Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்கி வீசப்பட்டது செங்கோல்! இன அழிப்பு பிரேரணையினை முடக்க சீ.வி.கே.சிவஞானம் முயற்சி!!

Featured Replies

வடமாகாணசபையில் தொடரும் இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுதலித்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கோலை மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் தூக்கி வீசியுள்ளார்.

சிவாஜிலிங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை ஜனாதிபதி தேர்தலின் பின்னராக விவாதிக்கலாமென முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில் அதனை சபை முன்பதாக வாக்கெடுப்பிற்கு விட கே.சிவாஜிலிங்கம் கோரியிருந்தார். எனினும் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினை ஒத்திவைப்பதாக தெரிவித்து வெளியேற முற்பட்டிருந்த நிலையினில் கோபமுற்ற கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசினார்.

முன்னதாக தொடரும் இன அழிப்பு தொடர்பான பிரேரணை கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணை முன்மொழியப்பட்டு அது ஏற்று ஆமோதிக்கப்பட்டிருந்தது. பிரேரணை தொடர்பில் எவருடையதுமான ஆட்சேபனை உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்ட போது எதிர்கட்சிகள் உள்ளிட்ட எவையுமே ஆட்சேபித்திருக்கவில்லை. பிரேரணைக்கு ஆதவாக கூட்டமைப்பு உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் சித்தார்த்தன் போன்றவர்களும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையினில் குறித்த பிரேரணையினை தான் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் திருத்தங்களை செய்தபின்னர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விவாதிக்கலாமெனவும் முதலமைச்சர் கருத்து தெரிவித்தார்.

எனினும் அதனை நிராகரித்த கே.சிவாஜிலிங்கம் வாக்கெடுப்பிற்கு விடுமாறு கோரினார்.அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினை ஒத்திவைப்பதாக தெரிவித்து வெளியேற முற்பட கோபமுற்ற சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசியெறிந்தார்.
கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக இழுபறிப்பட்டு செல்லும் அப்பிரேரணையினை பொதுவாக்கெடுப்பிற்கு விடுமாறு எதிர்கட்சி தலைவர் தவராசா மற்றும் ஈபிடிபி உறுப்பினர் தவநாதன் ஆகியோரும் குரல் கொடுத்தனர்.

ஒருவாறாக தப்பித்து ஓடிய பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தனது அறையினுள் பதுங்கிக்கொண்டார். http://www.pathivu.com/news/35830/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நாலு படிப்புப் படிச்சிருந்தால் அமைச்சராகியிருக்கலாம். என்ன செய்யிறது. தனிச்சு நிண்டால் கட்டுப்பணமும் கிடைக்காது. அதால ஜோக்கர் வேடம் நல்லாப் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜோக்கர் இந்த பிரேரணையை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிறைவேற்ற ஏன் துடிக்கிறார் தெரியுமா?

இதை வைத்து இவரின் எசமான் மகிந்தர் வாக்குக்களை தெற்கில் அள்ளலாம்.

இப்பிரேரணைக்கு தவராசா கூட்டமும் எதிர்ப்புப் தெரிவிக்கவில்லை என்பதில் இருக்கு மர்மமுடிச்சு.

விக்கியர் விசயகாரன் - இதை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தள்ளிவைத்ததின் மூலம் - மகிந்தவுக்கு தெற்கில் கிடைக்கவிருந்த ஒரு பாரிய வாக்கு வேட்டையை தடுத்திருக்கிறார்.

சொன்னபடி கொந்திராந்தை முடித்துக்கொடுக்காவிட்டால் - பேசிய பேமெண்ட் வராது என்பதால் ஜோக்கர் டென்சனாயிட்டார்.

7999sivajilingam1.jpg
 
வட­மா­காண சபையில் தனது பிரே­ரணை ஏற் றுக் கொள்­ளப்­ப­டா­மையால் ஆத்­தி­ர­முற்ற வட­மாகாண சபை ஆளும் கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் செங்கோலைத் தூக்கி வீசி எறிந்த சம்­ப­வம் ­இன்று  இடம்­பெற்­றுள்­ளது.
 
வட­மா­காண சபையின் 20 ஆவது அமர்வு இன்று வட­மா­காண சபை பேரவைக் கட்­ட­டத்தில் இடம்­பெற்­றது. அமர்வில் இனப்­ப­டு­கொலை தொடர்­பான சிவா­ஜிலிங்­கத்தின் பிரே­ரணை எடுத்து கொள்­ளப்­ப­டவி­ருந்­தது.
 
