Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி, அரசியலுக்கு வந்தால் மோதி பார்க்க தயார்: சீமான் பரபரப்பு பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி, அரசியலுக்கு வந்தால் மோதி பார்க்க தயார்: சீமான் பரபரப்பு பேச்சு

 

9f6043e0-500d-4025-bd01-077fea5d2603_S_s
 

சென்னை, நவ. 27–

திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நாம் நினைவு கூர்ந்துக் கொண்டிருக்கிறோம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூறி தடை செய்துள்ளனர். முடக்கி போடுவதற்கும், மடக்கி வைப்பதற்கும் நாங்கள் குடைகள் அல்ல. புலிப்படையை பார்த்து வளர்ந்தது நாம் தமிழர் படை.

ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி இரண்டுமே நம் விடுதலைக்கு எதிராக இருக்கும் பொது, இவர்களுக்கு எதிராக மக்களை திரட்டி நாம் வலுவாக வேண்டும். படையை பெருக்கி மக்களை திரட்டி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். பிரபாகரனுக்கு இங்கே ஏன் விழா கொண்டாடுகிறீர்கள், பிரபாகரனை எதற்காக இங்கு தலைவர் என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவராகும் போது, தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரன் தலைவராக கூடாதா?

சோனியா அன்னையாகலாம், நேரு மாமாவாகலாம், என் மொழிக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாக கூடாதா? அண்ணன் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

முதல்–அமைச்சர் பதவியை பிடிப்பதற்காகவா கட்சி ஆரம்பித்து உள்ளீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். பிறகு முச்சந்தியில கத்தி கிட்டு சாகவா கட்சி ஆரம் பிச்சுருக்கோம். ஆமாம் அதிகாரத்தை கைப்பற்றத்தான் கட்சி ஆரம்பிச்சுருக்கோம். உணர்வுள்ள தமிழர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் ஒரே மாற்று. நாங்கள் ஆட்சியை பிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் கைப்பற்றுவோம். அதுவரை காத்திருக்கிற பொறுமையும், தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடுகிற தைரியமும் எங்களுக்கு உண்டு.

சீமான் முதல்–அமைச்சர் ஆகிறானா, இல்லையா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இந்த மண்ணை ஆள்கிற சூழலை உருவாக்காமல் விடமாட்டோம்.

ரஜினி அரசியலுக்கு வரணும் என்று பலரும் அழைக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு உள்ளது?

தமிழ் மண்ணிற்காக, மொழிக்காக, இயற்கையை காப்பதற்காக, இந்த மக்களுக்காக தன் ஆயுளையே அற்பணித்த பலர் இந்த மண்ணில் இருக்கும் போது, ரஜினியை முன்னிறுத்துகிறார்கள். அதற்கும் ஆதரவு கொடுக்கவும் சிலர் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்றால், இந்த தமிழ் சமூகம் எதை நோக்கி போகின்றது.

மக்களுக்காக எதாவது ஒரு விஷயத்தில் ரஜினி உறுதியாக நின்றிருக்கிறாரா? வரட்டும் பார்க்கலாம். தனியாக வந்தாலும் சரி, யாரோடும் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும். போட்டு பார்த்து விடலாம், பிரபாகரனின் தம்பிகளா? ரஜினி ரசிகர்களா? என்று.

2016 தேர்தலில் தனித்து நிற்கபோகிறீர்களா, கூட்டணி வைக்க போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே 2016 தேர்தலில் தனித்து நிற்க போகிறோம் என்றுதான் நாம் சொல்லி வருகிறோம்.

அனைத்து தொகுதியிலும் நாம் தனித்துதான் நிற்க போறோம். எல்லா தமிழர்களுக்கான பொதுக் கட்சியாக, நம் கட்சியை எடுத்து செல்ல வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்று கொள்ள தயாராக இருப்போம்.

வாழ்வோ, சாவோ நாம் தனித்துதான் நிற்க போகிறோம். எவருக்கு கீழும் நாங்கள் தேர்தலை சந்திக்க மாட்டோம். தேர்தல் அரசியல் என்பது நெடுந்தூர பயணம். நாம் தேர்தலில் நிற்காதவரை அன்றைய சூழலுக்கு ஏற்ப சில கட்சிகளை ஆதரித்திருக்கலாம். ஆனால் நாங்கள் களத்திற்கு வரும்போது தனித்து தான், தேவையென்றால் எங்கள் தலைமையை ஏற்று, எங்கள் பின்னே வரவிரும்புபவர்கள் வரலாம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தடா சந்திரசேகர், கலைகோட்டுதயம், அன்புத் தென்னரசன், பாலமுரளிவர்மன், அறிவுச் செல்வன், அமுதா நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று மாவீரர் நாள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தேனாம்பாள் திருமண அரங்கில் சீமான் தலைமையில் நடக்கிறது.

பிரபாகரன் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ரத்ததான முகாமில் 5,250 பேர் வரை ரத்ததானம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் பெருவளத்தான், செவேல்வானவரம்பன், செந்தமிழ்செல்வன், பாலசுப்பிமணியம், வெற்றிச் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

http://www.maalaimalar.com/2014/11/27112806/Rajini-and-politics-collide-re.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒருவன் தமிழகத்தின் முதல்வரானால் எமக்கும் மகிழ்ச்சியே. தமிழகத்தில் இது அடுத்த 10,000 ஆண்டுகளுக்கு இது நடக்க வாய்ப்பு இல்லை!

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் ரஜனியின் தீவிர ரசிகர்கள் எந்தமாதிரி முடிவெடுப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா ? 

நுணலும் தன் வாயால் கெடும் . :lol:

ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க?: பாரதிராஜா சாட்டையடி
 
சென்னை:
ஒரு நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க?: பாரதிராஜா சாட்டையடி இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது. சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க. ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும். அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத்துவமும் வேண்டாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க. வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா? சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''.

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "சினிமாவில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்! நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட்டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!". இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/actors-have-no-qualification-enter-politics-barathi-raja-215842.html

 

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.