Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

சிறைக் கதவுகள்

விரும்பியோ

விரும்பாமலோ

எம்மவர்க்கு

பரிச்சியமான

ஒன்று...

சுதந்திரத்திற்காக

சிறை செல்பவர்கள்

அல்ல

பலரும்

சும்மா

இருந்து

சுருட்டுப் பிடித்த

அப்பு பாவம்....

சிறு சில்லு

சுற்றி விளையாடிய

சிறுவனும்

அங்கே..

காரணம்

புலிகளுக்கு

வாகன ஓட்டியாம்...

தனியாய்

இருக்க

பயமென்று

அவனும்

பிடித்தானோ?

என்ன தான்

என்றாலும்

எம்மைப்

பொறுத்தவரை

சிறை சென்று

வருவது

ஒரு கெளரவம்

வெளிநாட்டில்

தஞ்சம் கோரவும்

வசதி...

ஆனாலும்

மனசுக்குள்

தத்துவார்த்த

விசாரணை ஒன்று...

கிறில் வைத்த

கம்பியால்

ஏன்

சிறைக் கதவுகள்?

அப்பாவிகள்

உள்ளிருந்து

பொலிஸ் காரர்

தான் சிறையில்

என்று

ஆறுதல் கொள்ளவா?

ஆட்சியாளர்கள்

கவனிக்க

பூட்டிய சிறைக்குள்

பிறந்த குழந்தையால்

தான்

கம்ச வதம்!

புரியுமோ

உமக்கு?

புரிந்துவிட்டால்

தனி ஈழம்

எமக்கு!!!

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

எமக்கு வீரம் இருக்கிறது..நெஞ்சில்

ஈரமும் இருக்கிறது..

துயர பாரங்கள் சுயமாய்த் தூக்கி

சற்று சோர்வும் இருக்கிறது..

அழிக்க ஆளனுப்பிளால்

மீண்டும் குருதி கொதிக்கும்..

உயிரின் விலை மறந்து

வீருண்டு எழும் புஜங்கள்

எதிரியை அழிக்கச்சீறும்

சிறுத்தையாகும்..இங்கே..

நாடாளும் நரிகள் மீண்டும்....

பாரதமேறி படையனுப்பக்கேட்கும்..

கேட்கட்டும்.. கேட்டதைக் கொடுக்கட்டும்..

இருந்தென்ன மானம் காக்க

இறப்பதென்றானபின்.. பேர்

அரக்கெனென்று நடுங்கி சாவோமா..

இல்லை அஞ்சாது

மானம் போர்த்திய மறத்தமிழ்ப்புலி

Edited by vikadakavi

புலி

மூவேந்தர் கொடியில்

பறந்தது

அன்று

ஈழத்து என்

மண்ணில்

பறக்குது

இன்று...

நரியாக சிலர்

நாட்டுக்குள்

அலைய

பரியாகிப்

பார்ப்பவர் வியக்க

வரிப் புலியாகி

கரிகாலன் காட்டிய

வழியில்

சமராடி

தரையோடு கடலும்

கொண்டு

வானுமாகி வளர்ந்த

வீரம்

சிங்கங்கள் சீறினாலும்

பங்கங்கள் வராமல்

காத்த தனி

வீரம்

அங்கங்கள் கிழித்தே

மனச் சிக்கல்கள்

காட்டும்

பகையே

சங்கங்கள் அமைத்து

சங்குகள் முழங்க

வளர்ந்த வீரமடா

எம் வீரம்

அம்புகள் தொடுத்து

ஆக்கினைகள் கொடுத்து

ஆரையடா பயமுறுத்துவீர்?

வம்புகள் விடுத்து

ஈழத்து வளைகாப்புக்கு

வசதிகள் தருவீர்

இல்லையேல்

வரிசையாய்

மடிவீர்!!!

மடிவீர்..

உடலம் சிதையாய்..

தேச நலன் நோக்கில

உயிர் உன்னத விதையாய்..

விதையாய் மண்ணுள்

புதைந்துபோயுள்ளோம்

சமாதானம் என்னும்

மலருக்காக

மலருக்காக மலர் கொடுத்தும்

மலர்..வாடியது..

கொடுத்த மலரல்ல

அதைச் சூடிய மலர்..

வாடலுக்கு காரணம்..

சூடிய மலரல்ல..

கொடுத்த மன்மதன்..

இன்னொரு மலரை

இன்னொரு மலருக்கு

கொடுத்துக்கொண்டிருக்கிறான்..

கொடுத்துக் கொண்டிருக்கிறான்..

கொடுத்துக் கொண்டிருந்தான்..

கொடுத்துக் கொண்டிருப்பான்...

அன்பை...

அறிவை...

ஆண்டவன் எனக்கு...

ஆனால்..

நான் இன்னும்

வாழ்கின்றேன்...

அன்பற்றவனாக...

அறிவற்றவனாக...

இந்தப் பூவுலகில்...

ம்....

எனது பெயர்

சோம்பேறி!

சோம்பேறிகளை எனக்குப் பிடிக்காது..

நான் அவர்களைப்பற்றி பேசமாட்டேன்..

