Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் போர்களத்தில் சந்திப்போம்: பாலித கோகன

Featured Replies

மீண்டும் போர்களத்தில் சந்திப்போம்: பாலித கோகன

http://www.nitharsanam.com/?art=20943

கொஞ்சம பொறுங்கோ கோகனே பொலித்தீன் பைகளையும் முக்சக்கரவண்டிகளையும் சேர்த்து விட்டு தொடங்கினால் நல்ல இருக்குமென்டு நினைக்கிறன். என்ன சிங்களவரின் சமாதான செயலகத்தில் குளிரூட்டி அறையிலிருந்து அறை கூவல் வருகிறதே.

ஈழத்திலிருந்து

ஐhனா

அடி வாங்கும் போது அதிகமாக சோர்ந்து போகிறீர்கள்!

அடி கொடுக்கும் போது அதிகமாக துள்ளுகிறீர்கள்!

இது நல்லதாகப்படவில்லை.

  • தொடங்கியவர்

என்ன செய்வது? அவர்களும் தங்கள் ஆதங்கத்தயும் வெளிப்படுத்த தானே வேணும்? பாவம், சும்மா பேசாதேயுன்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு ஏற்கனவே தலைக்குள் ஒன்றும் இல்லை . அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். ஸ்ரீ லங்காவின் சமாதானச் செயலகம் தற்போது போர்ச் செயலகமாக மாறிவிட்டதோ தெரியாது.

அவருக்கு தலையிக்கை இல்லை என்பது ஒருபுறம் அவர் சொன்னதாக வந்த செய்தியை மொழிபெயர்ப்பு செய்து செய்தியாக்கியவருக்கு அதிகம் இருக்கிறதா என்பதும் சந்தேகம் தான்.

தமிழருக்கு இப்படி கிளுகிளுப்பு ஊட்டும் செய்திகளை போட்டு எதிரியை மட்டந்தட்டி சந்தோசப்படுவதை விட்டுவிட்டு நிஜத்தை சொல்லுவதில் எப்போ கவனம் செலுத்தப்போகிறார்கள்.

அவருக்கு தலையிக்கை இல்லை என்பது ஒருபுறம் அவர் சொன்னதாக வந்த செய்தியை மொழிபெயர்ப்பு செய்து செய்தியாக்கியவருக்கு அதிகம் இருக்கிறதா என்பதும் சந்தேகம் தான்.

தமிழருக்கு இப்படி கிளுகிளுப்பு ஊட்டும் செய்திகளை போட்டு எதிரியை மட்டந்தட்டி சந்தோசப்படுவதை விட்டுவிட்டு நிஜத்தை சொல்லுவதில் எப்போ கவனம் செலுத்தப்போகிறார்கள்.

நீங்கள் பேசாமல் இருந்தாலே போதும் தமிழர்கள் உண்மையான செய்திகளை அறிந்துகொள்வார்கள். :lol::D

சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாலித கோகன்ன முகமாலைக் களத்தை இழந்தபோதும் புலிகளின் நிலைகளைத் தகர்த்தே தீருவோம் என பி.பி.சியிடம் சூழுரைத்துள்ளார். இந்த உத்தேச தகர்ப்பினை ஒக்ரோபர் 28ம் திகதிக்கு முன்பாக தமது படைகள் செய்யக்கூடும் எனவும் அவர் குறிப்புணர்த்தியுள்ளார்.

இராணுவத்தின் வலிந்த தாக்குதல் எல்லாம் தற்போது மலிந்த தாக்குதலாகப் போய் விட்டது. பாலிதவும் கெகேலியாவா போய்டுது

அவருக்கு தலையிக்கை இல்லை என்பது ஒருபுறம் அவர் சொன்னதாக வந்த செய்தியை மொழிபெயர்ப்பு செய்து செய்தியாக்கியவருக்கு அதிகம் இருக்கிறதா என்பதும் சந்தேகம் தான்.

தமிழருக்கு இப்படி கிளுகிளுப்பு ஊட்டும் செய்திகளை போட்டு எதிரியை மட்டந்தட்டி சந்தோசப்படுவதை விட்டுவிட்டு நிஜத்தை சொல்லுவதில் எப்போ கவனம் செலுத்தப்போகிறார்கள்.

வந்திட்டார் கோகன்னவின் பிரத்தியோக சொயலாலர் கேளுங்கோ உறவுகளே அவரின் அறிவுரகளை

  • கருத்துக்கள உறவுகள்

அரச சமாதானச் செயலாளரே, இப்படி ஒரு வார்த்தையை உரைக்கின்றார் என்றால், சிங்கள இனவாத அரசியல் எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பது புரியும். இதன் தலைவராகத் தானே, முன்பு, ஜநாவிற்குப் போட்டியிட்ட ஜயந்த தனபாலவும் இருந்தவர்!

