Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த தோல்வியுற்று மைத்திரிபால வந்தாலும் எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லை! - சிறிதுங்க ஜயசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
srithunga-350-seithy-news.jpg

தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்க்கடிக்கும் அதே நேரம் அதற்கு மாற்றீடாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மலையகம் தென்பகுதி என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவைத் தோற்கடிக்கும் எண்ணத்துடனும் இத் தேர்தலுடன் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோசத்துடனுமே உள்ளதாகவும் கூறினார்.

   

கடந்த 1994 ஆம் ஆண்டும் இதே போன்றதான கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்த நிலையிலையே மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு விடிவு வேண்டுமென்று ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார். ஆனால் சந்திரிக்கா வந்தும் எந்தவித விடிவும் கிடைக்கவில்லை. இதே போன்று தான் மகிந்த தோல்வியுற்று மைத்திரிபால வந்தாலும் எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இதற்கு மேற்படி இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் 50 வீதமான வாக்குகளை அளிக்காமல் விடுவதே காலத்தின் தேவையாகும்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் குறித்த இரண்டு பிராதான வேட்பாளர்களையும் நிராகரித்து 50 வீதமான வாக்குகள் கிடைக்காமல் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினது வலுவினை தெரியப்படுத்தவேண்டும்.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள பஸ்ரியான் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடாத்தப்பட்ட ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது…

‘இந்த முறை நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலானது சென்ற முறையையும் விட மாறுபட்டதாகவே இருக்கின்றது. இத் தேர்தலை நாங்களோ ஏன் எந்தப் பிரஜையும் கோரவில்லை. இத் தேர்தல் நடத்துவதற்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற நிலையில் அவசரப்பட்டு ஐனாதிபதி நடத்துவதன் அவசியம் என்னவென்றால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையும் பதவி ஆசையுமே ஆகும்.

அதாவது தேர்தல் ஐனவரி 8 ஆம் திகதி நடைபெற்றால் மஹிந்த வெல்லுவார் என்று ஜோதிடர் கூறியிருப்பதால் அவரின் வேண்டுகோளுக்கு அமைய தேர்தல் அவசரப்பட்டு நடாத்தப்படுகிறது.

ஆனால் ஜோதிடர்கள் சொல்வது பொய் என்பதுடன் மஹிந்தவின் தோல்வியும் உறுதியாகவே தெரிகிறது. அந்த நாள் ஊடகவியியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாளாகும். ஆகவே அன்றைய நாள் மகிந்தவிற்கும் மறைவு நாளாக அமையலாம்.

தற்போதுள்ள தேர்தல் நிலைமைகளைப் பார்க்கும் போது தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இங்கு கலவரங்கள் ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது. அதாவது பலவிதமான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் என்னுடைய கட்சிக் கூட்டத்தையும் குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் தொடர்ந்தும் வாழ்வதனை மக்கள் விரும்பவில்லை.

இதனாலேயே மஹிந்த ஆட்சியை ஒழித்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் தீர்மானித்திருக்கின்றனர். ஆனால் அதிலும் பிரச்சனை இருக்கின்றது. மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி யாரை ஆதரிப்பது என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த 1994 ஆம் ஆண்டு அட்டுழியங்கள் நிறைந்த ஆட்சி நடைபெற்று வந்த போது அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டுமென கோரி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவை ஐனாதிபதியாக்கினர். ஆனால் அவர் வந்தும் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் குறிப்பாக சமாதானமோ அல்லது இனப்பிரச்சனைக்குத் தீர்வோ எவையும் ஏற்படுத்தப்படவில்லை.

அதே போன்று தான் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் அமர்த்தி எமக்கு ஏதுவுமே கிடைக்கப் போவதில்லை. இந்த இருவருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஏனெனில் மஹிந்த மீண்டும் பதவிக்கு வந்து செய்வாரென நம்பவும் முடியாது. மைத்திரி தன் தேர்தல் விஞஞாபனத்தில் கூட தமிழ் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கும் திட்டம் தொடர்பில் ஏதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனாலும் மஹிந்த ராஐபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும்.

ஆனாலும் சந்திரிக்காவை கொண்டு வந்து ஏமாந்தது போல் மைத்திரியையும் கொண்டு வந்து ஏமாறக் கூடாது. ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனக் கோருகின்றேன். மகிந்த மைத்திரி இந்த 2 பேருடைய போட்டியும் பெரும்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுவதை காணமுடிகிறது.

இதனையே கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூறியிருந்தார். இத் தேர்தலானது எங்களுக்கான போட்டி அல்ல. தென்பகுதியில் நடக்கும் போட்டி. ஆகவே தமிழ் மக்கள் நாங்கள் இதிலிருந்து விலகுவோம் என்றார். ஆனால் அவ்வாறு பிரபாகரன் கூறியது சரி ஆனால் செய்தது தவறு.

ஆகவே நாம் இதனைச் சரியாகப் பயன்படுத்தி குறித்த 2 பேரையும் ஆட்டங்காணச் செய்து தமிழ் முஸ்லிம் மலையகம் ஏன் தென்பகுதி மக்களையும் இணைத்து எமது பலத்தைக் காண்பிப்போம்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=123461&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்! செய்தி: யாழ் தினக்குரல்

"இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களுக்கானது அல்ல, அது சிங்களவர்களுக்கானது என்றும் அதிலிருந்து தமிழர்கள் விலகியிருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று சொன்னதே இன்றைய யதார்த்தம்.ஜனாதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களையும் அவர்களின் நலன்களையும் புறந்தள்ளிவிட்டு சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் வகையில் குறியாக உள்ளனர். தமிழ் மக்கள் இந்த தேர்தலில் விலகியிருந்து தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும். வட கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் எண்ணத்தில் உள்ளனர். மகிந்தவை தோற்கடிக்கும் அதேநேரம் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடியாது. 1994இல் இதேபோன்ற கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றபோது மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு விடிவு வரவேண்டுமேன சந்திரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். எனினும் சந்திரிக்கா வந்த பின்னரும் விடிவு கிடைக்கவில்லை. மகிந்தவை தோற்கடித்து மைத்திரி வந்தாலும் தீர்வு கிட்டாது. தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். இரண்டு வேட்பாளர்களுக்கும் 50 வீத வாக்கு அளிக்காமல் விடுவதே சிறந்தது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்வது இலங்கை அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வேட்பாளர்களை வடகிழக்கு தமிழ் மக்களும் முஸ்லீம்களும் மலையக மக்களும் நிராகரித்து தம் வலுவை காட்ட வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் நடத்த இன்னும் இரு வருடங்கள் இருந்தபோதும் பதவிப் பேராசையினால் ஜோதிடர்களின் கருத்தைக் கேட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் ஜோதிடம் பொய்த்து மகிந்த தோல்வியடைவது உறுதி. தேர்தல் நடத்தப்படும் நாள் லசந்த விக்கிரமசிங்க படுகொலை செயயப்பட்ட கறுப்பு நாள். அந்த நாள் மகிந்தவுக்கும் கறுப்பு நாளாக அமையலாம். ஆனாலும் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பது தொடர்பில் எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை. சந்திரிக்காவை கொண்டுவந்து ஏமாற்றியதுபோல் மைத்திரியை கொண்டுவந்து ஏமாற்றலாம். தமிழ் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும்."

சிறிதுங்க ஜெயசூரிய, ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர்

10384529_10152687635828801_6362284020932

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.