Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோயால் பாதிக்கபட்ட மணமகனை உதறி விட்டு திருமணத்திற்கு வந்த விருந்தினரை மணமுடித்த பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201502181730539061_Epileptic-groom-has-f
ராபரேலி

உத்தரபிரதேச மாநிலம்  ராம்பூரில் ஒரு திருமணம் கோலாகலமாக நடநது கொண்டு இருந்தது. மணமகள் இந்திரா (வயது 23) மணமகன் ஜூகல் கிஷோர் (வயது 25). வர்மாலா என அழைக்கப்டும் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு நடந்து முடிந்தது. மந்திரம் முழங்க இந்திரா கூடி இருந்த கூட்டத்தினர் நடுவே கிஷாரின் மனைவி என உறுதி செய்யப்பட்டார். திடீர் என மணமகன் சுருண்டு விழுந்தார் அவ்ருக்கு வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அனைவரும் பதற்றம் அடைந்தனர். உடனடியாக மணமகனின் உறவினர்கள்  மணமகனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

மணமகள் மட்டும் இப்போது தனியாக நின்றாள். கிஷோரின் இந்த நிலை குறித்து தனக்கு ஏன் சொல்லவில்லை என கூறி பெற்றோரிடம் சண்டை போட்டார். உடனடியாக  தனக்கு வேறு மணமகனை பார்த்து இந்த விழாவிலேயே  திருமணம் செய்து வைக்குமாறு கூறினார்.  ஆனால் பலரும் மணமகன் வீட்டார் மருத்துவமனைக்குச் சென்று உள்ளார்கள் வரட்டும் என கூறினார்கள் ஆனால் அதை எல்லாம் அந்த பெண் கேடகவில்லை. உடனடியாக  மணமகளின் சகோதரியின் கணவரின் சகோதரர் புது மணமகனானார்.  

அவரது பெயர் ஹர்பல் சிங் அவர் திருமனத்திற்கு ஜீன்ஸ் மற்றும் லெதர் ஜாக்கேட்டும் அணிந்து வந்து இருந்தார் உடனடியாக அவருடன் இந்திராவுக்கு திருமணம் நடத்தப்பட்டது.மீண்டும் இப்போது ஒரு மாலை மாற்றும் சடங்கு நடைபெற்றது. இப்போது மணமகன் ஹர்பல் சிங் மணமகள் இந்திரா. பண்டிட் மந்திரங்களை ஓத கணவன் மனைவியானார்கள்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்ட்ட கிஷோர் மீண்டு திருமண மண்டபத்திற்கு திரும்பினார். அங்கு தனக்கு மனைவியானவள். வேரு ஒருவருக்கு மனைவியாகி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்திராவின் மனதை மாற்ற அவரிடம் பலமுறை கெஞ்சினார்.ஆனால் இந்திரா தனது மனதை மாற்றி கொள்ளவில்லை.   நீ இல்லாமல் போனால் எனது நண்பர்கள், உறவினர்கள் என்னால் பார்க்க முடியாது என கூறினார். எதுவும் இந்திரா காதில் விழவில்லை.அவரது உறவினர்களும் பல்முறை கூறிபார்த்தனர் ஆனால் அவர் கேட்க வில்லை. 

கிஷோர் தனது கெஞ்சல் பலிக்க வில்லை என்றது மிரட்ட தொடங்கினார். அங்கு இருந்த பொருட்களை தூக்கி எறிந்தார். வன்முறையில் ஈடுபட்ட தொடங்கினார். இருந்தும் இந்திரா தனது பிடிவாததை விடவில்லை.

இதை தொடரந்து கிஷோரும் அவரது உறவினர்களும் ராம்பூர்  மிலாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிஷோர் வீட்டை சேர்ந்தவர்கள், இந்திரா வீட்டை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கிஷோர் குடும்பம் புகாரை வாபஸ் வாங்கி மொராதாபாத்துக்கு திரும்பி சென்றனர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானோடு ஏற்கனவே ஒரு 'இது' போலை இருக்கு.. :D ஆசாமி கிஷோருக்கு என்னத்தை கலக்கிக் குடுத்தாங்களோ..! :unsure:

ரகு, விசுகு அண்ணாவின் ஆக்கள் இந்த அளவுக்கு சிந்திக்காமல் விட்டிட்டினம்.. :huh::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானோடு ஏற்கனவே ஒரு 'இது' போலை இருக்கு.. :D ஆசாமி கிஷோருக்கு என்னத்தை கலக்கிக் குடுத்தாங்களோ..! :unsure:

ரகு, விசுகு அண்ணாவின் ஆக்கள் இந்த அளவுக்கு சிந்திக்காமல் விட்டிட்டினம்.. :huh::lol:

 

 

அடப்பாவி  இப்படியா போட்டுக்கொடுக்கிறது.... :lol: ..

 

அவர்களுக்கு

இதுகளை நம்பி  பிரயோசனமில்லை (வடலி  வளர்த்து கள்ளுக்குடிப்பது :lol: ) என்று தெரிஞ்சு போச்சு ராசா... :D

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானோடு ஏற்கனவே ஒரு 'இது' போலை இருக்கு.. :D ஆசாமி கிஷோருக்கு என்னத்தை கலக்கிக் குடுத்தாங்களோ..! :unsure:

ரகு, விசுகு அண்ணாவின் ஆக்கள் இந்த அளவுக்கு சிந்திக்காமல் விட்டிட்டினம்.. :huh::lol:

வலிப்பு நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த பெண்,அந்த வாலிபரைத் தான் கல்யாணம் கட்ட வேண்டும் இல்லையா இசை?...கட்டி வாழ்க்கை பூராவும் அந்த பெண் கஸ்டப்பட வேண்டும் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.