Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

றிசார்ட் பதியுதீனிடம் அடிவாங்கிய சிறிரங்கா எம்பி....

Featured Replies

ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் பிரஜைகள் முன்னிணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீ ரங்கா மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம்அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோரிற்கு ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் விருந்துபாராசம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டுள்ளார். இதன்போது அலரி மாளிக்கைக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கும் இடையில் கடும் வாய்க்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவினால் நடாத்தப்படும் மின்னல் நிகழ்ச்சியில் ரங்காவினால் அமைச்சர் றிசாத் பதியுதீன் கடந்த சில மாத காலமாக விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையிலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தனக்கு எதிராக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரங்களை நிரூபிகிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிடம் அமைச்சர் றிசாத் உரத்துக் கத்தியுள்ளார். இதன்போது அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கும் இடையில் கடும் வாய்க்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்க்குவாதம் முற்றிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா மீது அமைச்சர் றிசாத் அறைந்ததுடன் தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளார். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ்நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோர் தலையீட்டு இந்தப் சண்டையினை முடிவுக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Vidiyal.lk

மின்னல் நிகழ்ச்சியில் வாங்கு வாங்கென்று மகிந்தவை புரட்டி எடுக்கும் சிறிரங்கா ஜனாதிபதி மாளிகைக்கு எதிற்காக ஹரிஸ் எம்பியுடன் போனார்? ஓஹோ! ஒரு இடத்தில் வாலையும் இன்னொரு இடத்தில் தலையையும் காட்டுகிறாரோ???? :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களிடம் அடி வாங்கும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகின்றது..... எங்கே போனது தமிழனது வீரம்.

 

1) மலையகத்தில்... ஒரு தமிழ் சிறுமியை, பாலியல் வன்புணர்வு செய்த முஸ்லீம் நபரை, காவல் துறையிடம் காட்டிக் கொடுத்தமைக்காக தமிழ் இளைஞர்களுக்கு...  முஸ்லீம்கள் அடி, உதை.

 

2) தமிழர்களின் கோட்டையான... யாழ்நகர் ஐந்து லாம்படிச் சந்தியில்,
தமிழருக்கு அடி.

 

3) இப்ப.... ஸ்ரீ ரங்காவுக்கும் அடி விழுந்திட்டுது.

 

போற போக்கு சரியில்லை.
தமிழனுக்கு... "புலிப்பால்" ஊட்டி வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தான் சார்ந்த சமூகத்தை ஏமாற்றி பாராளுமன்ற உருப்பினர் ஆனவர்

அந்த ஊடகவியளாலர்.தான் நடத்தும் நிகழ்ச்சியின் ஆரம்ப காலங்களில் மலையக மக்களின் பிரச்சினைகளை

பேசிப் பேசியே அவர்களை மடையனாக்கி பாராளுமன்றம்சென்றவர். அவர் பாராளுமன்றம் சென்றதும் தனது மக்களின்

பிரச்சினைகள் அனைத்தையும் மறந்து விட்டு தனது சொந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் அழகாக முடித்துக்

கொண்டு ஒரு ஆடம்பரவாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அவர்.

அந்த ஊடகவியளாளன் ஒரு அரசியல் கொள்கையோடு உக்காந்து கொண்டு அரசியல் வாதிகளை வைத்துக்

கொண்டு நிகழ்ச்சி நடத்துவதும்தான் இங்கே இருக்கும் நகைச்சுவை.

கேள்வியை அவரே கேட்டு விடையையும் அவரே கூறுவார் அழைக்கப்பட்டவரைவிட நிகழச்சி நடத்துபவரே அதிகம் பேசுவார்.அரசியல்வாதிகள் பொத்திக் கொண்டு அவர் பேசுவதை கேட்டுக் கொண்டு இருக்கவேண்டும்.

அழைக்கப்பட்டவர் ஒரு சீரியசான விசயம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது விளம்பரம் போடுதல்,தொலைபேசி

இலக்கம் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் அவரது பேச்சின் திசையை பக்காவாக திருப்பிவிடுவார் அந்த

நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

ஊடக தர்மத்துக்கு முற்றிலும் முறனான முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்ட அந்த நிகழ்சியின் பிரதான

நோக்கம் அரசியல்வாதிகளை அழைத்து வந்து அவமானப் படுத்துவதும், அவர்களை பிரச்சினைகளில் கோர்த்துவிடுவதுமாகும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு "யப்பானிய இலத்திரனியல் நிறுவனங்களுள் ஒன்றுதான்" சிறிரங்கா! இதனை தமிழருக்கு எதிரான வன்முறையாக நாங்கள் கருதக்கூடாது.

  • தொடங்கியவர்

Ranka.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.