Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது! - ஜனாதிபதி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Maithripala-Sirisena-200-news.jpg

சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

   

தேசிய தொலைக்காட்சிகளில் வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சில தினங்களில் சுதந்திர தினம் நடைபெறவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.ஜயமங்கள கீதம் பாடுவதற்கும், தேசிய கீதம் பாடுவதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்படுவர். இதற்கு மேலதிகமாக எதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள்.

 

பாடசாலை மாணவர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். நான் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் பாடசாலை மாணவர்களை வீதியில், வெயிலில் நிறுத்திவைக்க வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுக் கின்றேன். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது அரச தலைவர்களை வரவேற்பதற்கு பெருந்தொகையான பாடசாலை மாணவர்களை வீதியில் நிறுத்தியிருந்தனர். காலையில் வரும் சில மாணவர்கள் காலை உணவை உண்ணாமல் வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படும். அதேநேரம் பெண் பிள்ளைகள் மலசல கூட வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததை நான் அறிவேன். எனவே பாடசாலை மாணவர்களைக் கஷ்டப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மாத்திரமே தான் பங்கெடுக்கப் போவதாகவும், ஏனைய நிகழ்வுகளில் பிரதமர் மற்றும் அமைச் சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

கடந்த ஆட்சியில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களே அனைத்து நிகழ்வுகளிலும் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இதனால் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியடைந்தனர். இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. என்ன நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். திருடர்கள் யார் என்பதை இன்னும் சில தினங்களில் முழு நாடும் அறிந்து கொள்ளும். நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டப்படி யார் எவர் என்ற எந்த தராதரமும் பார்க்காது அவர்களுக் கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ ஐக்கிய தேசியக் கட்சியினதோ நிகழ்ச்சி நிரலின் படியன்றி நாட்டுக்கான நிகழ்ச்சி நிரலுக்கிணங்க நாட்டையே முதன் மையாகக் கொண்டு செயற்பட தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி நல்லாட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்த நான் பல தியாகங்களை செய்துள்ளேன். அமைச்சர்களும் ஏனையோரும் இதனை முன் மாதிரி யாகக் கொண்டு செயற்பட்டால் சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

 

கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஜனாதிபதி மாளிகைகளில் உணவுக்காக மட்டும் 157 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இது போன்ற அனைத்து வீண் செலவினங்களையும் இல்லாதொழித்து மக்களுக்கு அதன் பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம். நாட்டையும் மக்களையும் முதன்மையாகக் கொண்டே எமது அனைத்துச் செயற்பாடுகளும் அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அவர் இப்பேட்டியின் போது மேலும் தெரிவிக்கையில், வடக்கு தெற்கு என முழு நாட்டையும் புனருத்தாரணம் செய்யும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாம் அதை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். நூறு நாட்கள் வேலைத் திட்டத்திக்குப் பின் பொதுத் தேர்தலை நடத்துவதாகக் கூறியிருந்தோம். அந்த தேர்தல் முடிவிற்குப் பின்னர் நாம் தேசிய அரசாங்கமொன்றை அமைத்து குறைந்தது அதிலிருந்து இரண்டு வருடங்களுக்காவது அதனை காத்திரமாக முன்னெடுத்துச் செல்வோம். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாம் இப்போதிருந்தே தேசிய அரசாங்கமாக செயற்பட்டு வருகின்றோம் எமது அரசியல் கலாசாரம் வன்முறையை முற்றாக இல்லாதொழிக்கும்.

 

நாட்டில் அஹிம்சையே சட்டமாக வேண்டும் என நான் குறிப்பிட விரும்புகிறேன். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்திருக்காவிட்டால் மோசமான சூழலையே எதிர்கொள்ள நேரும் என்பதை நானறிந்துள்ளேன். இதனால் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளதை நிறைவேற்ற எம் இரு சாராரினதும் இணக்கப்பாடு முக்கியமாகிறது. அதேபோன்று பொதுத் தேர்தலின் பின்னரும் அரசாங்கத்தை கொண்டு நடத்த இந்த இணக்கப்பாடும் தோழமையும் மிக அவசியம். நாட்டில் நடத்தப்படும் தேசிய கொண்டாட்டங்கள் எளிமையாக நடத்தப்படும். அத்துடன் ஜனாதிபதியான தமக்கு அதி மேன்மை போன்ற புகழ்ச்சிகளும் அவசியமில்லை அதனைத் தாம் விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=125831&category=TamilNews&language=tamil

 

சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

இது வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட சகஜமானது. மாணவர்களிற்கு நாட்டுப்பற்றை உருவாக்குவதற்கான செயல்முறை.
 
