது. சினிமாவில் நடிப்பவனுக்கு இந்தத் தேசம் விருது கொடுக்கிறது. ஆனால் நிஜத்தில் என் உறவுகள் கொல்லப்படும்போது நாங்கள் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?

இங்குள்ள ஆறரைக் கோடித் தமிழர்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் சிங்களக் காவல் துறைக்கு இந்தியா பயிற்சி கொடுக்கிறது. சிங்களனுக்குப் பயிற்சி அளிக்கிறீர்களே..... பம்பாயில் குண்டு வைத்தவனைப் பிடித்தீர்களா? பெங்களூர் விஞ்ஞானிகள் மாநாட்டில் குண்டு வைத்தவர்களைப் பிடித்தீர்களா? உங்களிடம் பயிற்சி பெற்று அவன் என்ன செய்யப் போகிறான்?

இதையெல்லாம் நாங்கள் இந்திய இறையாண்மைக்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் இந்திய இராணுவத்தில் அதிகம் இருப்பவன் தமிழன்தான். கார்கில் போரில் அதிகமாகச் செத்தவனும் தமிழன்தான். கார்கிலுக்காக அதிகமாக நிதி வசூலித்துக் கொடுத்தவனும் தமிழன்தான். பிணமானவனும் தமிழன். பணம் தந்தவனும் தமிழன்.

போர்க்களத்தில் பெண்கள் மீது, சிறுவர் சிறுமிகள் மீது, பள்ளிக்கூடம் மீது, மருத்துவமனை மீது குண்டு வீசக் கூடாது என்ற தார்மீகம் உள்ளது. அந்தத் தார்மீகத்தையே மீறி குழந்தைகளைக் கொன்ற இலங்கை ராணுவத்தை இந்தியா கண்டிக்கவில்லையே? இந்த நாட்டில் வாழ்கிற ஒரு தேசிய இன மக்களை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற செயல் இது.

இந்திராகாந்தி அம்மையார் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள சீக்கியர்களையெல்லாம் நாடு கடத்தியதா இந்திய அரசு? பாதுகாப்பு பணியில், ராணுவத்தில் ஒரு சீக்கியரை சேர்க்க மாட்டோம் என முடிவு செய்ததா இந்தியா? அந்த இனத்தின் மீது பொருளாதாரத் தடை விதித்ததா? சில காலம் கழிந்த நிலையில், அதே சீக்கிய இனத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங்கை இந்நாட்டின் பிரதமராக அமர்த்தியிருக்கிறார் சோனியா காந்தி அம்மையார். ஆனால், நமது இனம் ஒரு பொதுவான பிரச்சினைக்கு ஒன்று திரள முடியாமல் உள்ளது.

தமிழீழத்தை ஆதரிக்காமல் இங்கே, எந்த அரசியல் கட்சியாலும் ஒரு வாக்கு கூட வாங்கமுடியாது என்ற நிலைமையை நாம் உருவாக்க வேண்டும். அதுதான் செய்ய வேண்டிய பணி. இதய நோய்க்கு அறுவை சிகிச்சை என்பது வன்முறையா? அது மருத்துவம். அங்கே செய்து கொண்டிருப்பது மருத்துவம்.

எத்தனை காலமாக அங்கே ஆயுதம் தாங்கிப் போராடுகிறார்கள் போராளிகள். சிங்கள அப்பாவி மக்களை அவர்கள் கொன்றதாக ஒரு செய்தி சொல்லுங்கள். சிங்களப் பெண்ணின் தாவணியைத் தமிழன் தொட்டான் என்ற செய்தியைப் படித்திருப்பீர்களா? ஆனாலும் இந்த உலகத்தாரின் பார்வைக்கு இவர்கள் வன்முறையாளர்கள், தீவிரவாதிகள்.