வந்திட்டார் கோகன்னவின் பிரத்தியோக சொயலாலர் கேளுங்கோ உறவுகளே அவரின் அறிவுரகளை

இது தேவையில்லாத சச்சரவைத் தூண்டும் வார்த்தைப் பிரயோகம்!

எது சச்சரவைத தூண்டும் விவாதம்? இது ஒரு சில எருமைத் தோல் தமிழருக்கு ஒவ்வோரு பேரினவாதியையும் தோலுறித்துக் காட்டும் செயல். துள்ளுவதற்காக எழுதப்படுபவையல்ல. வீரத்தைப் புரிந்து கொள்வதற்காக எழுதுவது. தமிழன் மனவீரியம் கொள்ளச் செய்யும் செயல். நிஐம் எது என்பதைத் தான் தெரிவிக்கின்றார்கள்.

ஈழத்திலிருந்து

ஐhனா

தமிழர் சிறீலாங்காவை நிராகரித்து பல வருடங்கள். சிங்களத்தின் பேரினவாதத்தை பற்றி தமிழருக்கு எந்த சந்தேகமும் இருக்க கூடாது. எனவே அவர்களை பற்றி கிளு கிளுப்பூட்டும் கதைகளை எழுதுவது வாசிப்பது விமர்சிப்பது நேர விரையம்.

இன்று எமது பிரச்சனை எல்லாம் சர்வதேசம் எமது போராட்டத்தை முழுமையாக அங்கீகரிப்பது பற்றியது. சர்வதேசம் நோக்கித்தான் எமது முழுக் கவனமும் இருக்க வேண்டும். அவர்களது இரட்டை வேட நடத்தை பற்றிய விமர்சனங்கள் விளக்கங்கள் விவாதங்கள் விழிப்புணர்வு தான் இன்றய காலத்திற்கு தேவையானது.

சிங்கள சமாதான செயலகர் இனவாதி ஜனாதிபதி இனவாதி பிரதம மந்திரி இனவாதி பொய் சொல்கிறார்கள் என்பவை எமது மக்களிற்கு செய்திகளாக 1970கள் 1980களில் இருந்திருக்கலாம். இன்று இவை எமக்கு செய்திகள் அல்ல. இவை இன்னமும் செய்தியாக இருக்கக்கூடியது இவர்கள் இனவாதிகள் இல்லை உண்மையில் சமாதானம் பேச தமிழரிற்கு சம உரிமை கொடுத்து வாழ தயாரானவரகள் என்ற மாயைக்குள் இருப்பவர்களிற்காகத்தான் இருக்கும்.

உங்கள் சொந்த வாழ்க்கையின் பழுக்கள் மத்தியில் 1 நாளில் குறிப்பிட்ட மணிநேரத்தை தாயகம் பற்றிய செய்திகள் நிகழ்வுகளை அறிய வாசிக்க சிந்திக்க கருத்தாட விவாதிக்க ஒதுக்குகிறீர்கள். இந்த குறிப்பிட்ட நேரத்தில் உங்களிற்கு பல வருடங்களாக தெரிந்த ஒன்றைப்பற்றி கிளு கிளுப்பாக எழுதி சந்தோசப்பட்டு திருப்த்திப்பட போகுறீர்களா இல்லை எமக்கு இன்று மற்றும் இனிவரும் காலங்களில் தெரிய வேண்டியது பற்றி சிந்தித்து கருத்தாட போகுறீர்களா?

இதே பரிதாப நிலை தான் புலிகள் பலமாக இருக்கிறார்களா பலவீனமாக இருக்கிறார்களா என்ற விவாதத்திலும் இருக்கிறது. புலிகளின் முகமாலை சமர் வெற்றியில் துள்ளிக்குதித்தவர்கள் புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்களோ என்ற சந்தோகத்தோடு இருந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. தமிழீழ விடுதலைப்போராட்டத்திலும் புலிகளிலும் அசையாத நம்பிக்கை இருந்தால் இவ்வாறான சந்தேகங்களும் பின்னர் அதில் இருந்து மீண்ட துள்ளிக்குதிப்புகளும் வருமா என்ற ஒரு கேள்வி உண்டு. அதாவது எமது சிந்தனைகள் இன்னமும் முழுமையாக முன்னோக்கி இல்லை. தலைவர் கூறியது போல் குறிக்கோளில் உறுதியாக இருந்தால் இடையில் நடப்பவை பற்றி அலட்டி கொண்டு நேரம் விரையமாக்க தேவையில்லை என்று.