மைத்திரி புரிகிறது வரும் தேர்தலிற்கான ஏற்பாடென்பது, இருந்தாலும் இது கொஞ்சம் அதிகமல்ல ரொம்ப அதிகம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இது வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட சகஜமானது. மாணவர்களிற்கு நாட்டுப்பற்றை உருவாக்குவதற்கான செயல்முறை.
 
மைத்திரி புரிகிறது வரும் தேர்தலிற்கான ஏற்பாடென்பது, இருந்தாலும் இது கொஞ்சம் அதிகமல்ல ரொம்ப அதிகம்.

 

 

தேர்தலிற்காக என்றாலும் மைத்திரி நல்ல விடயங்களை புகுத்துவது நல்லதே. எதிர்காலத்தில் அந்த நல்ல விடயங்கள் தொடர்ந்தும் நிலைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். கட்டாய இராணுவ பயிற்சி, பிள்ளை பிடித்தலுக்கு எல்லாம் நாட்டு பற்று, தேசத்தின் தேவை என்று காரணங்கள் கற்பிக்கக்கூடாது. நாடு ஒழுங்காய் இருந்தால் மாணவர்ட்கு நாட்டுப்பற்று தானாய் வரும். மாணவர்களை அரசியல்வாதிகள் தம் சுயநலங்களுக்கு வருத்துதல் தவிர்க்கப்படவேண்டும். இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களிற்காக கொடுக்கப்படும் கட்டாய தலைமை பயிற்சி நெறியும் நிறுத்தப்படல் வேண்டும்.

 

தேர்தலிற்காக என்றாலும் மைத்திரி நல்ல விடயங்களை புகுத்துவது நல்லதே. எதிர்காலத்தில் அந்த நல்ல விடயங்கள் தொடர்ந்தும் நிலைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். கட்டாய இராணுவ பயிற்சி, பிள்ளை பிடித்தலுக்கு எல்லாம் நாட்டு பற்று, தேசத்தின் தேவை என்று காரணங்கள் கற்பிக்கக்கூடாது. நாடு ஒழுங்காய் இருந்தால் மாணவர்ட்கு நாட்டுப்பற்று தானாய் வரும். மாணவர்களை அரசியல்வாதிகள் தம் சுயநலங்களுக்கு வருத்துதல் தவிர்க்கப்படவேண்டும். இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களிற்காக கொடுக்கப்படும் கட்டாய தலைமை பயிற்சி நெறியும் நிறுத்தப்படல் வேண்டும்.

 

 

உங்களிற்கு பச்சைப்புள்ளி இடுவதா இல்லையா என்ற குழப்பத்தில் நான் இருக்கின்றேன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளி மாணவர்களை பகடைக்காய்களாய் பயன்படுத்துவது சிறீ லங்காவில் அரசியல் செய்யும் எல்லா தரப்பினருக்கும் கைவந்த கலையாயிற்றே. 'மாணவர் சக்தி மாபெரும் சக்தி!' இந்த கோசத்தை எங்கோ கேட்டமாதிரி உள்ளதல்லவா?

 

 

உங்களிற்கு பச்சைப்புள்ளி இடுவதா இல்லையா என்ற குழப்பத்தில் நான் இருக்கின்றேன்.

 

எந்த குறூப்புக்குள் சேர்க்கலாம் என்ற குழப்பத்தில் வேறு பலர் இருக்கின்றார்கள்.

 

ஒட்டுக்குழுவா, ஒட்டாத குழுவா, ஒட்டிக்கொண்டு ஒட்டாத குழுவா, ஒட்டாமல் ஒட்டிய குழுவா, ஒளிச்சுப்பிடிச்சு விளையாடும் குழுவா, இப்படிப் பல.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளி மாணவர்களை பகடைக்காய்களாய் பயன்படுத்துவது சிறீ லங்காவில் அரசியல் செய்யும் எல்லா தரப்பினருக்கும் கைவந்த கலையாயிற்றே. 'மாணவர் சக்தி மாபெரும் சக்தி!' இந்த கோசத்தை எங்கோ கேட்டமாதிரி உள்ளதல்லவா?

