Jump to content

திராவிட அரசியல் ஏன் தோற்றம் பெற்றது - ஓர் வரலாற்றுப் பார்வை.


Recommended Posts

திராவிட அரசியல் ஏன் தோற்றம் பெற்றது - ஓர் வரலாற்றுப் பார்வை.

காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் கொண்டுவந்த ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்று அழைக்கப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானம் மட்டும், காங்கிரஸில் பெருவாரியாக இருந்த பிராமணர்களால் தோற்கடிக்கப்படாமல் நிறைவேறியிருந்தால், பெரியார் 1925இல் காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்; சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்காது; தி.க.(1944) உருவாகியிருக்காது; தி.மு.க. (1949) பிறந்திருக்காது; அ.தி.மு.க. (1972) அரும்பியிருக்காது; ம.தி.மு.க. (1993) மலர்ந்திருக்காது. 20_ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றுப்போக்கே காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களின் வரலாறாகப் போயிருக்கும். அந்த அளவிற்குப் பெரியாரின் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ குறித்த முயற்சிகள் மிக முக்கியமானவைகளாக அமைகின்றன. அதனால்தான் இரா. செழியன் அது குறித்து அந்த மேடையில் பேசி இருக்கிறார். இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த இந்த ‘இட ஒதுக்கீடு அரசியல்’ எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ச்சி அடைந்தது? சமீபத்திய இந்திய வரலாற்றில் இது குறித்த புரிதல் என்னவாக இருக்கிறது என்பனவற்றைக் காண்பது தேவையான ஒன்றாகும்.

மக்களிடம் உருவாகும் சுதந்திர உணர்வின் பெருக்கத்தை அறிந்த ஆங்கிலேய அறிவாளிகள், அதை ஓர் இயக்கமாக வளர்த்தெடுக்கக் காங்கிரஸ் கட்சியை 1885இல் உருவாக்கியது போலவே, இடஒதுக்கீட்டின் தேவையையும் உணர்ந்த ஆங்கில அதிகாரிகள் 1884இல் முதன்முதலில் ஓர் ஆணை பிறப்பித்தார்கள். இதுதான் அந்த ஆணை: சென்னை வருவாய்த்துறை அலுவலகம்; ஆணை எண் 128(2). ‘மாவட்ட ஆட்சியாளர்கள், தங்கள் அலுவலகத்திலுள்ள அனைத்து நிர்வாகப் பதவிகளையும் குறிப்பிட்ட ஒரு சாதியினரே பெறுவதைத் தவிர்த்து, பிற சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்’. ஆனால், யதார்த்தத்தில் _ சாதியச் சமூகத்தில் _ ஏற்கெனவே கல்வியை மற்றவர்களுக்கு மறுத்துத் தங்களுக்கானதாக ஆக்ரமித்திருந்த பிராமணர்களே பெரிதும் படித்தவர்களாக விளங்கிய சூழலில், தொடர்ந்து பிராமணர்களே அரசாங்கப் பதவிகளைக் கைப்பற்றினார்கள். மக்கள் தொகையில் 3 விழுக்காடு இருந்த பிராமணர்களே பொதுப்பணித்துறையில் 74 விழுக்காடும் வருவாய்த் துறையில் 50 விழுக்காடும், நிதித்துறையில் 6 விழுக்காடும், கல்வித்துறையில் 79விழுக்காடும் இடம்பெற்றிருந்தனர் என்கிறது 27.01.1919 இல் வெளியான அரசாங்கப் பதிவேடு. இத்தகைய சூழலில் தாழ்த்தப்பட்ட இனத்தினர் அன்று அடைந்த எழுச்சி குறிப்பிடத்தக்கதாகும். கிராமங்களில் _ நிலவுடைமைச் சமூகத்தில் _ தங்களின் இருப்பிடமும் நடமாடும் இடங்களும்கூட, உயர்சாதியினரால் நிர்ணயிக்கப்பட்டு, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைக்கு உட்பட்டு மூச்சுமுட்டக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஆங்கிலேயர் ஆட்சியினால் ‘இடம்’ பெயரவும் கல்வி கற்கவும் வாய்ப்புகள் வந்து கூடின. ஆங்கிலமொழிக் கல்வி புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்தது.

இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, அவர்களைத் திரட்டி, அவர்களுக்காகச் சிந்தித்துச் செயல்பட்ட முன்னவராக விளங்கியவர் அயோத்திதாஸ பண்டிதர் (1845_1914). இவர் அம்பேத்காருக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுச் சிந்தனையை, சமூக அரசியல் தளத்தில் முன்னெடுத்தவர்; 1891 டிசம்பர் 1ஆம் தேதி ஊட்டியில், அயோத்திதாஸ பண்டிதர் கூட்டிய திராவிட மகாஜன மாநாட்டில் போடப்பட்ட தீர்மானமே, முதல் இடஒதுக்கீட்டுத் தீர்மானமாகும். ‘கிராம அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதன் மூலம், அவர்களின் பொருளாதார வாழ்வை உயர்த்துமாறு’ கோருகிறது. அந்தத் தீர்மானம். தீர்மானம் போட்டதோடு நிற்காமல், போராடி இரண்டு இடஒதுக்கீட்டு ஆணைகளையும் பெற்றுள்ளார் பண்டிதர்.

தொடர்ந்து 20.11.1916 அன்று ‘பிராமணர் அல்லாதார்’ என்ற பெயரில், பிராமணர் அல்லாத உயர்சாதியினர் கூடி ‘நீதிக்கட்சி’ தொடங்கியபோது, அவர்களின் செயல்திட்டங்களில் ஒன்றாக முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை இடம்பெற்றது. 1919இல் உருவான இந்திய அரசுச் சட்டத்தின்படி, லார்ட்மெடன் என்பவர் தலைமையில் முக்கியமான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது; அதன்படி 65 பொதுத்தொகுதிகளில் 24 இடங்கள் பிராமணர் அல்லாதாருக்கும், மீதி இடங்களில் எல்லோரும் பொதுவாகப் போட்டியிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாருக்கு அரசியல் அதிகாரம் பெற வாய்ப்பளித்த இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, ‘நீதிக்கட்சி’ சென்னை மாகாணத்தில் ஆட்சியில் அமர்ந்தது; அமர்ந்தவுடன் முதல் வேலையாக 1921இல் இடஒதுக்கீட்டிற்கான அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி 12 இடம் இருந்தது என்றால், 5 இடம் பிராமணர் அல்லாதவர்களுக்கும், 2 இடம் பிராமணர்களுக்கும், 2 இடம் இஸ்லாமியர்களுக்கும், 2 இடம் ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்தவர்களுக்கும், ஒரு இடம் ‘மற்றவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்’ தரப்பட வேண்டும்; அதுவும் கீழ்க்கண்ட வரிசைப்படித் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது : பிராமணர் அல்லாத இந்து, இஸ்லாமியர், பிராமணர் அல்லாத இந்து, ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர், பிராமணர், பிராமணர் அல்லாத இந்து, மற்றவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், பிராமணர் அல்லாத இந்து, இஸ்லாமியர், பிராமணர் அல்லாத இந்து, ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர், பிராமணர். இந்த வரிசையில் பிராமணர் அல்லாத உயர்சாதியினரின் கை மேலோங்கி, பிராமணரின் கை தாழ்ந்துபோன சூழலை அவதானிக்க முடிகிறது; மேலும் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து எத்தகைய பார்வையை அன்று கொண்டிருந்தது என்பதை, ‘மற்றவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்’ என்று ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கியிருக்கும் பாங்கில் இருந்தே அறிந்து கொள்ளலாம். இந்தப் போக்கு ‘பிராமணர் அல்லாதார்’ அரசியலில் தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.