தமிழரின் வீரத்தை புரிந்து கொள்ள போர்க்களத்தில் செய்ய வேண்டியவர்கள் தரமாக நிதானமாக பொறுப்பாக வேண்டியது செய்கிறார்கள். அதை பற்றி கண்டபடி கற்பனையில் எழுதவேண்டிய பொறுப்பை புலிகள் மக்களிற்கு தந்திருப்பதாகவோ வேண்டுகோள் விடுத்திருப்பதாகவோ ஒரு ஆதாரமும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை. நடக்கும் நிகழ்வுகள் அதை சிறப்பாக எடுத்து சொல்கிறது தெரிய வேண்டியவர்களிற்கு உரிய முறையில். துள்ளுவதற்கு இல்லை தாங்கள் வீரத்தை எழுதிக்காட்டுவாத இங்கு வியாக்கியானம் செய்பவர்கள்...

:lol:

போராட்டத்தின் நியாயத்தன்மை சிங்கள அரசபயங்கரவாதம் பற்றி சர்வதேசத்திற்கு எடுத்த கூற சொல்லித்தான் மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார்கள்.

சினிமா சின்னத்திரை போல் அழுவதும் கொண்டாடி துள்ளிக்குதிப்பதும் வீராப்பு போசுவதுக்குமாகத்தான் போராட்டம் போன்று பலருக்கு இருக்கிறது இங்கு. அதாவது தம்மை எதனோடு அடையாளப்படுத்தி தமது உணர்ச்சிகளின் பல எல்லைகளை வெளிக் கொண்டுவரும் சந்தர்ப்பத்தை தருகிறதோ அதில் பங்குபற்றி உளவியல் திருப்த்தி காணும் நிலை. கிட்டத்தட்ட பிரித்தானியாவை உலக வரைபடத்தில் காட்ட முடியத ஒருவர் மன்யுனைற்ரட் விசிறியாக இருப்பது போன்று.

இவ்வாறான சந்தேகம் ஏற்கனவே சர்வதேச சக்த்திகளிடம் உண்டு. அது எமது நடத்தைகளை கண்டு அறிந்தார்களா இல்லை அவர்களின் வழமையான பாணியா என்பது ஒரு கேள்வி. ஆனால் அவர்களின் நொண்டிச்சாட்டுகளை நியாயப்படுத்துபவையாக எமது நடத்தை போகிறது என்பது கவலைக்குரியது.

அடுத்து பாலித உந்த நேர்காணலை புதினத்திற்கு வழங்கியிருந்தாரா இல்லை நிதர்சனத்திற்கு வழங்கயிருந்தாரா? (2 தளங்களிலும் உண்டு). இல்லை வேறு செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த நேர்காணலின் மொழிபெயர்ப்பா? இதை பற்றி ஒன்றும் அதில் சொல்லப்படவில்லை. உந்த செய்தியின் மூலத்தை எடுத்து மொழிபெயர்ப்பு செய்து பார்ப்போம் பாலித தமிழ் மக்களிற்கு இப்படி பொழுது போக்காட்டக்கூடிய கிளுகிளுப்பூட்டு செய்தி ஒன்றை அதில் சொல்லி இருக்கிறாரா என்று. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலும் புகலிடத்திலும் மக்கள் இரண்டு வகைகளில் செயற்பட வேண்டி உள்ளமை கட்டாயம்.

1. தமிழ் மக்கள் தமக்கும் தமது தலைமுறைகளுக்கும் தொடர்ந்து போராட்டத்தின் நியாயங்களை போக்குகளை விளங்குபவர்களாக விளக்குபவர்களாக உணர்த்துபவர்களாக இருந்து செயற்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது

2. சர்வதேசத்துக்கு தமிழர் போராட்டத்தின் நியாயங்கள் அதன் அரசியல், இராணுவ பலம் ஆதரவு என்பவற்றை உறுதியாக வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.

இந்த வகைகளில் தமிழ் மக்கள் வெறும் சர்வதேசம் நோக்கிய செயற்பாட்டோடு நின்றுவிட்டால் போதும் என்பது போன்ற கருத்துக்கள் தமிழர்களின் போராட்ட நியாயத்தில் இருந்து விலகிச் செல்லும் தமிழர்களையும் தமிழர் தலைமுறைகளையும் போராட்டத்தை விட்டு மேலும் மேலும் தூர விலக்கி வைப்பத்தையே சிலர் நாசூக்கான பிரச்சாரங்கள் மூலம் தம்மை வெளிப்படையாக இனங்காட்டிக் கொள்ளாத வகையில் செய்ய விளைகின்றனர்.

