Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்துமீறும் சர்வதேச தலையீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறும் சர்வதேச தலையீடு

இந்தப் பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய ஒரு விட யத்தை மீண்டும் வெளிப்படுத்திக்காட்ட வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை இரண்டு பிரதான தரப்புகளுக்கு இடைப்பட்டது.ஒருபுறம் சிங்களவர்கள் மறுபுறம் தமிழ்பேசும் மக்கள். இந்த இரண்டு பிரதான தரப்பினரே இந்தப் பிரச்சினைக் குத் தீர்வுகாண வேண்டியவர்கள். அதுவும் இப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால் இந்த இரண்டு தரப்புகளுமே தங்களுக்குள் பேசி உடன்பாடு கண்டு ஒரு தீர்வை எட்டவேண்டும். வேறு புற சக்திகள் எவையும் தீர்வு இதுதான் எனத் திணிக்க முயலக்கூடாது. அது அத்துமீறிய நட வடிக்கை என்று இப்பத்தியில் ஏற்கனவே தெளிவாக விளக்கி யிருந்தோம்.

தீர்வுக்காகப் பேச்சு மேசைக்குச் செல்லுங்கள் எனத் தரப்பு கள் மீது அழுத்தம்கொடுப்பது வேறு. அதற்காக இவ்விடயத்தில் பல்வேறு வழிவகைகளைக் கையாள்வது வேறு. ஆனால் அதற் கும் அப்பால் போய் தீர்வு இப்படித்தான் அமைய வேண்டும் எனத் தரப்புகள் மீது வரையறைகளை விதித்து எல்லைகளை வகுத்து அளவு மீறி செயலாற்ற முயல்வது முற்றிலும் வேறு.

இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வுகாண இதுவரை கால மும் தரப்புகள் மீது அழுத்தம் கொடுத்துவந்த சர்வதேச சமூகம், அவ்விடயத்தில் தான் பொறுமையிழந்து விட்டதாகக் காட்டி அந்த அடிப்படையில் தீர்வுத்திட்டம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரம்புகளைத் தரப்புகள் மீது திணிக்கத் துணிந்திருக்கின் றது.

சர்வதேச சமூகத்தின் இந்த நிலைப்பாட்டை ஏற்று அங்கீகரிப்பதுபோல அந்தக் கருத்தியலை முற்றாக உள்வாங்கி, அமைதிப் பேச்சுகளில் பிரதிபலித்து மீண்டும் தவறிழைக்கத் தொடங்கியிருக்கின்றது நோர்வே அனுசரணைத்தரப்பு.

தீர்வுக்கான மார்க்கம் இப்படித்தான் அமையவேண்டும் என்ற எல்லைகளை சர்வதேசத்தின் பெயரால் தரப்புகள் மீது வலிந்து திணிக்க முயல்வதன் மூலம் ஒருபுறம் தனது அனுசரணைப் பணிப் பொறுப்பிலிருந்துதாண்டி இவ்விடயத்தில் மத்தியஸ் தராகத் தன்னை மேம்படுத்திக்கொள்ள முயலும் நோர்வே, மறு புறம் இந்தப் பிரச்சினைக்குள் சர்வதேச சமூகத்தின் அத்துமீறிய தலையீட்டுக்கு வழிசமைப்பதன் மூலம் அமைதி முயற்சிகள் மீண் டும் குழம்பிப்போவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றது.

2002 2003 ஆம் ஆண்டுகளில் ரணில்விக்கிரமசிங்க அர சுடன் விடுதலைப்புலிகள் நடத்திய அமைதிப் பேச்சுகள் பின் னர் இறுக்கமடைந்து, தேங்கிப் பயனற்று முடிந்தமைக்கு இவ் விடயத்தில் அளவு கடந்த சர்வதேசத் தலையீட்டுக்கும் அழுத் தத்துக்கும் இடமளித்த நோர்வே அனுசரணைத்தரப்பின் போக் கும் ஒரு முக்கிய காரணம் என்பதை இப்பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதையும்தாண்டி, இப்போது சர்வதேச தலையீடு எல்லை மீறியிருப்பதை நேற்றுமுன்தினம் ஜெனிவாவில் நடைபெற்ற அரசு புலிகள் பேச்சுகளின் ஆரம்பத்தில் நோர்வே அனுசர ணைத் தரப்பின் சார்பில் அந்நாட்டு அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் ஆற்றிய தொடக்கவுரை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமது உரையின் ஆரம்பத்தில் அமைதி முயற்சிகளின் நோக்கு பின்வரும் மூன்று விடயங்களை முக்கியமாகக் கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் வலி யுறுத்தினார்.

* இனச்சிக்கலில் பாதிப்புற்றுள்ள மக்களின் உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்படவேண்டும்.

* இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, வன்முறைகள் களையப்படவேண்டும். படுகொலை செய்வோருக்கு சட்ட விலக்களிப்பு வழங்கும் முறைமை போன்றவை நீக்கப்பட வேண்டும்.

* அரசியல் தீர்வை நோக்கியவையாக பேச்சுகள் முன்னேற வேண்டும்.

இப்படி சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதாகத் தமது தொடக்க உரையில் குறிப்பிட்ட சொல்ஹெய்ம், பேச்சுகளின் மார்க்கம் இப்படித்தான் அமைய வேண்டும் என்பது குறித்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் விசாலமான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகக் குறிப் பிட்டு அது தொடர்பான நான்கு அம்சங்களையும் விவரித்தார்.

*2002 2003 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுகளிலும் கடந்த பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுகளிலும் எட்டப்பட்ட முடிவுகளின் தொடராக தொடர்ச்சியாக அவற்றை ஏற்றுக்கொண்டு இனிமேல் இடம்பெறும் முயற்சிகள் அமையவேண்டும்.

*யுத்தநிறுத்த உடன்பாட்டை ஏற்று முழு அளவில் அதை நடைமுறைப்படுத்தி அதை மேம்பாடடையச் செய்யும் வகை யில் அதனடிப்படையில் செயற்பாடுகள் அமையவேண்டும்.

* 2002 இறுதியில் ஒஸ்லோவில் காணப்பட்ட இணக்கத் தின் அடிப்படையில் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல இனத்தவர்களினதும் சட்டபூர்வமான அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையில் தீர்வு அமையவேண்டும்.

* இலங்கையின் ஐக்கியம், ஒருமைப்பாடு போன்றவற்றை உள்ளடக்கி, உறுதிப்படுத்தும் தீர்வே காணப்படவேண்டும்.

இவையே சர்வதேச சமூகம் உடன்பாடு கண்டு வெளி யிடும் மார்க்கம் என சொல்ஹெய்ம் அறிவித்தார்.

பொதுவாகப் பார்த்தால் தீர்வு இந்த அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்ற வரையறை தொடர்பாக சர்வதேசத் தின் பெயரால் திணிக்கப்படும் இந்த அம்சங்கள் சரியானவை யாக நீதியானவையாக தென்பட்டாலும் அவை இப்பிரச் சினைக்கு சுயாதீனமாக சுதந்திரமாக செயற்பட்டுத் தீர்வு காண்பதற்கு தரப்புகளுக்கு இருக்கும் உரிமைகளில் அத்துமீறித் தலையிடுவனவாக அமைவதை நாம் அவதானிக்க முடியும்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை தமது அரசியல் எதிர் காலத்தை தகைமையை தாமே தீர்மானித்துக் கொள்வதற்கு தமக்குள்ள உரிமையில் யாரும் அத்துமீறி அளவு கடந்து தலை யீடு செய்வது ஏற்கத்தக்கதல்ல என்பதே அவர்களது நிலைப்பாடு.

இந்திய வல்லாதிக்கத்துக்கே இதனை உறைப்பாக உணர்த்தியவர்கள் தமிழர்கள். அதற்காகத் தமது பொதுமக்கள், போராளி கள் எனப் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களையும், உதிரத் தையும், உடைமைகளையும் ஈகம் செய்தவர்கள் அவர்கள். பல்வேறு அபிவிருத்திப் பின்னடைவுகளை எதிர்கொண்ட வர்கள் அவர்கள்.

எனவே, தமது அரசியல் தகைமையைத் தாமே தீர்மானிப்ப தற்கு தமிழர்களுக்கு இருக்கின்ற வரலாற்று ரீதியான பறிக்கப் பட முடியாத உரிமையை மழுங்கடிக்கும் விதத்தில் சர்வதேச தலையீட்டுக்கு இவ்விடயத்தில் இடமளிப்பது நோர்வே அனுசர ணைத் தரப்பு இழைக்கும் பெரும் தப்பிதமாக அமையப்போகின்றது.

இவ்விவகாரத்தில் அனுசரணைப் பொறுப்பைத் தாண்டி மத்தி யஸ்தப் பணிக்கு தன்னை உயர்த்திக்கொள்ளும் விதத்தில் செயற்பட முனையும் நோர்வே அது குறித்து ஆழமாகச் சிந்திப் பது நல்லது. இது கத்தியில் நடப்பது போன்ற விவகாரம். பிழைத் தால் நோர்வேயின் கடந்த ஏழு ஆண்டு கால மெச்சத்தக்க பணி வீணே அவமாகிவிடும்.

-உதயன் ஆசிரியர் தலையங்கம்

உதயன் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் ஜெனிவாவில் இருக்கிறார் என நினைக்கிறன்.

அனுசரணையாளர் பணி முடிந்து தீர்வு திணிப்பு பணியை ஆரம்பிக்கிறது நோர்வே.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இதையும் இங்கு வைத்தல் கூடிய விளக்கம் தரும்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=15158

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.