நான் அவர்களுக்கு அறிவுரை சொல்லமாட்டேன்..

நான் அவர்களைப் பற்றி பாடமாட்டேன்..

நான் அவர்களுக்காக எதுவும் செய்யவும் மாட்டேன்..

ஏனென்றால் எனக்கு தூங்கித் தூங்கி

மிகவும் அலுப்பாக இருக்கிறது..

மீண்டும்..தூங்கவேண்டும்..

Edited by vikadakavi

தூங்க வேண்டும்

எந்தன் தேசத்தில்

எந்தன் வீட்டு வாசலில்

சுதந்திரமாக

சுகந்திரமாக தான் இருந்தோம் - அன்று

இன்று

சுகந்திரமின்றித் தவிக்கின்றோம்

சோம்பேறிகளை எனக்குப் பிடிக்காது..

நான் அவர்களைப்பற்றி பேசமாட்டேன்..

நான் அவர்களுக்கு அறிவுரை சொல்லமாட்டேன்..

நான் அவர்களைப் பற்றி பாடமாட்டேன்..

நான் அவர்களுக்காக எதுவும் செய்யவும் மாட்டேன்..

ஏனென்றால் எனக்கு தூங்கித் தூங்கி

மிகவும் அலுப்பாக இருக்கிறது..

மீண்டும்..தூங்கவேண்டும்..

சோம்பேறியின் கவித நன்று :D:D

சுதந்திரமாக வாழ்வதற்கு

இன்று எனக்கு

விருப்பமில்லை...

உங்களுக்காக...

சுதந்திரமாக நான்

நாளை வாழ்ந்து

பார்க்கின்றேன்..

ஏனென்றால்..

இப்போது அடியேன்

காதலிற்கு அடிமை!

சுதந்திரமின்றி

தவிக்கின்றோம்

இன்று முதல்...

ஏனெனில்..

நேற்று இரவில் இருந்து

நாமிருவரும் காதலிற்கு

அடிமையாகி விட்டோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமையாகி விட்டோம் - அன்புக்கு

அத்துடன் பாசம் வந்தது

அதற்கும் அடிமையாகி விட்டோம்

அது மட்டுமா - ஆனந்தம் வந்ததே

அதற்கும் அடிமை

அடிமை அடிமை எதற்கும் அடிமை

வாழ்கையின் நீரோட்டம் அப்படி...

  • கருத்துக்கள உறவுகள்

நீரோட்டம் அப்படி -- மனிதம்

நினைத்தால் அதுவும் மாறுமே!

பரிதியின் நீரோட்டம்

பனித்துளியை வருடிச் செல்லும்!

பௌர்ணமியின் நீரோட்டம்

அல்லியையும் அணைத்துச் செல்லும்!

மாவலியின் நீரோட்டம்

வன்னியையும் முத்தமிடும்!

நீரோட்டம் அப்படி -- மனிதம்

நினைத்தால் அதுவும் மாறும்.

மாறும் எல்லாமே

ஒரு நாள் மாறும்

மாற்றம்

என்பதைத் தவிர

சீறும் புலியின்

சீற்றத்தின் முன்னே

சீயங்கள் (சிங்கங்கள்)

சிதறி ஓடும்

ரணங்கள் ஆறும்

வாழக்கை

ரம்மியமாய் மாறும்

ரகசியமாய்ச்

சேர்த்து வைத்த

என் ஈழக் காதல்

ஐ.நா வில் முழங்கி

உலக வீதியில்

கேட்கும் ...

ஈழம் இன்னொரு

சிங்கப்பூராய்

ஆகும்

எதுவும் தூரமில்லை

எழுந்து நடந்தால்!

அதுவும் மாறும்..

இதுவும் மாறும்..

நானும் மாறுவன்...

நீயும் மாறுவாய்...

கையில் கொஞ்சம்

காசு கிடைத்துவிட்டால்...

இது தெரிந்தே

கடவுள் நம்மை

ஏழைகளாகப்

படைத்தாரோ?

எழுந்து நடந்தால்

எனக்கு தெரியாது

என்ன நடக்குமென்று..

பூகம்பம் வரக்கூடும்..

பூமி அழியக்கூடும்..

இதனாலேயே

தொடர்ந்தும்

உங்களுக்காக..

குந்தி இருக்கின்றேன்

ஓரிடத்தில்...

நான் சூரியன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சூரியன்

உலகத்திற்கே

உயிர் கொடுப்பவன் - ஆனால்

எனக்கோ உன்னில் தானே

என் உயிர் தங்கியிருக்கிறதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கியிருக்கிறதே உன்னிடத்தில் பணம்

வங்கியில் கிடைக்கும் வட்டி குறைவென்றே

பாங்காய் பகுத்தறிவுடன் பணத்தை

ஆங்காங்கே ஆயிரத்துக்கு ஐந்து வீதமாய் கறந்து

தங்கு தடையின்றி வரும் பணமும் இங்கே

இங்கிதமாய் குட்டியும் போடுதே

போடுதே தாளமே என் மனமே..