தமிழ் மக்கள் தமிழர்கள் பொங்கி எழ பொங்கு தமிழும் நடத்துவார்கள் சர்வதேசத்தை தட்டி எழுப்ப சாவிலும் வாழ்வும் நடத்துவார்கள். அவர்களுக்கு இரண்டும் அவசியம். போராட்டத்தின் தளமே தமிழ் மக்கள் பெறும் போராட்டம் பற்றிய தெளிவிலும் புரிந்துணர்விலுமே தங்கி உள்ளது. சர்வதேசம் என்பது இரண்டாம் பட்சம் தான். தமிழ் மக்கள் போராட்டத்தை நிராகரிப்பின் அங்கு சர்வதேசத்துக்கு வேலையே இருக்காது. எனவே போராட்டத்தின் நியாயங்களை போராட்ட உணர்வுகளை மக்கள் மத்தியில் மழுங்கடிக்கக் கூடிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் தடுக்க நினைக்கும் செயற்பாடுகளை பாரதுராமக நோக்க வேண்டும். தவறான பார்வைகள் திருத்தப்பட வேண்டுமே தவிர தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து போராட்டத்தைப் பலவீனமாக்க செயற்படுதப்பட்டும் ஒரு நகர்வாகவே கொள்ள வேண்டும். குறிப்பாக புகலிடத்தில் தமிழ் மக்கள் தாங்களும் தங்கள் வாழ்வும் என்று சுயநலப் போக்கோடு வாழ் விளைந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படியான கருத்துக்கள் கூட அந்த மக்களை போராட்ட சிந்தனையில் இருந்து தூர விரட்டி அடிக்கும். போர்களத்தில் ஏற்படும் சிறிய வெற்றி கூட மக்களை போராட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும். மக்கள் அனைவரும் அரசியல் தெளிவோடுதான் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை.

மக்களிற்கு போராட்டத்தின் நியாயம் என்பதும் அதன் பலம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மக்கள் அதன் மீது நம்பிக்கை வைப்பர். மக்கள் பங்களிப்பு குறைந்த எந்தப் போராட்டமும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க மாட்டாது. அந்த நிலையில் சர்வதேச முக்கியமற்ற போராட்டத்தை நசுக்குவது எதிரிக்கு இலகுவான இலக்காகி விடும். மக்களுக்கு அரசியல் தெளிவு என்ற வகையில் மக்கள் போராட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைகளை சிதைக்கக் கூடிய கருத்துக்களை விதைப்பதும் மக்கள் போராட்டம் பற்றிய தங்கள் உணர்வுகளை சொல்லாமல் தடுப்பதும் மக்களை அறிவற்ற கூட்டமாக காட்டுவதும் போராட்டத்தின் நியாயத்தை அறியாத மக்களாகவும் அவர்கள் தவறான பாதையில் செல்வதாகவும் உணரச் செய்யும் போராட்டத்தை பலவீனப்படுத்தக் கூடிய மறைமுக நடவடிக்கைகளாகக் கூட அமையலாம்.

எனவே மக்கள் இது விடயத்தில் கருத்துக்களின் தன்மைகள் குறித்து ஆழ நோக்கி செயற்பட வேண்டியது கட்டாயமாகிறது. மக்கள் அடுத்தவரின் கருத்துக்களை நம்பாமல் விடுதலைப் புலிகளின் அதிகார பூர்வ கருத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துச் செயற்பட வேண்டியதும் இவ்வேளையில் கட்டாயமாகிறது. அக்கருத்துக்களையும் போராட்ட நியாயங்களையும் தலைமுறைகளுக்கும் காவிச் செல்ல வேண்டியதும் கட்டாயம்.

விளிப்போடு கருத்துக்களை நோக்கி விழித்திருப்போம். நியாயங்களை உணர்ந்து தேவைகளை உணர்ந்து செயற்படுவோம்.

சிறந்த கருத்துகள் நன்றி.

  • தொடங்கியவர்

ஓரு செய்தியாளர் கண்ணுக்கு ஒர் காதுக்கு எது செய்தியாக படுதோ, அதை உறுதி படுத்திய பின் அதை தெரிவிப்பது அவரின் கடமை, அது தான் அவரின் தொழில் கூட. அதை நாங்கள் ஒரு போதும் பிழை என்று கூற முடியாது.

இனைய செய்தி தளங்களுகு அடிகடி செய்தி update பண்ண வேண்டிய கட்டாயம் இருக்கிறது, இப்படி இலங்கை சம்பந்தமான செய்திகளை விட்டிட்டு சொர்ணமால்யா ஆபாச படதில் நடித்தார் அல்லது ரஜனி தாத்தா ஆகி விட்டார் என்கிற செய்திகளையா போட முடியும்? :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.