Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல! - மாவை சேனாதிராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mavai-senathi-300-news.jpg

13ஆவது திருத்த சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.நல்லூர் பிரதேச சபையின் புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா நேற்று நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

   

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தமிழ் தேசிய இனத்தின் அடையாளங்களை அழிப்பதிலும் பௌத்தம் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களை வைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வந்தது. இதற்காக அதிகப்படியான இராணுவம் குவிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தியது.சுதந்திரமாக கருத்துக்கூற முடியாத சூழல் நிலவியது. நான்கு ஐந்து பேர் கூட ஒன்று கூட முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலையில் இன்னும் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக இரண்டு வருடம் இருக்கும் போதே தேர்தலை அறிவித்து போட்டியும் போட்டார்கள்.

மஹிந்த ஆட்சியில் எங்கும் புலனாய்வு பிரிவின் செயற்பாடு இருந்தும் கூட பொது எதிரணி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவார் என இவர்கள் எதிர்பார்க்கவில்லை.அனைவரும் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தார்கள். நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டதற்கு இணங்க தமிழ் மக்கள் தமது அரசியல் நிபுணத்துவம் போல் தமது வாக்குகளை பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டார்கள்.

புதிய ஆட்சி வந்து விட்டதனால் எல்லாம் மாறி விட்டது என்று கூறவில்லை. நாம் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். கடந்த ஆட்சி காலத்தை போல காலஅவகாசத்தை இந்த அரசாங்கம் கேட்கக்கூடாது. 13ஆவது திருத்த சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல. இந்தியாவும் இதனை ஏற்றுள்ளது. இதனாலேயே சந்திப்புக்களின் போது 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு காணப்படவேண்டும் என்று கூறியுள்ளது.

இலங்கையில் நடப்பது பற்றி இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமது அவதானிப்புக்களை செலுத்தி வருகின்றன. ஆட்சிக்கு வந்த அரசு தனது 100 நாள் திட்டத்தில் தமிழ் மக்களின் உடனடி பிரச்சினையாக உள்ள மீள் குடியேற்றம், படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணி விடுவிப்பு, காணாமல் போனவர்களின் நிலை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழல் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு உகந்ததாகும் என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=126050&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் நடப்பது பற்றி இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமது அவதானிப்புக்களை செலுத்தி வருகின்றன
உலகம் உன்னிப்பாக பார்க்கும்பொழுது சபந்தரும் ,சுமத்திரனும் சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை என்றமாதிரி செயல்படுகினம்.....நீங்கள் என்னடா என்றால் இப்பவும்1975 ஆம் ஆண்டு பல்லவியில நிற்கிறீயள்....
  • கருத்துக்கள உறவுகள்

13- என்று தலீவர் சம்பந்தன் சொல்லச் சொல்லேல்லையா.. மாவை ஐயா..?!

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆட்சி காலத்தை போல காலஅவகாசத்தை இந்த அரசாங்கம் கேட்கக்கூடாது. 13ஆவது திருத்த சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல. இந்தியாவும் இதனை ஏற்றுள்ளது. இதனாலேயே சந்திப்புக்களின் போது 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு காணப்படவேண்டும் என்று கூறியுள்ளது.

 

தலைவரே.. அவரு தெரிவு குழு .. பொறிவு குழு என்று கதைவிட்டார்.. இவரு புரியாணி குழு ஆரம்பிக்க இருக்காறாம்.. இந்தியாக்காரன் பெர்மிசன் கிடைச்சவுடனே அதுல சேர்ந்து புரியாணி சாப்பிடுங்கோ <_<
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும்..சம்பந்தர் விடயத்தில் மெளனம் ஏன்?????மாவையே மெளனமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்தியா 13வது திருத்தம் கொடுத்தால் தமிழர்களின் பிரச்சனை முழுமையாக தீர்ந்ததுபோல எல்லோ ஏமாத்தி வருகினம் ....... இதற்க்கான பதில் என்னென்று என்றைக்கும் சொல்லவில்லையே மாவை அண்ணா  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.