 

 

 

எந்த குறூப்புக்குள் சேர்க்கலாம் என்ற குழப்பத்தில் வேறு பலர் இருக்கின்றார்கள்.

 

ஒட்டுக்குழுவா, ஒட்டாத குழுவா, ஒட்டிக்கொண்டு ஒட்டாத குழுவா, ஒட்டாமல் ஒட்டிய குழுவா, ஒளிச்சுப்பிடிச்சு விளையாடும் குழுவா, இப்படிப் பல.

நீங்கள் எப்படித்தான் ஓடும் புளியம்பழமுமாக ஒட்டாமல் இருந்தாலும்,  final destination ஒட்டுதான்.  இந்த மாத கோட்டாவுக்கு ஆள் குறையுது. குறைந்தது 10 பேருக்காவது பட்டம் கொடுக்க வேண்டியிருக்கு. ரெடியாக இருங்க.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படித்தான் ஓடும் புளியம்பழமுமாக ஒட்டாமல் இருந்தாலும்,  final destination ஒட்டுதான்.  இந்த மாத கோட்டாவுக்கு ஆள் குறையுது. குறைந்தது 10 பேருக்காவது பட்டம் கொடுக்க வேண்டியிருக்கு. ரெடியாக இருங்க.

 

இப்பொழுதெல்லாம்

தா

தா என சிலர் அலைகிறார்கள்...

புலி எதிர்ப்பு என்பது இன்று விரைவில் எரிந்து பிரகாசிக்கும் பொருளாகியுள்ளது

ஆனால் நீண்டநாள் நிலைப்பதில்லை.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லாம் கேட்க சந்தோசமாய் இருக்கு. வடக்கு, கிழக்கைப்பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன். உங்களை ஏற்றிவிட்ட ஏணிகள் என்பதாவது நினைவிருக்கா? அடுத்த தேர்தல் வரும்போதுதான் அது நினைவில் வரும். நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் வாயை மூடிக்கொண்டு இருந்தீர்களாக்கும். நல்லா இருந்து நாசமாய்ப் போங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

 

தேர்தலிற்காக என்றாலும் மைத்திரி நல்ல விடயங்களை புகுத்துவது நல்லதே. எதிர்காலத்தில் அந்த நல்ல விடயங்கள் தொடர்ந்தும் நிலைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். கட்டாய இராணுவ பயிற்சி, பிள்ளை பிடித்தலுக்கு எல்லாம் நாட்டு பற்று, தேசத்தின் தேவை என்று காரணங்கள் கற்பிக்கக்கூடாது. நாடு ஒழுங்காய் இருந்தால் மாணவர்ட்கு நாட்டுப்பற்று தானாய் வரும். மாணவர்களை அரசியல்வாதிகள் தம் சுயநலங்களுக்கு வருத்துதல் தவிர்க்கப்படவேண்டும். இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களிற்காக கொடுக்கப்படும் கட்டாய தலைமை பயிற்சி நெறியும் நிறுத்தப்படல் வேண்டும்.

 

அப்போ வேறு நாட்டு படைகள்  நாட்டை சூறையாட படையெடுப்பு நடத்தினால் ....
முன்னுக்கு இராணுவம் என்ற பெயரில் போரிட போபவன் எல்லாம் விசரனா? 
 
நாட்டுக்கு அழிவு வரும்போது அதை காப்பது நாட்டில் உள்ள குடிகள் அனைவரதும் கடமை.
சும்மா ஓசியில் இருந்து வயிறு வளர்கிறது ..... பின்பு நாட்டுக்கு தேவை வரும்போது வேததந்தம் பேசுறது.
 
நாடு பிடிக்காவிட்டால் போய் காடுகளில் இருக்காலாம். யாரும் ஏதும் கேட்க போவதில்லை. 
நாட்டில் இருந்து அதன் சுகபோகங்களை அனுபவித்தால் எல்லோரும் சேர்ந்தே நாட்டை கட்ட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.