Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தா – ஜி. விஜயபத்மா

download-45.jpg

கைலாசத்திற்கு போகும் வழியெல்லாம் விஷ்ணுவுக்கு குழப்பமாகவே இருந்தது .. “என்றுமில்லாமல் எதற்க்காக பார்வதி தன்னை அழைக்கவேண்டும். :” என்ற சிந்தனையினூடே ,,எதுவோ தவறாக நடக்கப்போகிறது என்ற கலக்கம் அவருள் தோன்றியது . கைலாசத்தில் பார்வதி ஒரு இடத்தில் உட்காராமல் இங்கும் அங்கும் நடந்தவாறே இருந்தாள் .. அவள் நிலைகொள்ளாமல் தவிக்கிறாள் என்பதை அவள் நிலை உணர்த்தியது . விஷ்ணுவைப் பார்த்ததும் கண்களில் கலக்கத்துடன் பார்த்தாள் . எனக்காக இதை செய்வியா என்ற கேள்வியும், கெஞ்சலும் அவள் முகத்தில் விரவி இருந்தது . அன்பு தங்கையின் முகத்தைப் பார்த்ததுமே அவள் எதை யாசிக்கிறாள் என்பது விஷ்ணுவுக்கு புரிந்தது .அவர் மிக தயக்கத்துடன் பார்வதியை ஏறிட்டார் .

அவர் பேச துவங்குமுன் பார்வதி ,

‘ தயவு செய்து முடியாது என்று சொல்லி விடாதே! ஜலேந்திரன் சிவனின் நெற்றிகண் நெருப்பில் பிறந்தவன். முருகனைப்போல் அவனையும் யாரும் எதிர்க்க முடியாது. அவன் சிவபாலன் ,, அதே சமயம் அவன் விருந்தாவின் கணவன். விருந்தா ஜலேந்திரன் ஒவ்வொரு முறை போருக்கு போகும்போதும் தன் கணவன் வெற்றி பெறவேண்டும் என்று தீவிர யோகம் உன்னை நோக்கி தான் செய்கிறாள். உன்னுடைய முழு அருளும் பெற்றவள் அவள் .அவள் ஜெலேந்திரனின் மனைவியாக இருக்கும் வரை, ஜெலேந்திரனை ஒருவரும் வெற்றி கொள்ள முடியாது, அவன் சிவன் மேல் மிகுந்த கோபத்துடன் போருக்கு வந்து கொண்டிருக்கிறான்.உன்னைத்தவிர இந்நேரத்தில் வேறு யாரும் உதவி செய்ய இயலாது.”

பார்வதி தேவியின் உடைந்த குரலும், கலக்கமும் விஷ்ணுவை கலங்கசெய்தன. எதற்கும் கலங்காத வீர மங்கை பார்வதி கலங்குகிறாள் என்றால் விசயம் ஒதுக்கி தள்ள கூடிய சாதாரண விசயமல்ல. ஆனால் பார்வதியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமானால், ஒரு பாவமும் அறியாத அல்லும் பகலும் கணவனின் நலம் மட்டுமே விரும்பி அவனுக்காகவே தியானமும் யோகமும் செய்து கொண்டிருக்கும், தன்னுடைய தீவிர பக்தை விருந்தாவை பலி கொள்ள வேண்டும் .

தன் இளம்பிராயம் முதற்கொண்டு விஷ்ணுவை வணங்கி வருபவள் விருந்தா , கணவனுடன் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் விஷ்ணுவை தியானிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து வருபவள் . விஷ்ணுவின் கண்முன் ஒரு நிமிடம் விருந்தாவின் உருவம் வந்து போனது. பார்வதியின் கோரிக்கையை தன்னால் நிச்சயம் நிறைவேற்ற இயலாது என்று அவருக்கு தோன்றியது . தன் முழு ஆத்மாவையும் அர்ப்பணித்து தன்னை தியானிக்கும் தன் பக்தைக்கு தானே துரோகம் செய்ய வேண்டுமா ? அவருக்கு அந்த சிந்தனையே தவறாக தோன்றியது .

” போரின் வெற்றிக்காக , ஒரு நல்ல விசயத்துக்காக எதையும் செய்யலாம். எந்த தர்மத்தையும் மீறலாம் என்று சொன்னவன் நீதானே கண்ணா ?

இதுவும் போர்தான் .. தேவர்களை காக்க ,மனைவியின் தவத்தினால் உன் சக்தியையும், சிவஜோதியே குழந்தையாக உருவாகி, சிவனின் சக்தியை பெற்று சிவனையே எதிர்க்கும் ஜலேந்திரனை சிவனால் கூட அழிக்க இயலாது .நீ என் கோரிக்கையை நிறைவேற்றிதான் ஆகவேண்டும் ”

