Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்குகிறதா த்ரிஷா-வருண்மணியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 த்ரிஷா வருண்மணியன் ஜோடியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
த்ரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்றது.
 
மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.
 
திருமணத்துக்கு பிறகு வருண்மணியனுடன் இணைந்து த்ரிஷா படங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதற்கிடையில் உச்சநீதிமன்ற உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வருகிறது. த்ரிஷாவும், வருண்மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்குவது பற்றி யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=508833839429321861#sthash.ZNL4tAOB.dpuf

சென்னை சூப்பர் கிங்ஸ் நல்லா வந்த மாதிரிதான் :(

சென்னை சூப்பர் கிங்ஸ் நல்லா வந்த மாதிரிதான் :(

ஏன்?. வீரர்கள் கிரிக்கெட்டை விட்டு விட்டு கால்ஃப் (golf) விளையாட ஆரம்பித்து விடுவார்களா?  :o 

ஏன்?. வீரர்கள் கிரிக்கெட்டை விட்டு விட்டு கால்ஃப் (golf) விளையாட ஆரம்பித்து விடுவார்களா?  :o 

 

விளங்கினால் சரி :icon_mrgreen::lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்?. வீரர்கள் கிரிக்கெட்டை விட்டு விட்டு கால்ஃப் (golf) விளையாட ஆரம்பித்து விடுவார்களா? :o

கிட்டிபுல்லு விளையாட ஆரம்பித்து விடுவார்கள்

கிட்டிபுல்லு விளையாட ஆரம்பித்து விடுவார்கள்

புல்லு வைக்கிற இடத்தை நினைத்தேன் :o . சிரித்தேன் :D  :D 

சென்னை சூப்பர் கிங்ஸை வாங்குவதா? வருண் மணியனுக்கு மிரட்டல் - போலீசில் புகார்!

 

சென்னை: சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கக்கூடாது என தனக்கு தொலைபேசி மூலம் மர்மநபர்கள் மிரட்டல் விடுப்பதாக தயாரிப்பாளர் வருண்மணியன் போலீசில் புகார் அளித்துள்ளார். வாயை மூடிப் பேசவும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் வருண் மணியன். இவருக்கும் பிரபல நடிகை திரிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது.

 

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் உள்ள சென்னை அணியை பட அதிபர் வருண் மணியன் வாங்க திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஆனால், அது உண்மையல்ல, வெறும் வதந்திதான் என வருண்மணியன் விளக்கமளித்தார். சென்னை சூப்பர் கிங்ஸை வாங்குவதா? வருண் மணியனுக்கு மிரட்டல் - போலீசில் புகார்! ஆனால், உரிய விளக்கம் அளித்த பிறகும் வருண் மணியனுக்கு மர்மநபர்கள் போன் வாயிலாக மிரட்டல் அளிப்பதாகக் கூறப்படுகிறது.

 

எனவே, சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வருண் மணியன் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ‘‘சென்னை அணியை விலைக்கு வாங்கக்கூடாது. வாங்கினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பலர் தொலைபேசி மூலம் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'', என வருண் மணியன் தெரிவித்துள்ளார். வருண் மணியனின் இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/trisha-s-fiance-varun-manian-filed-compalint-with-police-220097.html

சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை விற்கும் சீனிவாசன்!: மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டி

 

 

சென்னை/ மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை இன்னொரு தனி நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் மாற்றிவிட இந்தியா சிமெண்ட் நிறுவனத் தலைவரும் அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான (BCCI) என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளார். இதைச் செய்தால் தான் அவர் மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்குப் போடியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஐ.பி.எல்.சூதாட்ட வழக்கில் கடந்த 22ம் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை விற்கும் சீனிவாசன்!: மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டி மேலும் ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டது இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

 

 

இதற்கிடையே செயற் குழுக் கூட்டத்துக்கு முன்னதாக சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். கிரிக்கெட் வாரியத்தில் அவருக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளது. இதனால் அவர் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையை விற்றால் தான் சீனிவாசனால் மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியும்.

 

இதையடுத்து Chennai Super Kings Cricket Ltd என்ற தனி நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் இந்தியா சிமெண்ட் வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பங்குகளை ஒப்படைத்துவிட சீனிவாசம் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் அணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களில் இருந்தும் முழுவதுமாக விலகிவிட சீனிவாசம் முடிவு செய்துவிட்டார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/srinivasan-paves-way-csk-sale-ahead-bcci-meeting-220502.html

Edited by நவீனன்

சிஎஸ்கே..... இனி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிட்டெட்!

 

 

சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை விட மனம் இல்லாத என்.சீனிவாசன், அதற்கு இடையூறாக இருக்கும் தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமென்ட்ஸ் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து புதிய நிறுவனத்திற்கு மாற்றியுள்ளார். இந்த முடிவை சென்னையில் இன்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர போர்டு கூட்டத்தில் சீனிவாசனே தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன

 

. சிஎஸ்கே..... இனி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிட்டெட்! அடிப்படையில் தொழிலதிபரான என்.சீனிவாசன், இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், சீனிவாசனுக்குச் சொந்தமானது. இந்தியா சிமெண்ட்ஸ் மூலமாகத்தான் இதுவரை இந்த அணியை நிர்வகித்து வருகிறார் சீனிவாசன். ஆனால் ஐபிஎல் மேட்ச்பிக்ஸிங்கில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கி்க் கொண்டார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். இந்த சம்பவம் நடந்தபோது கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர் சீனிவாசன். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சிக்கலானது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீனிவாசன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி விட்டது.

 

இருப்பினும் பிசிசிஐ பதவி அல்லது ஐபிஎல் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே சீனிவாசன் வகிக்க முடியும் என்று கூறி விட்டது. இதனால் பிசிசிஐ தலைவர் பதவியில் கனவில் இருந்து வந்த சீனிவாசனுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. இதையடுத்து இந்தத் தடையிலிருந்து தப்பிக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். அதன்படி முதல் கட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் வளையத்திலிருந்து அவர் விடுவித்துள்ளாராம். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இனிமேல் இந்தியா சிமெண்ட்ஸ் பார்த்துக் கொள்ளாது.

 

மாறாக புதிய நிறுவனத்திடம் அதை சீனிவாசன் மாற்றியுள்ளாராம். இதுகுறித்து இன்றைய கிரிக்கெட் வாரியக் கூட்டத்தின்போது உறுப்பினர்களிடம் சீனிவாசன் தெரிவித்தாராம். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வசம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்றப்பட்டுள்ளதாம். இதுகுறித்த தகவல் பாம்பே பங்குச் சந்தைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இந்த புதிய நிறுவனம் யாருடையது என்பது தெரியவில்லை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/csk-franchise-transferred-chennai-super-kings-cricket-limite-220569.html

சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமம் துணை நிறுவனத்துக்கு மாற்றம்
 

 

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரி மம், இந்தியா சிமென்ட்ஸின் துணை நிறுவனத்துக்கு மாற்றப் பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிட்டெட் என்ற துணை நிறுவனத்துக்கு சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம் மாற்றப் பட்டுள்ளது. துணை நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இதன் உரிமம் வழங்கப்படுகிறது. இம்முடிவு கடந்த செப்டம் பரில் எடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இப்பரிந்துரையை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்கு நர் குழு நேற்று ஏற்றுக் கொண் டது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப் படும் எனத் தெரிகிறது.

பிசிசிஐ, ஐபிஎல் தொடர் பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த கூடுதல் விவரங்களை அளிக்க இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவ ரும், நிர்வாக இயக்குநருமான என்.ஸ்ரீநிவாசன் மறுத்துவிட்டார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6885671.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.