அப் பிரே­ரணை தொடர்பில் தனக்கு ஆட்­சே­பனை இருப்­ப­தா­கவும்  பிரே­ரணை தொடர்பில் மேலும் ஆதா­ரங்கள் திரட்­டப்­பட்டு ஒரு வலு­வான பிரே­ர­ணை­யாக கொண்டு வரப்­பட வேண்டும். ஆனால் இப்­பி­ரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான காலம் இது­வல்ல ஜனா­தி­பதி தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் அதனை கொண்­டு­வ­ரு­வதே சிறந்­தது ஏனெனில் இக் காலப்­ப­கு­தியில் கொண்டு வரப்­பட்டால் இப்­பி­ரே­ர­ணையே தேர்தல் பிர­சார கூட்­டங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் என முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
 
இத­னை­ய­டுத்து அவைத் தலைவர் அடுத்த வருடம் ஜன­வரி மாதம் 15 ஆம் திக­திக்கு அப்­பி­ரே­ர­ணையை ஒத்தி வைப்­ப­தாக தெரி­வித்து சபையை எதிர்­வரும் 11 ஆம் திக­திக்கு  ஒத்­தி­வைப்­ப­தாக தெரி­வித்தார்.
 
சிவா­ஜி­லிங்கம், தனது பிரே­ரணை இன்­றைய தினமே ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். இல்­லா­விடின் 11 ஆம் திகதி அமர்வில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் அடுத்த வருடம் வரை கால அவ­காசம் தேவை­யில்லை என தெரி­வித்தார்.
 
அதற்கு அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம், 11 ஆம் திகதி அமர்வு பட்ஜெட் தொடர்­பா­னது  அமர்வு அதன் போது பிரே­ரணை ஏற்­றுக்­கொள்­ள­ப­ட­மாட்­டாது எனவும் இச்­ச­பையில் வாக்­கெ­டுப்பு நடாத்த அனு­ம­திக்க மாட்டேன் எனவும் தெரி­வித்து சபையை ஒத்­தி­வைப்­ப­தாக கூறி தனது ஆச­னத்தை விட்டு எழுந்தார்.
 
அதனால் கோப­ம­டைந்த சிவா­ஜி­லிங்கம் விரைந்து சென்று அவைத்­த­லைவர் முன்பாக இருந்த செங்கோலை தூக்கி வீசினார். அதில் செங்கோலின் சிறு பகுதி சேதமடைந்தது.சிவாஜிலிங்கத்தின் இச் செயற்பாட்டால் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே கருத்து மோதல்களையும் ஏற்படுத்தியது.
 
  • தொடங்கியவர்

செங்கோல் வீழ்த்தியமை! சபையில் பலத்த வாதப் பிரதிவாதங்கள்!

கடந்த 04 ம் திகதி இடம் பெற்ற வட மாகாண சபையின் கூட்டத்தொடரில் தனது பிரேரனையை சபையின் தலைவர் எடுக்கவில்லையெனக் கூறி செங்கோலை தட்டி வீழ்த்திய விடயம் சம்பந்தமாக இன்று வியாழக்கிழமை நடை பெற்ற வட மாகாண சபையின் கூட்டத் தொடரில் பலத்த வாதப் பிரதி வாதங்கள் இடம் பெற்றன.

north_provicial_council_session_01.png

இன்று முற்பகல் 9.30 மணியளவில் சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியது.

சபை ஆரம்பமாகியதும் சபையின் தவிசாளர் சபையில் உறுப்பினர்கள் சபையில் நடந்துகொள்ளும்முறை பற்றி மீண்டும் தெரிவிப்பதாகக் கூறி சபையின் ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து சபையில் பிரேரனைகள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இறுதியாக செங்கோல் தட்டி வீழ்த்தி உடைக்கப்பட்ட விடயம் சபையின் வாதப் பிரதி வாத்த்திறக்கு உள்ளாகியது.