பூவைதான் கூறினாள் சம்மதமே...

ஆகுமோ..நம்கதை காவியமே..

அழகிலே என்னவள் ஓவியமே....

போடுதே தாளமே என் மனமே..

பூவைதான் கூறினாள் சம்மதமே...

மெல்ல மெல்ல நெருங்கி வந்து

நேசம் பேசுவாள்..

சின்ன சின்ன இதழ்கள் பிரித்து

சிரிப்புக் காட்டுவாள்..

அவள் செய்வதெல்லாம் எந்தன்

இதயம் அள்ளுமே

அவள் சேவைகொண்டு வாழ

ஆசை தாவுதே..

போடுதே தாளமே என் மனமே..

பூவைதான் கூறினாள் சம்மதமே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமே மெளனமான பின்னே

எம்மதங்கள் எதற்கு இனி நமக்கு

எம்மதமும் சம்மதம் என்றே இரு

மனங்களின் சம்மதங்களும் இங்கே

சம்பிரதாயங்கள் கடந்த நிகழ்வாய்

அரங்கேறும்

அரங்கேறும் என்பாடல்

ஒருநாள்

தமிழ்கூறும் உலகெங்கும்

எழுந்தாடும்

திருநாள்

மரமேறும் மந்தியும்

மகிழ்தாடும்

பலவேறு புதினங்கள்

எனைப் புகழ்ந்தெழும்

ஒருவாறு தமிழ்

உலகாளும் - நாம்

உரையாடும்

பாஷை

தமிழாகும்

அழகுத்

தமிழாகும்

Edited by kavi_ruban

தமிழாகும்...தென்றல்

ஈழத்தில் வீச..

தமிழ் பாடும் மூங்கில்..

ஈழக் காற்றோடு உரச..

தமிழ் பேசும்.. முகில்கள்

ஈழ வானோடு பேச..

ஈழ உறவெல்லாம் அற்றதாலோ..

என் தமிழ்ப் பிள்ளை

மறந்தான் தாயின்

தேன்தமிழை..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

தேன்தமிழை மீட்டுவரும்

தூனனைய உறவுகளே!

தூங்காது வடம்பிடிக்கும்

தூயகள நன்பர்களே!

பண்போடு கவிபுனையும்

பரிவாண பந்தங்களே!

இவ் வந்தாதி தொடக்கிவிட்ட

அன்பான சோதரியே!

பாங்குடன் தூவுகின்றேன் -- நும்

பாதங்களில் மலர்கலையே!!

மலர்களையே மறந்த

கூந்தல் கொண்டு...

பொட்டிழந்த நெற்றியிலே

நீறிட்டு..நிலைக்குத்தும்

வெறித்த பார்வையோடு..

வெள்ளைச்சேலையும்

வெளிரிய உதடும்..

என்னிதயத்தில் பூஜித்த

பூவை கைம்பெண்ணாக்கி

கலங்கவிட்டதார்

விதியா..

சமுதாயமா..

இறைவனா..

இப்படி ஆயிரம் கேட்டாலும்..

காதலை வீட்டில் சொல்லாமல்

அவனை வேறொருவனுக்கு

விட்டுக்கொடுத்த நானும்

ஒரு காரணம்..

இப்போது அவள் விதவையாம்..

எப்போது அவள் வாழ்க்கை

வசந்தமாகும்.. அந்த இளமை

பூத்துப் புன்னகைக்கும்..

இதற்காக..

அவளுடன் சண்டை போட்டு

சமுதாயத்தோடு சண்டை போட்டு

இயலாமல்..

இறைவனே உன்னோடு

சண்டை போடுகிறேன்..

அவள் மறுமண சம்மதத்தை

வாங்கித் தா..

வாங்கித் தா

ஈழத்தை

தூக்கத்திலும்

துட்டர் பயம்

வந்தெழுப்பி

'வா' வென்று உறுமி

வசை மொழி பேசி

வரிசையாய் ஏற்றுகின்றார்

பஸ்சில்...

வாழ வழியில்லையாம்

கொழும்பில்

கோழைகாள்

எம்மையடா

துரத்துகின்றீர்?

எமனின் கரம்

தொட்டா விளையாடுகின்றீர்?

சிவப்புத் தோல் போர்த்திய

வெள்ளை நரியே

ஈழத்தின் வீதியெங்கும்

சிவப்பை அள்ளித்

தெளிக்கின்றாய்

சிந்திக்கும் திறன்

மறந்தாய்

அலரி மாளிகையில்

குளறி அழுவாய்

பொறு!

ஈழமே

உன் பெறுமாதம்

நெருங்குகின்றது

காலமே

சுகப் பிரசவம்

நடக்கும்

வகை செய்வாய்

உலகமே

குந்தியிருந்து

குறட்டைவிட்டு

கனவில் விழித்து

'ஆ' வென்று கேட்காதீர்

குழந்தைக்கு

வாழத்துச் சொல்வீர்

அங்கீகரிப்பீர்

முடியாவிடின்

ஊமையாவீர்

எம் விதியை

நாமே வரையும்

பிரமாக்களாவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.