பார்வதியின் கெஞ்சலும் கலக்கமுமான தொனி மாறி அது இப்பொழுது விஷ்ணுவுக்கு கட்டளையாக வெளிப்பட்டது .விஷ்ணு நிமிர்ந்து பார்வதியை பார்த்தார். அவள் கண்கள் ,” இது என் மேல் ஆணை நீ செய்கிறாய் “என்று கட்டளை இட்டது . பார்வதிக்கு பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து வெளியேறினார் விஷ்ணு. அவர் மனம் முழுக்க குற்ற உணர்வு ஆக்கிரமித்தது . விஷ்ணுவின் முகத்தில் தெரிந்த வேதனையும் குற்ற உணர்வும் கண்ட பார்வதி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். விஷ்ணு அவள் கோரிக்கையை ஏற்று கொண்டார் அதனால்தான் இந்த குற்ற உணர்வு என்று அவளுக்கு புரிந்தது

விருந்தா உலகையே மறந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தாள். அவள் முன் விஷ்ணு ஜலேந்திரன் உருவில் தோன்றினார் . விஷ்ணுவாக இருந்து பார்க்கும்போது விருந்தாவின் அன்பும் பக்தியும் விஷ்ணுவை ஆட்கொண்டு அவள் விரும்பும் வரத்தை கொடுத்து விடுவார் . இப்பொழுது ஜலேந்திரனாக உருமாறி , அவளைப்பார்க்கும்போது அவள் அழகு அவரை கிறங்கடித்தது ..

அவளை ஒரு முறை சுற்றி வந்து அவள் பின்னால் நின்று கொண்டு அன்பொழுக ,”விருந்தா ” என்று அழைத்தார் . விருந்தா கணவனின் குரல் கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளி எழுந்து , அவனைக்கட்டிக்கொண்டு , போர் முடிவு என்ன ஆனது? என்று அவன் மார்பில் முகம் புதைத்துகொண்டு காதலுடன் கேட்டாள் . ஜலேந்திரனாக இருந்த விஷ்ணுவுக்கு அவள் அணைப்பின் வேகத்தில் ,உடல் முழுவதும் மோகம் ஏறி கொதிக்க துவங்கியது .

விருந்தாவுக்கு அந்த மாறுதல் புரிந்து என்னாச்சு உங்களுக்கு என்றபடியே தலை நிமிர்ந்து விஷ்ணுவை பார்க்க முயற்சித்தாள். அவள் தன் கண்ணை ஏறிட்டு பார்த்தால் உருமாற்றம் தெரிந்து கொள்வாள் என்று அவள் தலையை நிமிருமுன் அவளைக்கட்டி தூக்கி கொண்டு அதைக்கொண்டாடத்தானே நான் வந்து இருக்கிறேன் என்று சொல்லியபடி அவள் பின் கழுத்தில் தன் முகத்தை புதைத்து கொண்டார் .கணவனின் பதிலால் பெரும் மகிழ்வுற்ற விருந்தா அவன் விரும்பிய வண்ணம் தன் உடலைகுழைத்து அவனுக்கு ஒத்துழைத்தாள் .

விருந்தாவுக்கு என்றுமில்லாமல் இன்று என்னவென்று, இனம்புரியாத சங்கடம் ஒன்று உடலுக்குள் உருவாகி அவளுக்கு குமட்டலை உருவாக்கியது . எங்கே தன் உணர்வு புரிந்தால் கணவனின் தீவிர காதல் தடைபடுமோ என்று கண்களை இறுக மூடிக்கொண்டு குமட்டலை தனக்குள் கட்டுபடுத்திக்கொண்டாள் .அவளுக்கு எதுவோ ஒன்று தவறாக நடக்கிறது என்பது புரிந்தது . தன் கணவனின் அணைப்பிலும் ,இயக்கத்திலும் எதுவோ ஒரு மாறுதல் தெரிவதை அவள் உள்ளுணர்வு உணர்ந்தது . மூடியிருந்த கண்களை மெல்ல திறந்து கணவனின் கண்களுக்குள் ஊடுருவிப் பார்க்க அந்த கண்கள் காமம் வழியும் கண்ணனின் கண்களாக இருந்தது .

வேகமாக பெரும் கோபத்துடன் விஷ்ணுவை பிடித்து தள்ளினாள் . கோபத்தில் சிவந்த முகத்தில் அருவெறுப்புடன் விஷ்ணுவை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தாள்.

விஷ்ணு அவமானத்தில் தலை குனிந்து, உன் கணவனை போரில் தோற்கடிக்க வேறு வழி தெரியவில்லை. என்னை மன்னித்துவிடு விருந்தா என்றார் . தன் தவறை உணர்ந்து கண்களில் நீர் மல்க மன்னிப்பு கோரி நிற்கும் விஷ்ணுவைப்பார்த்து அவளுக்கு பாவமாக தோன்றவில்லை .

மேலாக கோபம் இன்னமும் அதிகமாகி , கண்ணா உன்னை வணங்கியதற்கு வெட்கப்படுகிறேன். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை ஆட்கொள்வது உன் ஆண்மைக்கே அவமானம் . பாலியல் வல்லுறவு எப்படிப்பட்ட புனிதத்தின் பேரால் நடத்தப் பட்டாலும் அது மன்னிக்க முடியாத குற்றம். பெண்களை பழிவாங்க வேண்டும் என்றால் அவளை கற்பழிப்பது என்பது உங்கள் ஆண் உலகில் நீங்கள் எழுதிக்கொண்ட விதியா ?

