Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் புதிய ஆளுனர் பளிஹார

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமிப்பின் வேண்டுகோள் என்ன?

ப வில் பெயர் தொடங்கும் ஒருவர் ஆளுனரா வர வேண்டும் என்பதா??

:lol: :lol: :lol:

'ர' வில் முடியவும் வேண்டும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மகிந்தா ஆட்சியில் தனக்கு சாதகமானவர்களை வெளினாட்டு தூதுவர்களாகவும், மாநிலங்களின் ஆளுனர்களாகவும் மகிந்தா நியமித்துள்ளார். இப்பொழுது மைத்திரிபாலா ஆட்சிக்கு வந்தபின்பு மகிந்தாவின் ஆதரவாளர்களை அப்பதவிகளில் நீக்கிவிட்டு தனக்கு ஆதரவானவர்களை நியமிக்கிறார். தமக்கு ஆதரவானவர்களை பதவிகளிலும் முன்பு ஆட்சியில் இருந்தவர்களோடு நட்புடன் இருந்தவர்களை பதவி விட்டு நீக்குவதும் தமிழகத்திலும் பார்த்திருப்பீர்கள். மகிந்தா ஆட்சியில் வெளினாட்டுத்தூதுவர்கள் ஆளுனர்களில் பலர் இராணுவத்தில் இருந்தவர்கள். மகிந்தா கோத்தபாயாவுக்கு நெருக்கமானவர்கள். முன்னாள் கடற்படைத்தளபதி திசாரா சமரசிங்க அவுஸ்திரெலியாவுக்கான இலங்கைத்தூதுவராக இருந்தார். அவருக்கும் பதவி போகிறது. அப்படியானால் திசாரா சமரசிங்கவின் பதவி போனதற்கும் சம்பந்தன் தான் காரணமா?.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மகிந்தா ஆட்சியில் தனக்கு சாதகமானவர்களை வெளினாட்டு தூதுவர்களாகவும், மாநிலங்களின் ஆளுனர்களாகவும் மகிந்தா நியமித்துள்ளார். இப்பொழுது மைத்திரிபாலா ஆட்சிக்கு வந்தபின்பு மகிந்தாவின் ஆதரவாளர்களை அப்பதவிகளில் நீக்கிவிட்டு தனக்கு ஆதரவானவர்களை நியமிக்கிறார். தமக்கு ஆதரவானவர்களை பதவிகளிலும் முன்பு ஆட்சியில் இருந்தவர்களோடு நட்புடன் இருந்தவர்களை பதவி விட்டு நீக்குவதும் தமிழகத்திலும் பார்த்திருப்பீர்கள். மகிந்தா ஆட்சியில் வெளினாட்டுத்தூதுவர்கள் ஆளுனர்களில் பலர் இராணுவத்தில் இருந்தவர்கள். மகிந்தா கோத்தபாயாவுக்கு நெருக்கமானவர்கள். முன்னாள் கடற்படைத்தளபதி திசாரா சமரசிங்க அவுஸ்திரெலியாவுக்கான இலங்கைத்தூதுவராக இருந்தார். அவருக்கும் பதவி போகிறது. அப்படியானால் திசாரா சமரசிங்கவின் பதவி போனதற்கும் சம்பந்தன் தான் காரணமா?.

அப்படி என்றுதான் இங்கிட்டு சிலபேர் பேசிகிறாங்கோ ....

இந்த நிமிடம் வரை ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவில்லை ,இதற்கிடையில் பிரதம செயலாளர் தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள ரிசாத்தை நாடிய பொழுது தன்னுடைய சொல்லை மைத்திரி கேட்பாரோ தெரியாது ,சம்பந்தன் ஐயாவை நோக்கி கை காட்டினாராம் .

தகவல் :வட மாகாண அமைச்சு உயர் அதிகாரிகள் .

இந்த வசீகரா டிப்லோமற்றிக் பூதத்திடம் விக்கி ஐயா சாமர்த்தியமாக தனக்குரிய அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வாரா? 

வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியும், ரணிலின் முன்னைய அரசில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோவை நியமிப்பது குறித்து புதிய அரசுத் தலைமை பரிசீலித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. இந்தப் பதவிக்கு முன்னாள் வெளிவிவகார செயலாளரும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றியவருமான பள்ளியக்கார நியமிக்கப்பட்டுவிட்டார் என சில ஊடகங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அத்தகைய இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவேயில்லை என அரச உயர் வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. "அவரது (பள்ளியக்காரவின்) பெயரும் பரிசீலனையில் இருந்தது. அவ்வாறே அனேகமாக அனைத்து மாகாண ஆளுநர்களுமே பெரும்பாலும் மாற்றப்படுவார்கள் எனத் தெரிகின்றது. வடக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் ஓய்வு பெற்ற படை அதிகாரிகள். அவர்கள் நிச்சயம் மாற்றப்படுவார்கள். அத்தோடு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஓர் அரசியல்வாதி. அவரும் மாற்றப்படுவார் எனத் தெரிகிறது. அந்த இடங்களுக்குப் பெரும்பாலும் ஓய்வு பெற்ற சிவில் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றமையையே புதிய அரசு விரும்புகின்றது. "வடக்கு ஆளுநர் பதவிக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் பெயர் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றது. ஏற்கனவே முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசு விடுதலைப் புலிகளுடன் வெளிநாடுகளில் வைத்து நடத்திய பேச்சுக்கள் பலவற்றில் நேரடியாக அரசுப் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் அவர். தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டவர். "அத்தோடு அவர் வடக்கு ஆளுநராக நியமிக்கப்படுகின்றமையை வடக்கு மாகாண சபையை நிர்வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கும் என அரசு எதிர்பார்க்கின்றது."- இவ்வாறு அரசின் உயர் வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. -

//malarum.com/]http://malarum.com/

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.