1947ஆம் ஆண்டில் ஓர் இடஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைப்படி பிராமணர் அல்லாத இந்துக்கள் 43 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் 14 விழுக்காடும், தாழ்த்தப்பட்டவர்கள் 14 விழுக்காடும், பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுப்புமுறையிலும் தாழ்த்தப்பட்டவர்களைவிட, ‘பிராமணர் அல்லாத உயர்சாதியினர்’ நலமே முன்னிறுத்தப்படுவதை எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ஆணையை உச்சநீதிமன்றம் இன்று செய்வது போலவே அன்றும் நிராகரித்தது. எனவே 1951ஆம் ஆண்டு மற்றொரு ஆணை போடப்பட்டது. அதன்படி, எல்லோருக்கும் பொதுவாக 60 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடும், தாழ்த்தப்பட்டவருக்கு 15 விழுக்காடும் ஒதுக்கப்பட்டன. 1951இல் ஆந்திர மாநிலம் பிரிந்த பிறகு, 1954ஆம் ஆண்டில் காமராசர் முதலமைச்சராக வந்தார்; பெரியார் காமராசரை வரவேற்றுப் போற்றினார்; அத்தகைய சூழலில் ஓர் ஆணை வருகிறது. அந்த ஆணையின் படி, எல்லோருக்கும் பொதுவாக 59 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 16 விழுக்காடும் கிடைக்கின்றன. இதற்கிடையில் 1950இல் மத்திய அரசின் அம்பேத்கர் வகுத்தளித்த இடஒதுக்கீட்டு ஆணையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு என்ற நிலை ஏற்படுகிறது.

மத்திய அரசுப் பதவிகளில் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற பிரிவினர் பங்கு பெறுவதற்கு, வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முனைந்த ஆண்டான 1990 வரை காத்திருக்க வேண்டியதாயிற்று என்பதோடு இணைத்து எண்ணிப் பார்க்கும்போதுதான், தமிழகத்தில் பெரியார் என்ற மாபெரும் சக்தியின் பெருமையை அறிந்துகொள்ள முடியும்; அதேநேரத்தில் 1944இல் பெரியார் உயர்சாதிக்காரர்களுக்கான நீதிக்கட்சியோடு இணைந்ததால், பெரியாரின் இயக்கம் பிற்படுத்தப்பட்டவருக்கான இயக்கமே ஒழிய, தலித்துகளுக்கான இயக்கம் அல்ல என்று இன்றைய தலித் சிந்தனையாளர்கள் வைக்கிற விமர்சனத்தையும் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

மத்திய அரசாங்கத்திலும் அரசியல் சட்டம் 340 விதிகளின்படி, 1953ஆம் ஆண்டு முதல் ‘பிற்படுத்தப்பட்டோர் குழு’ குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. இக்குழுவின் தலைவர் காகா கலேல்கர். அந்தக்குழு இந்தியா முழுவதும் சுற்றி, நேரடியாக 182 வினாக்கள் அடங்கிய வினாத்தாளைக் கொடுத்துத் தகவல்களைத் திரட்டியது. இத்தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில் மொத்தம் 2399 சாதிகள் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன என்றும், 830 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன எனவும் அடையாளம் காட்டியது. மேலும் இச்சாதியினர் முன்னேற நிலச்சீர்திருத்தம், வயது வந்தோர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு உட்பட பல காரியங்களைச் செய்தாக வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. மேலும், ‘சாதிவாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; இந்து சமூகத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் சாதிய முறையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தன்மையை மதிப்பிட வேண்டும் பெண்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 70 விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும்’ எனவும் பரிந்துரைத்தது. ஆனால் காகா கலேல்கர் கமிஷன் அறிக்கை, உயர்சாதியினர் நிறைந்த அரசியல் சட்ட நிபுணர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் புறக்கணிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் 1967இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கிறது. பிற்படுத்தப்பட்டோரின் ஆட்சியாக அது பரிணமித்தது. 1971இல் கருணாநிதி அரசு, காமராசர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பட்டியலில் இருந்த எல்லோருக்கும் பொதுவாக 59 விழுக்காடு என்றிருந்ததை 51 விழுக்காடு எனக் குறைத்து, கூடுதலாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 விழுக்காடும் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 18 விழுக்காடும் ஒதுக்கினார்.

ஆனால் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட ஓர் ஆணை, இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு அறமாக அமைந்ததையே கேலிக்குள்ளாக்கி விட்டது. அதாவது, முன்னேறிய சாதிகள் என்று பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சாதிகளில் 30 விழுக்காட்டினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து இணைத்தது அந்த ஆணை. இது உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டவருக்கான ஒதுக்கீடு இன்னும் அதிகம் தேவை என்ற போராட்டம் வலுத்தபோது, 1980ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். அரசு 31இல் இருந்து 50ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் அரசும், பொதுப்பட்டியலில் இருந்த உயர்சாதிக்காரர்களில் 5 விழுக்காட்டினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டது. இதனால் உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.