Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

படுத்துகிறது பாடாய்- எனை

பீடித்த காதல் பிணி.

மடந்தையின் அழகு கண்டு

மயங்கிய காளை இங்கு

உறக்கமின்றி தவிக்கின்றேன்

உறவாடத் துடிக்கின்றேன்.

எந்தன் காதல் சொல்லி

உந்தன் மறுப்பைத் தாங்க

நெஞ்சில் உறுதி இல்லை.

சொல்லாமல் பூட்டிவைத்தாலும்

மனதில் நிம்மதி இல்லை.

உன் மனதில் இது போல்

எண்ணங்கள் எழுவதுண்டா?

சொல்வாய் ஒரு மொழி திருவாயால்

கொல்லாதே உன் மௌனத்தால்.

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

மெளனத்தால்

ஒரு கவிதை எழுத

விரும்பி அடியேன்

எழுதிய கவிதை

வருமாறு:

.....................

.....................

.....................

.....................

.....................

.....................

(குறிப்பு : புரிந்தவர்களுக்கு மெளனமாய் நன்றி/வாழ்த்துச் சொல்வேன்.)

.............................

..................................................

...........................

...................................

..................................

.............................

நான் புரிந்து கொண்டேன்..

என் கணைகளுக்கும்

காதலுக்கும் ஆன

உன் மேற்படி பதிலை..

பாவம்...

காதலனிடம் கலைக்காத

மௌனத்தை உன்

கணவனிடமாவது கலைத்துவிடு..

ஊமையென்று நினைத்துவிடப்போகிறான்..

போகிறான்.. மெல்ல நடைநடந்து

போகிறான் எந்தன் செல்ல மகன்.

பல்லு முளைக்காத சிறு பாலகன். - அவன்

சொல்லும் மொழி கிள்ளை மொழி.

சிறு பிள்ளையாய் நானும் இருந்த போது

ஒரு வஞ்சமும் அறியாதவனாயிருந்தேன்.

நாளாக நாளாக நானும் வளர

என் மனதிடை மாசுக்களும் வளரக் கண்டேன்.

கள்ளங் கபடமில்லா வெள்ளையுள்ளம் - அது

குழந்தைகளுக்கு மட்டும் ஏனோ சொந்தம்?

சொந்தம் சொல்லப் பலருண்டு

ஆனாலும் அருகில் எவருண்டு?

முந்தநாள் இறங்கி விளையாடியது

போல் நினைவில் உள்ள

என் வீட்டு முற்றமும்

கூடி இருந்து ரசித்த சுற்றமும்

போனதெங்கே?

ஆளுக்கொரு திசையில்

யார் யாரோ போட்டு வைத்த

பாதையில் நடக்கின்றோம்

எமக்கான பாதை

வந்து போவார் யாருமின்றி

வெறிச்சோடிக் கிடக்கின்றது

வீட்டு வளவில் நின்ற

வடலிகளும்

உயர்ந்த மனித தோரணை

செய்யும் பனைகளும்

காற்று வந்து ஓலைகளுக்கிடையில்

ஒளித்து விளையாடுகையில்

விதம் விதமாய்

ஒலி செய்யும்

காய்ந்த ஓலை சில

களைத்து விழ

குருத்தோலைகள்

கைகொட்டிச் சிரிக்கும்!

வாழ்க்கையின் வடிவான

தத்துவம் அது!

எங்கிருந்தோ ஒரு குயில்

தன் குரல் செருமி

'ஒரு படப் பாடல்'

பாடும்!

கழுத்தில் மணி கட்டிய

சில காளைகள்

காலில் சலங்கை கட்டிய

மங்கையரைப் பழித்துச்

செல்லும்!

அந்தி நேர வானச் சிவப்பைக்

காட்டி தன் காதலியின்

நிறம் பழிப்பான்

காதலன்

விடாது அவளும்

'அத்தான் கைவிளக்கை ஏற்று

இருட்டில் உன்னைத் தேட

முடியாது' என்பாள்

தன் பங்குக்கு!

திண்ணையில் அமர்ந்து

சில பழசுகள்

சுருட்டை புகைத்தபடி

உலகப் பிரச்சனைகளுக்கு

இங்கிருந்தே தீர்வு

சொல்வர்...

எழுத எழுத

பல நினைவு

தனை எழுது என்று

எனை வருத்தும்

எந்தப் புள்ளியில்

முடியும் என்று அறியாது

இத்தோடு முற்றுப் புள்ளியிடுகிறேன்!

