Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுகுழு 3 பேருக்கு டக்கிளசிடம் இருந்து விடுதலை

Featured Replies

யாழில் மூன்று ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சுட்டுக்கொலை

[வியாழக்கிழமை, 12 ஒக்ரொபர் 2006, 14:35 ஈழம்] [ம.சேரமான்]

யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யாழ். நகரின் மத்தியில் காங்கேசன்துறை மற்றும் கஸ்தூரியார் வீதிக்கு இடையே மின்சார நிலைய வீதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். புடவை விற்பனை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்களாகிய சுதா, சதீஸ், முகுந்தன் மற்றும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நபர் ஆகியோரது உடல்களும் யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இதனிடையே யாழ். கச்சேரி-நல்லூர் வீதியில் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/?cn=29263

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுகுழு 3 பேருக்கு டக்கிளசிடம் இருந்து விடுதலை... :lol::lol::lol:

நல்ல (பொருத்தமான) தலைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுகுழுவாயிருந்தாலும் மரணமடைந்தவர்களை கேலிப்பொருளாக்குவது அவ்வளவு நாகரிகமான செயல் அல்ல. மன்னிக்கவும் இது எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பு) யாழில் மூன்று ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சுட்டுக்கொலை- கிளைமோரில் இரு காவல்துறையினர் பலி

யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றொரு கிளைமோர் தாக்குதலில் ஈ.பி.டி.யினருக்கு பாதுகாப்புக்காகச் சென்ற இரு சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.

யாழ். நகரின் மத்தியில் காங்கேசன்துறை மற்றும் கஸ்தூரியார் வீதிக்கு இடையே மின்சார நிலைய வீதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களாகிய சுதா, சதீஸ், முகுந்தன் ஆகியோர் தினமுரசு நாளிதழை விற்றுக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். புடவை விற்பனை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ். தீவகப் பிரதேச ஈ.பி.டி.பி.யின் முதன்மை அமைப்பாளராக சுட்டுக்கொல்லப்பட்ட முகுந்தன் செயற்பட்டு வந்தார். பிரதி அமைப்பாளராக செயற்பட்ட கந்தன் (வயது 30) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஈ.பி.டி.பி.யினர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நபர் ஆகியோரது உடல்கள் யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் திருநெல்வேலி இராமலிங்கம் வீதியைச் சேர்ந்த ஏ. குகனேஸ்வரன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளது. குகனேஸ்வரன் மற்றும் ஈ.பி.டி.பி. கந்தன் ஆகியோர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அரியாலையிலிருந்து நாவலர் வீதி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈ.பி.டி.பி.யினரை இலக்கு வைத்து இன்று முற்பகல் 11.50 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில ஈ.பி.டி.யினருக்கு பாதுகாப்பாகச் சென்ற இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் படுகாயமடைந்தனர்.

நாவலர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் கிளைமோர் பொருத்தப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-புதினம்

களையெடுக்கத்திடங்கீற்றீனம் போல

உவையள் அங்க ஜெனநாயகத்தை காக்கினம்....???

அப்படி என்டால் ஏன்....???

அவையள அடையாளம் தெரியாதோர் கொல்லினம்....???

அது தான் புரியல.....கா..கா...கா...

கோவிந்தா...கோவிந்தா...

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணுக்காக மரணித்த அந்த 18000 மாவீரர்களுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு உந்த நீங்கள் சொல்லுகின்ற நாகாPகம் பொருந்தாது.. நீங்கள் சொல்லுகின்ற நாகாPகம் மனிதர்களுக்கு மட்டும்தான்.. மிருகங்களுக்கு பொருந்தாது..

ஒட்டுகுழுவாயிருந்தாலும் மரணமடைந்தவர்களை கேலிப்பொருளாக்குவது அவ்வளவு நாகரிகமான செயல் அல்ல. மன்னிக்கவும் இது எனது தனிப்பட்ட கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.