Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தகப்பூக்கள்...!!!!

Featured Replies

1907867_10152553232058002_49553980550591

எங்கே என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம்
எங்கே என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு
எங்கே என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி
இதையெல்லாம் பார்த்தும் .....
உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ஒரு தந்தை

கந்தக சூட்டினில் சந்தண மேனிகள் கருகின
குண்டுமழை நடுவினில் குருதியாற்றின் கரையினில்
விதைக்கப்பட்டன காந்தள் விதைகள்
கண்ணீரும் செந்நீரும் ஊற்றி
தியாகங்கங்களையும் வெற்றிகளையும் உரமாக்கி
நிமிர்ந்து வளர்ந்தன கார்த்திகைக்கொடிகள்
வெட்டிப்போட்டாலும் புடுங்கி எறிந்தாலும்
கார்த்திகை மாதமானால் மண்ணை விலக்கி
மீண்டும் மீண்டும் வளர்ந்து பூப்பூக்கும்

மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் சயணைட் குப்பிகள்
துருஏறிப்போனாலும் கார்த்திகை கிழங்குகளாய்
மீண்டும் மீண்டும் மண்கிழித்து முளைக்கும்.!


எங்கள் அண்ணாக்கள் எங்களுக்காக வலி சுமந்தார்கள்
எங்கள் அக்காக்கள் எங்களுக்காக முட்கிரீடம் அணிந்தார்கள்
எங்கள் தம்பிகள் எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார்கள்
எங்கள் நண்பர்கள் எங்களுக்காக உதிரம் சிந்தினார்கள்
இறுதியில்...!!!!
எங்களுக்காய் அவர்கள் எல்லோரும் விதைகுழிக்களுக்குள்
விதையாகி விடுதலையின் உயிராகி புதைந்துபோனார்கள்

யார் மறந்தாலும்
கார்த்திகை பூக்கள் மறப்பதில்லை
கார்த்திகை மாதத்தை..!!!


எங்கள் ஊரில் பூத்துகுலுங்கும்
காந்தள் மலர்கள்
கண்ணீர் வடிக்கின்றன!!!
எங்கே எங்களின் பிள்ளைகள்?
எங்கே அவர்கள் துயிலும் கல்லறைகள்?
ஆண்டுக்கொருமுறையேனும் மாவீரரின் மேனிதழுவி
எங்கள் பிள்ளைகளின் பூமுகம் அதிலே பூத்துகிடந்தோமே
எங்கே எங்கள் பிள்ளைகள் ??
காந்தள் மலர்கள் கண்ணீரோடு கேட்கின்றன ...

தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விலகிப்போகாது
துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்துபோகாது
நாங்கள் வந்து உங்களின் கல்லறைகளில் விளக்கேற்றாவிட்டாலும்
உயிர் வலித்து உள்ளம் துடித்து மனதினில் கசியும் குருதியும்
சிவப்பேறி விழிகசிந்து சிந்தும் கண்ணீர் சொல்லும் எங்களின் நேசத்தை!!!

எங்கே உங்களின் விழிகளைத்திறந்து மெல்ல எங்களைப்பாருங்கள்
உங்களைக்காண உங்களின் உறவுகள் ஓடோடி வந்துள்ளோம்!!!!

துயிலும் இல்லங்களை இடித்து தூளாக்கிய
மோடையன்களுக்கு தெரியாது
அவர்கள் தொடமுடியாத ஆழத்தில் "விதைகள்" விதைக்கப்பட்டது
மேகம் சிந்தும் மழைத்துளிகள்-அது
நீங்கள் புதைந்த மண்ணை நனைக்க
ஊர்முழுதும் பரவும் "கந்தகவாசம்"
அதுதான் மாவீரரின் "சந்தண மேனிவாசம்"


மூசிவரும் உப்புக்காற்றும்
ஆடிவரும் நீலக்கடலலையும்
வெண்மணல்வெளியும்
நிமிர்ந்து நிற்கும் நெடிய பனைமரமும்
பச்சைவயல்வெளியும்
நந்திக்கடலும் உள்ளவரை
உங்களின் நினைவுகளும் சாகாமல் வாழும்

கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை
எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும்.
அவர்களின் கனவும் இருக்கும்.

மாவீரர்களே எங்களின் மனம் கனக்குதே..!!!
மறுபடியும் ஒரு நாள் உயிர்வலிக்குதே..!!!

விடிகின்ற வேளையில் உங்களுக்கு விளக்கெரிப்போம்
எல்லாம் கைகூடிவரும் வேளையில் மீண்டும் உம்மை விதைத்திடுவோம்.

எங்கே உங்களின் விழிகளைத்திறந்து மெல்ல எங்களைப்பாருங்கள்
உங்களைக்காண உங்களின் உறவுகள் ஓடோடி வந்துள்ளோம்!!!!

தமிழ்ப் பொடியன்
19/11/201

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி தமிழ்ப்பொடியன்

கவிதைக்கு நன்றி தமிழ்ப்பொடியன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொடியனின் கந்தகப்பூக்கள் கல்நெஞ்சையும் கலங்க வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

1907867_10152553232058002_49553980550591

எங்கே என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம்

எங்கே என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு

எங்கே என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி

இதையெல்லாம் பார்த்தும் .....

உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ஒரு தந்தை

கந்தக சூட்டினில் சந்தண மேனிகள் கருகின

குண்டுமழை நடுவினில் குருதியாற்றின் கரையினில்

விதைக்கப்பட்டன காந்தள் விதைகள்

கண்ணீரும் செந்நீரும் ஊற்றி

தியாகங்கங்களையும் வெற்றிகளையும் உரமாக்கி

நிமிர்ந்து வளர்ந்தன கார்த்திகைக்கொடிகள்

வெட்டிப்போட்டாலும் புடுங்கி எறிந்தாலும்

கார்த்திகை மாதமானால் மண்ணை விலக்கி

மீண்டும் மீண்டும் வளர்ந்து பூப்பூக்கும்

மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் சயணைட் குப்பிகள்

துருஏறிப்போனாலும் கார்த்திகை கிழங்குகளாய்

மீண்டும் மீண்டும் மண்கிழித்து முளைக்கும்.!

எங்கள் அண்ணாக்கள் எங்களுக்காக வலி சுமந்தார்கள்

எங்கள் அக்காக்கள் எங்களுக்காக முட்கிரீடம் அணிந்தார்கள்

எங்கள் தம்பிகள் எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார்கள்

எங்கள் நண்பர்கள் எங்களுக்காக உதிரம் சிந்தினார்கள்

இறுதியில்...!!!!

எங்களுக்காய் அவர்கள் எல்லோரும் விதைகுழிக்களுக்குள்

விதையாகி விடுதலையின் உயிராகி புதைந்துபோனார்கள்

யார் மறந்தாலும்

கார்த்திகை பூக்கள் மறப்பதில்லை

கார்த்திகை மாதத்தை..!!!

எங்கள் ஊரில் பூத்துகுலுங்கும்

காந்தள் மலர்கள்

கண்ணீர் வடிக்கின்றன!!!

எங்கே எங்களின் பிள்ளைகள்?

எங்கே அவர்கள் துயிலும் கல்லறைகள்?

ஆண்டுக்கொருமுறையேனும் மாவீரரின் மேனிதழுவி

எங்கள் பிள்ளைகளின் பூமுகம் அதிலே பூத்துகிடந்தோமே

எங்கே எங்கள் பிள்ளைகள் ??

காந்தள் மலர்கள் கண்ணீரோடு கேட்கின்றன ...

தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விலகிப்போகாது

துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்துபோகாது

நாங்கள் வந்து உங்களின் கல்லறைகளில் விளக்கேற்றாவிட்டாலும்

உயிர் வலித்து உள்ளம் துடித்து மனதினில் கசியும் குருதியும்

சிவப்பேறி விழிகசிந்து சிந்தும் கண்ணீர் சொல்லும் எங்களின் நேசத்தை!!!

எங்கே உங்களின் விழிகளைத்திறந்து மெல்ல எங்களைப்பாருங்கள்

உங்களைக்காண உங்களின் உறவுகள் ஓடோடி வந்துள்ளோம்!!!!

துயிலும் இல்லங்களை இடித்து தூளாக்கிய

மோடையன்களுக்கு தெரியாது

அவர்கள் தொடமுடியாத ஆழத்தில் "விதைகள்" விதைக்கப்பட்டது

மேகம் சிந்தும் மழைத்துளிகள்-அது

நீங்கள் புதைந்த மண்ணை நனைக்க

ஊர்முழுதும் பரவும் "கந்தகவாசம்"

அதுதான் மாவீரரின் "சந்தண மேனிவாசம்"

மூசிவரும் உப்புக்காற்றும்

ஆடிவரும் நீலக்கடலலையும்

வெண்மணல்வெளியும்

நிமிர்ந்து நிற்கும் நெடிய பனைமரமும்

பச்சைவயல்வெளியும்

நந்திக்கடலும் உள்ளவரை

உங்களின் நினைவுகளும் சாகாமல் வாழும்

கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை

எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும்.

அவர்களின் கனவும் இருக்கும்.

மாவீரர்களே எங்களின் மனம் கனக்குதே..!!!

மறுபடியும் ஒரு நாள் உயிர்வலிக்குதே..!!!

விடிகின்ற வேளையில் உங்களுக்கு விளக்கெரிப்போம்

எல்லாம் கைகூடிவரும் வேளையில் மீண்டும் உம்மை விதைத்திடுவோம்.

எங்கே உங்களின் விழிகளைத்திறந்து மெல்ல எங்களைப்பாருங்கள்

உங்களைக்காண உங்களின் உறவுகள் ஓடோடி வந்துள்ளோம்!!!!

தமிழ்ப் பொடியன்

19/11/201

 

கந்தகப்பூக்கள் மனதைத்தொட்டது.

நம்பிக்கை விதைகளை விதைத்ததது.

கவிதைக்கு நன்றி பொடியன்.... இன்னொரு முறை கையறுந்த நிலையில் மனச்சாமாதிகளின் முன் மண்டியிட்டு கிடக்கின்றோம்.

  • தொடங்கியவர்
அன்பின் ...!!!
வாத்தியார்
அஞ்சரன்
குமாரசாமி
மந்தாகினி
நிழலி
 
அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றி...!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.