சபை முதல்வர் கடந்த கூட்டத்தில் செங்கோல் தட்டி வீழ்த்தி உடைக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக தனது கவலையை வெளியிட்டதுடன் சபையின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் எதிர் கட்சித்தலைவர் உறுப்பினர்களின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

north_provicial_council_session_02.png

தொடர்ந்து உரையாற்றிய வட மாகாண சபையின் எதிர் கட்சித்தலைவர் சி.தவராசா செங்கோல் என்பது பாரம்பரிய பெறுமதி உடைய பொருள் அதனை யாரும் அவமரியாதை செய்வதையோ அன்றி உடைப்பது பறிப்பதையோ அங்கீகரிக்க முடியாது. ஆகையினால் எதிர் காலத்திலும் யாரும் இத்தகையதொரு செயல்பாட்டை மேற்கொள்ளாது இருக்கும் வகையில் சபை முதல்வர் உறுப்பினரான சிவாஜிலிங்கத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இந் நிலையில் சபை முதல்வர் மிகவும் புத்தி சாதுரியமாக தனது உரையில் குறிப்பிட்ட சிவாஜிலங்கம் நடந்து முடிந்த சம்பவத்திற்கு சபையில் கவலை வெளியிடுவதுடன் செங்கோல் திருந்த முடிந்த பணத்தை தரும்படியும் இல்லாதுவிட்டால் தான் அதனை கட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இந் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினாகளான சயந்தன், அன்ரன் ஜெகநாதன், விந்தன் கனகரத்தினம் ஆகியவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில்

எதிர் கட்சியின் உறுப்பினர்களான தர்மபாலா ஜெயத்திலகா ஆகியவர்களும் தமது கருத்துக்களை nதிவித்த நிலையில் முதலமைச்சரும் கூட நடந்த சம்பவம் சம்பந்தமாக எடுத்துக் கூறினார்.

சபையில் குழப்பமான நிலமை ஏற்பட்டதைத் தொடர்ந்து சபையின் முதல்வர் சற்று ஆக்ரோசமாக சபையில் ஒழுங்கு நடவடிக்கை இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறி சபையை அமைதியான நிலமைக்கு கொண்டுவந்த நிலையில் ஆசனத்தில் இருந்து எழுந்த சிவாஜிலிங்கம் நடந்து முடிந்த சம்பவத்திற்கு தான் கவலை தெரிவிக்கப்போவதில்லையெனவும் செங்கோல் திருத்திய பணத்தை கட்டமுடியாது எனக் கூறியதுடன் இதற்காக தான் பதவியை இழந்தாலும் பரவாயில்லையெனக் கூறி தவிசாளரின் வேண்டுதலை ஏற்க மறுத்துவிட்டார்.

சபையில் தேவையற்ற முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கா வண்ணம் இதனை இத்துடன் நிறைவு செய்வதாக கூறி தலைவர் சபையின் அடுத்து கூட்டத்திறக்கான திகதியை அறிவித்து சபையின் நடவடிக்கைகளை நிறுத்த வைத்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/35999/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

தெரியுமா கற்பூர வாசனை? :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கழுதைகள் மேல் என்ன கோவம் வாலி. அவை ஒன்றும் கோமாளித்தனம் செய்வதில்லையே?

*** சிவாஜிலிங்கத்திற்கு தலைக்குள் வெறும் சக்கைதான் இருக்குப்போல ?ஒரு சபையிலை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவில்லாதவருக்கு வக்காலத்து வாங்கிய பலரும் வாலை சுருட்டி ஒளிந்திட்டினம் போல

மகிந்தவின் அடியால் என்பது வெட்டவெளிச்சம் ஏற்கனவே முதலமைச்சர் நிதிய சட்ட மூல விடயத்தில் ஆளுனர் ,இந்த சட்ட மூலத்தில் ஏதாவது மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் வட மாகாண சபையை கலைப்பேன் என சபைத் தலைவருக்கு எழுத்தில் அறிவித்துள்ளார் .

சீ.வி.கே.சிவஞானம் தன்னுடைய அதிகாரத்தை பாவித்து சிவாஜிலிங்கத்தை சபை நடவடிக்கைகளில் இருந்து இடை நிறுத்த முடியும் ,சிவாஜிலிங்கம் முரண்டுபிடித்தால் தடைதான் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி .
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இவரை 1-2 தரம் சந்தித்து இருக்கிறேன். நான் பழகிய வரை கண்ணியம் ஆனவர். இயலபனவர். நம்ப தகுந்தவர் . இது நடந்தது 10 வருடங்களுக்கு முன். இடைப்பட்ட காலம் அதிகம் எனினும் அஅவர் பெரிய அளவில் மாறி இருப்பார் என்று எண்ணவில்லை .

நன்றி

இப்படித்தான் கருணாவும் 10வருடத்திற்கு முன்பு ,நல்லவர் வல்லவர் இப்ப துரோகி. பணம் பத்தும் செய்யும் ,பிணமும் வாய் திறக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.