கற்பழிக்கும் ஒவ்வொரு ஆணும் அவன் அப்பாவச்செயலில் ஈடு படும்போது , தன் தாயையும், அவன் பிறந்த பூமியையும் சேர்த்தே கற்பழிக்கிறான். அதற்கு நீயும் விலக்கல்ல கண்ணா ..நீ ரொம்ப சுலபமாக மன்னிப்பு கேட்கிறாய் . எனக்கு என் ஒவ்வொரு மயிர்க் கால்களிலும் புழுக்கள் புகுந்து உடல் முழுவதும் மொய்ப்பது போல் உணர்கிறேன் . என் எலும்புகள் உடைந்து, என் சதையை பிய்த்துக்கொண்டு வெளிவரத்துடிப்பது போன்ற வேதனையை உணர்கிறேன். இரத்த நாளங்கள் வழியே அந்நியனான உன் துர் நாற்றம் புறப்பட்டு என்னை மூச்சடையச் செய்கின்றன .

எந்த கண்ணனை நான் ஆராததித்து வணங்கினேனோ …அந்த கண்ணனை இப்பொழுது என் கால் கட்டவிரலின் கீழ் நெளியும் புழுவை விட கேவலமாக பார்க்கிறேன் .நீ தொட்ட இந்த உடலை இனி நான் சுமந்து வாழ இயலாது .. என் அவயங்கள் ஒவ்வொன்றையும் பிய்த்து உன் மேல் விட்டெறிய ஆவலாக இருக்கிறது . எவற்றை எல்லாம நீ மோகித்து உன் விரல்களால் வருடி சுகம் கண்டாயோ அவற்றை உன் முகத்தில் எறிந்து வைத்து கொள் என்று சொல்லதுடிக்கிறேன் ..ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நான் உன்னை என் கடவுளாக ஏற்றுக்கொண்டு வணங்கி உன் அருளால் என் கணவனுக்கு நிறைய வெற்றிகளை கண்டிருக்கிறேன் .

அதனால் உன்னை சுமந்த இந்த உடலை தீக்கு இரையாக்குகிறேன் . நீ மானிடப்பிறவி எடுத்து உன் காதல் மனைவியை இன்னொருவன் பெண்டாள எடுத்து போகும் இழி நிலை உனக்கு உருவாகட்டும் . ஒவ்வொரு நாளும் உன் மனைவியை வேறு ஒருவன் உடமையாக்கி இருப்பானோ என்று நீ உனக்குள் புலம்பி புலம்பி சாகும் வாழ்க்கை உனக்கு வரவேண்டும் . என்னை போலவே உன் மனைவியும் உன்னை நிராகரித்து தீக்குளிக்க வேண்டும் .. இது உனக்கு நான் கொடுக்கும் சாபம் . என் கணவன் தவறு இழைக்கிறான் என்றால் நீ என்னிடம் எடுத்து சொல்லியிருக்கலாம் , அதை விட்டு இவ்வளவு ஈனத்தனமாக நீ நடந்திருக்க கூடாது . என்று கூறியபடி விருந்தா விஷ்ணுவின் கண் முன்னால் எரிந்து சாம்பலானாள் .

விக்கித்து போய் சாம்பலை கைகளில் ஏந்தி கதறி அழுதார் விஷ்ணு தேவர்கள் அனைவரும் கூடி விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறினர் . ஆனாலும் விஷ்ணுவின் மனம் ஆறுதல் அடையவில்லை … தன் கைகளில் உள்ள சாம்பலை சிறிது நேரம் வெறித்து பார்த்தார் . அவமானத்தில் அவர் உடல் கூனிகுருகியது . சாம்பலை கை நிறைய அள்ளி தன் முகத்தில் அறைந்து பூசிய படி விருந்தா உலகில் தலை சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்ட துளசியாக நீ பூமியில் பிறப்பெடுப்பாய். நான் செய்த தவறினால் நீ அவமானச் சின்னமாக ஆகி விடவில்லை . பூவுலகில் வாழும் ஒவ்வொரு சுமங்கலியும் தன் வீட்டில் உன்னை தெய்வமாக வைத்து வழிபடுவார்கள் . எனக்கு நடக்கும் பூசைகள் இனி துளசி இல்லாமல் நடக்காது .. என்று கூறியபடி விருந்தாவின் சாம்பலில் தன சிரம் தாழ்த்தி வணங்கினார் விஷ்ணு .

***

http://malaigal.com/?p=5303

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் கிருபனுக்கு பிடித்திருக்கா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பெண்ணியக் கதை. இன்னும் சில இருக்கு. பின்னர் ஒட்டுகின்றேன்!

துளசியின் பூர்வீகம் இந்தக் கதையைப் படிக்குமட்டும் தெரிந்திருக்கவில்லை :(

இணைப்புக்கு நன்றிகள்

சில வரலாற்று கதாபாத்திரங்களில் வைத்திருக்கும் நன்மதிப்பு காரணமாக சில இடம்களில் கதையாசிரியருடன் உடன்பட முடியல்ல (குந்தி,திரௌபதி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.