(கவிரூபன்... அழவைக்கின்ற அழகான கவிதை அது மிக்க நன்றி..பாராட்டுகள்..)

புள்ளியிடுகிறேன்..

நீ போட்ட கோலத்;திற்கு..

பதில் கோலம் நான் போட

புள்ளியிடுகிறேன்..

இது மாக்கோலம் அல்ல

இப்போது திருவிழாக்காலமுமல்ல..

இது முற்றம் விழுகின்ற புள்ளியல்ல..

நான் இருப்பது முற்றமுள்ள வீடுமல்ல..

நீ காதலுக்காக கோலம் போட்டிருக்கிறாய்..

நான் உன் கனவுகளை கலைப்பதற்காக

புள்ளியிட்டுக்கொண்டிருக்கி

கோலம் போட்ட கவி

நீ(வீர்) போட்ட கோலம்

நன்று...

காலம் இது காட்டும்

புள்ளியில் நின்று கொண்டு

ஒவ்வொருவராய் முடிந்தளவு

புள்ளிகள் இடுவோம்...

எங்கிருந்தாலும் மறவாது

நீயும் ஒரு புள்ளியிடு

புள்ளிகளுக்குக் இடையில்

தூரம் முக்கியமில்லை

புள்ளிகளை இணைப்பது

இப்போதெல்லாம் சுலபம்!

தள்ளி நின்று புள்ளிகளை

வேடிக்கை பார்க்கும்

கரும் புள்ளி நீ

எனில், இப்போதே

போய்விடு!

ஆனால்,

ஒன்றை மறவோதே

காலம் கட்டாயம்

உன் முகத்தில்

செம் புள்ளி குத்தும்!

பெரும் புள்ளி

சிறு புள்ளி எனும்

பேச்சே இங்கில்லை

சிறு துளியில்

வந்தவன் தான் நீ

ஆகவே சிறு புள்ளிதான்

உன்னால் முடியும் என்று

சிணுங்காதே...!

நீ இங்கிடுகின்ற புள்ளிகள் தான்

புலிகளுக்குத் தெம்பு

பிறகென்ன கிடைக்காதோ

ஈழம் நீ நம்பு!

ஒவ்வொரு தமிழனும்

பகைவனுக்கு அம்பு!

Edited by kavi_ruban

  • கருத்துக்கள உறவுகள்

அம்பு நிறைந்த தூளியது

அம்பினால் அழிவதில்லை!

அம்பு தைத்த மானினமோ

அலறாமல் மடிவதில்லை!

சொல்லம்பு தீன்டிவிட்டால்

இதயம் சுடலையிலும் வேகாது!

உடலிலே தகிக்கும் காமம்

உடலையே எரிக்கும் காதல்!

உறவொன்று அமைந்து விட்டால்

எரிதழல்தான் தணிந்து விடும்!

எரிமலையும் குளிர்ந்து விடும்!

தேகத்துடன் முட்டி முடங்கினால் காமம்

தேகத்தையும் கடந்து நீந்தினால் அது காதல்!

வாலிபத்தில் வைத்திருந்த லட்சியங்கள்

வாசல் படலையில் தொங்கும்!

கொள்கைகள் எனும் புள்ளிகளோ

கோடுகளுக்குள் மறைந்து

கோலங்களாய் மிளிரும்!

இல்லறமெனும் அரன்மனைக்கு

இவையெல்லாம் அலங்காரம்!

இருக்குதையா சிருங்காரம்

இல்லறத்தாள் சிரிப்பினிலே!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிப்பினிலே உன் சிரிப்பினிலே

நான் விழுந்தேன் நான் பாதாளத்திலே

எழவே முடியாது என நான் நினைத்தேன்

அப்போது வந்தாள் உன் தங்கையவள்

ஒ அழகிய நங்கையவள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நங்கையவள் நளினமாக நகைத்தாள்

நனைந்து போனேன் பனிமழையில்

கண்ணசைவில் கன்னக் குழிவிழும்

முல்லைச் சிரிப்பினூடே உன் குரல்

காற்று வழி வந்த வார்த்தை

அண்ணா என்று சொல் கேட்டு சோர்வு

தொட்டுச் சென்ற மனது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மனதை விட்டு அகலா உறுதி"

கொண்டவன் எங்களின் மன்னன் - ஈழத்

தாயவள் மானம் காக்க படைத்திட்ட

எங்களின் அண்ணன்!

விழிகளில் கனவினில் கருத்தினில்

எங்கும் ஈழம் ஒன்றே மூச்சு!