எல்லா இன விடுதலையையும் ஆதரிக்கிற நீங்கள், எங்கள் இன விடுதலையை மட்டும் ஏன் ஆதரிக்க மறுக்கிறீர்கள்? தமிழன் நாடு அடையக் கூடாது என்பதால்தானே! எல்லாருக்கும் தனி நாடு கிடைத்துவிட்டால் நாம் எங்கே போவது என்று இங்குள்ள பார்ப்பன சக்தி திட்டமிட்டதால்தான் இந்த நிலை. இப்படி இருந்தும், சிங்கள அரசு, தமிழர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறது தெரியுமா? இலங்கை அதிபர் ராஜபக்சே ஒவ்வொரு நாட்டுக்கும் பிச்சை எடுப்பது போலச் சென்று, எனக்கு ஆயுதம் கொடு, எனக்கு ஆயுதம் கொடு என்கிறான். ஆனால், புலிகள் யாரிடமும் ஆயுதம் கேட்பதில்லை. அதுதான் இலங்கை அரசுக்குப் பயம். இவன் யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேங்குறான். பேசவும் மாட்டேங்குறான் என்ன கணக்குன்னே தெரியலையே என்று மிரண்டு போயிருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் இரண்டு பேர் மல்லுக்கட்டி சண்டை போடும்போது, ஜெயிக்க முடியாதவன் அடுத்தவன் காதை கடிச்சிட்டு ஓடிடுவான். இந்தக் கேவலத்தைதான் சிங்கள ராணுவம் செய்கிறது. அவர்களால் சண்டை போட முடியவில்லை என்றதும், நம் தமிழ் சொந்தங்களைப் பிடித்து, முன்னே நிறுத்திக் கொள்கிறார்கள். இதற்குப் பெயர் சண்டையா? இதற்குப் பதிலாக நாண்டு கொண்டு செத்துப் போகலாம். இதுவரை புலிகளின் வழி காட்டுதலில் அப்பாவி சிங்களவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வீரன் என்பவன் வீரனோடு மோதவேண்டும்.

உலகத்திலேயே மோசமான வன்முறை என்பது எது தெரியுமா? தன்னை ஒருவன் திருப்பித் தாக்கவே மாட்டான் என்று தெரிந்து கொண்டு தாக்குகிறோமே அதுதான். அதைத்தான் அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது. சிங்கள ராணுவம் செய்து கொண்டிருக்கிறது. வீரனோடு மோது; அப்பாவி குழந்தைகள் மீது ஏன் குண்டு போடுகிறாய்? இதிலிருந்து என்ன தெரிகிறது. அவர்களுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது.

இவ்வளவுக்கும் பிறகு ஒரே நாடாக இருக்கணும், மாநில சுயாட்சி என்றெல்லாம் இந்தியா பேசுவது எவ்வளவு ஹம்பக். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளே சின்ன சண்டை வந்தால் வீட்டை இரண்டாகப் பிரித்து விடுகிறான். இத்தனை ஆண்டுகளாக போராடிய பிறகும், செஞ்சோலையில் அப்பாவிப் பிஞ்சுகள் கொல்லப்பட்ட பிறகும், இலங்கையில் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அது எவ்வளவு கேவலமான பேச்சு, தனி ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை.

இவற்றை விட்டுவிட்டு வேறு பஞ்சாயத்துப் பேசாதீர்கள். நாட்டாமை... தீர்ப்பை மாற்றிச் சொல்லுங்கள். இங்கே என்ன பிரச்சினை தெரியுமா? கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா இங்கே இருக்கிற தேசிய கட்சிகளெல்லாம் மாநில நலத்தைப் பேசுகின்றன. நம் மண்ணில் இருக்கிற மாநிலக் கட்சிகளோ தேசியம் பேசுகின்றன. அதுதான் இங்கே பிரச்சினை.

இதை எல்லாம் புரியாமல் தமிழன், விஜயகாந்த் பின்னால் போகிறான். அவருக்கு இடஒதுக்கீட்டில் அக்கறை இருக்கிறதா? இனப் பிரச்சினையில் அக்கறை இருக்கிறதா? இவர் பிறந்தநாள் கொண்டாடாவிட்டால் ஈழம் கொடுத்திடுவான் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏன், ஈழம் கிடைக்கும் வரை சோறு தின்ன மாட்டேன் என அறிவிப்பு செய்யுங்களேன்!.

நன்றி: தாகம்

புரிபவர்களுக்கு புரியுமா??

புரிபவர்களுக்கு புரியுமா??

ஹீம் புரிஞ்சா சந்தோசம்

இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படத்தில், தாயைக் கெடுத்துக் கொன்றவனை, தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவனை, தன் அண்ணன் தம்பியை வெட்டிக் கொன்றவனை உச்சகட்ட காட்சியில் பழி வாங்கி முடிக்கிற கதாநாயகனை ஹீரோ, அவதார புருஷன் என்று கொண்டாடுகிற என் தமிழினம், இதை நிஜத்தில் இலங்கையில் செய்யும் போது அதைத் தீவிரவாதம் என்கிறது. சினிமாவில் நடிப்பவனுக்கு இந்தத் தேசம் விருது கொடுக்கிறது. ஆனால் நிஜத்தில் என் உறவுகள் கொல்லப்படும்போது நாங்கள் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?

இணைப்புக்கு நன்றி M17

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.