Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன்

Featured Replies

கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பாரிஸ் நகரில் நையாண்டி இதழான, " ஷார்லி எப்தோ" அலுவலகத்தில் இருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கண்டிப்பதாகத் தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், அதே நேரம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துவதும் தவறு என்றார்.

இஸ்லாமிய நம்பிக்கைகள் குறித்து இஸ்லாத்துக்குள்ளும், வெளியிலிருந்தும் பல விமர்சனங்கள் வருகிறது என்று கூறும் மனுஷ்யபுத்திரன், ஆனால் முகமது நபியை உருவகப்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்கிறார். முகமது நபியை மிகப் புனிதமாக முஸ்லீம்கள் கருதுவதால் அது குறித்து மற்றவர்கள் பெருந்தன்மையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இது இஸ்லாத்துக்கு எதிரான விடயமாக தான் பார்க்கவில்லை என்று கூறிய மனுஷ்யபுத்திரன், கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என்பதும் எதிர்வினையாற்றுவதற்கான எல்லை எவ்வளவு என்பதும் தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வுகளை இதழ்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அந்தக் கவலைகளை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டால் அது பழமைவாதிகளுக்கே உதவியாக அமையும் என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2015/01/150108_manushyaputhrian

 

Edited by BLUE BIRD

கருணாநிதி பற்றி கண்டபடி நக்கலாக எழுதவேண்டாம் என்கின்றார் போல  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பாரிஸ் நகரில் நையாண்டி இதழான, " ஷார்லி எப்தோ" அலுவலகத்தில் இருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கண்டிப்பதாகத் தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், அதே நேரம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துவதும் தவறு என்றார்.

இஸ்லாமிய நம்பிக்கைகள் குறித்து இஸ்லாத்துக்குள்ளும், வெளியிலிருந்தும் பல விமர்சனங்கள் வருகிறது என்று கூறும் மனுஷ்யபுத்திரன், ஆனால் முகமது நபியை உருவகப்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்கிறார். முகமது நபியை மிகப் புனிதமாக முஸ்லீம்கள் கருதுவதால் அது குறித்து மற்றவர்கள் பெருந்தன்மையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இது இஸ்லாத்துக்கு எதிரான விடயமாக தான் பார்க்கவில்லை என்று கூறிய மனுஷ்யபுத்திரன், கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என்பதும் எதிர்வினையாற்றுவதற்கான எல்லை எவ்வளவு என்பதும் தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வுகளை இதழ்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அந்தக் கவலைகளை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டால் அது பழமைவாதிகளுக்கே உதவியாக அமையும் என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

 

சரியான பார்வை

நன்றி  பதிவுக்கு...

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அவருக்கு பூட்டு போடவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
நெருப்பு மனிதனின் கட்டுபாட்டுக்குள் இருந்தால்தான் மனிதனுக்கு உலகிற்கு நன்மை.
மனிதனின் கட்டுபாட்டை நெருப்பு மீறினால் ......? அழிவுதான் மிச்சம். 
 
பேப்பர் காரருக்கு நன்கு தெரியும் தாம் என்ன செய்கிறோம் என்பது.
வெளியில் இருந்து பார்க்கும் சில மண்டை கலண்டதுகள்தான் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகின்றன. 
  • கருத்துக்கள உறவுகள்

இவர் முதலில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்துக்களையும் அவர்தம் பண்பாடுகளையும் எதிர்த்து எழுதுவதை நிறுத்திவிட்டு அட்வைஸ் பண்ணட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முதலில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்துக்களையும் அவர்தம் பண்பாடுகளையும் எதிர்த்து எழுதுவதை நிறுத்திவிட்டு அட்வைஸ் பண்ணட்டும்...

தட்போதுஎமது சமூகம் கடைபிடிக்கும் இந்துமதம் சமூகத்திற்கு முரணானது மட்டுமல்ல மூட தனங்கள் மட்டுமே கொண்டது.
ஒருவரை தாழ்த்தியும் 
ஒருவரை உயர்த்தியும் 
ஒருவரை மித்திதும் ஒரு மத கோட்பாடு இருந்தால். அதை அங்கீகரிக்க முடியாது.
 
அதை திருத்தினால் தவிர  புலம்பெர் தேசத்தில் எமது மதம் 2 தலைமுறையில் காணமல் போய்விடும்.
இப்போதும் கூட கோவில் இருப்பதால் அங்கு மதம் இருக்கிறது என்று பொருள் கொள்ள முடியாது. அங்கே வேசகார்கள் கள்வர்  கயவர்கள் வியாபாரத்திற்காக அது இருக்கிறது என்பதுதான் உண்மை.
 
நாம் சைவ மதத்தை முன்னிலை படுத்தி தமிழில் பூஜை முறையை ஏற்படுத்தி சாதி கோத்திர முறைமையை கோவிலில் இருந்து தள்ளிவைத்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.
 
எனது கருத்தில் இருக்கும் தவறுகளை நீங்கள் சுட்டி காட்டினால் அதை ஒரு விவாதமாக தொடர முடியும்.
சரி பிழைகளை பேச முடியும்.
அதை விடுத்து இந்து மதம் பற்றி வாய் திறக்காதே என்பது அடாவடித்தனம்.
 
நான் பிள்ளையாருக்கு மூன்று ஆணுறுப்பு இருப்பது போலவும் ஒன்றை பார்வதி பார்ப்பது போலவும் ஒன்றை முருகன் பார்ப்பது போலவும் கேலிசித்திரம் தீட்டினால்  அது இந்து மதத்தை இழிவு படுத்துவதாகும்.
அதை கருத்து சுதந்திரம் என்று கூற முடியாது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.