விழியை நோக்கிப் பார்த்தால் போதும்

நிற்கும் எதிரியின் மூச்சு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியின் மூச்செல்லாம்

ஈழமண்ணில் அடங்கிடும்

நாள் வரும்.....

அதை எதிர்பார்த்து

காத்திருக்கும் புலம்பெயர்

தமிழருக்கு ஓரு நல்ல

செய்திவரும்....

அன்று புலமெல்லாம்

மகிழ்ந்து நிற்கும்....

ஈழத்திலோ புலிக்கொடி

பறந்து நிற்கும்....

அன்று எங்கள் மண்

அடிமை விலங்கொடித்த

ஆனத்தில் நிமிர்ந்து நிற்கும்....

இளங்கவி

நிற்கும் இடமதனில்

நிழல் விழவில்லை..

நெஞ்சக்கூட்டில் ஈரம்

நினைவிலும் இல்லை..

கடமையை ஓதும்

தலைவனின் வாய்ச்சொல்

தாங்கிய புலியே உன்

சிரமங்கள் எத்தனை..கொட்டும்

உதிரங்கள் எத்தனை..

ஒளி தரும் மெழுகாய்..

சிலுவையில் விழுந்தாய்..

பாதைகள் அமைக்க..

பாவிகள் அழிப்பாய்..

இன்று நீ விதையாய

;நாளை நீ ஈழத்தில்

மழலை மலராய்..

அன்பு உறவே..

வீரத்திருவே.. உன் பாதஞ்

சரணடைந்தோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரணடைந்தோம் எனும் சொல்லை

அகராதியில் பார்த்திருப்பீர்...!

கனவுகூட காணாதீர்

சரணடைவோம் என்று எண்ணி...!

மெளனமாய் இருப்பதனால்...

இறந்திவிட்டோம் என்றில்லை...!

இறந்து வீழ்ந்த நம்வரின்

சுவாசத்தில் பிறந்தவர் நாம்...!

இறுதியுத்தம் தொடங்குதற்கு...

நம்தலைவன் கைசொடுக்க

நீண்ட நாள் ஆகிடாது...!

சொடுக்குக்காய் காத்திருக்கின்றோம்...

உங்கள் சொப்பனங்கள்

பொசுக்கிவிட..!

அன்று தெரியும் நம்மாற்றல்...

அமைதியாய் வீற்றிருக்கும்

எரிமலை வெடிக்கக் காண்பீர்...!

துண்டுகூட இல்லாமல்..

ஓமந்தை தாண்டி நீங்கள்

ஓடக்கண்போம் நாம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம்...!

நேற்றைய செவ்வயல்களில்

தோற்றிய வீரப்புற்கள்

நாளைய வேள்விக்காய்

இன்றே மரணிக்கும்

தருப்பைப் புற்கள்...!

நாளைய வேள்வியின்

சுதந்திர யோதிக்காய்

இன்றே சாம்பராகும்

தன்மானப் புற்கள்...!

இறுதி வேரின்

உறுதித் துகள்

உள்ளவரை

பல பிறவி எடுத்து

நாளைய வேள்வியின்

நாமுமோர் அங்கமாவோம்...!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் வெய்யிலில் மினுங்க

ஆகாயத்தில் சூரியன் கொதிக்க

வினாகுறி வளைந்ததைப் போல்

வனிதையரும் குனிந்தசைய

முத்துதிர்ந்த மூக்குத்திக்கு

முகவேர்வை முத்தாக

கெண்டைக்கால் சேறணைக்க

நாற்றுக்காலை மார்பணைக்க

இளமடிப்பு இடுப்புக்களோ

சுருதிப் பெட்டியா சுருங்கி நிமிர

வனத்திலே வாரனங்கள்

வரிசை கட்டிப் போவது போல்

வயற்காட்டில் பெண்டுகள்தாம்

அழகசைய அடியொற்றி

நாட்டிச் செல்லும் நாற்றம்மா!!!

  • கருத்துக்கள உறவுகள்

நாற்றம்மா வயலிலே! நடுவிலே குடிலம்மா!

நாற்புறமும் கதிரம்மா! கர்ப்பத்துடன் மேரியம்மா!

நாளைக்கு பாலன் பிறக்குமுன்னே

இன்றே உதிரம் குடித்து உயிர் பறித்தான் பாவி!

அன்புடன் பார்மக்களெல்லாம்

கூட்டம் கூடி பாட்டுப்பாடி

ஆட்டம் பாட்டத்துடன்

ஆணந்தக் கூத்தாடுகையில்

பாழும் சிங்களவன் பறந்துவந்தே பரிசளித்தான்!

