Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம் -Photo's

Featured Replies

 

மஹிந்த  ராஜபக்ச   இன்று  மாலை இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ளதால்  அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் சென்னை திருப்தி ஆலய அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.
 makintha%20naamtamilar-1.JPG
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்ச, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வ சாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்ச, இப்போதைய பா.ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவடிக்கைகளைத் தொடர்வது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கவலையாகத் தமிழ் மக்களை நோகடிக்கிறது.

makintha%20naamtamilar-2.JPG
இலங்கையில் இருந்த எங்கள் பாட்டன் சிவன் கோயிலையும், எங்கள் பாட்டன் முருகன் கோயிலையும் இடித்துத் தரைமட்டமாக்கிய ராஜபக்ச, தான் செய்த பாவங்களை எல்லாம் கழுவுவதற்காக திருப்பதி வழிபாட்டுக்கு வருகிறாரா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோயில்களை ஈழத்தில் தரைமட்டமாக்கிக் கொக்கரித்த ராஜபக்சவுக்கு வழிபாடு ஒரு கேடா?

ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களை உற்ற உறவுகளாக எண்ணி வாழ்பவர்கள் தமிழ் மக்கள். அப்படியிருக்க எங்கள் இனத்தையே கருவறுத்த ராஜபக்சவை உங்கள் மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது எங்கள் இனத்தை ரணமாக்கும் செயல்.

makintha%20naamtamilar-3.JPG

ஆந்திர மண்ணுக்குத் துரோகம் செய்த ஒருவனை நிச்சயமாக தமிழ் மக்கள் தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டார்கள். ஒருமித்த தேசத்தின் உறவுகளாகவும் அண்டை மாநில அன்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜபக்ச வருகைக்குத் தடை விதிக்க வேண்டும்.

மத்திய அரசும் ராஜபக்சவின் வருகையைத் தமிழ் மக்களின் குரலாக நின்று தடுக்க வேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி ராஜபக்சவின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டத்தை நடத்தும்.

தமிழர்களின் மனதில் வன்மத்தை விதைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு இனியாவது கைவிட வேண்டும் என்பதை அந்தப் போராட்டத்தில் உரக்க வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/35936/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒவ்வொரு கட்சிகளும் தனிதனியே போராட்டம் நடத்துவதைவிட்டு எப்பொழுது அனைத்து தமிழக தலைவர்களும் சேர்ந்து வலிமையுடன் போராடப் போகிறார்களோ அன்றுதான் செவிட்டு மத்திய அரசுவின் காதில் தமிழகத்தில் குரல் ஓங்கி விழும்.

ஈழத்தில்தான் ஒற்றுமையில்லை என்றால் இங்கேயுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒவ்வொரு கட்சிகளும் தனிதனியே போராட்டம் நடத்துவதைவிட்டு எப்பொழுது அனைத்து தமிழக தலைவர்களும் சேர்ந்து வலிமையுடன் போராடப் போகிறார்களோ அன்றுதான் செவிட்டு மத்திய அரசுவின் காதில் தமிழகத்தில் குரல் ஓங்கி விழும்.

ஈழத்தில்தான் ஒற்றுமையில்லை என்றால் இங்கேயுமா?

சட்டசபையில் தீர்மானமே போட்டாயிற்று.. அதாவது ராஜபக்ச போர்க்குற்றவாளி என்று.. அதாவது 8 கோடி தமிழக மக்களும் ஒற்றுமையாக போராடியுள்ளார்கள். :icon_idea:அதுக்கே பருப்பு ஒண்ணும் வேகல.. :wub:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபையில் தீர்மானமே போட்டாயிற்று.. அதாவது ராஜபக்ச போர்க்குற்றவாளி என்று.. அதாவது 8 கோடி தமிழக மக்களும் ஒற்றுமையாக போராடியுள்ளார்கள். :icon_idea:அதுக்கே பருப்பு ஒண்ணும் வேகல.. :wub:

 

தீர்மானம் போட்டது நல்லதே. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்களின் ஞாபகம் பற்றி உங்களுக்கு தெரியுமே? ஒரு பிரச்சனைக்கு பக்கத்தில் அதைவிட இன்னொரு பிரச்சனையை இழுத்துவிட்டால் முதலாவது பிரச்சனையை முற்றிலும் மறந்து விடுவார்கள். இருகோடுகள் தத்துவம் தான்..

ஒட்டுமொத்தமாக போராடினால் மட்டுமே இவர்களுக்கு பிரச்சனையின் வலியும், தீவிரமும் தெரியும். :(

 

இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையில் போராட்டம் நடத்துபவர்களுக்காகத் தலைவணங்குகிறோம். 

இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு எல்லாம் முடிந்து விடும். ராஜபக்ச இந்தியாவுக்கு வந்து இந்திய அரசியல் தலைவர்களோடு கை குலுக்குவதையோ சாமி கும்பிடுவதற்காகக் கோயில்களுக்கு வந்து போவதையோ தடுக்க முடியாதவர்கள் தயவு செய்து மேடைகளில் வீர வசனங்கள் பேசுவதைத் தவிருங்கள். தன் இனத்தையே அழித்தவனை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களிக்க ஈழத்தில் இன்னும் தமிழர்கள் உள்ளனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.