பரிசுத்த அண்ணையின் கரமொடித்து கழுத்தறுத்தான்!

பார்த்திருந்த பசுக்களையும் பாவிமகன் பலிகொண்டான்!

காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட புத்தனுக்கு!

பால்தந்த பசுவின் மடியரிந்து விருந்து வைத்தானே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தானே மகிந்தா

நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்தானே

வைய வார்த்தைகள் இங்கே

வைகை போல் வந்தாலும்

வைக்க முடியவில்லை யாழ்களத்தில்

வெட்டு விழும் நிச்சயம்

நிச்சயம்

நினைவில் உள்ள

அந்தப் பயம்

எமை விட்டுப் போகும்

ஒரு நாள்...

உற்சவம், உறியடி

ஊர்த் திருவிழா

காண கன சனம்

வந்து போகும்

இன சனம் கூடிச்

சிரிக்கும்

எம் ஊர்த் திண்ணையில்!

ஊரின் பெயர்ப் பலகை

தொடங்கி

கடைகளின் பெயர்ப்

பலகை வரை

தமிழின் சங்கப் பலகை

ஆட்சி செய்யும்!

எமக்கான ஆட்சி

எம்மவர் கட்சி

எல்லாமே நாமாகிச்

சிரிக்கின்ற

தமிழீழம் மலரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் புத்தாண்டு மனதினிலோர் ஏக்கம்

கலையுமா எம்துயரம் தணிந்திடுமா எம் சோகம்

மலரும் தமிழீழம் அதுவே எமக்கு கிடைத்திடும்

இன்பந் தரும் புத்தாண்டு

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு கனவிலே

கண்களும் விழி மலர்ந்திட

சாரளம்தான் திறக்கையிலே

புதுக் காற்றும் புகுந்திட

புது ரத்தம் பாய்ந்தது போல்

வெற்றுடல்தான் புல்லரிக்க

இரவெல்லாம் கொட்டிய பனியில்

ஈரமாகிய இலையாடைகளை

காலைக் காற்றில் உலர்த்தி

புதுப் பூக்களால் மேனி போர்த்தி

மதிய வெயிலில் குளித்திடும்

மகிழ்ச்சியில் திளைக்குது பூமரம்

மனதினில் முகிழ்க்குது பேரின்பம்!!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரின்பம் எது என்று அறியா மனம்

பேசா மனங்களின் முன்னே

பேசும் விழிகள் கூறுவதோ பேரின்பம்

மழலை மொழிகளின் கொஞ்சுதமிழா

இயற்கை அழகில் மெய் மறப்பதா

தொடும் ஸ்பரிசங்களின் உணர்வுகளா

இசை தரும் இன்பம் அதுவே

இணையற்ற பேரின்பம் தரும்

இதய தாலாட்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாலாட்டுத் தேவை

உனக்கு இன்று; வீர

தாலாட்டுத் தேவை....

மனமெல்லாம் தளர்ந்து

உடலெல்லாம் சோர்ந்து

வானமே தலைமேல் விழுந்ததுபோல்

வழி முழுதும் புலம்பும் உனக்கு

தாலாட்டுத் தேவை

உனக்கு இன்று ;வீர

தாலாட்டுத் தேவை....

தந்திரமாய் பின்வாங்கும்

நம் தலைவனின் சிந்தனையை

தோல்வியென நினைக்காதே

இதன் பின்னால் ; உனக்கு

பெரு வெற்றியொன்று காத்திருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருக்கு கிளி!

காய்த்திருக்குதா கிளி!

இலவங்காயை பழமென நினைந்து

பறந்து வந்தமர்ந்தது ஹெலி!

பழமும் அங்கில்லை! பழகிய

சனமும் அங்கில்லை!

பாழடைந்த வீடுகளும்!

பரிதவிக்கும் ஆவினமும்!

மதங்கொண்ட நாயினம் கண்டது!

பாங்கான பங்கரையும்!

பக்காவான நகரமைப்பையும்!

வியந்து நோக்கியது!

வெந்து சோம்பியது!

நிலை குலைந்து போனது! இன்னும்

காத்திருக்கு கிளி -- புலி

வரவைப் பாத்திருக்கு கிளி!!!

  • 2 weeks later...

கிளி பறந்து போனால் என்ன?

ஒளி கொடுக்கும் சூரியன்

எங்கிருந்தாலும்

வழி பிறக்கும்

அறிவாயா...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.